ஜி20 மாநாடு: சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நம்பிக்கை

ஜி20 உச்சி மாநாட்டின் நோக்கங்கள், திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தில் நாம் இப்போது சந்திக்கிறோம்.
ஜி20 மாநாடு: சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நம்பிக்கை
Published on

ஜி20 நாடுகளின் 18-வது உச்சி மாநாடு தலைநகர் புது டெல்லியில் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு நாளை முடிவடைகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள சர்வதேச தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று உரையாற்றினார்.

பிறகு, ஜி20 உச்சி மாநாட்டின் நோக்கங்கள், திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இவரை தொடர்ந்து பல்வேறு உலக தலைவர்கள் ஜி20 மாநாட்டில் பேசி வருகின்றனர். அந்த வகையில், பிரிட்டன் பிரிதமர் பேசியது குறித்து தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், "நிதி நெருக்கடியை தொடர்ந்து சர்வதேச வளர்ச்சியை நோக்கமாக கொண்டு, 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜி20 தலைவர்கள் முதல் முறையாக சந்தித்து பேசினர். அசாத்திய சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தில் நாம் இப்போது சந்திக்கிறோம். உலகமே இந்த ஜி20 மாநாட்டை உற்றுநோக்கி வருகிறது. நமக்கு எதிரே இருக்கும் சவால்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்து உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com