என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரிஷி சுனக்"
- இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைபிடிக்காதவர்களாக இருக்க வேண்டும்.
- புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
லண்டன்:
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அவர் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது குறித்து ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2009-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலையை விற்க தடை விதிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்து அரசின் செய்தி தொடர்பாளர் இ-மெயிலில் அனுப்பிய செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைபிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். புகைப்பழக்கத்தில் இருந்து விடுபடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளோம். புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பருவநிலை மாற்றம் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என வலியுறுத்தல்
- பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன
இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாடு இன்று முடிவடைகிறது. இந்த நிலையில் பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள இங்கிலாந்து 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
ஒரே தவணையில் அளிக்கும் இந்த நிதி, பருவநிலை மாற்றத்தால் உலகம் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி, பசுமை பருவநிலை நிதிக்கு (GCF) சென்றடையும். இந்த நிதி அமைப்பு 194 நாடுகளுடன் உருவாக்கப்பட்டது.
இந்த தகவலை இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ளது.
- ஜி20 உச்சி மாநாட்டின் நோக்கங்கள், திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
- சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தில் நாம் இப்போது சந்திக்கிறோம்.
ஜி20 நாடுகளின் 18-வது உச்சி மாநாடு தலைநகர் புது டெல்லியில் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு நாளை முடிவடைகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள சர்வதேச தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று உரையாற்றினார்.
பிறகு, ஜி20 உச்சி மாநாட்டின் நோக்கங்கள், திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இவரை தொடர்ந்து பல்வேறு உலக தலைவர்கள் ஜி20 மாநாட்டில் பேசி வருகின்றனர். அந்த வகையில், பிரிட்டன் பிரிதமர் பேசியது குறித்து தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
15 years ago, #G20 leaders came together for the first time to restore global growth after the financial crisis.We meet at a time of enormous challenges – the world is looking to the G20 once again to provide leadership.Together I believe we can address these challenges. pic.twitter.com/RFnry53YAf
— Rishi Sunak (@RishiSunak) September 9, 2023
அதில், "நிதி நெருக்கடியை தொடர்ந்து சர்வதேச வளர்ச்சியை நோக்கமாக கொண்டு, 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜி20 தலைவர்கள் முதல் முறையாக சந்தித்து பேசினர். அசாத்திய சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தில் நாம் இப்போது சந்திக்கிறோம். உலகமே இந்த ஜி20 மாநாட்டை உற்றுநோக்கி வருகிறது. நமக்கு எதிரே இருக்கும் சவால்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்து உள்ளார்.
- இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் டெல்லி வந்தார்.
- ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக்க எங்களின் பங்களிப்பை அளிப்பதற்கும் வந்துள்ளேன்.
புதுடெல்லி:
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் டெல்லி வந்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக், டெல்லியில் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். இதை அவரது வார்த்தைகளும் உறுதிப்படுத்தின.
வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறுகையில், 'நான் இந்தியாவுக்கு வந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு வாய்ந்தது. இந்தியா நான் மிகவும் நேசிக்கும் நாடு. எனது குடும்பம் சார்ந்த நாடு. ஆனால் நான் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தவும், இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளை உருவாக்குவதற்கான வழிகளை கண்டறியவும், ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக்க எங்களின் பங்களிப்பை அளிப்பதற்கும் வந்துள்ளேன்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
- பெருமைமிக்க இந்துவாக இந்தியா மற்றும் இந்திய மக்களுடன் எனக்கு எப்போதும் தொடர்பு இருக்கும்.
- நான் இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு இந்திய மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.
புதுடெல்லி:
டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 'ஜி-20' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வரவுள்ளார். இதையொட்டி அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் இந்தியாவுக்கும், தனக்குமான பிணைப்பு, இந்திய-இங்கிலாந்து உறவு, இங்கிலாந்தில் அதிகரித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரிஷி சுனக் விரிவாக பேசினார். அதன் விவரம் பின்வருமாறு:-
இந்திய வம்சாவளி என்பதிலும், இந்தியாவுடனான எனது தொடர்புகள் குறித்தும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்களுக்கு தெரியும், என் மனைவி ஒரு இந்தியர். அதோடு பெருமைமிக்க இந்துவாக இந்தியா மற்றும் இந்திய மக்களுடன் எனக்கு எப்போதும் தொடர்பு இருக்கும்.
நான் இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு இந்திய மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. பிரதமர் ஆன பிறகு நான் செய்த முதல் காரியங்களில் ஒன்று, பிரதமர் அலுவலககத்தில் இந்திய வம்சாவளிகளுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியது.
அரசியலை குடும்பத்தில் இருந்து பிரித்து வைத்திருப்பது மிகவும் முக்கியம், ஆனால் எனது பெற்றோர் மற்றும் மாமனார்-மாமியார் போலவே எனது மனைவியும், 2 மகள்களும் எனது மதிப்புகளை மிகவும் வழிநடத்துகிறார்கள்.
'ஜி-20' மாநாட்டுக்காக மனைவி அக்ஷதாவுடன் இந்தியாவுக்கு பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறுவயதில் நாங்கள் சென்ற சில இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு உலகளாவிய சவால்களை கையாள்வதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒத்துழைப்பு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து ஆலோசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் அதன் அசாதாரண வெற்றிகள், 'ஜி-20' மாநாட்டை சரியான நேரத்தில் நடத்துவதற்கு இந்தியா சரியான நாடு என்பதை உணர்த்துகிறது. இந்தியா இத்தகைய உலகளாவிய தலைமையை வெளிப்படுத்துவதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது முதல் பருவநிலை மாற்றத்தை கையாள்வது வரை உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள 'ஜி-20' தலைவர் பதவியின் மூலம் இந்தியாவுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவோம்.
இரு தரப்புக்கும் பயனளிக்கும் மற்றும் 2030-க்குள் வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதற்கான பகிரப்பட்ட லட்சியத்தை எளிதாக்கும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு இன்னும் சில வழிகள் உள்ளன. இது முன்னோக்கிய மற்றும் நவீன ஒப்பந்தமாக இருக்கும்.
இங்கிலாந்தில் எந்த விதமான பயங்கரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது, வன்முறை, பிளவுபடுத்தும் சித்தாந்தங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை எதிர்க்க வேண்டிய கடமையை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.
அந்த வகையில் காலிஸ்தான் சார்பு பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்திய அரசாங்கத்தில் உள்ள எங்கள் கூட்டாளிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அந்த பேட்டியில் ரிஷி சுனக் பேசினார்
- ஆன்மீக தலைவரான மொராரி பாபு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராம கதை உபன்யாசம் செய்து வருகிறார்.
- இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 12-ல் தொடங்கியது. வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.
லண்டன்:
ஆன்மீக தலைவரான மொராரி பாபு பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று ராம கதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இந்திய சுதந்திர தினமான நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
நான் இங்கு பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்.
என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழிநடத்துகிறது.
பிரதமராக இருப்பது மிகப்பெரிய கவுரவம், ஆனால் அது எளிதான பணி அல்ல. எடுக்க கடினமான முடிவுகள் உள்ளன. நம் நம்பிக்கை எனக்கு தைரியத்தையும், வலிமையையும், நம் நாட்டிற்கு என்னால் முடிந்ததைச் செய்ய உறுதியையும் அளிக்கிறது.
ராமாயணம், பகவத் கீதை மற்றும் அனுமான் சாலிசா ஆகியவற்றை நினைவு கூர்ந்து இன்று இங்கிருந்து புறப்படுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி உழைக்கவும் ராமர் எப்போதும் ஓர் உத்வேகமான நபராக இருப்பார் என தெரிவித்தார்.
பிரதமர் ரிஷி சுனக் தனது உரையை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் ஜெய் ராம் என கூறியது குறிப்பிடத்தக்க்கது.
- பிரதமர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
லண்டன்:
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் இங்கிலாந்து கருங்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட் டார். இதற்கு அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரதமர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் புதிய திட்டத்தை எதிர்த்து வடக்கு யார்க் ஷையர் மாகாணத்தில் உள்ள பிரதமர் ரிஷி சுனக் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அவரது வீட்டை பெரிய கறுப்பு துணியால் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயம் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. அவர் தற்போது குடும்பத்தினருடன் கலிபோர்னியா சென்றுள்ளார்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பிரதமர் வீட்டில் பலத்த பாதுகாப்பை மீறி அவர்கள் எப்படி சென்றனர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஒரு பேப்பரை எடுத்து 2-1 என்று ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருப்பதாக காட்டினார்.
- அதற்கு பதிலடியாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற புகைப்படத்தை காட்டினார்.
லண்டன்:
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதுவரை 3 போட்டிகள் முடிந்த நிலையில், சண்டை மற்றும் சர்ச்சைகளும் வந்தம் வண்ணம் இருந்தது. பேர்ஸ்டோவ் ஸ்டம்பிங் சர்ச்சை. 100-வது டெஸ்டில் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்தை பேர்ஸ்டோவ் கிண்டல் செய்த விதம், ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து ரசிகர்கள் வம்புக்கு இழுத்தது, லார்ட்ஸ் மைதானத்தில் எம்சிசி உறுப்பினர்கள் கவாஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என்று அடுத்தடுத்து புதிய சர்ச்சைகள் உருவாகியது.
?Rishi Sunak has a giggle with Australian PM Anthony Albanese over the Ashes.
— Abdullah Neaz (@Abdullah__Neaz) July 12, 2023
"I'm sorry, I didn't bring my sandpaper with me!"#INDvsWI #Ashes pic.twitter.com/ktNLgbVDsZ
இந்த நிலையில் பேர்ஸ்டோவ் ஸ்டம்பிங் சர்ச்சை இரு நாட்டு பிரதமர்கள் வரை சென்றது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேரில் சந்தித்து கொண்டனர். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இறுதியாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஒரு பேப்பரை எடுத்து 2-1 என்று ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருப்பதாக காட்டினார்.
அதற்கு பதிலடியாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற புகைப்படத்தை காட்டினார். இதற்கு பதிலடியாக பேர்ஸ்டோவை ஸ்டம்பிங் செய்த புகைப்படத்தை ஆஸ்திரேலிய பிரதமர் காட்ட, உடனடியாக சுதாரித்த ரிஷி சுனக், சாண்ட்பேப்பரை மறந்துவிட்டதாக பதிலடி கொடுத்தார். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சாண்ட்பேப்பரை வைத்து பந்தை சேதப்படுத்தியதை அவர் நினைவு கூறினார்.
இரு நாட்டு பிரதமர்கள் சந்தித்த போது ஆஷஸ் டெஸ்ட் தொடரை வைத்து கலாய்த்து கொண்டது ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
- இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், மன்னர் சார்லஸ் III ஆகியோரை சந்திக்க உள்ளார்.
- நேட்டோவில் உக்ரைனை இணைப்பது உள்ளிட்ட குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு.
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில், நேட்டோ உறுப்பினராக உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இங்கிலாந்திற்கு சென்றடைந்தார்.
நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள இருக்கும் ஜோ பைடன், லிதுவேனியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், மன்னர் சார்லஸ் III ஆகியோரை சந்திக்க உள்ளார்.
அப்போது, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்திப்பின்போது உக்ரைன் போர் நிலவரம், நேட்டோவில் உக்ரைனை இணைப்பது உள்ளிட்ட குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- உக்ரைன் அதிபர் கடந்த மாதம் இங்கிலாந்து சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- எனது அம்மா கொஞ்சம் இந்திய இனிப்புகளை (பர்பி) தயாரித்து எனக்காக வைத்திருந்தார்.
லண்டன் :
இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக், இந்திய வம்சாவாளியை சேர்ந்தவர் ஆவார். இவரது தாய் உஷா தயாரித்த இந்திய இனிப்புகளை (பர்பி) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் ஒன்றை ரிஷி சுனக் தற்போது வெளியிட்டு உள்ளார். உக்ரைன் அதிபர் கடந்த மாதம் இங்கிலாந்து சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக ரிஷி சுனக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் எனது சொந்த ஊரான சவுதாம்டனுக்கு சென்றிருந்தேன். இது குறித்து எனது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் இதை அறிந்து அவர்கள் வருத்தமடைந்தனர். என்னை பார்க்க வர முயன்றனர், ஆனால் முடியவில்லை.
எனது அம்மா கொஞ்சம் இந்திய இனிப்புகளை (பர்பி) தயாரித்து எனக்காக வைத்திருந்தார். ஆனால் அப்போது தர முடியவில்லை. பின்னர் கால்பந்து போட்டி ஒன்றை பார்க்க சென்றபோது, அதை என்னிடம் கொடுத்தார்.
இதில் விந்தை என்னவென்றால், அதன்பிறகு நான் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தேன். நானும், அவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு பசி எடுத்தது. அதனால், நான் அவருக்கு என் அம்மாவின் பர்பியில் சிலவற்றைக் கொடுத்தேன். அதைப்பார்த்து அம்மா சிலிர்த்து போனார்.
இவ்வாறு ரிஷி சுனக் அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளார்.
- இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- பட்ஜெட்டில் குழந்தை பராமரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
லண்டன் :
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குழந்தை பராமரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. பிரபல குழந்தை பராமரிப்பு மையமான கோரு கிட்ஸ் நிறுவனத்தில் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி பங்குதாரராக உள்ளார். இந்த பட்ஜெட் அறிவிப்பு மூலம் அக்ஷதா மூர்த்தி பயனடையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்ற நடத்தை விதியின்படி, அவை நடடிவக்கை (பட்ஜெட்) மூலம் உறுப்பினர்கள் எந்த வகையில் பலனடைந்தாலும் அது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது முக்கியமாகும். ஆனால் அக்ஷதாவின் வர்த்தக பலன்களை ரிஷி சுனக் மறைத்ததால், அவருக்கு எதிராக நாாளுமன்ற குழு விசாரணை தொடங்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து மனைவியின் வர்த்தக தொடர்பை ரிஷி சுனக் வெளியிட்டு உள்ளார். தற்போது வெளியிடப்பட்டு உள்ள இங்கிலாந்து மந்திரிகளின் சொத்து பட்டியலில் ரிஷி சுனக் மனைவியின் வர்த்தக தொடர்புகள் சேர்க்கப்பட்டு உள்ளன.அதன்படி, 'பிரதமரின் மனைவி ஒரு முதலீட்டாளர். கேடமரன் வென்ச்சர்ஸ் யுகே லிமிடெட் என்ற மூலதன முதலீட்டு நிறுவனம் மற்றும் பல நிறுவனங்களில் நேரடி பங்குகளை அவர் வைத்திருக்கிறார்' என்று கூறப்பட்டு இருந்தது.
- ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்றார்.
- தடை செய்யப்பட்ட பகுதிக்கு ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை அழைத்து சென்றுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்றார். மேலும் தனது வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார். அந்த பூங்கா பகுதியில் நாயை அழைத்து வர தடை உள்ளது. ஆனால் அதை மீறி ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை பூங்காவுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், விதியை நினைவுப்படுத்தினார். இதையடுத்து நாய் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ரிஷி சுனக் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஏற்கனவே அவர் கொரோனா கட்டுப்பாட்டை மீறி விருந்தில் பங்கேற்றது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது ஆகிய சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)