search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shamli"

    • விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி படத்தில் நாயகியாக நடித்துவர் ஷாம்லி.
    • நடிகை ஷாம்லி ஓவிய கலைஞராக மாறி கண்காட்சிகள் நடத்தி வருகிறார்.

    திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகியானவர் ஷாம்லி. இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகை ஷாலினியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.


    ஷாம்லி

    ஷாம்லி

    இந்நிலையில் நடிகை ஷாம்லி ஓவிய கலைஞராக மாறி கண்காட்சிகள் நடத்தி வருகிறார். ஓவியங்களில் ஷாம்லி பயன்படுத்தும் கோடுகள், வளைவுகள், வண்ணங்கள் வரையறைகள் தனித்துவமாகவும், ஓவியங்களில் இடம்பெறும் பெண்கள் தங்களின் சுதந்திரமான ஆன்மாவை வெளிப்படுத்துவது போல் உள்ளன என்றும் பலர் பாரட்டி உள்ளனர்.


    ஷாம்லி

    ஷாம்லி

    ஓவியரானது குறித்து ஷாம்லி கூறும்போது, "நான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 60 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். கதாநாயகியாகவும் வந்தேன். ஓவியக்கலை மீது ஏற்பட்டுள்ள ஈடுபாடு காரணமாக ஓவிய துறையில் திறமை பெற்றவர்கள் மூலம் ஓவியம் வரைய கற்றேன். அமெரிக்கா சென்றும் ஓவியம் வரைய பயின்றேன். பெங்களூர், சென்னை ஓவிய கண்காட்சியில் ஓவியங்களை காட்சிப்படுத்தினேன். 300 கலைஞர்களுக்கு மேல் பங்கேற்ற துபாயில் உள்ள சர்வதேச ஓவிய கலைக்கூடத்திலும் எனது ஓவியங்களை கண்காட்சிக்கு வைத்தேன். அடுத்து சென்னையில் தனியாக ஓவிய கண்காட்சி நடத்த இருக்கிறேன். மீண்டும் சினிமாவில் நடிப்பது குறித்து சிந்திக்கவில்லை'' என்றார்.

    உத்தரபிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 8-ம் வகுப்பு மாணவன் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான ஆர்யான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

    இங்கு 8-ம் வகுப்பு மாணவன் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மருத்துவ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததுடன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில் நோயாளிக்கு கம்பவுண்டரே மயக்க ஊசி செலுத்துகிறார். பின்னர் 13 வயது சிறுவன் வந்து அறுவை சிகிச்சை மேற்கொள்கிறான். அதை அருகில் நின்று அவனது தந்தை மேற்பார்வையிடுகிறார்.

    இதுபற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி அசோக் குமார் ஹண்டா கூறுகையில், இங்கு சிறுவன் அறுவை சிகிச்சை மேற்கொள்வது இது முதல் முறையல்ல, அந்த ஆஸ்பத்திரியில் பார்வையாளர்கள் முன்னிலையில் அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது. நர்சுகளும் கூட மயக்க மருந்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

    இதற்காக ஆர்யான் மருத்துவமனைக்கு 3 முறை சீல் வைக்கப்பட்டது. ஆனால் ஆஸ்பத்திரி நிறுவனர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் ஆஸ்பத்திரியை திறந்து விடுகிறார்.

    கடந்த 1 ஆண்டில் மட்டும் இங்கு 24 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் 3 குடும்பத்தினர் இது தொடர்பாக போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×