search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Warapur"

    • வாராப்பூர் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் உள்ள கட்டையம்பட்டி பண்ணை பகுதியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சியின் வரவு-செலவு விவரங்களை மக்களிடம் நேரடியாக துண்டு பிரசுரங்கள் மூலம் அனைவரிடமும் தலைவர் வழங்கினார். ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, குடிநீர், கிராம வளர்ச்சி திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதமரின் மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதமரின் கிராம சாலை திட்டம், ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.

    விவசாயத்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் ,காவல்துறை அதிகாரிகள் , வருவாய்த்துறை அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய பற்றாளர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    ×