என் மலர்
இந்தியா
- வைஷ்ணவி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- 2 நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட தகவல் ஸ்ரீஜாவுக்கு தெரியவந்தது.
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்லாபூர் மெடா அடுத்த கோஹோடாவை சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 18). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் ராகேஷ் ( 21) மற்றும் ஸ்ரீஜா (18).
3 பேரும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தனர். நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் வைஷ்ணவிக்கு வயிற்று வலி இருந்து வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை வைஷ்ணவியை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். அப்போது வைஷ்ணவி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வைஷ்ணவி இறந்த தகவல் ராகேஷுக்கு தெரிய வந்தது. இதனால் மன வேதனையில் இருந்து வந்தார். நேற்று முன் தினம் இரவு படுக்கை அறைக்கு தூங்க சென்றார். அவர் அந்த அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட தகவல் ஸ்ரீஜாவுக்கு தெரியவந்தது. நெருங்கிய நண்பர்கள் தற்கொலை செய்து கொண்டதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அதிகாலை ஸ்ரீஜாவின் தந்தை வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். படுக்கை அறைக்குச் சென்ற ஸ்ரீஜா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் அடுத்தடுத்து ஒருவர் பின் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார்.
- தனது தந்தைபோன்று அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி முன்னோக்கு சிந்தனை கொண்டவர்- யதீந்திரா.
கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.
இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2 ½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, அடுத்த மாதம் நவம்பரில் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், "சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் யதீந்திரா தெரிவித்துள்ளார். அத்துடன் "தனது தந்தைபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி முன்னோக்கு சிந்தனை கொண்டவர்" எனக் கூறியிருந்தார். இது கர்நாடகா அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தனர்.
டி.கே. சிவக்குமார் முதல்வராக வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், சதீஷ் ஜர்கிஹோலி பெயரை பயன்படுத்தியது டி.கே. சிவக்குமார் அணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.கே. சிவக்குமார்தான் முதலமைச்சராக வேண்டும் என்று கூறிய இரண்டு பேருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், சித்தராமையாவின் மகனுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு டி.கே. சிவக்குமார் "இதற்கு நான் இப்போது பதில் கூற போவதில்லை. யாரிடம் பேச வேண்டுமோ, அவர்களிடம் பேசுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், "நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். நான் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன். மேலும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் தொடர்வேன்" என சித்தராமையா கூறி வருகிறார்.
- நல்ல சம்பளம் கிடைக்கும் என சவுதி அரேபியா சென்றுள்ளார்.
- உரிமையாளர் கொன்று விடுவதாக மிரட்டுவதாக வீடியோவில் பதிவு.
இந்தியாவைச் சேர்ந்த பல இளைஞர்கள் அதிக சம்பளம் கிடைக்கும் என சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக கடுமையான வேலை வழங்கப்படுகிறது. போதுமான சம்பளம் வழங்கப்படுவதில்லை. கபீல் என அழைக்கப்படும் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் உரிமையாளர்கள் டிராவல் ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டு மிரட்டுவது உண்டு.
இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இதுபோன்று சிக்கி தவித்தது உண்டு. இந்திய தூதரகம் மூலம் அவர் மீட்கப்பட்டு இந்தியா வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஒட்டகம் மேய்த்தவாறு, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்கள், உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகியுள்ளது.
அந்த வீடியோவில், என்னுடைய கிராமம் அலகாபாத்தில் உள்ளது. நான் சவுதி அரேபியாவுக்கு வந்தேன். என்னுடைய பாஸ்போர்ட் கபீலிடம் உள்ளது. என்னுடைய சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என அவரிடம் கூறினேன். அதற்கு அவர் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதில் கூறியிருப்பதாவது:-
தூதரகம் இந்த இளைஞர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய முயற்சி மேற்கொண்டது. அவர் இருக்கும் மாகாணம் அல்லது இடம் அல்லது உரிமையாளர் விரம், தொடர்பு கொள்ளும் எண் குறித்து அதில் தெரிவிக்கவில்லை. இதனால் மேற்கொண்டு நடவடிக்க எடுக்க முடியவில்லை.
இந்த இளைஞகன் போஜ்பூரி மொழியில் பேசுகிறார். பிரயக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் என்கிறார். நம்பத்தகுந்த வகையிலான அந்த இளைஞனின் குடும்பத்தின் விவரம் தெரியவந்தால், தொடர்பு கொள்ளும் வகையில் தங்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளது.
- மனைவி பிரிந்த நிலையில் ஆண் நண்பரின் தனியாக வசித்து வந்துள்ளார்.
- தந்தையை பார்க்க வந்த சிறுமியை, நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் தனது மகளை சீரழித்த, ஓரினச்சேரிக்கை பார்ட்னரின் ஆணுறுப்பை துண்டித்த நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் 32 வயது நபர். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்ததால், ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். அவருடன், 32 வயதான ராம்பாபு யாதவ் என்பரை அந்த அறையில் சேர்த்துக் கொண்டார்.
இவருக்கும் இடையிலான நட்பு, பின்னர் ஓரினசேர்க்கையாளராக இணைந்து வாழும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இருவரும் சிறிய அறையில் வாழ்ந்து வந்த நிலையில், ஒருநாள் அந்த நபரின் 6 வயது மகள் தந்தையை பார்ப்பதற்காக, அந்த அறைக்கு சென்றுள்ளார். அப்போது ராம்பாபு யாதவ், தனது பார்ட்னரின் மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த விசயம் அந்த சிறுமியின் நண்பருக்கு ஒரு சில தினங்கள் கழித்து தெரியவந்துள்ளது. அடைக்கலம் கொடுத்து பார்ட்னராக்கிய நிலையில், தனது மகளையே சூறையாடிவிட்டானே என அந்த சிறுமியின் தந்தை கடுங்கோபம் அடைந்தார்.
இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அத்துடன் ராம்பாபு யாதவுடன் சண்டையில் ஈடுபட்டார். அப்போது திடீரென சிறுமியின் தந்தை, கத்தியை எடுத்து நண்பரின் ஆணுறுப்பை அறுத்து துண்டாக்கினார். இதனால் ராம்பாபு யாதவ் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சிறுமியின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
ராம்பாபு யாதவ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அந்த சிறுமியை மெடிக்கல் உதவி மற்றும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தாய்வழி பாட்டி வீட்டிற்கு தங்கவைக்கப்பட்டுள்ளார்.
- முந்தைய ஆர்ஜேடி ஆட்சியை 'காட்டு ராஜ்ஜியம்' என பிரதமர் மோடி கூறியது குறித்து தேஜஸ்வி பேசினார்.
- நிதிஷ் குமார் அரசில் 55 ஊழல்கள் நடந்ததாக பிரதமர் மோடியே கடந்த காலத்தில் கூறியிருந்தார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மகாபந்தன்(இந்தியா கூட்டணி) முதலமைச்சர் வேட்பாளரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.
ஏற்கனவே பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, பெண் வாக்காளர்களை குறிவைத்து, தான் ஆட்சிக்கு வந்தால், வெறும் ரூ.500க்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் முதியோர் ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,500 ஆக உயர்த்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.
மாநில மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என்று அவர் உறுதியளித்தார்.
முந்தைய ஆர்ஜேடி ஆட்சியை 'காட்டு ராஜ்ஜியம்' என பிரதமர் மோடி கூறியது குறித்து பேசிய தேஜஸ்வி, "நிதிஷ் குமார் அரசில் 55 ஊழல்கள் நடந்ததாக பிரதமர் மோடியே கடந்த காலத்தில் கூறியிருந்தார். அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என்று அவர் வினவினார்.
மேலும், "நான் செய்வதைத்தான் சொல்வேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்திய கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், நான் மக்களின் முதல்வராக இருப்பேன். பீகாரில் ஊழல் இல்லாத பாதுகாப்பான அரசாட்சியை நான் வழங்குவேன்" என்று தேஜஸ்வி தெரிவித்தார்.
- கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.
- பணிக்கு வரவும் பணி முடித்து திரும்பவும் போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும்.
பெண்கள் இரவுப் பணி செய்ய அனுமதித்து டெல்லி தொழிலாளர் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் இரவுப் பணிகளில் ஈடுபடுத்த நிறுவனங்கள் பெண் ஊழியர்களின் எழுத்துப்பூர்வ சம்மதம் பெற வேண்டும்.
பணிக்கு வரவும் பணி முடித்து திரும்பவும் போக்குவரத்து வசதி மற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு உட்பட போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை நிறுவனங்கள் செய்ய வேண்டும். மேலும் மதுபான கடைகளில் பெண்கள் இரவுப் பணி செய்வதற்கு மட்டும் தடை நீடிக்கும்.
பெண்கள் இரவுப் பணியில் ஒரு நாளைக்கு 9 மணி நேரம், வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஜூலையில் அறிவித்த இந்தச் சீர்திருத்தம், 1954 டெல்லி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகளை திருத்தியதன் மூலம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
முன்னதாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே பெண்கள் இரவு நேரப் பணி செய்ய அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒப்பந்தம் தெடர்பான பேச்சுவார்த்தையில் தடங்களுக்கான எந்த பிரச்சினையும் இல்லை.
- பெரும்பாலான பிரச்சினையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செல்கிறது.
இந்தியா- அமெரிக்கா இடையே பரிந்துரை செய்யப்பட்ட இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாத்திற்குள் முடிக்க வேண்டும் இருநாட்டு தலைவர்களும் அவரவர் நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் இருநாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்டத்திற்கான 5 சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் இந்தியா- அமெரிக்கா, இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் மிக அருகில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதைய தீர்மானத்திற்காக மிகப்பெரிய அளவில் வேறுபாடு இல்லை. ஒப்பந்தம் தெடர்பான பேச்சுவார்த்தையில் தடங்களுக்கான எந்த பிரச்சினையும் இல்லை. பெரும்பாலான பிரச்சினையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செல்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் "ஒப்பந்தத்திற்கான அவசரம் காட்டமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார்.
- அவர் 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார்.
உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார். விதிகளின்படி, தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு பெற வேண்டும். அதன்படி கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு நீதிபதி கவாயிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய சீனியாரிட்டியின்படி, நீதிபதி சூர்யா காந்த் அடுத்த தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.

நீதிபதி சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், அவர் 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9, 2027 அன்று முடிவடையும்.
- தேர்தலுக்குப் பிறகுதான் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என அமித் ஷா தெளிவாக தெரிவித்துவிட்டார்.
- எனக்கு வாய்ப்பு கொடுங்கள், என்டிஏ-வால் 20 வருடங்கள் செய்ய முடியாததை, நான் 20 மாதங்களில் செய்வேன்.
பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம்- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையில் நேரடி போட்டி நிலவியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் குமார்தான் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. ஆனால், முதல்வர் வேட்பாளர் அவர்தான் என என்.டி.ஏ. கூட்டணி வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
இந்தியா கூட்டணியில் தேஜஸ்வி யாதவும்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
தேஜஸ்வி யாதவ் சஹர்சா மாவட்டத்தில் உளள் சிம்ரி பக்தியார்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்த கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.-க்களால் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என அமித் ஷா தெளிவாக தெரிவித்துவிட்டார். இதனால் என்.டி.ஏ.-வுக்கு மக்கள் வாக்களித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமார் முதல்வராக மாட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் 11 வருடங்களாகவும், 20 வருடங்கள் மாநிலத்திலும் ஆட்சி செய்த போதிலும், பீகார் மாநிலம் ஏழ்மையாகவும், வேலைவாய்ப்பின்மையாகவும், ஊழலாகவும், கிரிமிகல் செயல்பாடு உள்ள மாநிலமாகவும் இருப்பது ஒரு பீகாரியாக எனக்கு மதவேதனையாக உள்ளது.
மோடிக்கு லால பயப்படவில்லை. அதேபோல் அவர் மகனுமான நானும் மோடிக்கு பயப்படமாட்டேன். எனக்கு வாய்ப்பு கொடுங்கள், தேசிய ஜனநாயக கூட்டணியால் 20 வருடங்கள் செய்ய முடியாததை, நான் 20 மாதங்களில் செய்வேன்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
- கும்பலை பிடிக்க மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
- துபாயை சேர்ந்த முகமது சலீம் ஷேக் என்பவர் சிக்கினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மெபெட்ரோன் எனப்படும் போதைப்பொருட்கள் தயாரித்து சட்டவிரோதமாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தது. இந்த போதைப்பொருள் கடத்தலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் சிலரும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை குர்லா பகுதியில் பர்வீன் ஷேக் என்பவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துபாயை தளமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய அளவிலான சர்வதேச போதைக்கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருந்தது அம்பலமானது.
இந்த கும்பலை பிடிக்க மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதில் துபாயை சேர்ந்த முகமது சலீம் ஷேக் என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ. 256 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முகமது சலீம் ஷேக் தாவூத் இப்ராகிம் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலாவின் வலது கரமாக செயல்பட்டவர்.
சலீம் டோலா துபாயில் இருந்து கொண்டு சர்வதேச அளவில் போதைப்பொருட்கள் தயாரித்து வினியோகம் செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இது வரை ஒரு பெண் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே DSP-க்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்
மகாராஷ்டிராவில் காவல்துறையினரால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தனது கையில் எழுதி வைத்து பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அந்த பெண் மருத்துவர் நேற்று இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.
தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்துள்ளது.
DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று இரவு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மாகாராஷ்டிர காலவத்துறையில் முக்கிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளால் பெண் மருத்துவர் தற்கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவின் மகாயுதி கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் விஜய் நாம்ராவ் வடேட்டிவார் தனது எக்ஸ் பதிவில், "காவல்துறையின் கடமை பாதுகாப்பது, ஆனால் அவர்களே ஒரு பெண் மருத்துவரைச் சுரண்டினால், எப்படி நீதி கிடைக்கும்? பாதுகாக்க வேண்டியவர்களே வேட்டையாடுபவர்களாக மாறினால் எப்படி?..
இந்தப் பெண் ஏற்கனவே புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஆளும் மகாயுதி அரசாங்கம் மீண்டும் மீண்டும் காவல்துறையைப் பாதுகாக்கிறது, இது காவல்துறை அட்டூழியங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவின்பேரில் எஸ்.ஐ. கோபால் பத்னே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
- பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பேருந்து தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த நிலையில் ஆந்திர மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.






