search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blood Sample"

    • குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார்.
    • ர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

    புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

     

    இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி  பங்களாவில் அடைத்துவைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.

    சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகி வரும் நிலையில், சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதாக என்று கண்டறிய எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை திரிக்க முயன்றதாக சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. முன்னதாக விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

     

    • பிரத்தியேகமாக தனியாக அறை ஒதுக்கப்பட்டு அதில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு நோய் தாக்குதல் இருந்து வருகிறது.

    இது தொடர்பாக அனைத்து அரசுமருத்துவ மனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு என சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் காரணமாக 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் 8 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றவ ர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சென்னைக்கு அனுப்ப ப்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவமனையின் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெங்கு பாதிக்கப்பட்ட வர்களுக்கு பிரத்தியேகமாக தனியாக அறை ஒதுக்கப்பட்டு அதில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் டெங்கு சிகிச்சை பெறு பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையின் சுற்றுப்புறங்களையும் தூய்மைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை என ஈடுபட்டுள்ளனர்.

    ×