என் மலர்
நீங்கள் தேடியது "Kozhukattai"
- சிக்கன் வைத்து பலவித உணவுகளை சமைக்கலாம்.
- இன்று சிக்கன் வைத்து மோமோஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா - 2 கப்
உப்பு - தேவையான அளவு
சிக்கன் கொத்துகறி - 1/4 கிலோ
வெங்காயம் - 2
முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது) - 1 கப்
கேரட் (பொடியாக நறுக்கியது) - 1 கப்
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை
சிக்கன் கொத்துகறியை நன்றாக சுத்தம் செய்து முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில் வேக வைத்த சிக்கன் கொத்துக்கறி, பொடியாக்கி நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், கேரட், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து பிசைந்து வைத்து உள்ள மாவை பந்து போன்று சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொண்டு, அதை சிறிய அளவிலான மெல்லிய சப்பாத்தியாக திரட்டி கொள்ளவும்.
அதன் பின்னர் கிளறி வைத்து உள்ள சிக்கன் கலவையை அந்த சப்பாத்தியில் வைத்து குறிப்பிட்ட வடிவத்தில் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் வைத்து வேக விட வேண்டும்.
15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.
தற்போது சுவையான ரெஸ்ட்ரன்ட் ஸ்டைல் சிக்கன் மோமோஸ் ரெடி.
- இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இந்த ரெசிபியை 30 நிமிடங்களில் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
அவல் மாவு - 1 கப்
பால் - 500 மி.லி
பாதாம் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - தேவைக்கு ஏற்ப
ஏலக்காய்த்தூள் - சிறிது
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் அவல் மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு, நெய் மற்றும் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
பாலுடன், பாதாம் பவுடர் கலந்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.
உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வைக்கவும்.
5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கினால் 'அவல் பால் கொழுக்கட்டை' தயார்.
தினை அரிசி - 1 கப்
வெங்காயம் - 1
கேரட் - 1
ப.மிளகாய் - 2
தேங்காய் - 1 துண்டு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 2 கைப்பிடி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தேங்காய், கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தினை அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்..
ஓரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், கேரட், தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்..
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்..
காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரைத்த அரிசி மாவை ஊற்றி கிளறவும்.
மாவு நன்கு வெந்து சுருண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் 15 வேக வைத்து இறக்கி பரிமாறவும்.
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் - அரை கப்
தேங்காய் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி

கோதுமை மாவை வாசம் வரும் வரை வெறும் வாணலியில் போட்டு குறைந்த தீயில் வறுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை தட்டி வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் தட்டி வைத்த வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.
வடிகட்டிய வெல்ல கரைசலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும், தீயின் அளவை குறைத்து விட்டு பொடியாக நறுக்கிய தேங்காய், ஏலக்காய் தூள், நெய், கோதுமை மாவு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
மாவு வாணலியில் ஒட்டாமல் ஒன்றாக சேர்ந்து வரும். இதுவே சரியான பதம். பதம் வந்ததும், அடுப்பை அணைத்து மூடி போட்டு சற்று நேரம் ஆற விடவும்.
சூடு சிறிது குறைந்ததும், மாவை சிறிது எடுத்து பிடி கொழுக்கட்டைகளாக செய்து வைக்கவும்.
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
ஏற்கனவே கோதுமை மாவை வெல்லத் தண்ணீரில் வேக வைத்து விட்டதால் இந்த கொழுக்கட்டைகள் சீக்கிரம் வெந்து விடும். எனவே ஐந்து அல்லது ஏழு நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தாலே போதுமானது.
கேழ்வரகு மாவு - ஒரு கப்
பாசிப் பருப்பு - ஒரு கைப்பிடி
தேங்காய்த் துருவல் - கால் கப்
நாட்டுச் சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் - 2
உப்பு - தேவையான அளவு

பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுத்த பின்னர் குக்கரில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து நீரை வடித்து, பருப்பை தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 1/2 கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.
குதிரைவாலி அரிசி - 1 கப்,
காராமணி - 2 டேபிள் ஸ்பூன்,
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மிளகு - 1/4 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - 1/2 கப்,
உப்பு - சுவைக்கேற்ப,
தண்ணீர் - 2 1/4 கப்.
தாளிக்க…
எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
பச்சை மிளகாய் - 1,

செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காராமணியை 1/2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
மிக்சியில் துவரம் பருப்பு, சீரகம், மிளகை போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் குதிரைவாலி அரிசியை சேர்த்து ரவையாகப் பொடிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தாளித்த பின்னர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த ரவை, வேக வைத்த காராமணி, துருவிய தேங்காய் போட்டு நன்கு கட்டியில்லாமல் கிளறவும். மிதமான தீயில் கிளறி, சேர்ந்து கெட்டியாக வந்ததும் இறக்கவும்.
பொறுக்கும் சூடு வந்ததும் உருண்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைத்து எடுத்து சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
சூப்பரான குதிரைவாலி காராமணி பிடி கொழுக்கட்டை ரெடி.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் மலைக்கோட்டையின் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு படைப்பதற்காக 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. அந்த கொழுக்கட்டையை இரண்டாக பிரித்து, உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ, மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ என படைக்கப்பட்டது.
முன்னதாக இன்று காலை 9மணியளவில் மடப்பள்ளியில் இருந்து தொட்டில் கட்டி கொழுக்கட்டையை மலை உச்சிக்கும், அடிவாரத்திற்கும் தூக்கி சென்று உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு வைத்து படையல் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொழுக்கட்டைகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி மலைக்கோட்டை கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வருகிற 26-ந்தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இதில் தினமும் விநாயகர் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதே போல் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். #VinayagarChathurthi #GaneshChathurthi
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
பூரணம் செய்ய:
இனிப்பு கோவா - ஒரு கப்,

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு. பூரணம்
ஒரு பாத்திரத்தில் இனிப்பு கோவா, உடைத்த பாதாம், முந்திரியை போட்டு ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
அல்வா செய்ய :
கேரட் துருவல் - அரை கப்,
வெல்லத்தூள் - அரை கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
நெய் - தேவைக்கு,

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.
அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.
பிறகு வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வேக விடவும். மேலே சிறிதளவு நெய் விட்டு சுருள கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
கேரட் அல்வா கொழுக்கட்டை ரெடி.
கோதுமை மாவு - 2 கப்
மைதா மாவு - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு

செய்முறை:
கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து. 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, கையால் தட்டையாக தட்