search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Exam results"

    • தேசிய தேர்வு முகமை நடத்தும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
    • குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாளில் குளறுபடி உள்ளிட்ட புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

    தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. வழக்கம் போல் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த ஆண்டு தேர்வில் தேர்வில் நாடு முழுவதும் மருத்துவக் கனவுடன் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

    குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாளில் குளறுபடி உள்ளிட்ட புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடந்து முடித்த தேர்வுக்கான முதற்கட்ட மாதிரி விடைக் குறிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று என்று தகவல் வெளியாகி உள்ளது. விடைக்குறிப்பு வெளியானதும் மாணவர்கள், exams.nta.ac.in/NEET என்ற இணையத்தளத்தில் அதைப் பதிவிறக்கம் செய்து அந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் முறையிடலாம்.

    அதைத்தொடர்ந்து அனைத்தையும் பரிசீலித்த பின்னர் இறுதிக்கட்ட விடைக்குறிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது 

    • நாடுமுழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிபிஎஸ்இ நடத்திய 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அறிவிப்பு இன்றி இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.

    இதை cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிபிஎஸ்இ பொது தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இதில் 16,21,224 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 14,26,420 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

    நாடுமுழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக பட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 98.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் பெங்களூர் மண்டலத்தில் 96.95 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி ஆகி உள்ளனர்.

    • 8 லட்சத்து 20 ஆயிரத்து 187 பள்ளி மாணவர்களும் 4,945 தனித்தேர்வர்களும் என மொத்தம் 8.25 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
    • தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.

    சென்னை:

    பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவு நாளை (14-ந்தேதி) வெளியாகிறது.

    பிளஸ்-1 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடை பெற்றது. 8 லட்சத்து 20 ஆயிரத்து 187 பள்ளி மாணவர்களும் 4,945 தனித்தேர்வர்களும் என மொத்தம் 8.25 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

    இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்து மதிப்பெண் பதி வேற்றம் உள்ளிட்ட மற்ற பணிகள் நடந்து முடிந்துள்ளன.

    இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவு ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுத் துறை வெளியிடுகிறது.

    தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.

    மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங் கள் மற்றும் அனைத்து மைய கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    இது தவிர பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

    அதே போல் நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ந்தேதி வெளியாகும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    வருகிற செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

    • தேர்வு முடிவுகள் வருகிற 10 ந்தேதி வெளியாகிறது.
    • துணைத் தேர்வில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள்.

    சென்னை:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 26 ந்தேதி முதல் ஏப்ரல் 8 ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை, 9.1 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தேர்வு முடிவுகள் வருகிற 10 ந்தேதி வெளியாகிறது.

    இந்த நிலையில், 'தொடர்ந்து கற்போம்' எனும் திட்டத்தின் கீழ், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு, அவர்கள் துணைத் தேர்வில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள், வாராந்திர தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் கூட்டாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வெளியான நாள் முதல் துணைத் தேர்வு நடைபெறும் நாள் வரை உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், வாராந்திர தேர்வுகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர முடியும்.

    பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை சிறப்பு பயிற்சி மையத்துக்கு அழைத்துவர பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் வருவதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எங்களைப் பொருத்தவரை விஷாலின் 35 சதவீத மதிப்பெண் கூட பெரிய விஷயம்தான்.
    • பெற்றோரின் மனதைக் கவரும் பதிலைக் கண்டு இணையப் பயனர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதில், மும்பையைச் சேர்ந்த பெற்றோர் தங்களது மகன் விஷால் 6 பாடங்களிலும் 35 மதிப்பெண்களைப் பெற்று ஜஸ்ட் பாஸ் ஆனாதை நெகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.

    பொதுத்தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உடனே மனமுடைந்து தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவங்களுக்கு மத்தியில், இதுவும் பெரிய விஷயம் தானே என்று ஜஸ்ட் பாஸ் ஆன மகனை பாராட்டிய செயல் பெற்றோர்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர்.

    மராத்தி நடுநிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர் எடுத்த 35 சதவீத மதிப்பெண்ணை பெருமையோடு காண்பித்த பெற்றோரின் வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "மும்பையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் தேர்வில் 35% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், சோகமாகவோ, கோபமாகவோ இருப்பதற்குப் பதிலாக, அவரது பெற்றோர்கள் அவரது வெற்றியைக் கொண்டாடினர்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, "குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதைத்தான் பல பெற்றோர் விரும்புகின்றனர். கொண்டாடுகின்றனர். ஆனால், எங்களைப் பொருத்தவரை விஷாலின் 35 சதவீத மதிப்பெண் கூட பெரிய விஷயம்தான்" என மாணவரின் தந்தை நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

    பெற்றோரின் மனதைக் கவரும் பதிலைக் கண்டு இணையப் பயனர்கள் இன்ப அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    • அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை 11.10.2022 அன்று எம்.ஆர்.பி. வெளியிட்டது.
    • இதையடுத்து 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை 11.10.2022 அன்று எம்.ஆர்.பி. வெளியிட்டது. இதையடுத்து 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    தமிழகம் முழுவதும் 91 மையங்களில் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதித் தேர்வும், 2 மணி நேரம் கணினி வழியில் கொள்குறி வகையில் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் தேர்வும் நடைபெற்றது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட எம்.ஆர்.பி. திட்டமிட்டுள்ளது.

    இதனிடையே தமிழ் மொழித் தேர்வு கடினமாக இருந்ததாகவும், எனவே தமிழ் மொழி தகுதித் தேர்வு மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தேர்வு வாரி யத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 20-ல் இருந்து 15- ஆக குறைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    • நெல்லை பல்கலைக் கழகத்தில் முதுநிலை பாடப்பிரிவு தேர்வுகள் கடந்த ஜனவரி 13-ந் தேதி முடிவடைந்தது.
    • விடைத்தாள் நகலை பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை பல்கலை கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நவம்பர் 2022-ல் நடத்தப் பட்ட முதுநிலை பாடப்பிரிவு களுக்கான தேர்வுகள் அனைத்தும் கடந்த ஜனவரி 13-ந் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் ஒரு மாத காலத்திற்குள் தேர்வுதாள்கள் திருத்தும் பணி முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 28-ந் தேதி வெளி யிடப்பட்டுள்ளது.

    தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரி வழியாகவோ அல்லது www.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் வழியாகவோ அறிந்து கொள்ளலாம்.

    முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான தேர்வுக ளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்ய விருப்பம் உடையவர்கள் அதற்குரிய படிவங்களை www.msuniv. ac.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் முதலில் விடைத்தாள் நகலைப் பெற்றுக் கொண்ட பின்னனர் தான் மறுமதிப்பீடு செய்து விண்ணப்பிக்க முடியும்.

    விடைத்தாள் நகலை இணையதளம் வழியாக பெறுவதற்கு உரிய கட்டணத்துடன் படிவம் ஏ மூலம் இன்று (3-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். வருகிற 9-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

    விடைத்தாள் நகல்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவேற்றம் செய் யப்படும். அதன் பின்னர் மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க லாம். மறு மதிப்பீடு செய்ய இணையதளம் வழியாக உரிய கட்டணத்துடன் படிவம் பி யை வருகிற 16-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண் ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 21-ந் தேதி ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் 1.56 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
    • மும்பை மண்டலம் நடத்திய தேர்வில் பெங்களூர் மாணவர் ஆர்.கே.ஷிசிர் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் முதல் இடத்தை பிடித்தார்.

    ஜே.இ.இ. முதல்நிலை மற்றும் ஜே.இ.இ. முதன்மை (அட்வான்ஸ்) தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.டி. போன்ற மத்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற முடியும்.

    மேலும் இந்த தேர்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவர்கள் ஜே.இ.இ. முதன்மை தேர்வை எழுதும் தகுதியை பெறுவர்.

    முதன்மை தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்- தொழில்நுட்ப படிப்புகளில் சேர்க்கை பெற முடியும்.

    இந்தநிலையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 1.56 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 40 ஆயிரத்து 712 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 6 ஆயிரத்து 516 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    மும்பை மண்டலம் நடத்திய தேர்வில் பெங்களூர் மாணவர் ஆர்.கே.ஷிசிர் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் முதல் இடத்தை பிடித்தார். அவர் 360 மதிப்பெண்ணுக்கு 314 மார்க் பெற்றார்.

    • தமிழகத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
    • வேறு வழியில்லாமல் தான் இத்தேர்வை எழுதுவதாக கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி கருத்து

    சென்னை:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படியில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 347 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர்.

    இந்த நிலையில் தேர்வு முடிவு செப்டம்பர் 7-ந் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதனால் நேற்று காலையில் இருந்தே தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் எதிர்பார்த்தவண்ணம் இருந்தனர். பகல் 12 மணிக்கு வெளியாகும் என இணையதளத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்து இருந்தனர்.

    ஆனால் இரவு 11 மணி வரை முடிவு வெளியாகவில்லை. அதன் பிறகு தேர்வு முடிவு வெளியானது. இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதன் தேர்ச்சி சதவீதம் 56.3 சதவீதம் ஆகும்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும் கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தை விட சற்று குறைந்துள்ளது.

    நீட் தேர்வில் அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா 720 மதிப்பெண்ணுக்கு 715 மதிப் பெண் பெற்று முதலிடம் பிடித்தார். அவரை தொடர்ற்து டெல்லி மாணவர் வத்சா அஷிஸ் பட்ரா 2-ம் இடமும், கர்நாடகா மாணவர்கள் 2 பேர் 3-வது 4-வது இடத்தையும் வகித்தனர்.

    தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று 30-வது இடம் பிடித்தார். மாணவி ஹரிணி 702 மதிப்பெண் பெற்று பட்டியலில் 43-வதுஇடம் பிடித்தார்.

    தமிழகத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 51.3 சதவீதமாகும்.

    அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்ததாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேரும், ராஜஸ்தானில் 82 ஆயிரத்து 548 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

    தமிழகத்தில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் கடந்த வருடத்தை காட்டிலும் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    நீட் தேர்ச்சி விகிதம் குறைவுக்கான காரணம் குறித்து கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி கூறியதாவது:-

    நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விரும்பி படிப்பது இல்லை. விருப்பத்துடன் படித்தால் அதிக மதிப்பெண் பெற முடியும். கட்டாயப்படுத்தி படிப்பதால் தான் தேர்ச்சி விகிதம் குறைகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்ற முடிவில் அரசு, மாணவர்கள், பெற்றோர்கள் ஒருமித்த கருத்துடன் இருக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்ற மனப்பான்மை தான் மாணவர்களிடம் உள்ளது. வேறு வழியில்லாமல் தான் இத்தேர்வை எழுதுகிறார்கள். விரும்பி படிக்கும் மனப்பான்மை கிடையாது.

    மேலும் கொரோனா காலத்தில் மாணவர்கள் ஆன்லைன் வழியாக நீட் பயிற்சி பெற்றுள்ளனர். நடுத்தர வகுப்பினரும், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களும் அதிக செலவு செய்து பயிற்சி பெற வாய்ப்பு இல்லை. அதனால் தான் இத்தகைய தேர்ச்சி விகிதம் அமைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ப்ளஸ் 2 தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி.
    • இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

    நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த நிலையில், 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    www.cbse.results.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுக்குரிய ஆசிரியர்கள் அவ்விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் பங்கேற்க வேண்டும்.
    • ஆனால், தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு 60 முதல் 70 விடைத்தாள்களை திருத்த வேண்டியுள்ளது.

    திருச்சி :

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை பருவத்தேர்வுகளின் விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஜூன் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில, இப்பல்கலைக்கழக தேர்வு நெறியாளர், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அதில், பாரதிதாசன் பல்கலைக் கழக இளநிலை பருவத் தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர்கள் வருகை மிக குறைவாக உள்ளதால், தேர்வு முடிவுகளை குறித்த நேரத்தில் அறிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுக்குரிய ஆசிரியர்கள் அவ்விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் பங்கேற்க வேண்டும்.மேலும், இதற்கு கல்லூரி முதல்வர்களும் முழு ஒத்துழைப்பு தந்து ஆசிரியர்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இது குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளரிடம் கேட்டபோது, இது வழக்கமாக அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும் சுற்றறிக்கைதான், விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. முடிந்தவரை விரைவாக தேர்வு முடிவுகளை வெளியிட முயற்சித்து வருகிறோம் என்றார்.

    சுற்றறிக்கை குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகி தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால், பெரும் பாலான தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பவில்லை. இதனால் இந்த ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணியில் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.

    வழக்கமாக ஒரு நாளைக்கு காலை 20, மாலை 20 என 40 விடைத்தாள்கள் மட்டுமே திருத்தப்படும். ஆனால், தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு 60 முதல் 70 விடைத்தாள்களை திருத்த வேண்டியுள்ளது. மேலும் ஒரு விடைத்தாள் திருத்த பல ஆண்டுகளாக ரூ.12 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி வழங்காததாலும் பலர் இந்தப் பணியை தவிர்த்து விடுகின்றனர் என்றனர்.

    ×