search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "d raja"

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

    இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய தலைவர் டி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பிரதமருக்கு நெருக்கமான ஒருவர் சம்பந்தப்பட்ட கொடூரமான வீடியோக்கள், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் வெளியாகியுள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கு மோடியின் உத்தரவாதத்திற்கு இந்த வீடியோக்களே சாட்சி. இதுதான் மோடியின் 'நாரி சக்தி'யின் (பெண்கள் சக்தி) உண்மையான நிலை.

    பெண்களுக்கு எதிரான பிரஜ்வல் ரேவண்ணாவின் குற்றங்கள் பற்றி மோடி-ஷா வாய் மூடியுள்ளார்கள்.

    வீடியோக்கள் வெளியானதையடுத்து ரேவண்ணா நாட்டை விட்டு ஓடிவிட்டார், தப்பிக்க அவருக்கு உதவியவர் யார்? இந்த விடை நம் அனைவருக்குமே தெரியும்.

    பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தலின் போதும், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட போதும் மோடி மவுனம் காத்தார். ஆயிரக்கணக்கான பெண்களை சீரழிவுக்கு ஆளாக்கிய இந்த கூட்டாளி குறித்தும் மோடி மௌனம் காப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

    நாட்டை நிர்வகிப்பதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். #draja #pmmodi #indiacommunistparty

    பெருந்துறை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, மூத்த தலைவர் பாண்டியன், மாநில செயலாளர் முத்தரசன், மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், மாநில துணை செயலாளர் சுப்பராயன், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் தேசிய செயலாளர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் மோடி அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது. நாட்டினுடைய பொருளாதாரம் சீர்குலைந்து இருக்கிறது. நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    இந்தியாவில் மதச்சார் பற்ற ஒரு ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும். மோடி தலைமையில் ஆட்சி அமைந்து ஐந்தாண்டு காலம் நிறைவு பெற்ற நிலையில், நாட்டினுடைய நிலைமையை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டை நிர்வகிப்பதில் மோடி படுதோல்வி அடைந்திருக்கிறார்.

    மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கருப்பு பணம் பற்றி அவர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட வில்லை.


    அதற்கு மாறாக தொழில்கள் முடங்கி போயிருக்கின்றன. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று உரிய புரிதல் இல்லாமல் அவர்கள் செயல்படுத்திய காரணத்தால் இன்றைக்கு சிறு குறு தொழில்கள் நொடிந்து போய் இருக்கின்றன. பலருக்கு வேலைவாய்ப்பு பறி போயிருக்கிறது.

    விவசாயத்துறை மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. விவசாயிகள் நாடு முழுவதும் கொந்தளிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலைக்கு உட்படுகிறார்கள். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. சாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றப்பட வில்லை.

    மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். பசுவின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் கலவரச் சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு சமூக அமைதியின்மையை உருவாக்கி இருக்கிறார்கள். எனவேதான் இன்றைக்கு நாடு காப்பாற்றப்பட வேண்டும்.

    இந்தியாவுடைய மதச் சார்பற்ற ஜனநாயக பன் முகத்தன்மை கொண்ட ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இவை நடைபெற வேண்டுமானால் பாரதீய ஜனதா ஆட்சி அகற்றப்பட வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டை ஆளும் கட்சி என்பது இன்றைக்கு மத்திய அரசின் கைகளுக்கு கட்டுப்பட்ட ஒரு கட்சியாக இருக்கிறது. அதை அவர்களே பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார்கள். மத்தியில் உள்ள மோடி ஆட்சியை நிபந்தனையற்று ஆதரிப்போம் என அவர்களே சொல்கிறார்கள்.

    அதனால் தமிழ்நாட்டின் உரிமை, நலன் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் ஒரு மாற்று மதச் சார்பற்ற ஜனநாயக ஆட்சி அமையவேண்டும். நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்திற்கான அடித்தளம் அமைக்க வேண்டும். இங்கு பாரதீய ஜனதா காலூன்ற இடம் இல்லை என்ற நிலையை தமிழ்நாட்டு மக்கள் நிரூபணம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு ராஜா கூறினார். #draja #pmmodi #indiacommunistparty

    பிரதமரின் நேரடி தலையீட்டுல் செய்யப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என இ.கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். #Rafaledeal #DRaja
    சென்னை:

    சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இ.கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியதாவது:-

    ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி நேரடியாகவே தலையிட்டு இருந்தார். இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை நுழைத்த அதே வேளையில் இந்திய அரசுக்கு சொந்தமான ஹெச்.ஏ.எல். நிறுவனம் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பது தான் இவ்விவகாரத்தில் எழும் அடிப்படை கேள்வியாக உள்ளது.

    இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலை அறிய மக்கள் விரும்புகிறார்கள். நிதி மந்திரி அருண் ஜெட்லி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பதிலாக இதில் நேரடி தொடர்புள்ள மோடிதான் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஆனால், இந்த அரசு எதையோ மறைக்கிறது என்பதைதான் பிரதமர் சாதித்து வரும் மவுனம் உறுதிப்படுத்துகிறது. எனவே, ரபேல் ஊழலில் மறைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rafaledeal #DRaja
    ×