என் மலர்
இந்தியா

இந்தியாவில் ஒரே ஆண்டில் 166 புலிகள் மரணம்- மத்திய பிரதேசத்தில் மட்டும் 55 புலிகள் உயிரிழப்பு
- மகாராஷ்டிரா மாநிலத்தில் 38 புலிகளும், கேரளாவில் 13 புலிகளும், அசாமில் 12 புலிகளும் இறந்துள்ளன.
- கடைசியாக, கடந்த 28-ந்தேதி, மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு ஆண் புலி உயிரிழந்தது.
உலகிலேயே அதிகமான புலிகள் கொண்ட நாடு, இந்தியா. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 2025-ம் ஆண்டில் 166 புலிகள் இறந்துள்ளன. இவற்றில் 31 புலிக்குட்டிகளும் அடங்கும்.
அதற்கு முந்தைய 2024-ம் ஆண்டில் 126 புலிகள்தான் இறந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், 2025-ம் ஆண்டில் 40 புலிகள் அதிகமாக உயிரிழந்துள்ளன.
இவற்றில் புலிகள் மாநிலம் என்று அழைக்கப்படும் மத்தியபிரதேசத்தில் அதிகபட்சமாக 55 புலிகள் இறந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 38 புலிகளும், கேரளாவில் 13 புலிகளும், அசாமில் 12 புலிகளும் இறந்துள்ளன.
கடந்த ஆண்டு, முதலில் புலி பலியான சம்பவம், ஜனவரி 2-ந்தேதி, மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி வனக்கோட்டத்தில் நடந்துள்ளது. அது ஒரு ஆண் புலி ஆகும். அதற்கு 3 நாட்கள் கழித்து, மத்தியபிரதேச மாநிலம் பெஞ்ச் புலிகள் சரணாலயத்தில் ஒரு பெண் புலி இறந்தது. கடைசியாக, கடந்த 28-ந்தேதி, மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு ஆண் புலி உயிரிழந்தது.
இடப்பற்றாக்குறை காரணமாக ஏற்படும் மோதல்தான் புலிகள் இறப்புக்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். வேட்டையாடுதல், மின்சார தாக்குதல், இயற்கை மரணம் ஆகிய காரணங்களும் இருப்பதாக கூறுகிறார்கள்.






