search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு கிராம சபை கூட்டங்கள்
    X

    தலைவநாயக்கன்பட்டியில் மகளிர் உரிமை தொகை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    சிறப்பு கிராம சபை கூட்டங்கள்

    • கமுதியில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் மகளிர் உரிமை தொகை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கமுதி ஊராட்சி ஒன்றியம், தலை வநாயக்கன்பட்டியில் மகளிர் உரிமை தொகைக் கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல்வர் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. கிராம பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ஜெயராமன், ஊராட்சி செயலர் முகம்மது ஹக்கீம் மற்றும் கிராம பொது மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    இதே போல் கீழராமநதி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமையில் சிறப்பு கிராம சபைகூட்டம் நடைபெற்றது. ஊர் நல அலுவலர் (மகளிர் திட்டம்) ராசாத்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மைதீன் ஊராட்சி செயலர் முத்து ராமு மற்றும் கிராம பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் ஆனையூர், பாக்குவெட்டி, பொந்தம்புளி, பெருநாழி, திம்மநாதபுரம், பேரையூர், காத்தனேந்தல், உட்பட ஏராளமான ஊராட்சிகளில் இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×