search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 killed"

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். #8killed #coachoverturns
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இஸ்லாம்கோட் நகரில் இருந்து கராச்சி நோக்கி ஒரு சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. இன்று காலை படின் என்னுமிடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சுமார் 10 பேர் நிலைமை மோசமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    பாகிஸ்தானில் ஆண்டுதோறும் சுமார் 9 ஆயிரம் சாலை விபத்துகளில் சுமார் 5 ஆயிரம் பேர் பலியாவது தொடர்கதையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #8killed #coachoverturns 
    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் திருமணத்துக்கு சென்றவர்களை ஏற்றிவந்த வாகனம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற விபத்தில் இரு குழந்தைகள் ஆறு பெண்கள் என 8 பேர் உயிரிழந்தனர். #8killed #Pakistanflood
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் சில நாட்களாக கனமழைபெய்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள வசிரிஸ்தான் மாவட்டத்தில் சிலர் ஒரு வாகனத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றனர்.

    வானா என்ற இடத்தின் வழியாக சென்றபோது சாலையின் குறுக்கே பாய்ந்த வெள்ளத்தில் அந்த வாகனம் அடித்து சென்றது. அதில் சென்ற பலர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அருகாமையில் உள்ளவர்கள் அளித்த தகவலை அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இரு குழந்தைகள் மற்றும் ஆறு பெண்களின் பிரேதங்களை கைப்பற்றினர்.



    காணாமல் போன 6 குழந்தைகளை மீட்க தேடுதல் நடைபெற்று வருகிறது. #8killed #Pakistanflood #Pakistanflashflood
    உத்தரகாண்டில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #UttarakhandAccident
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தின் பாராகோட் பகுதியை சேர்ந்த ஒருவரது உடலை தகனம் செய்வதற்காக காரில் எடுத்துச் சென்றனர். அங்குள்ள லோஹா காட் பகுதியில் கார் சென்றபோது திடீரென நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 6 பேரும், மருத்துவமனையில் 2 பேரும் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மேலும், 12 பேர் காயமடைந்தனர்.

    தகவலறிந்த மீட்புக்குழு அங்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டது, பள்ளத்தில் விழுந்தவர்களை கயிறுகள் கட்டி மீட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #UttarakhandAccident
    ராஜஸ்தானில் சுற்றுலா சென்ற பள்ளிக்கூட கார் லாரியுடன் மோதிய விபத்தில் மாணவிகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சலும்பர் நகரை சேர்ந்தவர்கள் ஒரு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

    கைராட் பகுதியில் சென்றபோது அந்த கார் முன்னால் சென்ற லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 3 மாணவிகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், ஆசிரியர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளியில் இருந்து சுற்றுலா சென்ற போது விபத்து ஏற்பட்டு 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident
    நைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். #Nigeria #BokoHaramAttack
    கனோ:

    நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது.

    இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள போர்னோ மாகாணத்தில் நேற்று இரவு போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் இரண்டு கிராமங்களில் புகுந்து திடீரென தாக்குதல் நடத்தினர்.
     
    இந்த தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். #Nigeria #BokoHaramAttack
    தென் ஆப்ரிக்கா நாட்டின் கேப் டவுன் அருகே ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஜோகன்னஸ்பெர்க்:

    தென் ஆப்ரிக்கா நாட்டின் தலைநகரமான கேப் டவுனில் சாமர்செட் நகரின் மேற்கு பகுதியில் ஆயுத கிடங்கு அமைந்துள்ளது.

    இந்த ஆயுத கிடங்கில் கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

    இந்நிலையில், இந்த கிடங்கு திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். வெடி விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம் அருகே தனியார் பேருந்துகள் மோதி 7 பேர் பலியான இடத்தை கலெக்டர் ரோகிணி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். #BusAccident
    சேலம்:

    சேலம் அருகே சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இன்று அதிகாலை மாமாங்கம் என்ற இடத்தில் பெங்களுருவில் இருந்து ஏற்காடு சென்ற தனியார் பேருந்தும், சேலத்தில் இருந்த் தர்மபுரி சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 30-க்கு மேற்பட்டோர் சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தால் சேலம் - பெங்களூர் தெசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



    இந்நிலையில், அதிகாலையில் விபத்து ஏற்பட்டதை அறிந்த சேலம் கலெக்டர் ரோகிணி சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார். அங்கு நடைபெற்ற மீட்பு பணிகளை ஆய்வு செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அதிகாலையில் இரு தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் பலியானது சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #BusAccident
    அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #ChicagoFireAccident
    சிகாகோ:

    அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் புறநகர் பகுதியான லிட்டில் வில்லேஜ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  இன்று அதிகாலை திடீரென தீ பற்றியது. இதில் இரண்டு வீடுகளில் மளமளவென தீப்பற்றி எரிந்தது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChicagoFireAccident
    ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது குணார் மாகாணம். இங்குள்ள காவல் நிலைய சோதனைக்கு வெளியே தற்கொலைப்படை பயங்கரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் டிராக்டர் டிராலி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். #UPaccident
    சம்பால்:

    உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் இருந்து இன்று காலை ஏராளமான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் அலிகர் நோக்கி சென்றுகொண்டிருநத்து. இந்த டிராக்டர் சம்பால் மாவட்டம் ராஜ்புரா பகுதியில் உள்ள அனுப்ஷாகர் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    பின்னர், சாலையோர பள்ளத்தில் டிராக்டர் டிராலி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் கார்பெட்டுகள் விற்பனை செய்வதற்காக அலிகார்  நோக்கி சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. #UPaccident
    ×