search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 way road project"

    8 வழிச்சாலை திட்டம் வளர்ச்சியை முன்னோக்கியது. ஆகவே தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்வதில் தவறில்லை என்று ஜான் பாண்டிணன் கூறியுள்ளார்.

    கரூர்:

    கரூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேவேந்திர குல வேளாளர்கள் பற்றி இதுவரை பேசாத தி.மு.க. தேர்தல் நேரத்தில் பேசுவது தேர்தல் ஆதாயத்திற்காக தான். அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது. தேர்தல் நேரத்தில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவேன் என்பதும், விவசாய கடன்களை ரத்து செய்வேன் என்பதும் கேலிக்கூத்தாக உள்ளது.

    ஆனால் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் உள்ளிட்ட திட்டம் ஏற்று கொள்ளும்படியானதாக இருக்கிறது.

    தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் ஒரு சில இடங்களில் நடக்கலாம். அதற்காக நாடு முழுவதும் நடப்பதாக கூற முடியாது. 8 வழிச்சாலை திட்டம் வளர்ச்சியை முன்னோக்கியது. ஆகவே தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்வதில் தவறில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி பெரம்பலூரில் மக்கள் நல போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி பெரம்பலூரில் மக்கள் நல போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் உரிமை கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் அசன் முகமது தலைமை வகித்தார். 

    தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், பகுஜன் சமாஜ் கட்சி மாநில நிர்வாகி காமராசு, வழக்கறிஞர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன், மின்வாரிய (சிஐடியூ) வட்ட தலைவர் அகஸ்டின், இந்திய தொழிலாளர் மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் ஈஸ்வரன், சுற்றுச்சூழல் சூழலியலாளர் ரமேஷ் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
    ×