search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அமைப்பு தேர்தலுக்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி
    X

    தொண்டர்கள் விருப்பமனு வழங்கிய காட்சி

    திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அமைப்பு தேர்தலுக்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி

    • காங்கிரஸ் கட்சியில் உள்ள சுமார் 300 பதவிகளுக்கான தேர்தல் என்பதால் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கினர்.
    • வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், அவிநாசி, காங்கயம், அன்னூர், சென்னிமலை ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வழங்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உட்கட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் நபர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி பார்க் சாலையில் உள்ள ஐஎன்டியுசி. அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர்.கோபி தலைமையில் நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சியில் உள்ள சுமார் 300 பதவிகளுக்கான தேர்தல் என்பதால் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும்,பாலக்காடு முன்னாள் சேர்மனுமான.பி.வி.ராஜேஷ்,வட்டார தேர்தல் அதிகாரிகள் சுப்பிரமணியம்,தீபக் ஆகியோரிடம் தொண்டர்கள் வழங்கினர்.

    மேலும் இதே போன்று வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம்,அவிநாசி,காங்கயம்,அன்னூர்,சென்னிமலை ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர்.

    Next Story
    ×