search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hong Kong"

    • எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஃபுட்ஸ் இரண்டும் இந்த குற்றச்சாட்டு குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
    • தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் எதுவும் சேர்க்கப்படக்கூடாது என்று வேண்டுகோள்.

    ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள உணவுக் கட்டுப்பாட்டாளர்கள் இரண்டு பிரபலமான இந்திய மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருள் இருப்பதாக தடை விதித்துள்ளது.

    இதை அடுத்து, நாட்டில் உள்ள எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் தயாரிப்புகளின் அனைத்து உற்பத்தி பிரிவுகளிலிருந்தும் மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சேகரிக்க உணவு ஆணையர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதில்,"நாட்டின் அனைத்து உணவு ஆணையர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மசாலாப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மூன்று அல்லது நான்கு நாட்களில், நாட்டின் அனைத்து மசாலா உற்பத்தி ஆலைகளில் இருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்படும்.

    எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் மட்டுமின்றி, அனைத்து மசாலா தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்தும் மாதிரிகள் எடுக்கப்படும். இன்னும் 20 நாட்களில் ஆய்வகத்திலிருந்து அறிக்கை வரும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    தடை குறித்து ஹாங்காங், சிங்கப்பூர் கூறுவது என்ன ?

    ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் உணவுக் கட்டுப்பாட்டாளர்கள், "அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறும் அளவுகளில்" எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறப்படும் இந்த இரண்டு மசாலா பிராண்டுகளின் நான்கு பொருட்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து மக்களை எச்சரித்துள்ளனர். எத்திலீன் ஆக்சைடு புற்றுநோய்க்கான சர்வதேச அமைப்பால் 'குரூப் 1 கார்சினோஜென்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    எம்டிஎச்-ன் மூன்று மசாலா பொருட்கள் -- மெட்ராஸ் கறி தூள் (மெட்ராஸ் கறிக்கான மசாலா கலவை), சாம்பார் மசாலா (கலவை மசாலா தூள்), மற்றும் கறி பொடி (கலவை மசாலா தூள்) -- எவரெஸ்டின் மீன் கறி மசாலாவுடன் "ஒரு பூச்சிக்கொல்லி, எத்திலீன் ஆக்சைடு" உள்ளது.

    எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஃபுட்ஸ் இரண்டும் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

    வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மசாலா வாரியத்திடம், தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் எதுவும் சேர்க்கப்படக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோான பரவல் அதிகரித்த போது சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. பின்னர் நிலைமை சீரானதும் சென்னைக்கு விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்த வெளிநாட்டு விமான நிறுவனங்கள், மீண்டும் படிப்படியாக விமான சேவைகளை தொடங்கின. ஆனால் ஹாங்காங், மொரிஷியஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் ஹாங்காங்- சென்னை- ஹாங்காங், இடையே இயக்கப்பட்டு வந்த, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விமான சேவையை, பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து, இயக்க உள்ளது. முதலில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும், இந்த விமான சேவைகள், பயணிகள் வரவேற்பை பொறுத்து, வாரத்தில் 7 நாட்களும், தினசரி இயக்கப்பட இருக்கிறது.

    இதேபோல் சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு, ஏர் மொரிஷியஸ் விமான சேவைகளும் மீண்டும் இயக்கப்பட உள்ளன. வாரத்தில் 2 நாட்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்கள் இயக்கப்பட்ட இந்த விமான சேவைகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த விமான சேவையை தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஹாங்காங், மொரிஷியஸ் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட இருப்பது பயணிகளுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். குறிப்பாக ஹாங்காங் விமான சேவை, தொழில்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவைகளாக விளங்கி இருந்தது. அதோடு ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு, இணைப்பு விமானமாகவும் செயல்பட்டு வந்தது. இதனால் தொழில் துறையினர் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைப்போல் ஏர் மொரிஷியஸ் விமானம், மாணவ மாணவிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவையாக செயல்பட்டது. மொரிசியஸ் நாட்டில் பல்வேறு மருத்துவ கல்லூரிகள் மற்றும் உயர் படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், ஏராளமான மாணவ மாணவிகள், மொரிஷியசில் மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக, விமான சேவைகள் இல்லாததால், இந்த மாணவ மாணவிகள், மும்பை அல்லது துபாய் சென்று மொரிசியஸ் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் அதிகம் பண செலவு, பயண நேரம் ஏற்பட்டு மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • இன்ஸ்டாகிரம் சமூக வலைதளத்தில் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.
    • உதவிக்கு அந்த உச்சி மாடியில் உள்ள சிறிய அறையின் ஜன்னல் கண்ணாடியை பலமுறை தட்டினார்

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி (30). இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு உடையவர்.

    வானளாவிய உயர கட்டிடங்களின் உச்சிக்கு ஏறி, அதில் அபாயகரமான இடங்களில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது இவரது வாடிக்கை.

    இவருடைய இன்ஸ்டாகிரம் சமூக வலைதளத்தில் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். ரெமி பலமுறை ஹாங்காங் நாட்டிற்கு சென்று அங்குள்ள உயரமான கட்டிடங்களிலிருந்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். சென்ற வாரம், ஹாங்காங் மத்திய பகுதியில் உள்ள ட்ரெகன்டர் சாலைக்கு ரெமி சென்றார்.

    அங்குள்ள ட்ரெகன்டர் டவர் எனும் ஒரு மிக உயரமான கட்டிடத்தில் இருந்து படம் பிடிக்கும் நோக்கில், காவலாளியிடம் ஒரு நண்பனை பார்க்க உள்ளே செல்வதாக பொய் சொல்லி உள்ளே சென்றார்.

    லிஃப்டில் ஏறி 49-வது மாடியை அடைந்து அங்கிருந்து வெளியே இறங்கி மாடிக்கு சென்றார். மொட்டை மாடிக்கான கதவின் பூட்டை அவர் உடைத்து கொண்டு மேல் மாடி வரை சென்றார். இவர் அங்கிருந்து பல ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுக்க முயற்சித்தார்.

    அப்போது திடீரென நிலை தடுமாறினார். இதனால் உதவிக்கு அந்த உச்சி மாடியில் உள்ள சிறிய அறையின் ஜன்னல் கண்ணாடியை பலமுறை தட்டினார். இதை கண்ட உள்ளேயிருந்த பணிப்பெண் திடுக்கிட்டு காவல்துறையை அழைத்தார். ஆனால் உதவி கிடைக்கும் முன் 68-வது மாடியிலிருந்து ரெமி தவறி விழுந்தார்.

    மருத்துவ உதவி குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்தபோது ரெமி உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டது.

    அவர் அருகே அவர் எடுத்த பல புகைப்படங்களை கொண்ட அவரது கேமிரா அருகே கிடந்தது. பிரான்ஸ் நாட்டு அடையாள அட்டை ஒன்று அருகே இருந்ததை கொண்டு அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.

    மரணத்திற்கான காரணத்தை ஹாங்காங் காவல்துறையினர் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

    ஜூலை 24-ம் தேதி ரெமியின் கடைசி பதிவில் அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியின் வான்வழி காட்சியை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #Potatoes #HongKong #FirstWorldWar
    சென்டிரல்:

    ஹாங்காங்கின் நியூ பிராந்தியத்தில் உள்ள சாய் குங் மாவட்டத்தில் தின்பண்டங்கள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, ஒரு தொழிலாளியின் கையில் உருளைக்கிழங்கை போல் இருந்த மர்ம பொருள் ஒன்று சிக்கியது. அதை உற்று நோக்கியபோது அது கையெறி வெடிகுண்டு என தெரிந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

    உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த கையெறி வெடிகுண்டை சோதனை செய்ததில், அது முதலாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அந்த கையெறி வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்க செய்தனர்.

    போலீஸ் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது. முன்னாள் போர்க்களத்தில் உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்டு, அவற்றை சேகரித்தபோது எதிர்பாராதவிதமாக கிடைத்த கையெறி வெடிகுண்டை உருளைக்கிழங்கு என நினைத்து ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்துவிட்டனர்” என தெரிவித்தனர்.  #Potatoes #HongKong #FirstWorldWar 
    ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் நின்றபடி பணத்தை தூக்கி வீசிய வாங் சிங் கிட் என்ற வாலிபரை பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி போலீசார் கைது செய்தனர்.
    ஹாங்காங் :

    ஹாங்காங்கை சேர்ந்த வாலிபர் வாங் சிங் கிட் (வயது 24). இளம் தொழில் அதிபரான இவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரர். இணைய பணமான ‘கிரிப்டோ கரன்சி’யில் முதலீடு செய்து பல கோடிகளை சம்பாதித்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இவர் ஹாங்காங்கின் ‌ஷாம் ‌ஷு போ என்கிற மாவட்டத்துக்கு தன்னுடைய ஆடம்பர காரில் சென்றார். பின்னர் அங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற வாங் சிங் கிட், அங்கு நின்றபடி பணத்தை தூக்கி வீசி எறிந்துள்ளார்.

    இதனால் அந்த பகுதியில் பெரிய அளவில் கூட்டம் கூடியது. மக்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு பணத்தை சேகரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இதற்கிடையே வாங் சிங் கிட் பணத்தை வீசி எறிந்தது மற்றும் மக்கள் சண்டை போட்டுக்கொண்டு பணத்தை எடுத்துச் சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி வாங் சிங் கிட்டை ஹாங்காங் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சில மோசடி புகார்கள் இருப்பதாக தெரிகிறது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வானத்திலும் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஹாங்காங்கை சேர்ந்த விமான பணிப் பெண் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். #HongKong #FlightAttendant
    ஹாங்காங்:

    உலகம் முழுவதும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை ‘மீ டு’ என்கிற இயக்கத்தின் வாயிலாக பெண்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். சினிமாத்துறை தொடங்கி அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களின் பணியிடங்களில் உயர் அதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் பாலியல் துன் புறுத்தல்களுக்கு உள்ளானதை வெளி உலகிற்கு தெரியப்படுத்துகிறார்கள். இந்த நிலையில் வானத்திலும் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஹாங்காங்கை சேர்ந்த விமான பணிப் பெண் ஒருவர் அதிர்ச்சி தெரிவித்து இருக்கிறார்.

    ஹாங்காங்கின் தனியார் விமான நிறுவனத்தின் கீழ் இயங்கும் விமானங்களில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் வீனஸ் பங் என்பவர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து ஆதங்கத்துடன் கூறியதாவது:-

    வானத்திலும் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக பணியில் சேர்ந்து, முதல் முறையாக விமானத்தில் பணியை தொடங்கிய நாளில் விமானி ஒருவர் தவறான முறையில் என்னை தொட்டு தூக்கினார். அந்த தருணத்தில் கடும் கோபம் வந்தது. ஆனால் அதை விட பயமும், பதற்றமும் அதிகம் இருந்தது. நான் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டேன். நான் அதில் இருந்து மீண்டுவர பல நாட்கள் ஆனது.

    இதுபோன்ற பாலியல் ரீதியான தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என விமானப்பணி பெண்களுக்கு உரிய பயிற்சி அளிப்பது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல ஏதுவாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சீனா-ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் இதுவாகும். #HongKongZhuhaiMacaoBridge #China
    பீஜிங்:

    உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் உதவியால் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது.

    68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்த பாலம், சுற்றுலாப் பயணிகள் எளிதாக கடந்து செல்ல வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பயணம் செய்ய சிறப்பு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விரைவுப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.



    கடந்த 2016ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த இந்த பாலம், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #HongKongZhuhaiMacaoBridge #China
    ஆசிய கோப்பை தொடருக்காக தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி ஹாங்காங் தகுதிப் பெற்றுள்ளது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றது.

    இன்னும் ஒரு அணி தேர்வாவதற்கு தகுதிச்சுற்று நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ஹாங் காங் அணிகள் மோதின.

    மழைக் காரணமாக ஆட்டம் முழுமையாக நடைபெறவில்லை. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 24 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது.



    பின்னர் 24 ஓவரில் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங் காங் அணி களம் இறங்கியது. ஹாங் காங் 23.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை தொடருக்கு ஹாங் காங் தகுதிப் பெற்றுள்ளது. ஹாங் காங் 16-ந்தேதி பாகிஸ்தானையும், 18-ந்தேதி இந்தியாவையும் எதிர்கொள்கிறது.
    2015-ம் ஆண்டு காரில் தாய், மகள் பிணமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கொலையான பெண்ணின் கணவர் யோகா பந்தை பயன்படுத்தி கொலை செய்திருக்கிறார் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
    ஹாங்காங்:

    சீனாவின் ஹாங்காங் நகரில் கடந்த 2005-ம் ஆண்டு இளம்பெண் அவரது 16 வயது மகள் காரில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். பிரேத பரிசோதனையில் அவர்கள் கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது.

    அதற்கு மேலாக எந்த தடயமும் கிடைக்காததால் போலீசார் குழப்பமடைந்தனர். நீண்ட காலமாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிடைந்த இந்த வழக்கில், காரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 2 காற்று இறங்கிய யோகா பந்துகள் மூலமாக விசாரணை சுறுசுறுப்படைந்தது.

    இது தொடர்பாக ஹாங்காங் கோர்ட்டில் நடந்து வரும் விசாரணையில் தனது அறிக்கையை அரசுத்தரப்பு சமர்பித்தது. அதில், 
    காரின் பின்பகுதியில் கிடந்த அந்த இரண்டு யோகா பந்துகளிலும் கார்பன் மோனாக்சைடு வாயு இருந்ததற்கான தடையம் உள்ளது. 

    கொலையான பெண்ணின் 53 வயதான கணவர் ஹா கிம்-சன் ஒரு மயக்கவியல் நிபுணர், சீன பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வரும் அவருக்கு மாணவி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனது தொடர்புக்கு குறுக்கே இருக்கும் மனைவியை யோகா பந்து திட்டத்தின் மூலம் கொலை செய்துள்ளார்.

    ஆனால், மனைவுக்கு வைத்த குறியில் தனது மகளும் பலியாவார் என ஹா அறிந்திருக்கவில்லை. கொலை நடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆய்வகத்தில் இரண்டு யோகா பந்துகளில் கார்பன் மோனாக்சைடு வாயுவை நிரப்பியுள்ளார்.

    இது தொடர்பாக சக பணியாளர்கள் கேட்டபோது வீட்டில் உள்ள எலிகளை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துச் செல்வதாக ஹா கூறியுள்ளார் என அரசுத்தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக விரைவில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
    பிரிட்டனை சேர்ந்த ஓரினச்சேர்க்கை பெண்ணின் துணைக்கு ஹாங்காங் அரசு விசா மறுத்து வந்த நிலையில், துணை விசா வழங்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #HongKong #QT
    சென்ட்ரல்:

    பிரிட்டனை சேர்ந்த ஓரினச்சேர்க்கை ஜோடி க்யூ.டி என்று பெயரின் முதல் எழுத்தால் குறிப்பிடப்பட்டனர். 2011-ம் ஆண்டு முதல் இந்த ஜோடி சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 2014-ம் ஆண்டில் டி என்பவருக்கு ஹாங்காங்கில் பணி கிடைத்துள்ளது. ஆனால், அவரது வாழ்க்கைத்துணையான க்யூவுக்கு விசா வழங்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டது.

    துணை விசா என்பது வாழ்க்கைத்துணைவிக்கு வழங்கப்படும் விசா ஆகும். இதன் மூலம் ஒரே விசாவில் தம்பதிகள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், க்யூடி தம்பதிக்கு இந்த விசா மறுக்கப்பட்டது. அரசின் உத்தரவுக்கு எதிராக கீழ்கோர்ட்டில் இந்த ஜோடி வழக்கு தொடர்ந்தனர்.

    தீர்ப்பு க்யூதம்பதிக்கு சாதகமாக வந்தாலும், அரசு அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. மூன்றாண்டுகளாக நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. க்யூடி ஜோடிக்கு துணை விசா வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கோல்ட்மேன் சாச்ஸ், மோர்கன் ஸ்டான்லே போன்ற பல நிறுவனங்கள் இந்த ஜோடிக்கு ஆதரவாக இருந்தது. ஆண், பெண் என்ற பாகுபாடு பார்ப்பது ஹாங்காங்கில் சட்டவிரோதம் என்றாலும், அங்கு ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி இல்லை. 

    ஹாங்காங்கிற்கு செல்லலாமா? என்பதைத் தீர்மானிக்கும் நபர்களிடம், சார்ந்திருக்கும் திறனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருத வேண்டும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர். 
    ஹாங்காங்கில் ஊழியர்கள் யாரும் இன்றி தானாக இயங்கும் மதுக்கடை தொடங்கப்பட்டுள்ளது. இதை சீனாவின் மிகப்பெரிய இ-வர்த்தக நிறுவனமான அலிபாபா உருவாக்கியுள்ளது.
    ஹாங்காங்:

    ஹாங்காங்கில் ஊழியர்கள் யாரும் இன்றி தானாக இயங்கும் மதுக்கடை தொடங்கப்பட்டுள்ளது. இதை சீனாவின் மிகப்பெரிய இ-வர்த்தக நிறுவனமான அலிபாபா உருவாக்கியுள்ளது. முற்றிலும் தானியங்கி மையமாக்கப்பட்டுள்ள இம்மதுக்கடை ஹாங்காங்கின் வினெஸ்போ பகுதியில் உள்ளது.

    அனைத்து மதுபாட்டில்களிலும் ‘டிரெக்கிங் டேக்’ எனப்படும் அடையாள குறி பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மது பாட்டில் எடுத்தவரின் உருவம் கம்ப்யூட்டர் திரையில் தெரியும். பின்னர் அவர் மதுபாட்டிலுக்குரிய பணத்தை செலுத்த அதற்கான ரசீது அறை (பீல் ரூம்) வரும் போது முக அங்கீகாரம் மூலம் அந்த நபர் உறுதி செய்யப்படுகிறார். அதையடுத்து ஆன்லைன் மற்றும் மொபைல் மூலம் பணம் பெறப்படுகிறது.

    இதற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஷாங்காயில் இயங்கும் பிங்கோ பாஸ் நிறுவனம் 24 மணி நேரமும் இயங்க கூடிய தானியங்கி கடையை திறந்தது. அதே நேரம் அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் முதன் முறையாக கேஷியர் இல்லாத கடையை சீட்டில் நகரில் கடந்த ஜனவரியில் தொடங்கியது. #Tamilnews
    ×