search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 வழிச்சாலை"

    மனித நேயத்தை மறந்து பணத்திற்கு மட்டுமே மதிப்பு கொடுக்கும் இன்றைய உலகில் ரூ.8½ லட்சம் கைக்கு கிடைத்தும் அதனை உரியவரிடம் சேர்த்து மனித நேயத்தை காப்பாற்றி உள்ளார் சிவகாசி சிவசங்கரி.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள சாட்சியாபுரம் புதுக்காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி சிவசங்கரி (வயது33). இவர் வீட்டிலேயே துணி தைத்து கொடுத்து வருகிறார்.

    அவ்வப்போது சிவகாசி டவுனில் உள்ள ஜவுளிக் கடைகளுக்கு சென்று துணிகளை வாங்கி வருவது வழக்கம். சம்பவத்தன்று சிவசங்கிரி தனது அக்காள் மகள் விக்னேஷ்வரியுடன் (22) ஜவுளிக்கடைக்கு சென்றார்.

    சிவகாசி தெற்கு ரதவீதியில் உள்ள ஒரு கடையில் இருவரும் ஜாக்கெட் பிட் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிவகாசியை சேர்ந்த லெனின் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடை உரிமையாளரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

    வியாபார வி‌ஷயமாக கடை உரிமையாளர் ரூ.8½ லட்சத்தை பேப்பரில் கட்டி லெனின் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தார். அவரும் மேஜையில் வைத்து விட்டு பேசிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் துணி வாங்கிக்கொண்டு இருந்த சிவசங்கரி பில் போடுமாறு ஊழியரிடம் கூறினார்.

    அவர்களும் பில் போட்டு ஜாக்கெட் பிட்டுகளை பேப்பரில் மடித்து சிவசங்கரி கொண்டு வந்திருந்த பையில் வைத்தனர். ஊழியரின் கவனக்குறைவு காரணமாக அருகில் இருந்த ரூ.8½ லட்ச பணக்கட்டையும் சிவசங்கரி பையில் வைத்தனர்.

    இதை அறியாத சிவசங்கரியும் சிறிது நேரத்தில் கடையில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றார். இதனிடையே பணம் தொலைந்ததை அறிந்த லெனின் கிருஷ்ணமூர்த்தி கடை முழுவதும் தேடி பார்த்தார். ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. எந்த பலனும் இல்லை. இது குறித்து அவர் சிவகாசி போலீசில் புகார் செய்தார்.

    இதற்கிடையில் மாலையில் சிவசங்கரி ஜாக்கெட் பிட்டுகளை தைப்பதற்காக எடுத்தார். அப்போது ஒரு பேப்பர் கட்டில் 2000, 500 ரூபாய் என மொத்தம் ரூ.8½ லட்சம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் தான் ஜாக்கெட் பிட் வாங்கிய ஜவுளிக்கடையில் இருந்து தான் ஊழியர்கள் தவறுதலாக பணத்தை வைத்து இருக்கலாம் என்று கருதி அந்த கடைக்கு சென்று நடந்த விவரத்தை தெரிவித்தார்.

    பணம் கிடைத்ததை கண்டு லெனின் கிருஷ்ண மூர்த்தியும், கடை உரிமையாளரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இளம்பெண் சிவசங்கரியின் நேர்மையை அவர்கள் பாராட்டினர்.

    இதை அறிந்த சிவகாசி போலீசாரும் நேர்மையாக நடந்து கொண்ட சிவசங்கரிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

    பணத்தை மட்டுமே பெரிதாக என்னும் இந்த காலத்தில் தவறுதலாக பையில் இருந்த ரூ.8½ லட்சத்தை நேர்மையுடனும், கண்ணியத்துடனும் திருப்பிக்கொடுத்த சிவசங்கரிக்கு சமூக வலை தளங்களிலும், போன் மூலமாகவும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    இதுகுறித்து சிவசங்கரி கூறுகையில், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நான் தையல் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே நமக்கு சொந்தம். மற்றவர்களின் பணம் தேவையில்லை என்று கருதி தவறுதலாக கிடைத்த பணத்தை உடனே திருப்பி கொடுத்துவிட்டேன்.

    அந்த பணம் எனது கையில் இருந்தவரை மனம் மிகுந்த பாரமாக இருந்தது. அதை திருப்பிக்கொடுத்த பிறகுதான் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது என்றார். #Tamilnews

    கோவை சோமனூர் பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை சோமனூர் பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54). தொழிலாளி.

    சம்பவத்தன்று அப்பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி சக தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அந்த வழியாக வந்த செல்வராஜ் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

    இதனால் சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு சென்றார். வேலைக்கு சென்றிருந்த சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய போது, சிறுமியிடம் ஏன் அழுகிறாய்? என கேட்டனர். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் செல்வராஜ் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கைதான செல்வ ராஜூக்கு, திருமண வயதில் மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    லாலாபேட்டை காவிரி கரையில் அனுமதியின்றி மணல் கடத்தியது தொடர்பாக லாரி, 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து 8 பேரை கைது செய்தனர்.
    லாலாபேட்டை:

    லாலாபேட்டை காவிரி கரையில் நேற்று அதிகாலை டாரஸ் லாரி ஒன்றில் மணல் ஏற்றிக்கொண்டு இருபதாக லாலாபேட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது லாரியில்3 பேர் மணல் ஏற்றி கொண்டு இருந்தனர்.

    போலீசை பார்த்தும் லாரி டிரைவர் சித்தலவாயை சேர்ந்த சேட்டுமீரான் தப்பித்து ஓடி விட்டார். மற்ற 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்க்ள மேட்டுமகாதனபுரத்தை சேர்ந்த கார்த்திக்(28), அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி (39), பிள்ளபாளையத்தை சேர்ந்த பிரதீப்(31)என்பது தெரிய வந்தது. இது குறித்து லாலாபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

    கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவுட்டுப்பாளையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் மற்றும் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 மாட்டுவண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி கொண்டு வந்த தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (30), ஈஸ்வரன் (22), முத்து (24), புகளுர் ஹைஸ்கூல் மேட்டை சேர்ந்த கார்த்திக் (30), பொன்னர் (32) ஆகிய 5 பேரை கைது செய்தனர். 5 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யபட்டது. #tamilnews
    புதுவையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவான 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #PondicherryGirlharassment
    திருக்கனூர்:

    சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் கொடுமைப்படுத்திய 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதுபோல் புதுவையில் 17 வயது சிறுமியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 8 பேர் கும்பல் கற்பழித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    புதுவை ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமி புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த சிறுமியின் பாட்டி வீடு விழுப்புரத்தில் உள்ளது.

    பாட்டி வீட்டுக்கு அடிக்கடி பஸ்சில் செல்லும் போது வழுதாவூரை சேர்ந்த விக்கி (வயது 21) என்ற வாலிபருடன் அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று அதுபோல் அந்த சிறுமி விழுப்புரத்துக்கு சென்ற போது, விக்கி ஆசை வார்த்தை கூறி திருக்கனூரில் உள்ள புதர் நிறைந்த காட்டு பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது அந்த சிறுமிக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.

    குளிர்பானத்தை குடித்ததும் அந்த சிறுமி மயங்கி போனார். இதனை பயன்படுத்தி கொண்ட விக்கி அந்த சிறுமியை கற்பழித்தார். மேலும் தனது நண்பர்கள் 7 பேருக்கும் அந்த சிறுமியை விருந்தாக்கினார் .

    மயக்கம் தெளிந்து விக்கி மற்றும் அவரது நண்பர்களால் சீரழிக்கப்பட்டதை உணர்ந்த அந்த சிறுமி இதுபற்றி புதுவை குழந்தைகள் நல குழுவிடம் முறையிட்டார். இதையடுத்து குழந்தைகள் நல குழுவினர் இதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவிடம் புகார் தெரிவித்தனர்.

    இந்த புகாரை ஏற்று இதன் மீது விசாரணை நடத்தும்படி திருக்கனூர் போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    இதன்படி திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் விக்கியுடன் சேர்ந்து சிறுமியை கற்பழித்தவர்கள் திருக்கனூர் மற்றும் வழுதாவூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான கண்ணதாசன், முகிலன், சூர்யா, மற்றொரு சூர்யா, தேவா, ஜனா, அசோக் என்பது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள அவர்கள் 8 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். #PondicherryGirlharassment
     
    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி பெரம்பலூரில் மக்கள் நல போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி பெரம்பலூரில் மக்கள் நல போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் உரிமை கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் அசன் முகமது தலைமை வகித்தார். 

    தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், பகுஜன் சமாஜ் கட்சி மாநில நிர்வாகி காமராசு, வழக்கறிஞர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன், மின்வாரிய (சிஐடியூ) வட்ட தலைவர் அகஸ்டின், இந்திய தொழிலாளர் மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் ஈஸ்வரன், சுற்றுச்சூழல் சூழலியலாளர் ரமேஷ் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
    உத்தர பிரதேச மாநிலம் லக்னோ-ஆக்ரா நெடுஞ்சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். #UPAccident
    கன்னாஜ்:

    ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு வந்துள்ளனர். கோவிலில் வழிபாடு முடிந்து, காரில் ஊருக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 4 மணியளவில் லக்னோ-ஆக்ரா நெடுஞ்சாலையில் திர்வா அருகே சென்றபோது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் கார் முற்றிலும் சிதைந்துபோனது. காருக்குள் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார். #UPAccident
    அரூர் வழியாக செல்லும் சென்னை-சேலம் எட்டு வழி பசுமை விரைவுச் சாலை பணிகள் குறித்து முதுநிலைப் பொறியாளர்கள் மது பாபு, தருண் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
    கம்பைநல்லூர்:

    சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழி பசுமை சாலையானது ரூ. 10 ஆயிரம் கோடியில் அமைய உள்ளது. இந்த சாலையானது தருமபுரி மாவட்டத்தில் 53 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது.

    இந்த சாலை அமைப்பதற்கான நிலம் சர்வே செய்யும் பணிகள், எல்லைக்கல்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது, பசுமை வழிச்சாலை அமையும் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகள், தென்னை மரங்கள், ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    பசுமை வழிச்சாலையில் நடைபெறும் அடுத்த கட்டப் பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையின் முதுநிலைப் பொறியாளர்கள் மது பாபு, தருண் ஆகியோர் அடங்கிய குழுவினர் எருமியாம்பட்டி, மாலகபாடி உள்ளிட்ட கிராமப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, விவசாயிகளின் கோரிக்கைகள், அரசு கையப்படுத்தப்படும் நிலங்கள், வீடுகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின் போது அரூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார் உடனிருந்தார்.


    உத்தரபிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 8-ம் வகுப்பு மாணவன் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான ஆர்யான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

    இங்கு 8-ம் வகுப்பு மாணவன் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மருத்துவ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததுடன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில் நோயாளிக்கு கம்பவுண்டரே மயக்க ஊசி செலுத்துகிறார். பின்னர் 13 வயது சிறுவன் வந்து அறுவை சிகிச்சை மேற்கொள்கிறான். அதை அருகில் நின்று அவனது தந்தை மேற்பார்வையிடுகிறார்.

    இதுபற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி அசோக் குமார் ஹண்டா கூறுகையில், இங்கு சிறுவன் அறுவை சிகிச்சை மேற்கொள்வது இது முதல் முறையல்ல, அந்த ஆஸ்பத்திரியில் பார்வையாளர்கள் முன்னிலையில் அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது. நர்சுகளும் கூட மயக்க மருந்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

    இதற்காக ஆர்யான் மருத்துவமனைக்கு 3 முறை சீல் வைக்கப்பட்டது. ஆனால் ஆஸ்பத்திரி நிறுவனர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் ஆஸ்பத்திரியை திறந்து விடுகிறார்.

    கடந்த 1 ஆண்டில் மட்டும் இங்கு 24 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் 3 குடும்பத்தினர் இது தொடர்பாக போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    “பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டாம், வாழ்வாதாரத்தை பிச்சையாக போட வேண்டும்’’ என்று விவசாயிகள் கோ‌ஷங்களை எழுப்பினர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாசில்தார் மனோகரன் தலைமையில் நடந்தது. திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் விவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோது, 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தியபடி, பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பியபடி கூட்டம் நடைபெற்ற அரங்கத்திற்குள் வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் ‘‘பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டாம், வாழ்வாதாரத்தை பிச்சையாக போட வேண்டும்’’ என்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

    அந்த சமயத்தில் அங்கிருந்த மற்றொரு தரப்பு விவசாயிகள், ‘‘பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டும் என்று ஆதரவு கோ‌ஷங்கள்’’ எழுப்பினர். இதனால் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது விவசாயிகளாக இல்லாதவர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிலர் கோ‌ஷமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 தரப்பு விவசாயிகளையும் இருக்கையில் போலீசார் அமர வைத்தனர்.

    இதையடுத்து மீண்டும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் தொடங்கி தொடந்து நடைபெற்றது. அப்போது விவசாயி ஒருவர், பசுமை வழிச்சாலை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தீவிரவாதிகள் மீது தான் போலீசாரின் அடக்குமுறை இருந்தது. ஆனால் தற்போது விவசாயிகள் மீது போலீசாரை ஏவுகின்றனர்’’ என்றார்.

    அப்போது அங்கிருந்த சில விவசாயிகள் கூட்டத்தில் ‘‘அரசியல் பேசக்கூடாது. பசுமை வழிச்சாலைக்கு எதிராக யாரும் பேசக் கூடாது’’ என்றனர். மற்றொரு தரப்பு விவசாயிகள் தனிப்பட்ட கருத்தை தெரிவிக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறி கோ‌ஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து திருவோடு ஏந்தி வந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து அவர்கள் வெளியே வந்து பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கையில் வைத்து இருந்து திருவோடுகளை கீழே போட்டு உடைத்தனர். அப்போது போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    8 வழி பசுமை சாலைக்காக செய்யாறு அடுத்த பெரும்பாளை கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவிடும் பணியை தொடர்ந்தனர்.

    அதேபகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 73) என்பவரின் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    அப்போது அவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலமும், ஒரு கிணறும் கையகப்படுத்தப்பட்டதாக அளவீடு செய்து கல் நடப்பட்டது. இதைப்பார்த்த கிருஷ்ணன் தனது நிலத்தில் விழுந்து, புரண்டு கதறி அழுதார்.

    எனினும் ஒருபுறம் அதிகாரிகள் அளவீடு பணியை தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் ஓடிச் சென்று அருகில் உள்ள தனது கிணற்றில் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றார்.



    இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர், உடனடியாக ஓடிச் சென்று, கிராம மக்கள் உதவியுடன் கிருஷ்ணனை கயிறு கட்டி கிணற்றில் இருந்து மீட்டனர். இது குறித்து கிருஷ்ணன் கூறுகையில், எனக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. எனது நிலம் பறிபோவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாலை அமைக்கும்போது மூடப்படும் எனது கிணற்றிற்குள்ளே என்னையும் சேர்த்து புதைத்து விடுங்கள்’’ என்று கதறினார்.

    தொடர்ந்து இன்று காலை சேத்துப்பட்டு தாலுகாவில் நாச்சியாபுரம் கோரமங்கலம் பகுதியில் நிலம் அளவீடு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டம் ஒருபுறம் நடந்தாலும் மறுபுறம் நில கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    மதுபானம், சாராயம் கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டது மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலாடுதுறை:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு மதுபானம், சாராயம் கடத்தல் நடந்து வருகிறது. இவைகளை தடுக்க சோதனை சாவடிகள் செயல்பட்டபோதும் மது கடத்தல் நடைபெறுவது தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில் மயிலாடுதுறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார், பெரம்பூர், குத்தாலம், சித்தர்காடு ஆகிய இடங்களில் விடிய விடிய வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது மதுபாட்டில்களையும் சாராயத்தையும் கடத்தி வந்த 2 சொகுசு கார்கள் ஒரு மினி லாரி ஆகியவை பிடிபட்டன. அவைகளில் கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 544 மதுபாட்டில்கள், 600 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில், சாராயம் கடத்தி வந்த காரைக்காலை சேர்ந்த சதீஷ் (வயது31), வின்ஸ்ராஜ் (21), மதிவாணன் (40), கார்த்திகேயன் (28), சுரேஷ் (44), விக்டர் (32), பவித்ரன் (19) உள்பட 8 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மயிலாடுதுறை மதுவிலக்குப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மதுகடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள், வாகனங்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    காரைக்கால், கும்பகோணம் பகுதிக்கு மதுபாட்டில்களை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இவர்களின் பின்னணியில் முக்கிய நபர்கள் உள்ளார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    மாணவர்களுக்கான அரிசியை பதுக்கியதற்காக திருத்தணி பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி வார்டன் பழனியை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
    திருத்தணி:

    திருத்தணி, கனகமா சத்திரம், ஆர்.கே.பேட்டை, நார் தவாடா, மேல்கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 அரசு மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படுவதில்லை என்றும், உணவு தரமானதாக இல்லை என்றும் பல்வேறு புகார்கள் வந்தன.

    மேலும் விடுதி காப்பாளர்கள் மாணவர்களுக்காக சமைக்கப்படும் அரிசியை பதுக்கி ஆந்திராவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

    இதையடுத்து இன்று திருத்தணி கோட்டாட்சியர் பவநந்தி, வட்டாட்சியர் நரசிம்மன் மற்றும் அதிகாரிகள் திருத்தணியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் திடீரென்று சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு அறையில் அரிசிகள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சுமார் 8 டன் எடை கொண்ட அரிசிகளை ஆந்திராவுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து விடுதி காப்பாளர் மற்றும் ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் விடுதியில் தங்கி இருந்த மாணவர்களிடம் உணவு தரம் பற்றி கேட்டு அறிந்தனர்.

    பின்னர் மாணவர்களுக்கான அரிசியை பதுக்கியதற்காக திருத்தணி பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி வார்டன் பழனியை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மற்ற மாணவர்கள் விடுதிகளில் உணவு தரம் குறித்தும், அரிசி பதுக்கி விற்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது குணார் மாகாணம். இங்குள்ள காவல் நிலைய சோதனைக்கு வெளியே தற்கொலைப்படை பயங்கரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    ×