search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் தெற்குவட்டார காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல்
    X

    நிர்வாகிகள் விருப்ப மனு கொடுத்த காட்சி.

    திருப்பூர் தெற்குவட்டார காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல்

    • தேர்தல் அதிகாரியாக (பி.ஆர்.ஓ) எம்.கே.முஸ்தபா தேர்தலை நடத்திக் கொடுத்தார்.
    • சிறப்பு அழைப்பாளராக மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் நவமணி கரிச்சியப்பன் கலந்து கொண்டார்.

    மங்கலம் :

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டார அமைப்பு தேர்தல் மங்கலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக (பி.ஆர்.ஓ) எம்.கே.முஸ்தபா கலந்து கொண்டு தேர்தலை நடத்திக் கொடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர் (பி.சி.சி) பதவிக்கு ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் வே.முத்துராமலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார்.மேலும் பல்வேறு பொறுப்புகளுக்கு மங்கலத்தை சேர்ந்த சபாதுரை ,திருமலாகண்ணன், எபிசியண்ட் மணி, நடராஜ் ,அப்துல்அஜீஸ்,யாசுதீன்,செந்தில்,வேலுச்சாமி, அலாவுதீன், செந்தில் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் விருப்ப மனு கொடுத்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் நவமணி கரிச்சியப்பன் கலந்து கொண்டார்.

    Next Story
    ×