என் மலர்
2025 - ஒரு பார்வை
- ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரெயில் மோதியது.
- கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கடந்த ஜூலை 8-ந்தேதி ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரெயில் மோதியது. மோதிய வேகத்தில் அந்த வேனை சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு ரெயில் இழுத்துச் சென்றது.
ரெயில் பள்ளி வேன் மீது மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது.
வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில், மேலும் ஒரு மாணவர் பலியானார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.
நிமிலேஷ் (12), சாருமதி (16), செழியன் (15) என 3 மாணவர்கள் பலியாகினர். சாருமதி மற்றும் செழியன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (அக்கா-தம்பி), மேலும் நிமிலேஷ் மற்றொரு மாணவர் உயிரிழந்தார்.
விஸ்வேஷ் (16) மற்றும் வேன் ஓட்டுநர் சங்கர் (47) படுகாயமடைந்தனர். அவர்களுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கவனக்குறைவாக இருந்த கேட் கீப்பர், ரெயில்வே கேட்டை மூடாமல் விட்டதே விபத்துக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்த விபத்திற்கு கேட் கீப்பர் அலட்சியம், ரெயில்வே கேட் திறந்திருந்தது முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் தூங்கிக்கொண்டிருந்ததால் கேட்டை மூடத் தவறியதே விபத்துக்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. விசாரணையில், கேட் கீப்பர் அலட்சியமாக இருந்ததுடன், தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. பங்கஜ் சர்மா மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பள்ளி வேன் ரெயில்வே கேட்டை கடக்க முயலும்பொழுது கேட் போடாமல் அஜாக்கிரதையாக இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது, ரெயில்வே தண்டனைச் சட்டம் பிரிவு 105,106,125(a),125,(b), பிஎன்எஸ் 151 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக, விதிகளை மீறியதாக கேட் கீப்பரை ரெயில்வே பணியிடை நீக்கம் செய்தது.
விபத்து எதிரொலியாக, தமிழ் பேசத் தெரிந்த ஒருவரைக் கேட் கீப்பராக நியமிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, திருத்தணியைச் சேர்ந்த ஆனந்தராஜ் புதிய கேட் கீப்பராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, அனைத்து லெவல் கிராசிங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், கேட் மூடப்படுவதை உறுதி செய்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த ரெயில்வே அமைச்சர் உத்தரவிட்டார்.
கேட் கீப்பரின் அலட்சியத்தாலும், வேன் டிரைவரின் அவசரத்தினாலும் நிகழ்ந்த விபத்தில் சிதைந்துபோனது மாணவர்களும், அவர்களை பெற்றவர்களின் கனவும், நம்பிக்கையும் தான்.
- இந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 5,400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
- சுமார் 57,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. இதில் 440 பேர் பலியாகினர்.
முன்பு வெறும் முன்னெச்சரிக்கையாக இருந்து வந்த கலாநிலை மாற்றம் என்ற சொல் அஞ்சியபடி தற்காலத்தில் நிதர்சனமான ஒன்றாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளை உலகம் அனுபவித்து வருகிறது.
அந்த வகையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளை உலகம் இதுவரை கண்டிராத வகையில் சந்தித்தது.
உலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பெரும்பாலான இயற்கை பேரிடர்களுக்கு விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தையே முக்கிய காரணியாக குறிப்பிடுகின்றனர். அதன்படி காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கத்தால் இந்தாண்டு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.
மியான்மர் - நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகள்
மார்ச் 2025-இல் மியான்மரின் மண்டலே பகுதியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய நிலச்சரிவுகளைத் ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 5,400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

தொடர்ந்து ஜூலை மாதத்தில் பெய்த பருவமழையினால் கச்சின்மாநிலத்தின் ஜேட் சுரங்கப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.
ஆப்கானிஸ்தான் பேரழிவுகள்
ஆப்கானிஸ்தானில் 2025-ஆம் ஆண்டு இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆகஸ்ட் 31-இல் ஜலாலாபாத் அருகே ஏற்பட்ட 6.0 ரிக்டர் நிலநடுக்கத்தால் மலைப்பகுதிகளில் பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல கிராமங்கள் சிதைந்தன. இதில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நவம்பர் மாதத்தில் பல்க் மாகாணத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. பனிப்பொழிவு, சாலைகள் துண்டிப்பு காரணமாக அந்த மக்களுக்கு உதவி கிடைப்பதிலும் பெரும் சிக்கல்கள் நீடித்தன.
ஐரோப்பாவை வாட்டியெடுத்த வெப்ப அலை
ஏப்ரல் மாதம் முதலே ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் வெப்பம் தகித்தது. ஜூன், ஜூலை மாதங்களில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது.
இந்த அதீத வெப்பத்தால் அல்பேனியா, போஸ்னியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பா முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த வெப்ப அலைக்கு 16,500 பேர் பலியாகினர் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

கலிபோர்னியா காட்டுத்தீ
இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 14 இடங்களில் காட்டுத்தீ பரவியது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 57,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. இதில் 440 பேர் பலியாகினர்.

டெக்சாஸ் திடீர் வெள்ளம்
ஜூலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த அதீத மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 135 பேர் உயிரிழந்தனர். சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன.

இந்தியா - பாகிஸ்தான் வெப்ப அலை
இந்தியாவில் ஏப்ரல் மாதத்திலேயே அக்னி நட்சத்திரம் போன்ற வெயில் வாட்டியது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இந்தியாவில் மட்டும் இரண்டு மாதங்களில் 455 பேர் வெப்ப பாதிப்புகளால் உயிரிழந்தனர்.

சூடான் நிலச்சரிவு
ஏற்கனவே உள்நாட்டு போரால் மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருந்த வேலையில், சூடானின் தாராசின் கிராமத்தை ஆகஸ்ட் 31 ஏற்பட்ட நிலச்சரிவு மொத்தமாக விழுங்கியது.
இரண்டு கட்டங்களாக நிகழ்ந்த இந்த நிலச்சரிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர்களும் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். இதில் சுமார் 1,500 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் பெருவெள்ளம்
2025 ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை, பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களை உருக்குலைத்தது. 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்தனர்.
நேபாளம் நிலச்சரிவுகள்
அக்டோபர் மாதம் நேபாளத்தின் இலாம் (Ilam) மாவட்டத்தில் பெய்த அதீத மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சுமார் 60 பேர் பலியாகினர்.

மேலும், ரசுவாகாதி பகுதியில் பனி ஏரி உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் அந்நாட்டின் உள்கட்டமைப்பைச் சீர்குலைத்தது.
தென்கிழக்கு ஆசியாயை தாக்கிய சென்யார் புயல்
2025-ஆம் ஆண்டின் இறுதியில் நவம்பர் - டிசம்பர் காலகட்டத்தில் மலாய் தீபகற்பம் மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளை உலுக்கிய சென்யார் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சுமார் 2,100 பேர் உயிரிழந்தனர்.

இதனால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு சுமத்ராவின் சிபோல்கா மற்றும் மேற்கு சுமத்ராவின் அகாம் பகுதிகளில் கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. சுமார் 12 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இலங்கையை உலுக்கிய டிட்வா புயல்
இந்தியப் பெருங்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கை மற்றும் தென்னிந்தியாவைத் தாக்கியது. இலங்கையில் இது மிகப்பெரிய நிலச்சரிவுகளையும் வெள்ளத்தையும் ஏற்படுத்தியது. 600-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன், சுமார் 1.6 பில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. தமிழகம் டிட்வா புயலில் இருந்து நூலிழையில் தப்பியது.

இந்த அனைத்து நிகழ்வுகளையும் இணைக்கும் ஒரே புள்ளி, ஒரே காரணி புவி வெப்பமயமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றம் ஆகும். பனிப்பாறைகள் உருகுவதும், கடல் மட்டம் உயர்வதும், பருவநிலை மாறுபடுவதும் கணிக்கமுடியாத வெள்ளம், நிலச்சரிவுகளை ஏற்படுத்தி மனிதகுலத்தின் இருப்பிற்கே சவாலாக மாறியுள்ளன.
இனியேனும் உலகம் விழித்துக்கொள்ளுமா அல்லது தீவிர வலதுசாரியான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் கூறுவது போல் "காலநிலை மாற்றம் என்பது ஏமாற்று வேலை" என்று தான் ஒரு பொய்யான மாயையில் வாழ்ந்து கொண்டிருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- ஆண்டுக்கு இருமுறை தேர்வாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- பொதுத் தேர்வில் மேற்கொள்ளப்படும் இம்மாற்றம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
புதுடெல்லி:
அது ஒரு தனியார் பள்ளிக்கூடம். மதிய உணவு இடைவேளையில் நண்பர்களுடன் உட்கார்ந்து விஷ்ணுவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
விஷ்ணுவும் அவனது நண்பர்களும் சாப்பிடும் போதுதான் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசித் தெரிந்து கொள்வார்கள்.
விஷ்ணுவின் நெருங்கிய நண்பனான பத்ரி ஓரளவு நாட்டு நடப்புகளைத் தெரிந்து வைத்திருந்தான். எனவே எந்த சந்தேகம் என்றாலும் விஷ்ணு உள்ளிட்ட நண்பர்கள் பத்ரியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். பத்ரியும், தனக்கு தெரியவில்லை என்றாலும் அது பற்றி விசாரித்து சொல்லி விடுவான்.
அன்றும் அப்படிதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விஷ்ணு, என்னடா பத்ரி புதிய தேசிய கல்விக் கொள்கைனு ஒண்ணு கொண்டு வராங்களாமே, என்னடா அது? என கேட்டான்.
அதுவா, ஏற்கனவே உள்ளதுதாண்டா, அத இன்னும் கொஞ்சம் விளக்கமா இருக்கும். அதாவது, நாம் படிக்கிற படிப்பு வெரும் தியரியா இல்லாம, பிராக்டிக்கலாவும் நடைமுறைப்படுத்த உதவியாக இருக்கும். நம்ம படிப்பு சார்ந்த வேலையும் உடனே கிடைக்கும் அல்லது நாமே பிசினசும் தொடங்க முடியும். இதுக்குதான் மத்திய அரசு தற்போதைய பாடத்திட்டங்கள்ல மாற்றம் கொண்டு வந்துருக்கு என்றான் பத்ரி.
ஆமா, நான் கூட கேள்விப்பட்டேன். அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளில் எல்லாம் மாற்றம் செய்யப் போறாங்களாமே அப்படியா என ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டான் விஷ்ணு.
அது கரெக்ட் தான். சிபிஎஸ்இ பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளை இரு முறை எழுதலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றான் பத்ரி.
அப்படியா, அதுபத்தி சொல்லு கேட்போம் என்றான் விஷ்ணு.
பொதுத் தேர்வை இரு முறை எழுதுவது தொடர்பாக பத்ரி கூறியதன் சாராம்சம் இதுதான்:

மத்திய கல்வி மந்திரி தலைமையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் கல்வித்துறை செயலாளர், சி.பி.எஸ்.இ, கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய பாடத்திட்டத்தை கொண்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2026-2027-ம் ஆண்டு முதல் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அதற்கேற்ப விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கவும் சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டது.
உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவும் பணிகளில் தேர்வு முறையும் மாற்றப்படுகிறது. தற்போது சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது.
இந்நிலையில், பொதுத் தேர்வை ஆண்டுக்கு இருமுறை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல் அளித்துள்ளது.
அனைத்து மாணவர்களும் எந்த ஒரு கல்வி ஆண்டிலும் இரண்டு முறை பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவார்கள். ஒரு முறை மெயின் தேர்வையும், தேவைப்பட்டால் மதிப்பெண்ணை அதிகரிக்க மற்றொரு முறை இம்ப்ரூவ்மென்ட் தேர்வையும் எழுதிக் கொள்ளலாம் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
இதன்படி, பத்தாம் வகுப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் முதல்கட்டமாக பிப்ரவரியிலும், இரண்டாம் கட்டமாக மே மாதத்திலும் பொதுத்தேர்வை நடத்த சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது.

பொதுத் தேர்வில் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றம், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்த வாய்ப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என மத்திய கல்வித்துறை மந்திரி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு வரவிருக்கும் 10-ம் வகுப்பு வாரியத் தேர்வில் பங்கேற்க பதிவுசெய்த மாணவர்கள், தேர்வுகளுக்குத் தகுதி பெறுவதற்கு 9,10-ம் வகுப்புகளின் அனைத்துப் பாடங்களையும் இரு ஆண்டுகள் முழுமையாக படித்திருக்க வேண்டும். வழக்கமான பள்ளியில் குறைந்தது 75 சதவீத வருகைப் பதிவை அவர்கள் பராமரித்திருக்க வேண்டும் எனவும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது என்றான் பத்ரி.
பரவாயில்லையே, இப்படி இரு தடவை வாய்ப்பு கிடைச்சா நாம் முதல் கட்ட தேர்வில் மார்க் குறைஞ்சாலும் இம்ப்ரூவ்மெண்ட் எழுதிக்கலாம் இல்லையா என்ற விஷ்ணு, ஆனா மறுபடியும் முதல்ல இருந்தே படிக்கணும் இல்ல, அதான் யோசனையா இருக்கு என்றான் விஷணு.
யாருக்கு தேவையோ அவர்கள் 2வது முறை பொதுத் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்பது நல்ல ஐடியாதான் எனக்கூறிய படியே மாணவர்கள் வகுப்புக்குச் சென்றனர்.
- முதலில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தார்கள் பலரும்.
- ராமதாஸை சிலர் ஆட்டிவைப்பதாகவும் துரோகிகள் சிலர் உடன் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழக அரசியலில் தந்தை, மகன் இணைந்து பணியாற்றுகிறார்கள். அது கட்சிகள் என்று தெரியுமா? என்று கேட்டால், அனைவரும் சொல்வது தி.மு.க., பா.ம.க. என்று... தந்தையின் சொல்படி கேட்டு கட்சியில் பணியாற்றி வருகிறார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, மு.க.ஸ்டாலின், தி.மு.க.வில் இணைந்து தொண்டர், செயலாளர், இளைரஞரணி தலைவர், மேயர், துணை முதலமைச்சர் என பணியாற்றி தற்போது முதலமைச்சராக உள்ளார்.
அன்புமணி ராமதாஸ், பா.ம.க.வில் இணைந்தவுடன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று பின்னர் கட்சியின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில், தி.மு.க.வில் தந்தைக்கு பிறகு கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் பா.ம.க.விலோ கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் தந்தை- மகனுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் முதலில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தார்கள் பலரும். ஆனால், அந்த மோதலோ ஓராண்டாக நீடித்து வருகிறது.

ராமதாஸின் மகள் வழி பேரனான முகுந்தனை பா.ம.க. இளைஞரணி செயலாளராக நியமிப்பதில் தொடங்கிய அதிகாரப் போட்டி தற்போது கட்சி யாருக்கு சொந்தமானது? என்று வரை சென்றுள்ளது.
மேலும் அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் என போட்டாபோட்டியாக தொடங்கி தைலாபுரம், பனையூர் என மாற்றி மாற்றி அறிக்கைகள் வந்தன. இதனிடையே, இருதரப்பினரும் போட்டிபோட்டு பொதுக்குழுவை கூட்டினார்கள்.
கட்சி நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் போன்ற முக்கிய முடிவுகளில் இருவரின் அதிகாரப் போட்டியே இந்த மோதலின் அடிப்படை என்று கூறப்பட்டது. ஆனால் அன்புமணியோ, ராமதாஸை சிலர் ஆட்டிவைப்பதாகவும் துரோகிகள் சிலர் உடன் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். வேவு பார்க்க டெலிபோனில் ஓட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டது என்றும் அது அன்புமணியின் வேலை தான் என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

தந்தை, மகனுக்கான மோதலால் கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல் அதிமுக போன்ற கூட்டணிக் கட்சிகள் பாமகவுடன் கூட்டணி அமைப்பதில் குழப்பத்தில் உள்ளன. யாரை அணுகுவது எனத் தெரியாமல் தவிக்கின்றன.
இந்த மோதல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்பாக தீர்க்கப்படாவிட்டால், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றன.
- ஆசிய கோப்பையில் தென்கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் தில்பிரீத் சிங் (2 கோல்கள்) அடித்தார்.
2025-ம் ஆண்டில் ஹாக்கி தொடர்களில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அதில் பீகாரின் ராஜ்கிரில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியா நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.

இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் தில்பிரீத் சிங் (2 கோல்கள்), சுக்ஜீத் சிங் மற்றும் அமித் ரோஹிதாஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நடைபெற்ற பெண்கள் ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் சீனாவிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியப் பெண்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

FIH ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை 2025 (FIH Men's Junior World Cup) சென்னையில் நடைபெற்றது, இது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த நிகழ்வு. இதில் இந்திய அணி முதல்முறையாக வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை தொடரின் அரையிறுதியில் கனடாவை 14-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் இந்தியப் பெண்கள் ஐஸ் ஹாக்கி அணி தனது முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.
- வட மாநில நகரங்கள் காற்று மாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- தேசிய பாதுகாப்பு வரம்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, 2025 ஆம் ஆண்டிலும் இந்தியாவில் காற்று மாசு ஒரு பெரிய சவாலாகவே இருந்துள்ளது. குறிப்பாக, PM 2.5 போன்ற நுண் மாசுத் துகள்களின் அளவு உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல் அளவை விடப் பல மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதில் இந்தியாவில் குறிப்பாக வட மாநில நகரங்கள் காற்று மாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மிகவும் மாசுபட்ட நகரங்கள்:
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அசாம்-மேகாலயா எல்லையில் உள்ள பைர்னிஹாட் இந்தியாவில் மிக அதிக காற்று மாசுபாடு அளவைப் பதிவு செய்து, மிகவும் மாசுபட்ட நகரமாக முதலிடத்தில் இருந்தது. இதன் சராசரி PM 2.5 செறிவு தேசிய பாதுகாப்பு வரம்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.
டெல்லி: இந்தியாவின் தலைநகரான டெல்லி தொடர்ந்து மிக மோசமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது இடத்தைப் பிடித்தது. குறிப்பாகக் குளிர்கால மாதங்களில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) இங்கு காற்றின் தரக் குறியீடு (AQI) 400 புள்ளிகளைத் தாண்டி 'அபாயகரமான' (Severe) நிலையை எட்டியது.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது காற்று மாசுக்கு முக்கிய காரணமாக அமைகிறது
பிற முக்கிய நகரங்கள்: கிரேட்டர் நொய்டா, குருகிராம், காஜியாபாத், ஃபரிதாபாத் போன்ற தேசிய தலைநகரப் பகுதிகள் (NCR) மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும் அதிக மாசுபாடு கொண்ட பட்டியலில் இடம்பிடித்தன.
ஆண்டு முழுவதும் நீடிக்கும் பிரச்சினை: காற்று மாசுபாடு என்பது குளிர்காலப் பிரச்சினை மட்டுமல்ல; பருவமழை மற்றும் கோடை காலங்களிலும் பல மாவட்டங்களில் (சுமார் 60% மாவட்டங்கள்) PM 2.5 அளவு தேசிய சுற்றுப்புற காற்று தரத் தரங்களை (NAAQS) மீறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்கள்
தொழில்துறை மற்றும் கட்டுமானம்: பைர்னிஹாட் போன்ற நகரங்களில் தொழில்துறை அலகுகளின் அதிக செறிவு மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் தீவிரமான கட்டுமான நடவடிக்கைகள் பிரதான காரணங்களாக உள்ளன.
வாகன உமிழ்வுகள்: வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, குறிப்பாக டெல்லியில், காற்று மாசுபாட்டைத் தொடர்ந்து அதிகரிக்கிறது.
விவசாயக் கழிவுகளை எரித்தல்: குளிர்காலங்களில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது (சாகுபடி கழிவுகள் எரித்தல்) டெல்லி மற்றும் வட இந்திய நகரங்களில் காற்று மாசு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.
புவியியல் மற்றும் காலநிலை காரணிகள்: குளிர்காலத்தில் காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை குறைவது, மாசுபடுத்திகள் நிலப்பரப்பிற்கு அருகில் சிக்கி மேகமூட்டத்தை உருவாக்குகிறது.

காற்று மாசுக்கு மற்றொரு முக்கிய காரணம் தொழிற்சாலைகள்
சுகாதார விளைவுகள்: காற்று மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகள் மற்றும் முன்கூட்டிய உயிரிழப்புகள் ஆகியவை குறிப்பிடத்தக்க தாக்கங்களாக உள்ளன.
பொருளாதார இழப்பு: காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுகாதாரச் செலவுகள் மற்றும் மனித உழைப்பு இழப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் (GDP) பாதிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள்
இந்திய அரசு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது:
தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (NCAP): இந்தத் திட்டம் 2019 இல் தொடங்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டுக்குள் PM 2.5 மற்றும் PM 10 அளவுகளில் 40% குறைப்பைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 131 நகரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காற்றின் தர மேலாண்மை ஆணையம்: தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் (NCR) மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்தக் கட்டமைப்பு செயல்படுகிறது.
கட்ட நடவடிக்கை திட்டம் (GRAP): டெல்லி போன்ற நகரங்களில் காற்றுத் தரம் மிகவும் மோசமடையும் போது, கட்டுமானம், வாகனங்கள் மற்றும் தொழில்துறை செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்ட நடவடிக்கைத் திட்டங்கள் (Phase III & IV) செயல்படுத்தப்படுகின்றன.
2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியா மாசுபாடு சவாலைத் தீர்ப்பதில் கணிசமான முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளது.
- “அழகு” என்ற சொல்லுக்கு புதிய அர்த்தம் கொடுத்த 10 நடிகைகளை IMDb வெளியிட்டுள்ளது.
- இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய நடிகை மட்டும் தான் இடம்பெற்றுள்ளார்.
உலக சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர்.
உலகம் முழுவதும் மிக அழகான நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவ்வகையில் இந்தாண்டு உலக சினிமாவில் "அழகு" என்ற சொல்லுக்கு புதிய அர்த்தம் கொடுத்த 10 நடிகைகளை IMDb வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய நடிகை மட்டும் தான் இடம்பெற்றுள்ளார். IMDb வெளியிட்டுள்ள இந்தாண்டின் மிக அழகான 10 நடிகைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. மார்கோட் ராபி
ஹாலிவுட் நடிகை மார்கோட் ராபி (Margot Robbie) இந்த ஆண்டின் அழகான பெண்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். பார்பி படத்தின் மூலம் இவர் உலகம் முழுவதும் பிரபலமானார்.
:max_bytes(150000):strip_icc():focal(749x0:751x2)/shailene-woodley-tout-090924-a2d0ccf0e5d54a27b43a4706145c5923.jpg)
2. ஷைலின் உட்லி
அமெரிக்க நடிகை ஷைலின் உட்லி (Shailene Woodley) இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ஷைலின் உட்லி. இவர் Divergent என்ற படத்தின் மூலம் இவர் பிரபலமானார்.

3. தில்ரபா தில்முரத்
சீன நடிகையும் பாடகியான தில்ரபா தில்முரத் (Dilraba Dilmurat) இந்த ஆண்டின் அழகான பெண்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். Eternal Love Of Dream என்ற படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார்.

4. நான்சி மெக்டோனி
கொரிய நடிகை நான்சி மெக்டோனி (Nancy Jewel McDonie) இந்த ஆண்டின் அழகான பெண்களின் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார். இவர் Perfect Girl என்ற படத்தில் மூலம் இவர் பிரபலமானார்.

5. கிருத்தி சனோன்
பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் (Kriti Sanon) இந்த ஆண்டின் அழகான பெண்களின் பட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகை இவர் மட்டும் தான். இவர் நடிப்பில் இந்தாண்டு வெளியான தேரே இஷ்க் மெய்ன் படம் பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

6. ஹனியா அமீர்
பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஹனியா அமீர் (Hania Aamir) இந்த ஆண்டின் அழகான பெண்களின் பட்டியலில் 6ஆம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பாகிஸ்தான் நடிகை இவர் மட்டும் தான்

7. அனா டி அர்மாஸ்
ஹாலிவுட் நடிகை அனா டி அர்மாஸ் ( Ana de Armas) இந்த ஆண்டின் அழகான பெண்களின் பட்டியலில் 7 ஆம் இடத்தை பிடித்துள்ளார். பல ஆண்டுகளாக ஹாலிவுட்டில் கலக்கி வரும் அனா டி அர்மாஸ் பல ஆண்டுகளாக அழகான நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. எம்மா வாட்சன்
ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் (Emma Watson) இந்த ஆண்டின் அழகான பெண்களின் பட்டியலில் 8 ஆம் இடத்தை பிடித்துள்ளார். நடிகை எம்மா வாட்சன் ஹாரி பாட்டர் படங்களில் நடித்து உலகளவில் பிரபலமடைந்தவர். அந்த படத்தில் ஹெர்மாயினி கிரேஞ்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். 10 வயதில் நடிக்க வந்து, உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்தார்.
:max_bytes(150000):strip_icc():focal(949x0:951x2)/amber-heard-taormina-062623-1-0dec5491a60947a88c96492056527b89.jpg)
9. Amber Heard
ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹெர்ட் (Amber Heard) இந்த ஆண்டின் அழகான பெண்களின் பட்டியலில் 9 ஆம் இடத்தை பிடித்துள்ளார். ஆம்பர் ஹெர்ட் தனது முன்னாள் கணவர் ஜானி டெப் திருமண வாழ்க்கையின் போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்தது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

10. Hande Erçel
துருக்கி நடிகை ஹண்டே எர்செல் (Hande Erçel) இந்த ஆண்டின் அழகான பெண்களின் பட்டியலில் 10 ஆம் இடத்தை பிடித்துள்ளார். துருக்கி டிவி சீரியஸ் மூலம் புகழ் பெற்ற இவர் அழகும் romantic screen presence-மும் கொண்ட நடிகை ஆவார்.
TV image-ஐ தாண்டி படங்கள் மூலம் இந்தாண்டு இவர் பெரும் புகழ் பெற்றார். துருக்கி சினிமாவின் உலகளாவிய முகமாக இந்தாண்டு இவர் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பீகார் மாநில சட்டசபை தேர்தல் கடந்த மாதம் இரு கட்டமாக நடைபெற்றது.
- கருத்துக்கணிப்புகளில் பெற்ற இடங்களைவிட அதிக இடங்களில் என்.டி.ஏ. கூட்டணி வென்றது.
பாட்னா:
காலை நேரத்தில் கூட்டம் அதிகம் காணப்படும் மார்க்கெட். காய்கறிகள் அப்போதுதான் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. அங்கு காய்கறி மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தான் மணி.
அப்போது அங்கு வந்த முருகன், என்னடா மணி, SIR படிவம் எல்லாம் நிரப்பிக் கொடுத்துட்டியா என கேட்டான்.
ஆமாம்னே கொடுத்துட்டேன். எலக்ஷன் கமிஷனுக்கு ஏண்ணே இந்த தேவையில்லாத வேலை. ஒழுங்கா பழையபடி இருந்தா என்ன கெட்டுப் போச்சி என அங்கலாய்த்தான்.
அப்படி இல்லைடா மணி. இந்த மாதிரி சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டால் தான் போலி வாக்காளர்களை நீக்க முடியும். அப்படி செய்தால் தேர்தலில் கூடுதலாக வாக்கு சதவீதம் பதிவாகவும் வாய்ப்பு இருக்கு. அதனாலதான் எலக்ஷன் கமிஷன் இதுபோன்ற பணிகளை செய்து வருது. சமீபத்தில் பீகார் மாநிலத்திலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டதால் வாக்கு சதவீதம் இதுவரை இல்லாத அளவு அதிகரிச்சிருக்கு என்றான் முருகன்.
அப்படியா, பீகாரில் அப்படி என்ன நடந்தது சொல்லு கேட்போம் என கேட்டான் மணி.

கடந்த மாதம் நடந்த பீகார் சட்டசபை தேர்தல் குறித்து முருகன் கூறியதன் சுருக்கம் வருமாறு:
பீகார் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் இரு கட்டங்களாக நடைபெற்றது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. மற்றொரு கட்சியான லோக் ஜனசக்தி 29 இடங்களிலும், சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணிக்கு தலைமை வகித்த ராஷ்டிரீய ஜனதா தளம் 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஏனைய 39 தொகுதிகளில் இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டன.
பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்தன.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியது.
ஆரம்பத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே முன்னிலை வித்தியாசம் குறைவாகவே இருந்தது. நேரம் செல்லச் செல்ல முன்னிலை இடைவெளி அதிகரித்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னிலை நிலவரம் ஏறுமுகமாகவும், இந்தியா கூட்டணியின் முன்னிலை நிலவரம் இறங்குமுகமாகவே இருந்தது.

இறுதியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளையும்விட தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் கிடைத்தன.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்பார்த்ததைவிட கூடுதல் இடங்களில் வெற்றி கிடைத்தன. அந்தக் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி கடும் பின்னடைவைச் சந்தித்தது. ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
மொத்தத்தில் 2025-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஏற்றத்தையும், காங்கிரஸ் கட்சி கடும் சறுக்கலையும் சந்தித்தது.
ஆனால் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையால் தோற்றோம் என காரணம் கூறியது.
பீகார் தேர்தலில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை மற்ற மாநிலங்களுக்கும் பயன்படுமா என்பதை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும் என முடித்தான் முருகன்.
என்னவோ நீ சொல்ற, SIR நடவடிக்கை இங்க எல்லாம் எந்த விளைவை ஏற்படுத்துமோ தெரியலை என்றபடியே லாரியில் இருந்து இறக்கிய மூட்டைகளுக்கான பணம் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப்பட்டான் மணி.
- குறைந்த செலவில் வெளிநாட்டுப் பயணம் செல்ல விரும்பும் இந்தியர்களின் சொர்க்கமாகத் தாய்லாந்து உள்ளது.
- சிங்கப்பூர் இந்தியர்களின் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
தினம் பின் தூங்கி முன் எழுந்து வாரம் முழுவதும் அலுவலகத்துக்கு வீட்டுக்கும் இடையில் பலரின் பயணம் முடிந்துவிடுகிறது.
வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, தொடர் விடுமுறை எப்போதும் வரும் என காத்திருப்பவர்களே அதிகம்.
கூண்டுக்குள் வாழ்ந்து பழகிய கிளிக்கு சுதந்திரம் என்பது தண்டனையாகவும் இருக்கலாம். ஆனால் மனித இனத்திற்கு பயணம் என்பது இன்றியமையாதது.
அதிலும் சுற்றுலா என்பது வெறும் பயணம் மட்டுமல்ல. அது புதிய கலாச்சாரங்களை கண்டறிவதும் புதிய மக்களைச் சந்திப்பதும் என்றென்றும் நிலைத்திருக்கும் நினைவுகளை உருவாக்குவதும் ஆகும். அது ஆன்மீக தேடலாகவும் உள்நோக்கிய பயணமாகவும் இருக்கலாம்.
இருப்பது ஒரு வாழ்க்கை, இதில் நாம் வாழும் இந்த அழகான உலகத்தின், இயற்கையின் பிரமிப்புகளை கண்ணுற்று காணும் வாய்ப்பு ஒவ்வொரு மனிதனுக்குமான உரிமை.
அந்த வகையில் சுற்றுலா செல்வதில் இந்தியர்களை அடித்துக் கொள்ள முடியாது. அது பக்கத்தில் ஊரில் உள்ள மொட்டைப் பாறையாக இருந்தாலும் சரி வெளிநாடாக இருந்தாலும் சரி அவரவர் சக்திக்கு ஏற்றவாறு சுற்றுலா சென்றவண்ணம் தான் உள்ளனர்.

சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் மகனை டூருக்கு அனுப்ப காசில்லாத தந்தை ராஜ்கிரண் அவர்களை அதே ஊரிலேயே குளத்தில் குளிப்பது, நாடகம் பார்ப்பது என சிறு சிறு விஷயங்களில் உள்ள இன்பத்தை அனுபவிக்கச் செய்வார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அதன் இயக்குனர் சேரன், ஒரு ஊருக்குள்ளேயே இத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறது என்பதை உணர்த்தவே அந்த சீக்வன்ஸ் என்று கூறியிருப்பார்.

ஆனால் இப்போது நகர்வாசிகளாகிவிட்ட மனிதர்களுக்கு அதுவும் கிடைப்பது அரிதே. எனவே இந்த வெற்றிடத்தை சசுற்றுலா இட்டு நிரப்புகிறது என்றே கூறலாம்.
அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் விரும்பிச் சென்ற நாடுகளைப் பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.
2025-ஆம் ஆண்டில் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயண ஆர்வம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வழக்கமான சுற்றுலாத் தலங்கள் மட்டுமின்றி, ஜப்பான், தென் கொரியா, ஜார்ஜியா போன்ற புதிய நாடுகளையும் இந்தியர்கள் தேடிச் சென்றுள்ளனர்.
இருப்பினும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இப்போதும் முதலிடத்தில் இருப்பவை பாரம்பரியமான சில நாடுகளே.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகம் பயணித்த முதல் 10 நாடுகளின் இவைதான்...
பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஐக்கிய அரபு அமீரகம். சுற்றுலா, தொழில் நிமித்தமான பயணங்கள் மற்றும் அங்கு வசிக்கும் உறவினர்களைக் காணச் செல்வது என சுமார் 7.78 மில்லியன்(77 லட்சம்) இந்தியர்கள் இந்த ஆண்டு அமீரகத்திற்குப் பயணம் செய்துள்ளனர்.

துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை இந்தியர்களின் விருப்பமான இடங்களாகத் தொடர்கின்றன.
இரண்டாவது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா உள்ளிட்ட புனிதப் பயணங்கள் மட்டுமின்றி, தொழில் மற்றும் குடும்பப் பயணங்களுக்காகவும் சுமார் 3.42 மில்லியன் இந்தியர்கள் இந்தாண்டு இங்கு சென்றுள்ளனர்.

சுற்றுலா, கல்வி மற்றும் குடும்ப உறவுகளை இந்தியர்கள் சந்திக்கச் செல்வதில் அமெரிக்கா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

டிரம்ப் அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதும், அதை இம்மியளவும் சட்டை செய்யாமல் இந்த ஆண்டில் சுமார் 2.14 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நான்காவது தாய்லாந்து. குறைந்த செலவில் வெளிநாட்டுப் பயணம் செல்ல விரும்பும் இந்தியர்களின் சொர்க்கமாகத் தாய்லாந்து உள்ளது.

தாய்லாந்து
ஆன்மிகச் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு என சுமார் 1.91 மில்லியன் இந்தியர்கள் இவ்வாண்டு தாய்லாந்தை கண்டு ரசித்துள்ளனர்.

ஐந்தாவது சிங்கப்பூர். பாதுகாப்பு, எளிதான போக்குவரத்து மற்றும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கக்கூடிய இடங்கள் அதிகம் இருப்பதால், சிங்கப்பூர் இந்தியர்களின் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ஆறாவது பிரிட்டன். லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் காணவும், கல்வி மற்றும் வணிக ரீதியாகவும் இந்தியர்கள் பிரிட்டனை அதிக அளவில் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஏழாவது கத்தார். கத்தாரின் எளிமையாக்கப்பட்ட விசா நடைமுறைகள் மற்றும் தோஹா வழியாகச் செல்லும் சர்வதேச விமான இணைப்புகள் காரணமாக, இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை இங்கு அதிகரித்துள்ளது.

எட்டாம் இடத்தில் கனடா. சுற்றுலா மற்றும் அங்கு குடியேறியுள்ள உறவினர்களைச் சந்திக்கச் செல்வதற்காகக் கனடா இப்போதும் இந்தியர்களின் விருப்பமான நாடாகவே நீடிக்கிறது.

ஒன்பதில் ஓமன்.. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மற்றும் கலாச்சார அனுபவங்களுக்காக இந்தியர்கள் ஓமனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். விசா விதிமுறைகள் தளர்த்தப்பட்டது இதற்கு முக்கியக் காரணமாகும்.

பட்டியலில் 10 ஆம் இடத்தை பிடிக்கிறது மலேசியா. பட்ஜெட் பயணங்கள் மற்றும் குடும்பச் சுற்றுலாவுக்குஉகந்த நாடாக மலேசியா பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியர்களுக்கான விசா விலக்கு மற்றும் சிறந்த விமான போக்குவரத்து வசதிகள் மலேசியாவை இந்தியர்களின் விருப்பமான இடமாக தொடர்ச் செய்துள்ளது.
மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டை இனிதே இந்தியர்கள் கழித்துள்ளனர். விசா நடைமுறைகள் எளிதாக்கப்படுவதும், நேரடி விமான சேவைகள் அதிகரிப்பதும் வரும் ஆண்டுகளில் இந்தப் பட்டியலை இன்னும் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- திருவள்ளூர் நகரம் முழுதும் கரும்புகை சூழ்ந்ததால், நகரவாசிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.
- சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை துறைமுகத்திலிருந்து டீசல் ஏற்றிக்கொண்டு வாலாஜா ரோடு நோக்கிச் சென்ற சரக்கு ரெயில் கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரெயில் தீப்பிடித்ததும் லோகோ பைலட் உடனடியாக அவசரகால பிரேக்குகளை பயன்படுத்தி ரெயிலை நிறுத்தினார். தொடர்ந்து திருவள்ளூர் ரெயில் நிலைய மாஸ்டர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (OHE) மின்சார விநியோகத்தை அணைத்தார்.

சென்னை, அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, ரசாயன கலவையுடன் கூடிய நுரையை தெளித்து, தீயை அணைக்கும் பணி நடந்தது. 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ரெயில்வே நிர்வாகத்தினர் அப்பகுதிவாசிகள் உதவியுடன் 26 டேங்கர் பெட்டிகளை திருவள்ளூர் மார்க்கத்திலும், ஒரு டேங்கர் மற்றும் இரண்டு என்ஜின் உள்பட நான்கு பெட்டிகளை அரக்கோணம் மார்க்கத்திலும் மீட்டனர். இதில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பெட்டிகளில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், அமைச்சர் நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணமாக அருகில் உள்ள வீடுகளில் இருந்து சமையல் சிலிண்டர்கள் அகற்றப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த பகுதியில் சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் திசை திருப்பப்பட்டன.
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், தி.நகர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஏறத்தாழ, 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதில், 18 டேங்கர்கள் முற்றிலும் எரிந்து விட்டன. அதிலிருந்த பல ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் எரிந்து நாசமானது. மீதமிருந்த, 32 டேங்கர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. சுமார் 12.60 லட்சம் லிட்டர் 12 கோடி ரூபாய் மதிப்பிலான டீசல் எரிந்து நாசமானது. தடம் புரண்ட பெட்டிகளை அகற்றி, தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றன.

இந்த தீவிபத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. மொத்தத்தில், இது ஒரு பெரிய விபத்தாக இருந்தாலும், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாலும், ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாலும் பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
இச்சம்பவத்தால், திருவள்ளூர் ரெயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மறுநாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருவள்ளூர் கலெக்டர் எம்.பிரதாப் கூறுகையில்,
சென்னை துறைமுகத்தில் இருந்து வாலாஜா சாலை சைடிங்கிற்கு டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தடம் புரண்டது. இதனால் தீ விபத்து ஏற்பட்டது.
ரெயிலின் கிட்டத்தட்ட 15 வேகன்கள் முற்றிலுமாக எரிந்துவிட்டது. இருப்பினும், பாதிக்கப்படாத இரண்டு வேகன்களில் இருந்து டீசல் மீட்கப்பட்டது. 700க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் இரவு முழுவதும் விரைவாகவும் விடாமுயற்சியுடனும் பணியாற்றி மூன்றாவது மற்றும் நான்காவது தண்டவாளங்களை சரிசெய்ததாக அவர் கூறினார்.
- சீமான் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார்.
- மாற்றத்தை விரும்புபவர்களுக்கான ஒரு மாநாட்டையும் திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
சினிமாத்துறையில் இருந்து ஈழத் தமிழ், தமிழ் தேசியம் போன்ற முழக்கங்களோடு அரசியலில் நுழைந்தவர் சீமான். நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை, கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றி, தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் சீமான் செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்து நடைபெற்ற தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டு வருகிறது. இதனிடையே அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளை பெற்றும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், அக்கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது. அதனை தொடர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால், மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்தது.
இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி சீமான் பணியாற்றி வருகிறார். மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், சீமான் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். இந்த தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
சீமான் மீது பல்வேறு வழக்குகள், அவதூறு வழக்குகள் மற்றும் விமர்சனங்கள் உள்ள நிலையில், தனது அரசியலை நோக்கி பயணித்து வருகிறார். அவர் அறிவிக்கும் போராட்டங்கள் விமர்சனங்களை பெற்றாலும் பல்வேறு கருப்பொருள் சார்ந்த மாநாடுகளை நடத்தினார்.
அந்தவகையில், ஆகஸ்ட் மாதம் திருத்தணியில் மரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக 'மரங்களின் மாநாடு' மற்றும் மீனவர் நலன் மற்றும் கடல் சார்ந்த பிரச்சனைகளுக்காக கடந்த மாதம் "கடலம்மா மாநாடு", ஆடு-மாடு, மற்றும் மலைகளின் மாநாடு போன்றவற்றை நடத்தினார். இந்த மாநாடுகள் இயற்கை சார்ந்த பாதுகாப்பை கோரிக்கையாக முன்வைத்து நடத்தப்பட்டது. மேலும் மாற்றத்தை விரும்புபவர்களுக்கான ஒரு மாநாட்டையும் திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
ஆடு-மாடு, மற்றும் மலைகளின் மாநாடு:
ஜூலை மாதம் மதுரையில் 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்துடன் நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகளை திரட்டி மாநாட்டினை சீமான் நடத்தினார். இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான ஆடு,மாடுகள் முன்பு சீமான் உரையாற்றியது இணையத்தில் பேசுபொருளானது. மேலும் ஆகஸ்ட் மாதம் மாடு மேய்ப்பதற்கான தடையை நீக்கக் கோரி மலை ஏறி மாடு மேய்க்கும் போராட்டமாக மலைகளின் மாநாடு நடத்தப்பட்டது.

மரங்களின் மாநாடு:
மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும், ஆனால் மரங்கள் இல்லாது மனிதர்கள் உட்பட எந்த உயிரினமும் வாழ முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி, மரங்களை வளர்ப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பேசுவதாகும். இம்மாநாட்டில் சீமான் கலந்துகொண்டு, அப்துல்கலாம், நம்மாழ்வார், நடிகர் விவேக் போன்றோரின் பெயரில் மரக்கன்றுகள் நட்டு, மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.
கடலம்மா மாநாடு:
"ஆதி நீயே, ஆழித்தாயே" (கடலே நீயே, கடலன்னையே நீயே) என்ற முழக்கத்துடன் கடலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாத்தல், கடல்சார்ந்த வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தலை வலியுறுத்தி கடலுக்குள் சென்று மாநாடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆறுகளுக்கும் மாநாடுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடுகள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரவும், மாற்றத்தை விரும்பும் மக்களை ஒன்றிணைக்கவும் உதவுகின்றன.
சீமான் அறிவித்த மாநாடுகள் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் அனைவராலும் சிந்திக்கப்பட வேண்டிய விஷயமாகும். மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப மரம், செடிகளை அழித்து சாலைகள் விரிவாக்கம் மற்றும் வீடு கட்டுவது என பெரும்பாலும் நடைபெற்று வருகிறது. இதனால் பாதிக்கப்படப்போவது என்னமோ நாம் தான் என்பதை உணர வேண்டும்.
கடல், மலைகள் என பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு விட்டு செல்ல வேண்டியது நம் கடமை. ஆனால் நாம் எல்லாவற்றையும் சுயநலத்திற்காக அழித்து வருகிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் அனைவரும் ஒற்றுமையோடு சிந்தித்து செயல்பட்டால் நாடு நலம் பெறும்.
- கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- கதுவா மற்றும் பிற பகுதிகளிலும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டன.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பல மாநிலங்களில் கடுமையான மழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன.

குறிப்பாக, இந்த ஆண்டில் பலத்த மழையால் வட இந்தியப் பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
வடமேற்குப் பிராந்தியம், குறிப்பாக இமயமலைப் பகுதிகளில் வழக்கத்தைவிட சுமார் 27% அதிக மழை பெய்தது. இது பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குக் காரணமாக அமைந்தது.
இமாச்சலப் பிரதேசம்:
*மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசமும் ஒன்றாகும்.
*வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
*செப்டம்பர் 2025 நிலவரப்படி, 355-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

*1,200 க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
*45 மேக வெடிப்புகள் (Cloudbursts) மற்றும் 132 பெரிய நிலச்சரிவுகள் இங்கு பதிவாகின.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்:
*பலத்த மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
*கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

*கதுவா மற்றும் பிற பகுதிகளிலும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டன.
*லடாக் பிராந்தியத்தில் வழக்கத்தைவிட 342% அதிக மழை பதிவானது.
உத்தரகாண்ட்:
*உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
*பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன, சாலைகள் சேதமடைந்தன.
*இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இயற்கைப் பேரழிவுகளால் 85 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாப்:
*அண்டை மாநிலங்களில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், கனமழை காரணமாகவும் மாநிலத்தின் 1,400 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
பிற மாநிலங்களில் பாதிப்பு
அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்:
ஜூன் மாதத்தில் பிரம்மபுத்திரா மற்றும் பாராக் உட்பட பல ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, 8 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டனர்.
கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மழைப்பொழிவு இயல்பைவிட 20% குறைவாக இருந்தாலும், குறிப்பிட்ட பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தமிழ்நாடு:
வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்தில் (அக்டோபர் 2025) இயல்பை விட 36% கூடுதல் மழைப்பொழிவு பதிவானது.
லா நினா (La Niña) காலநிலை காரணமாக வடகிழக்குப் பருவமழையில் கூடுதல் மழை மற்றும் புயல் ஆபத்துகள் நெருங்கியது.
இதில், ராமநாதபுரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.






