என் மலர்tooltip icon

    இந்தியா

    • பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
    • பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பேருந்து தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த நிலையில் ஆந்திர மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பீகாரின் வளர்ச்சி இன்னும் வேகமடையும்.
    • அரசியலமைப்பின் நகலை கையில் வைத்திருப்பவர்கள் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்.

    பாட்னா:

    பீகார் சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. இதையடுத்து கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி இன்று பீகாரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதற்காக அவர் இன்று காலை பீகாரின் சமஷ்டிபூருக்கு சென்றார். அவரை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வரவேற்றார். சமஷ்டிபூரில் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பு, மறைந்த முன்னாள் முதல்-மந்திரியான பாரத ரத்னா கர்பூரி தாக்கூரின் பிறந்த கிராமத்துக்கு சென்று அங்கு உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கர்பூரி தாகூரின் குடும்பத்தினரை சந்தித்து உரையாடினார்.

    பின்னர் சமஷ்டிபூரில் நடந்த பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அதன்பின் பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

    பாரத ரத்னா கர்பூரி தாக்கூரின் ஆசீர்வாதத்துடன் இங்கு வந்திருக்கிறேன். அவர் சமூகத்தின் நலிந்த பிரிவினரை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். எங்களுக்கு உத்வேகம் அளித்தார். அவரை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கவுரவித்தது.

    மொத்த பீகார் மாநிலமும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறது. பீகாரில் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதாதளம் காட்டு ராஜ்ஜியத்தை நடத்தி வந்தன. இவர்கள் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பு உள்ள மோசடிகளில் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

    காட்டு ராஜ்ஜியத்தில் இருந்து பீகார் விலக்கி வைக்கப்பட்டே இருக்கும். இதற்கு நீங்கள் நல்லாட்சி அளிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பீகாரின் வளர்ச்சி இன்னும் வேகமடையும். அரசியலமைப்பின் நகலை கையில் வைத்திருப்பவர்கள் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்.

    இந்த முறை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி அதன் முந்தைய வெற்றி சாதனைகளை முறியடிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பீகார் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கும்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    அதன்பின் மதியம் 2 மணிக்கு பெகுசராயில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார்.

    பிரதமர் மோடி வருகிற 30-ந் தேதி முசாபர்பூர், சாப்ரா ஆகிய நகரங்களில் நடக்கும் பிரசார கூட்டங்களில் பேசுகிறார். பின்னர் நவம்பர் 2, 3, 6 மற்றும் 7-ந் தேதிகளிலும் பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார்.



    • 40 ஆண்டுகளாக இந்தியாவின் விளம்பரத் துறையில் கோலோச்சி வந்தார்.
    • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொலைக்காட்சி முக்கிய பங்காற்றுகிறது. தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வருகிறது. அதிலும் 90-களில் வெளிவந்த பல விளம்பரங்கள் மக்கள் மத்தியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தின.

    அந்த வகையில் ஃபெவிகால் (Fevicol) பசை விளம்பரம், காட்பரி (Cadbury) மிட்டாய் விளம்பரம், ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints) விளம்பரம் ஆகியவற்றை நம்மால் மறந்திருக்க முடியாது.

    இந்தத் தனித்துவமான விளம்பரங்களை உருவாக்கிய பியூஷ் பாண்டே (Piyush Pandey) இன்று (வெள்ளிக்கிழமை) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 70.

    தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

    ஓகில்வி (Ogilvy) என்ற விளம்பர நிறுவனத்தில் 1982-இல் இணைந்த பியூஷ் பாண்டே, 40 ஆண்டுகளாக இந்தியாவின் விளம்பரத் துறையில் கோலோச்சி வந்தார். அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகவும், சர்வதேச கிரியேட்டிவ் தலைமைப் பதவியிலும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.

    1982-இல் சன்லைட் டிடர்ஜென்ட் பவுடருக்காக அவர் முதன்முதலில் விளம்பரம் எழுதினார். தொடர்ந்து Fevicol, Cadbury, Asian Paints, லூனா மொபெட் (Luna Moped), ஃபார்ச்சூன் ஆயில் (Fortune Oil) உள்ளிட்ட பல பிராண்டுகளுக்கு அவர் உருவாக்கிய விளம்பர கான்செப்ட் அனைவரையும் கவர்ந்தது.

    அவரது தலைமையின் கீழ் Ogilvy இந்தியாவின் நம்பர் 1 விளம்பரக் கம்பெனியாகத் திகழ்ந்தது. 2013-இல் பியூஷ் பாண்டே சினிமாவிலும் நடிகராகக் களமிறங்கினார். ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே (Madras Cafe) படத்தில் அவர் நடித்தார். மேலும் போபால் எக்ஸ்பிரஸ் (Bhopal Express) என்ற படத்திற்குத் திரைக்கதையும் அவர் எழுதியுள்ளார்.

    அவரது பணிகளுக்காக, கடந்த 2016-இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தற்போது அவரின் மறைவுக்கு வணிகம், விளம்பரம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை அவரது உடல் மும்பை சிவாஜி பார்க் பகுதியில் தகனம் செய்யப்பட உள்ளது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள இரங்கல் 'X' பதிவில், "பியூஷ் பாண்டேவின் மறைவை அறிந்து வருத்தமடைந்தேன். இந்திய விளம்பரத் துறையின் ஜாம்பவானாக இருந்த அவர், பேச்சுவழக்குச் சொற்கள், மண் சார்ந்த நகைச்சுவை மற்றும் உண்மையான அரவணைப்பைக் கொண்டு வந்து தகவல்தொடர்பு முறையையே மாற்றினார்.

    பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு மனமார்ந்த இரங்கல்கள். அவரது மரபு தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.  

    • இருவருக்கும் சர்வதேச அளவிலான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பது அம்பலமானது.
    • கைதான 2 பேரும் தற்கொலை தாக்குதல் பயிற்சி எடுத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் அட்னான் உள்பட 2 பேரை பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    இருவருக்கும் சர்வதேச அளவிலான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பது அம்பலமானது. மேலும் கைதான 2 பேரும் தற்கொலை தாக்குதல் பயிற்சி எடுத்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் டெல்லியில் குண்டு வைக்கவும் அவர்கள் சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    • கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன.
    • காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது.

    இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    பேருந்து தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.
    • உடனடி உதவிக்காக ஆந்திரப் பிரதேச முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு தெலுங்கானா முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

    இந்நிலையில் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளதாகவும்,18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கர்னூல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

    பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள இரங்கலில், இந்த விபத்தை பேரழிவு என்று குறிப்பிட்டு, காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்து உள்ளார். சம்பவ இடத்தை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு மூத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்து, உடனடி உதவிக்காக ஆந்திரப் பிரதேச முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், ஹெல்ப்லைனை நிறுவவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    பேருந்து தீ விபத்து சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் நடந்த ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் உயிர் இழப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

    • தீவிபத்தின் போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர்.
    • பேரழிவு தரும் பேருந்து தீவிபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

    ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    தீவிபத்தின் போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட போது பலரும் அவசர கால கதவு வழியே குதித்து தப்பியுள்ளனர். இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தீவிபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து தீயை உடனடியாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதனிடையே, பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பேரழிவு தரும் பேருந்து தீவிபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

    • மாநில மருந்துகள் சோதனை ஆய்வகங்கள் 60 மருந்து மாதிரிகள் ‘‘நிலையான தரம் இல்லாதவை’’ என்று அடையாளம் கண்டுள்ளன.
    • சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஒரு மாதிரி, போலி மருந்தாக அடையாளம் காணப்பட்டது.

    புதுடெல்லி:

    வழக்கமான ஒழுங்குமுறை கண்காணிப்பு நடவடிக்கையின்படி, நிலையான தரம் இல்லாத (என்.எஸ்.கியூ) மற்றும் போலியான மருந்துகளின் பட்டியல் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் மாதாந்திர அடிப்படையில் காட்டப்படுகிறது.

    மத்திய மருந்துகள் ஆய்வகங்கள் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர மருந்து எச்சரிக்கையில் பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 52 மாதிரிகள் ''நிலையான தரம் இல்லாதவை'' என்று கண்டறிந்து உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில மருந்துகள் சோதனை ஆய்வகங்கள் 60 மருந்து மாதிரிகள் ''நிலையான தரம் இல்லாதவை'' என்று அடையாளம் கண்டுள்ளன.

    மருந்து மாதிரிகளை நிலையான தரம் இல்லாதவையாக அடையாளம் காண்பது என்பது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட தர அளவுருக்களில் மருந்து மாதிரியின் தோல்வியின் அடிப்படையில் செய்யப்படுகிறது. தோல்வி என்பது அரசாங்க ஆய்வகத்தால் சோதிக்கப்பட்ட தொகுப்பின் மருந்து தயாரிப்புகளுக்கு குறிப்பிட்டது, மேலும் சந்தையில் கிடைக்கும் பிற மருந்து தயாரிப்புகள் குறித்து எந்த கவலையும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    செப்டம்பரில், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஒரு மாதிரி, போலி மருந்தாக அடையாளம் காணப்பட்டது, இது ஒரு அங்கீகரிக்கப்படாத உற்பத்தியாளரால் மற்றொரு நிறுவனத்திற்குச் சொந்தமான பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த விஷயம் விசாரணையில் உள்ளது, மேலும் சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த மருந்துகள் அடையாளம் காணப்பட்டு சந்தையில் இருந்து அகற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, மாநில கட்டுப்பாட்டாளர்களுடன் இணைந்து நிலையான தரம் இல்லாதவை மற்றும் போலி மருந்துகளை அடையாளம் காணும் இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுகிறது.

    • ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் எடுத்த 2-வது பெரிய முடிவு இது.

    புதுடெல்லி:

    ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில், முப்படைகளின் போர்த்திறனை அதிகரிப்பதற்காக ரூ.79,000 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் எடுத்த 2-வது பெரிய முடிவு இதுவாகும்.

    கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி, ரூ.67 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதில் இந்திய கடற்படைக்காக போர்க்கப்பல்கள், 30 எம்எம் ரக கடற்படை பீரங்கிகள், அதிநவீன இலகுரக நீர்மூழ்கி குண்டுகள் உள்ளிட்டவை அடங்கும்.

    போர்க்கப்பல்கள், கனரக சாதனங்களையும், தரைப்படை வீரர்களையும் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும். இலகுரக நீர்மூழ்கி குண்டுகள், எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்க பயன்படும்.

    இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக, நாக் ஏவுகணை அமைப்பு, எம்கே-2 ரக ஏவுகணைகள், எலக்ட்ரானிக் உளவு அமைப்பு உள்ளிட்டவை வாங்கப்படுகின்றன. எதிரிகளின் போர் வாகனங்கள், பதுங்கு குழிகள் ஆகியவற்றை தகர்க்க எம்கே-2 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படும்.

    • 211 வேட்பாளர்களுக்காக மொத்தம் 321 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன.
    • மனுவை வாபஸ் பெற நாளை கடைசி தினமாகும்.

    தெலுங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் நவம்பர் 11-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறகிறது. பாரத ராஷ்டிர சமிதி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. கோபிநாத்தின் மனைவி சுனிதா போட்டியிடுகிறார்.

    அங்கு பிராந்திய வெளிவட்டச் சாலைத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் மாநில அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நூற்றுக்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்ய குவிந்ததால் நள்ளிரவைத் தாண்டியும் மனுக்கள் பெறப்பட்டன. 211 வேட்பாளர்களுக்காக மொத்தம் 321 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. சிலர் இருமுறை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. 81 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 130 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுவை வாபஸ் பெற நாளை கடைசி தினமாகும்.

    • பச்சிளம் குழந்தை கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
    • புதிதாகப் பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அக்டோபர் 5 ஆம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

    அங்கு ஊசி போட்ட பிறகு குழந்தையின் கை வீங்கி, நீல நிறத்தில் மாறத் தொடங்கியது. இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் கைக்கு கட்டுப்போட்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

    புதிதாகப் பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டு அழுகும் நிலையில் இருப்பதால், கையை துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் நர்சிங் ஹோம் மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக விசாரணைக் குழுவை அமைத்து அறிக்கை அளிக்குமாறு தலைமை மருத்துவ அதிகாரிக்கு (CMO) காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

    • இளைஞர் காங்கிரஸின் தலைவராக கிருஷ்ணா அல்லவாரு பதவி வகித்து வந்தார்.
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவராக மணீஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இளைஞர் காங்கிரஸின் தலைவராக பதவி வகித்த கிருஷ்ணா அல்லவாருவின் பங்களிப்புகளை கட்சி பாராட்டுகிறது என்று வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    ×