என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருந்த கார் மீது கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சிவசேனா முதலில் பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்தது. பின்னர் சிவசேனா, சிவசேனாவில் இருந்து வெளியே வந்தது.
    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளிவந்தது.

    நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை காடர் (துரோகி) என்று நகைச்சுவையாக விமர்சனம் செய்தார்.

    தில் தோ பாகல் ஹை படத்தின் பிரபலமான இந்தி பாடலை பாடி சிவசனோ மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுகள் குறித்தும் மற்றும் மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளையும் நகைச்சுவையாக நிகழ்த்தினார் நடிகர் குணால் கம்ரா (stand-up comedian).

    சிவசேனா முதலில் பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்தது. பின்னர் சிவசேனா, சிவசேனாவில் இருந்து வெளியே வந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளிவந்தது.

    அவர்கள் ஒரு வாக்காளருக்கு 9 பொத்தான்களை கொடுத்தார்கள். இதனால் எல்லோரும் குழப்பம் அடைந்தார்கள் என்று அவர் மேலும் நிகழ்ச்சியின்போது நகைச்சுவையாக குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் ரிக்ஷா ஒட்டுபவர், ஒருவரின் தந்தையை திருடிய துரோகி என்றார்.

    இந்த நிகழ்ச்சியை கேட்டு ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மும்பை கார் பகுதியில் உள்ள ஓட்டலில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய பகுதியை சூறையாடி சேதப்படுத்தினர். மேலும் ஷிண்டேவை சாடி அவர் பேசிய வீடியோவை வெளியிட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.

    மேலும் 2 நாட்களில் நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரை சிவசேனா தொண்டர்கள் மகாராஷ்டிராவில் சுதந்திரமாக வெளியே நடமாட விடமாட்டார்கள் என்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் தாக்குதல் நடத்திய சிவசேனா கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுதி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியதில் தவறு ஏதும் இல்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    குணால் கம்ரா வெறுமன தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் உண்மைகளைக் கூறி பொது மக்களின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    கம்ரா எதுவும் தவறாக செய்யவில்லை. இந்த துரோகிகள் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை இழிவுப்படுத்திய பிரஷாந்த் கோரட்கார், நடிகரை ராகுல் சோலாபூர்கார் ஆகியோரை பார்க்கவில்லை.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    நாக்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாஷந்த் கோரட்கார், நடிகரை ராகுல் சோலாபூர்கார் சத்ரபதி சம்பாஜி மகாராஜா மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜா ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனை கருத்து தெரிவித்ததாக, இருவரையும் கைது செய்ய வேண்டும் போராட்டம் நடைபெற்றது சுட்டிக்காட்டி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    • இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'.
    • 'டிராகன்' திரைப்படம் கடந்த 21-ந்தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியானது.

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.

    'டிராகன்' திரைப்படம் கடந்த  21-ந்தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற Rise Of Dragon வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலில் கவுதம் மேனன் மற்றும் பிரதீப் இணைந்து ஆடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    • ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐ.பி.எல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கடந்த 22ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக விளையாடிய ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், விராட் கோலி குறித்து எம்.எஸ்.தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி அணியின் வெற்றிக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 50-60 ரன்கள் அவருக்கு போதாது.

    எப்போதும் சதம் அடிக்க வேண்டும். அணியின் வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றே இருப்பார்.

    இறுதி வரை விக்கெட் இழக்காமல் நிலைத்து ஆட வேண்டும் என்று நினைப்பார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.
    • எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.

    கர்நாடகாவில் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை கிழித்து சபாநாயகர் மீது வீசி பாஜக எம்எல்ஏக்கள் வீசி அமளியில் ஈடுபட்டனர். இதனால் 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று பாராளுமன்றக் கூட்டத்தொடரில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத ரீதியான இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்தார்.

    முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.

    குறிப்பாக இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், தேவைப்பட்டால் அரசியலமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று பேசியிருந்தார்.

    இந்த பாயிண்டை பிடித்த ஜேபி நட்டா, காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் தெற்கில் முஸ்லிம்களுக்கு ஒப்பந்தங்களில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.

    கர்நாடக துணை முதல்வர் அங்குள்ள சபையில், தேவைப்பட்டால், அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறினார். அங்கு அரசியலமைப்பை துண்டு துண்டாக கிழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும் என்று சீறினார்.

    மேலும் இதுதொடர்பாக அவையில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய அரசியலமைப்பில் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் அமர்ந்து, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று கூறும்போது, அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தனது கருத்துக்கு டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 'நான் அரசியலமைப்பை மாற்றுவேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளின்படி திருத்தங்கள் இருக்கும் என்று பொருள்படவே கூறினேன்.

    இயல்பாக பேசியதை வைத்துக்கொண்டு பாஜக பொய்ப் பிரசாரம் செய்கிறது. எனது வார்த்தைகளை தவறாக சித்தரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். நான் 36 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். எனக்கும் பொது அறிவு இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில், நான் நட்டாவை விட விவேகமான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எங்கள் கட்சி ஒரு தேசிய கட்சி. எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.  

    • திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பல கோவில்களில் கால்நடைகளை பலியிடுதல் வழக்கம் உள்ளது
    • அனைத்து மதத்தினரிடையே ஒற்றுமையை பேணவே தமிழக அரசு விரும்புகிறது.

    மதுரையை சேர்ந்த கண்ணன், முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், "திருப்பரங்குன்றம் கோவில் பாண்டிய மன்னனின் காலகட்டத்தில் கட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் கோவிலின் தென் பகுதியில் உமையாண்டாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பகுதியில் எந்த உயிர் பலியிடுதல் கூடாது. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் தர்கா உள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடப்பட்டு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இது சுப்ரமணிய சுவாமி கோவில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

    ஆகவே திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும் சமைத்து பரிமாறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசன் தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் திருப்பரங்குன்றனம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடை விதிக்கவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதேபோல் திருப்பரங்குன்றம் மலை தொடடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை இன்று நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் அமர்வு விசாரித்தது.

    மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பல கோவில்களில் கால்நடைகளை பலியிடுதல் வழக்கம் உள்ளது. அனைத்து மதத்தினரிடையே ஒற்றுமையை பேணவே தமிழக அரசு விரும்புகிறது. அதன் அடிப்படையில் ஜனவரி 30 ஆம் தேதி இரு சமூகத்தினரிடையே கூட்டம் நடைபெற்றது. அதில், ஏற்கனவே இருக்கும் வழிபாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, "கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியாக இல்லை. திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது. தொல்லியல் துறைக்கு சொந்தம் என்ற வாதத்தை ஏற்க முடியாது" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

    • சென்னைக்கு எதிராக 3 விக்கெட்டுகளை விக்னேஷ் வீழ்த்தினார்.
    • SA20 லீக்கில் மும்பை கேப்டவுண் அணியின் நெட் பவுலராக மும்பை அணி நிர்வாகம் சேர்த்தது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் என்னத்தான் மும்பை அணி தோற்று இருந்தாலும் அந்த அணியின் இளம் பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கி செல்லும் போது எம்.எஸ் தோனி விக்னேஷ் புத்தூரை அழைத்து பாராட்டும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.

    இந்த போட்டியில், மும்பை அணியின் இடதுகை பந்து வீச்சாளராக பிற்பாதியில் மட்டும் (மாற்று வீரர்) களம் இறங்கிய விக்னேஷ் புத்தூர் துருதுருவென மைதானத்தில் வலம் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 23 வயதே ஆன இவர், 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.

    U-14 மற்றும் U-19 போட்டிகளில் மட்டுமே கேரளா அணிக்காக விளையாடியுள்ள அவரின் திறமையை கண்ட மும்பை அணி நிர்வாகம், SA20 லீக்கில் மும்பை கேப்டவுண் அணியின் நெட் பவுலராக சேர்த்தது. கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு எடுக்கப்பட்டார்.

    கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் பெரிந்தல்மண்ணாவை சேர்ந்தவர் விக்னேஷ் புத்தூர். 23 வயதே ஆன அவர், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது விடாமுயற்சியால் கிரிக்கெட்டில் ஐ.பி.எல். வரை முன்னேறி வந்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனாகவும், இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் மும்பை அணிக்கு கிடைத்துள்ளார்.

    தற்போது பெரிந்தல்மண்ணாவில் உள்ள பி.டி.எம். அரசு கல்லூரியில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது தந்தை சுனில் குமார் ஒரு ஆட்டோ டிரைவர். தாயார் கே.பி.பிந்து வீட்டு வேலை செய்பவர். குடும்பத்தை வறுமை வாட்டியபோதும், விக்னேஷ் புத்தூரின் கிரிக்கெட் கனவுக்கு பெற்றோர் தடைபோடவில்லை.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் ஏலம் நடந்த அன்று, விக்னேஷ் வீட்டில் இருந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது ஆச்சரியத்தில் துள்ளிக்குதித்தார். ஐ.பி.எல். கனவு பலித்துவிட்டதை எண்ணி ஆனந்தப்பட்டுக்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி.

    "ரோஹித்தும், ஹார்திக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் எனக்கு பிடித்த வீரர்கள். இந்த சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து விளையாடுவதை மகிழ்ச்சியாக எண்ணுகிறேன்" என்று அவர் உணர்ச்சி பொங்க கூறியிருந்தார்.

    முதலில், விக்னேஷ் புத்தூர் கேரள கிரிக்கெட் லீக்கில் ஆலப்பி ரிப்பிள்ஸ் அணிக்காக விளையாடினார். 3 போட்டிகளில் விளையாடிய அவர் 2 விக்கெட்டுகளே வீழ்த்தினாலும், ஆல்-ரவுண்டர் என்ற அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கவனத்தை ஈர்த்தார்.

    சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து கிரிக்கெட்டில் முன்னணிக்கு வந்த விக்னேஷ் புத்தூரின் விடாமுயற்சி அவருக்கு ஐ.பி.எல். மூலம் விஸ்வரூப வெற்றியை கொடுத்துள்ளது.

    • முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது.
    • நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களான மது ,சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

    படத்தின் பாடல்கள், கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. மக்களிடையே படத்திற்கான நல்ல வரவேற்பு இருந்தாலும் நெட்டிசன்கள் படத்தை கிண்டல் செய்தும் மீம் கிரியேட் செய்தும் இனையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் நடந்த நேர் காணல் ஒன்றில் படத்தில் நடித்த ரகு பாபு "யார் இந்த படத்தை ட்ரோல் மற்றும் கிண்டல் செய்தாலும் அவரை சிவன் கண்டிப்பாக தண்டிப்பார். ஒருவரைக்கூட அவர் விடமாட்டார். சிவனின் கோபத்திற்கு ஆளாகாதீர்?" என எச்சரித்துள்ளார்.

    • பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பின.
    • கர்நாடகா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தத்தில் 4 சதவீதம் ஒதுக்கீடு தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    அரசு ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் வகையில் கர்நாடகா அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதேவேளையில் டெல்லி நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று பாராளுமன்ற மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் சிக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பியது. அதேவேளையில் கர்நாடகா மாநில அரசும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

    இதனைத்தொடர்ந்து அவையை நடத்த முடியாத அளவிற்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாஜக பொய்யான பிரச்சினையால் பாராளுமன்றத்தை முடக்க வந்துள்ளது என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இன்று பாராளுமன்றத்தை ஒத்திவைக்க பாஜக முற்றிலும் போலியான பிரச்சனையுடன் வந்தது. இதனால் மிகவும் முக்கியமான பிரச்சினையான நீதிபதி யஷ்வந்த் வர்மா பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விவாதம் நடைபெற முடியாமல் போனது" எனத் தெரிவித்துள்ளார்.

    பிரியங்கா காந்தி "பாஜக அவையை நடத்த விடக்கூடாது என்ற மனநிலையில் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் அவையை நடத்த விரும்பவில்லை. இன்றோடு பல நாட்கள் இதுபோன்று அமளியால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்த சாக்குபோக்கு அல்லது வேறு ஏதாவது காரணத்தை கண்டுபிடிக்கிறார்கள்" என்றார்.

    "விரக்தியடைந்த பாஜக, அதன் மாநில மற்றும் மத்தியத் தலைமை மற்றும் அதன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் காங்கிரஸ் கட்சியையும் என்னையும் அவதூறு செய்ய என் மீது பொய்யான அறிக்கைகளைச் சுமத்தி வெட்கக்கேடான மற்றும் அப்பட்டமான பொய்களை கூறி வருகின்றனர்" என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக நர்க்கீஸ்கான் என்ற இஸ்லாமியர் நியமிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது.
    • இது தவறான தகவல் என்று நர்க்கீஸ்கான் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டார்.

    தஞ்சை மாவட்டம் ரெகுநாதபுரம் பிரசன்ன ராஜகோபாலசாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக நர்க்கீஸ்கான் என்ற இஸ்லாமியர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது.

    இது தவறான தகவல் என்று நர்க்கீஸ்கான் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டார். அதில், தான் ஒரு இஸ்லாமியர் இல்லை எனவும், தான் பிறக்கும் போது பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கான் பெயரை தாயார் தமக்கு சூட்டியதாகவும் அவர் விளக்கமளித்தார்.

    இந்நிலையில், இந்து கோயிலில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நர்க்கீஸ்கானை நியமித்துள்ளதாக தவறான தகவலைப் பதிவிட்ட விஸ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சரவணகார்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர். கோயில் அறங்காவலர் நர்க்கீஸ்கான் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • ஆந்திராவை சேர்ந்த 23 வயது பெண் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் புறநகர் பகுதியான மெட்சலில் வசித்து வருகிறார்
    • இதில் அப்பெண்ணுக்கு தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டது.

    பாலியல் வன்கொடுமை முயற்சியில் இருந்து தப்பிக்க 23 வயது பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    ஆந்திராவை சேர்ந்த 23 வயது பெண் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் புறநகர் பகுதியான மெட்சலில் வசித்து வருகிறார். தனது போனை ரிப்பேர் செய்யும் பொருட்டு கடந்த சனிக்கிழமை இரவு ஐதராபாத்துக்கு புறநகர் (MMTS) ரெயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

    அப்போது இளைஞன் ஒருவன் ரெயிலில் பெண்ணை நெருங்கி தவறாக நடக்க முயன்றுள்ளான். அவரிடமிருந்து தப்பிக்க அப்பெண் ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அப்பெண்ணுக்கு தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டது.

    வழிப்போக்கர் ஒருவர் காயங்களுடன் கிடந்த பெண்ணை பார்த்தபின் ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். அப்பெண் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அத்துமீறிய வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்களை வாரி வழங்கினார்.
    • இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி

    நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) ரன் வழங்குவதில் வள்ளலாக திகழ்ந்தார். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்கள் வாரி வழங்கினார். இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய மொகித் ஷர்மா விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் (டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக) விட்டுக்கொடுத்ததே மோசமான பந்து வீச்சாக இருந்தது.

    அந்த போட்டியை வர்ணனை செய்த ஹர்பஜன் சிங், ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சர் குறித்து இனவாத கருத்து தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், "லண்டன் கருப்பு டாக்ஸிகளின் மீட்டரைப் போல, ஜோப்ரா ஆர்ச்சரின் மீட்டரும் அதிகமாகவே உள்ளது என ஹர்பஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    லண்டன் கருப்பு டாக்ஸியுடன் ஆர்ச்சரை ஒப்பிட்டுப் பேசியது 'இனவாத கருத்து' என வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். 

    ×