search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம சபைக் கூட்டங்களில் திட்டங்கள் குறித்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் விழுப்புரம் கலெக்டர் பேச்சு
    X

    கிராம சபைக் கூட்டங்களில் திட்டங்கள் குறித்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் விழுப்புரம் கலெக்டர் பேச்சு

    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல், கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினை தவிர்த்தல்
    • ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சியில், நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பழனி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் இன்று கலந்துரையாடினார். இதில் கலெக்டர் பேசியதாவது:-

    ஊராட்சி பகுதிகளில் பணிகள் நடைபெறும் பொழுது பொதுமக்கள் பார்வையிட்டு, தங்கள் ஊராட்சிக்கு தேவையான திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி பயன்படுத்திக்கொள்ள வேண்டும், குறிப்பாக, கிராம சபைக் கூட்டத்தின்போது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல், கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினை தவிர்த்தல், திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து கழிப்பறையினை பயன்படுத்துதல், ஊராட்சி யினை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் போன்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், உதவி இயக்குநர் பொன்னம்பலம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜீலியட் மேரி விக்டர், முகையூர் ஊராட்சி மன்ற தலைவர் லூயிஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×