search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gram Sabha"

    • மூலனூர் ஊராட்சி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி மாதவநாயக்கன்பட்டி பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    மூலனூர்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூலனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குமாரபாளையம் ஊராட்சி மற்றும் பெரமியம் ஊராட்சி பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    மூலனூர் ஊராட்சி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி மாதவநாயக்கன்பட்டி பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் பற்றியும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பள்ளி குழந்தைகளின் கல்வி ஆகியவை பற்றி சிறப்பாக எடுத்துக்கூறினார்.

    கூட்டத்தில் குமாரபாளையம் ஊராட்சி தலைவர் செந்தில் வடிவு சிவசாமி, மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து பெரமியம் ஊராட்சியில் ஊராட்சித் துணைத் தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு இரு ஆண்டுகளில் செய்த சாதனைகள் காணொளி காட்சி மூலமாக அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு அரசின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறி அந்த பகுதி விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் பொருட்களை வழங்கினார். கூட்டத்தில் பெரமியம் ஊராட்சி தலைவர் ராணி , போளூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் சுமதி கார்த்திக் , மூலனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் துரை , மூலனூர் பேரூராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, ஒன்றிய இளைஞரணி மற்றும் மாநில விளையாட்டு துறை துணை செயலாளர் கார்த்திக் மற்றும் ஊர் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கிராமப்புறம் மூலமாக தான் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது என தெரிவித்துள்ளார்.
    • புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் லால்புரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் தலைமை தாங்கினார். கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, கிராமப்புறம் மூலமாக தான் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இக்கிராமத்தில் அனைவரும் பாராட்டக்கூடிய செயல் ஒன்று நடைபெற்று உள்ளது. இதில் 1958 வீடுகளில் 1946 வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிகவும் பாராட்டுக்குரிய செயலாகும். மேலும் பொது வெளியில் கழிப்பறைக்கு செல்லாமல் பாதுகாப்பான முறையில் வீடுகளில் உள்ள கழிப்பறையில் செல்லும் போது சுகாதாரம் பேணிக் காக்கப்படும். மேலும் இந்த பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் நகரப் பகுதி விரிவாக்கம் அடைவதோடு இந்த பகுதி பொருளாதார அடிப்ப டையில் முன்னேறக்கூடிய நிலை உருவாகி உள்ளது. இது மட்டும் இன்றி பஸ்நிலையம் அமைப்பதால் இந்த பகுதி வளரக்கூடிய மையமாக மாறக்கூடும். வருங்காலங்களில் லால்பு ரம் பெரிய நகரமாக மாறுவ தற்கு ஏதுவாக அமையும் . இது மட்டுமின்றி பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை நீர் சேகரிக்க நடவடிக்கை எடுப்பதோடு ஊராட்சி முழுவதும் சுகாதா ரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊராட்சி துணை இயக்குனர் சபனா அஞ்சும் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் சுடுகாடு அமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
    • சொந்தமான நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக தெரிய வருகின்றது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் 500 -க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு பகுதியினர் ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் சுடுகாடு அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்ற இந்த சுடுகாட்டுக்கு முறையான பாதை வசதி இல்லாத நிலையில் அருகில் உள்ள பட்டா நிலத்தின் வழியை பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் மேல் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாத வண்ணம் தடுப்புகள் அமைத்தும் ,செல்லும் வழியில் பள்ளங்கள் தோண்டியும் நிலத்தின் உரிமையாளர் இடையூறு செய்து வருவதாக தெரிய வருகின்றது .

    இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்த நிலையில் 3 முறை சமாதான கூட்டம் திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றும் இதுவரையில் சுடுகாட்டுக்கு செல்லுகின்ற பாதையை துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும்,ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக தெரிய வருகின்றது. இந்நிலையில் கருவம்பாக்கம் கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல், கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினை தவிர்த்தல்
    • ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சியில், நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பழனி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் இன்று கலந்துரையாடினார். இதில் கலெக்டர் பேசியதாவது:-

    ஊராட்சி பகுதிகளில் பணிகள் நடைபெறும் பொழுது பொதுமக்கள் பார்வையிட்டு, தங்கள் ஊராட்சிக்கு தேவையான திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி பயன்படுத்திக்கொள்ள வேண்டும், குறிப்பாக, கிராம சபைக் கூட்டத்தின்போது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல், கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினை தவிர்த்தல், திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து கழிப்பறையினை பயன்படுத்துதல், ஊராட்சி யினை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் போன்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், உதவி இயக்குநர் பொன்னம்பலம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜீலியட் மேரி விக்டர், முகையூர் ஊராட்சி மன்ற தலைவர் லூயிஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கமுதியில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் மகளிர் உரிமை தொகை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கமுதி ஊராட்சி ஒன்றியம், தலை வநாயக்கன்பட்டியில் மகளிர் உரிமை தொகைக் கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல்வர் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. கிராம பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ஜெயராமன், ஊராட்சி செயலர் முகம்மது ஹக்கீம் மற்றும் கிராம பொது மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    இதே போல் கீழராமநதி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமையில் சிறப்பு கிராம சபைகூட்டம் நடைபெற்றது. ஊர் நல அலுவலர் (மகளிர் திட்டம்) ராசாத்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மைதீன் ஊராட்சி செயலர் முத்து ராமு மற்றும் கிராம பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் ஆனையூர், பாக்குவெட்டி, பொந்தம்புளி, பெருநாழி, திம்மநாதபுரம், பேரையூர், காத்தனேந்தல், உட்பட ஏராளமான ஊராட்சிகளில் இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    • பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் கிராம சபையில் பதிவு செய்யப்பட்டன.
    • பொதுமக்களின் குறைகளை சொன்னால் அவைகள் கிராம சபை மூலம் தீர்த்து வைக்கப்படும் என்றார்.

    விழுப்புரம்:

    செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கவரை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் அதன் தலைவர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது கவரை ஊராட்சியில் ரூ38 லட்சம் மதிப்பில் செயல்படுத்த உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் கவரை ஊராட்சிக்கு செய்யப்பட்ட பணிகள் குறித்து அமைச்சர் செஞ்சு மஸ்தான் விளக்க உரையாற்றினார். மேலும் அவர் பேசுகையில் பொதுமக்களின் குறைகளை சொன்னால் அவைகள் கிராம சபை மூலம் தீர்த்து வைக்கப்படும் என்றார்.

    அதன்படி பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் கிராம சபையில் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ஒன்றிய கவுன்சிலர் பனிமலர் ராஜா ராம் ஊராட்சி உறுப்பி னர்கள் சதீஷ், தாட்சாயினி, சங்கர், தினேஷ், கலைவாணி, சிவகாமி, பூங்காவனம், பச்சையம்மாள் ஊராட்சி செயலாளர் கனகா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு விவாதிக்கப்பட்டது.
    • ஒன்றிய பணி மேற்பார்வை யாளர் சீனிவாசன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24 திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். ஒன்றிய பணி மேற்பார்வை யாளர் சீனிவாசன் கலந்து கொண்டு கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    இக்கிராம சபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவீ னம், 2022-23ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்ப ணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெ டுப்பு அறிக்கை, மறு-கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நம்ம ஊரு சூப்பரு சிறப்பு பிரசாரம், தனிநபம் சுகாதாரம், ஒருமுறை பயன்ப டுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், ஜல்ஜீவன் திட்டம் - விடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி தீர்மானம்,சமுதாயம் சார்ந்த அமைப்புகள் மகளிர் சுயஉதவி குழுக்கள், கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு, குழந்தைக ளுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை, சாலை பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதில் ஊராட்சி செயலர் மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் அனைத்து கிராம அண்ணா மறுமணச் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட எரவாஞ்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினி தேவி பாலதண்டாயுதம் தலைமை யிலும், அகரகொந்தகையில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையிலும், கொட்டா ரக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ் காந்தி தலைமையிலும், ஏனங்கு டியில் ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன் தலைமையிலும்,வடகரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையிலும், பில்லாளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சகாயராஜ் தலைமையிலும், ராராந்திமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா தேவி தலைமையிலும் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது.

    • வாராப்பூர் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் உள்ள கட்டையம்பட்டி பண்ணை பகுதியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சியின் வரவு-செலவு விவரங்களை மக்களிடம் நேரடியாக துண்டு பிரசுரங்கள் மூலம் அனைவரிடமும் தலைவர் வழங்கினார். ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, குடிநீர், கிராம வளர்ச்சி திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதமரின் மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதமரின் கிராம சாலை திட்டம், ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.

    விவசாயத்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் ,காவல்துறை அதிகாரிகள் , வருவாய்த்துறை அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய பற்றாளர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    • உத்திரகோசமங்கையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • வேளாண் உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்தரகோசமங்கை ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு பங்கேற்று ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். ''நம்ம ஊரு சூப்பரு'' குறித்த விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

    வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு மானிய திட்டத்தில் வேளாண் உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    • கமுதி அருகே கிராம சபை கூட்டம் நடந்தது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாக்கு வெட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருங்குளம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.

    இளநிலை உதவி யாளர் நிறைபாண்டியன் முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் ராஜேசுவரி கதிரேசன், ஊராட்சி செயலாளர் வேல் முருகன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி முழுவதும் கூடுதல் மின்விளக்கு அமைத்தல், கருங்குளம் மயானத்திற்கு எரிமேடை மற்றும் காத்திருப்போர் கூடம், தடுப்புச்சுவர் அமைத்தல், புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பது குறித்தும், பாக்குவெட்டி, கருங்குளம் கிராமத்தில் மயானச்சாலை அமைப்பது குறித்தும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இதேபோல் ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மருதங்கநல்லூர் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலக கணக்காளர் தெய்வ மணிகண்டன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராமநாதன், ஊராட்சி செயலர் ராஜா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தூய்மையான கிராமம் உறுதிமொழி எடுத்தல், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்பு ஒப்புதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் மற்றும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    கீழராமநதி ஊராட்சி யில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் முத்துமாரி முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் மைதீன், ஊராட்சி செயலர் முத்துராமு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    தூய்மையான கிராமம் உறுதிமொழி எடுத்தல், உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

    கே.நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஜெயராமன், ஊராட்சி செயலர் முகம்மது ஹக்கீம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

    • ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.

    துணை தலைவர் அமலா கிராம நிர்வாக அலுவலர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ரஜினி வரவேற்றார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கலந்துகொண்டு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.

    நடைபெற்று வரும் திட்ட பணிகளை தரமுடன் செயல்படுத்தி வருவதாகவும், சுகாதாரம், குடிநீர், தெரு விளக்கு பராமரித்து வருவதாகவும் இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    பின்னர் ஊராட்சிக்கு தேவையான 2023-24 ஆண்டிற்க்கான கிராம வளர்ச்சி திட்ட பணிகளை தயார் செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அபிராமி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 22-ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
    • கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 22-ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

    இதில், உலக தண்ணீர் தின கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவா தித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் பணிகள் நடக்கின்றன.

    மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சித்திட்டம் , தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன்(குடிநீர்) இயக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    மேலும், ஊராட்சிகளில் தற்போது நடைபெறும் அனைத்து பணிகள், கனவுப்பள்ளிகள், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக்கருவேல மரம் அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்சனைகள் அல்லது தேவைகள், கல்வி அறிவு, பெண் கல்வியறிவு சதவீதம், ஆண், பெண் குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×