என் மலர்tooltip icon

    இந்தியா

    • ராகுல் காந்தி ஊடுருவல்காரர்களை பீகாரிலேயே இருக்க விடுங்கள் என்கிறார்.
    • எங்களுடைய அரசு அனைத்து ஊடுருவல்காரர்களையும் நாட்டில் இருந்து வெளியேற்றும்.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    ககாரியா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்ட பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ராகுல் பாபா (ராகுல் காந்தி) ஊடுருவல்காரர்களை பீகாரிலேயே இருக்க விடுங்கள் என்கிறார். நீங்கள் சொல்லுங்கள், ஊடுருவல்காரர்களை இங்கேயே இருக்க விட வேண்டுமா?. நீங்கள் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க எத்தனை பேரணியில் நடத்துகிறீர்கள் என்பது பிரச்சினை அல்ல. குஸ்பெட்டியா பச்சாயோ யாத்ரா (Ghuspetiya Bachao Yatra) மூலம் ஊடுருவல்காரர்களை அவரால் பாதுகாக்க முடியாது.

    எங்களுடைய அரசு அனைத்து ஊடுருவல்காரர்களையும் நாட்டில் இருந்து வெளியேற்றும். அவர்கள் கண்டறியப்படுவார்கள். பின்னர் அவர்களுடைய நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.

    பீகாருக்கு காட்டு ராஜ்ஜியம் திரும்ப வேண்டுமா அல்லது மாநிலம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல்தான் இந்த தேர்தல். லாலு-ராப்ரி அரசு அமைந்தால், காட்டு ராஜ்ஜியம் மட்டுமே வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பீகாரின் வளர்ச்சி ஒட்டுமொத்த நாட்டின் உச்சத்தை எட்டும்.

    மாநிலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியை நிதிஷ் குமார் விரும்புகிறார். லாலு பிரசாத் அவரது மகனை முதலமைச்சராக்க விரும்புகிறார். சோனியா காநதி, அவருடைய மகனை பிரதமராக்க விரும்புகிறார். எனவே, பீகாரின் மகன்கள் மற்றும் மகள்களைப் பற்றி நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரால் மட்டுமே அக்கறை கொள்ள முடியும்.

    இவ்வாறு அமித் ஷா பேசினார்.

    • 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
    • எஸ்பிஐயிலிருந்து 525 கோடி ரூபாய் அதானியின் எஃப்பிஓவில் முதலீடு செய்யப்பட்டது ஏன்?

    இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாக அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகையின் குற்றம்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தொடர் முறைகேடு குற்றச்சாட்டுகளால் நஷ்டமடைந்த அதானி குழுமத்தை மீட்க கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

    இதன் ஒரு பகுதியாக மே மாத இறுதியில், கடனை தீர்க்க, அதானி குழுமத்தின் கீழ் உள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.

    மேலும் இதே போல பல முதலீடு வழிகளில் LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே அந்த ரகசிய திட்டம் என்றும் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்தது என்பதே வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் குற்றச்சாட்டாக உள்ளது.

    வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையின் குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை என LIC நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகாயர்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், LIC எல்ஐசி பிரீமியத்தின் ஒவ்வொரு பைசாவையும் செலுத்தும் ஒரு சாதாரண சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க நபருக்கு, மோடி தனது சேமிப்பைப் பயன்படுத்தி அதானியை மீட்கிறார் என்பது தெரியுமா? இது நம்பிக்கை துரோகம் இல்லையா? இது கொள்ளை இல்லையா?

    அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட எல்ஐசி பணத்திற்கும், மே 2025 இல் ROO 33,000 கோடி முதலீடு செய்யும் திட்டத்திற்கும் மோடி அரசாங்கம் பதிலளிக்குமா?

    இதற்கு முன்பே, 2023 இல், அதானியின் பங்குகளில் 32% க்கும் அதிகமான சரிவு இருந்தபோதிலும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐயிலிருந்து 525 கோடி ரூபாய் அதானியின் எஃப்பிஓவில் முதலீடு செய்யப்பட்டது ஏன்?

    மோடி தனது நண்பரின் பைகளை நிரப்புவதில் மும்முரமாக இருக்கிறார். 30 கோடி எல்ஐசி பாலிசிதாரர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை கொள்ளையடிக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா எல்ஐசியின் பதில் அறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, LIC India, எதை நீங்கள் பொய் என்று கூறுகிறீர்கள்?, நீங்கள் வரிசெலுத்துவோரின் ரூ.30,000 கோடியை அதானிக்கு உதவ பயன்படுத்தியதையா அல்லது அதானிக்கு நிதி வழங்க விரைந்து அனுமதி வழங்குமாறு நிதியமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்ததை பொய் என்று கூறுகிறீர்களா? என்று வினவியுள்ளார்.   

    • அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
    • எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் நேற்று முன் தினம் இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

    அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.

    தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்தது.

    DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

    தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலும் 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    அதில், காவல்துறையில் குற்றவாளிகளுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க தன்னை கட்டாயப்படுத்தினர். பலரை மருத்துவ பரிசோதனைகளுக்கு கூட அழைத்து வராமல் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க அழுத்தம் தந்தனர். அதற்கு சம்மதிக்காததால் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தன்னை மிரட்டி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் ஒரு வழக்கில் ஒரு எம்.பி.யின் இரு உதவியாளர்கள் வந்து தன்னை மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். எம்.பி.க்கு போன் செய்து அவரிடம் பேச வைத்தனர் என்றும் அந்த எம்.பி. மறைமுகமாக தன்னை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் எம்.பி.யின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

    பிரேத பரிசோதனை அறிக்கை கொடுப்பதிலும் உடற்தகுதி சான்று கொடுப்பதிலும் பெண் மருத்துவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே பிரச்னை இருந்ததை காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது.

    மேலும், உதவி ஆய்வாளர் கோபால், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தததையும் உறுதி செய்துள்ளனர். பெண் மருத்துவர் தற்கொலை சம்பவத்தின் பின் தலைமறைவாகியுள்ள கோபால் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.  

    • LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே திட்டத்தின் நோக்கம்.
    • இந்தியாவின் வலுவான நிதித் துறை அடித்தளத்தையும் கெடுக்கும் நோக்கத்துடனும் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது.

    இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாக அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகையின் குற்றம்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தொடர் முறைகேடு குற்றச்சாட்டுகளால் நஷ்டமடைந்த அதானி குழுமத்தை மீட்க கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

    இதன் ஒரு பகுதியாக மே மாத இறுதியில், கடனை தீர்க்க, அதானி குழுமத்தின் கீழ் உள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.

    மேலும் இதே போல பல முதலீடு வழிகளில் LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே அந்த ரகசிய திட்டம் என்றும் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்தது என்பதே வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் குற்றச்சாட்டாக உள்ளது.

    இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையின் குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை என LIC நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை ஆகும். கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டதைப் போன்ற எந்தவொரு ஆவணமோ அல்லது திட்டமோ எல்.ஐ.சி-யால் ஒருபோதும் தயாரிக்கப்படவில்லை.  

    முதலீட்டு முடிவுகள், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி LIC-யால் சுயமாக எடுக்கப்படுகின்றன. நிதிச் சேவைகள் துறை (DFS) அல்லது வேறு எந்த அமைப்புக்கும் எங்களின் முடிவுகளில் எந்தப் பங்கும் இல்லை.

    LIC -இன் அனைத்து முதலீட்டு முடிவுகளும், அனைத்து பங்குதாரர்களின் சிறந்த நலனுக்காக, தற்போதைய கொள்கைகள், சட்டங்களில் உள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கட்டுரையில் கூறப்பட்டுள்ள இந்த அறிக்கைகள், LIC -யின் திடமாக வரையறுக்கப்பட்ட முடிவெடுக்கும் செயல்முறையை களங்கப்படுத்தும் நோக்கத்துடனும், LIC-யின் மதிப்பு மற்றும் பிம்பத்தையும், இந்தியாவின் வலுவான நிதித் துறை அடித்தளத்தையும் கெடுக்கும் நோக்கத்துடனும் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.
    • நெருக்கடியில் சிக்கிய அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்.

    இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி)  முறைகேடாக நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாக அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகை குற்றம்சாட்டி உள்ளது.

    இதுதொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்றை வாஷிங்கடன் போஸ்ட் வெளியிட்டுள்ளது.

    2023 இல், ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் மீது பங்குகளைக் தவறாக கையாண்டு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை அண்மையில் மத்திய அரசின் பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி நிராகரித்தது.

    மேலும் அதானியும் அவரது கூட்டாளிகளும் பல பில்லியன் டாலர்  மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் வழக்கு நடந்து வருகிறது. இதில், எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2,000 கோடி சட்டவிரோதப் பணம் கொடுத்த குற்றச்சாட்டும் அடங்கும்.

    இந்த தொடர் குற்றச்சாட்டுகளால் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து முந்தைய ஆண்டை விட கடன் 20% அதிகரித்தது. இதனால் சர்வதேச வங்கிகள் கடன் கொடுக்க தயங்கினர். மேலும் முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளை வாங்க தயங்கினர்.

    இந்த சூழலில் இருந்து அதானி குழுமத்தை மீட்க  கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

    இந்த முதலீட்டு வியூகம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றது என்பதற்கான ஆவணங்களை வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டி உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக மே மாத இறுதியில், கடனை தீர்க்க, அதானி குழுமத்தின் கீழ் உள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.

    மேலும் இதே போல பல முதலீடு வழிகளில் LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே அந்த ரகசிய திட்டம் என்றும் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்தது என்பதே வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் குற்றச்சாட்டாக உள்ளது.

    நெருக்கடியில் சிக்கிய அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்.

     இந்த நோக்கத்திற்காக ஒரே நிறுவனத்தில் அதிக முதலீடு செய்வது அதிக ஆபத்தானது மற்றும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தே கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு காப்பீடு அளிக்கும் பொதுத்துறை நிறுவனமான LIC பணத்தை மத்திய அரசு பயன்படுத்தி உள்ளது என்பதே இந்த குற்றச்சாட்டின் சாராம்சமாகும்.

    ஆனால் அதானி குழுமம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் மத்திய அரசு முடிவுகளில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அரசியல் சலுகை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளது. LIC பல கார்ப்பரேட் குழுமங்களில் முதலீடு செய்கிறது, அதானிக்கு மட்டும் சலுகை அளிக்கப்படுவதாகக் கூறுவது தவறானது என்பதே அக்குழுமத்தின் வாதமாக உள்ளது.

    முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதானி நிறுவனத்தில் LIC-யின் அதிகப்படியான முதலீடு குறித்து சந்தேகம் எழுப்பி வந்த நிலையில் வாஷிங்டன் போஸ்ட் விசாரணை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

    • LIC இன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதி முதலீடு.

    அதானி குழுமத்தின் நலனுக்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோதானி (மோடி + அதானி) கூட்டு முயற்சியானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் (LIC) அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது என்பது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

    2025 மே மாதத்தில் பல்வேறு அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதியை முதலீடு செய்வதற்கான திட்டத்தை இந்திய அதிகாரிகள் வரைவு செய்து செயல்படுத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் இலக்குகளாக அதானி குழுமத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது" மற்றும் "மற்ற முதலீட்டாளர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது ஆகியவை அறிவிக்கப்பட்டன.

    இந்த மோதானி மெகா மோசடி முழுமையையும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே விசாரிக்க முடியும் என்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது வருகிறது. இது தொடர்பாக 100 கேள்விகளை நாங்கள் எழுப்பியுள்ளோம்.

    நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் யாருடைய அழுத்தத்தின் கீழ், நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு தனியார் நிறுவனத்தை பிணை எடுப்பது என்று முடிவு செய்தனர்?

    2024 செப்டம்பர் 21, அன்று அமெரிக்காவில் கவுதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்ஐசி பங்குகள் நான்கு மணி நேர வர்த்தகத்தில் 7,850 கோடி ரூபாய் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.

    முதல் கட்டமாக, குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (PAC), LIC எவ்வாறு அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்திக்கப்பட்டது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • தீபாவளி பண்டிகை நாடு ழுமுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

    இன்றைய காலக்கட்டத்தில் பிழைப்பிற்காக நாட்டை விட்டோ அல்லது மாநிலம் தாண்டியோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலானவர்கள் சொந்த ஊர், குடும்பத்தினர்கள், உறவினர்களை விட்டு பிரிந்து சென்று பணி செய்யும் சூழ்நிலையில் ஆண்டுக்கு முறையோ, பல ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, பண்டிகை, சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ சொந்த ஊருக்கு வருவார்கள்.

    அந்த வகையில், சமீபத்தில் தீபாவளி பண்டிகை நாடு ழுமுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் ரெயில்கள் முன்பதிவு செய்தும், முன்பதிவில்லாமலும் படிக்கட்டுகளில் நின்று பயணிப்பது என்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாகவே உள்ளது.

    இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவை பார்த்து, பலரும் அடடே! இது நமக்கு தோன்றாமல் போனதே என்று யோசிக்கும் அளவிற்கு உள்ளது.

    விஷால் என்பவர் பகிர்ந்து வீடியோவில், ஒரு நபர் ரெயில் கழிப்பறையை தனது படுக்கையறையாக மாற்றி பயணிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பிளாட்பாரத்தில் ரெயில் வந்து நின்ற போது இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த விஷால் வீடியோ எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரிடம் சென்று கழிவறையை ஒரு படுக்கையறையாக மாற்றியுள்ளீர்கள் என்று கூறும் விஷால் அந்த நபர் வைத்துள்ள பொருட்களை வீடியோவில் காட்டுகிறார். மேலும் இதெல்லாம் உங்கள் வீட்டுப் பொருட்களா? என்று விஷால் கேட்க அந்த நபரோ, அலட்சியமாக ஆம் என்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தள பயனர்களிடையே, இந்திய ரெயில்களின் நிலை, இடப்பற்றாக்குறை, பொது சொத்துக்களை பயணிகள் மதிக்காதது குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளது. மேலும் விவாத பொருளாகவே மாறியுள்ளது.



    • விபத்து ஏற்பட்டதும் பஸ் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது.
    • பின் பகுதியில் பயணித்த பயணிகள் பஸ்சில் பின்பக்க கண்ணாடியை உடைத்து குதித்து உயிர் தப்பினர்.

    ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதி ஆம்னி பஸ் தீப்பிடித்தது. பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.

    பயணிகள் ஏசி படுக்கை வசதி கொண்ட பஸ்சில் இதமான போர்வைகளால் போர்த்தப்பட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களில் யாருக்கும் அந்த நேரத்தில் அது அவர்களின் கடைசி தூக்கம் என்று தெரியாது.

    பஸ்சில் பலியான 19 பேரின் முழு வாழ்க்கையும், கொளுந்துவிட்டு எரிந்த தீயில் எரிந்து சாம்பலாகி விட்டது.

    இந்த விபத்தில் 19 பயணிகள் உடல் கருகி இறந்தனர். அவர்களிடமிருந்த செல்போன்கள், லேப்டாப்கள் வெடித்து சிதறியது.

    விபத்து குறித்து உயிர் தப்பிய பயணிகள் கூறியதாவது:-

    விபத்து ஏற்பட்டதும் பஸ் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    எங்களிடம் இருந்த செல்போன், லேப்டாப் மற்றும் கை, கால்களை பயன்படுத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பித்தோம்.

    பின் பகுதியில் பயணித்த பயணிகள் பஸ்சில் பின்பக்க கண்ணாடியை உடைத்து குதித்து உயிர் தப்பினர்.

    தீ விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர்கள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து முன்பக்க கதவை திறந்து விட்டிருந்தால் இவ்வளவு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது. இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு டிரைவர்களின் அலட்சியமே காரணம். அவர்கள் முன் பக்க கதவை திறந்து விடவில்லை. பயணிகளை எச்சரிக்காமல் குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    உயிர் தப்பிய அஷ்வின் என்பவர் கூறுகையில்:-

    நான் டிரைவர் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்தேன். தீ விபத்து ஏற்பட்டதும் கண் விழித்தேன். டிரைவர் ஒருவர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். மேலும் கீழே குதித்து மணலை அள்ளி வீசி தீயை அணைக்க முயன்றதை கண்டேன்.

    ஆனால் அவர்கள் முழுமையாக முயற்சி செய்யாமல் ஓடிவிட்டனர். நான் பஸ் ஜன்னல் வழியாக குதித்து தப்பினேன் என்றார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ்ஸை ஓட்டி வந்தவர் பல்நாடு மாவட்டம் ஒப்பி செர்லாவை சேர்ந்த டிரைவர் லட்சுமய்யா என தெரியவந்தது.

    கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆனால் லட்சுமய்யா 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு 10-ம் வகுப்பு தோல்வி அடைந்ததாக போலி சான்றிதழ் கொடுத்து கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றது தெரியவந்துள்ளது.

    பஸ்சில் தீ அணைக்கும் கருவி, ஜன்னல்களை உடைக்கும் சிறிய சுத்தியல் போன்றவை இல்லை. இதனால் உயிர் பலியை தடுக்க முடியவில்லை. விதிமீறியதாக ஆம்னி பஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    பஸ்சில் இருந்த பயணிகளில் 18 பேர் உயிரிழந்து இருந்த நிலையில் லக்கேஜ் கேரியரில் ஒரு பயணி இறந்து கிடந்தார். அவர் எப்படி லக்கேஜ் கேரியருக்கு சென்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்ற பயணி ஒருவரின் உடல் ஜன்னலுக்கு வெளியே பாதியும் உள்ளே பாதியும் கருகிய படி கிடந்தார். இது விபத்தின் தீவிரத்தை காட்டியது.

    இறந்தவர்களில் 18 பேரின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

    முன்பதிவு செய்யாமல் பயணித்த ஒரு பயணியின் அடையாளம் தெரியாமல் உள்ளது.

    மேலும் பஸ் விபத்தில் பலியானவர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதில் ஒருவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மதகிரி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 32) இவர் சங்கா ரெட்டி பகுதியில் சிப்ஸ் தின்பண்டங்கள் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ்சில் அவர் ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு வந்துள்ளார்.

    மேலும் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த யுவன் சங்கர் ராஜா (22 )என்பது தெரிய வந்துள்ளது. அவர் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். 

    • பீகாரின் சிவன் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார்.
    • ஊடுருவல்காரர் ஒருவர் கூட பீகாரில் அனுமதிக்கப்பட மாட்டார் என தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகாரில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசார வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த தேர்தலில் ரவுடியான சகாபுதீனின் மகனை ராஷ்ட்ரீய ஜனதா தளம் களமிறக்கி உள்ளது.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று பீகாரின் சிவன் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அமித்ஷா பேசியதாவது:

    சகாபுதீனின் மகன் படுதோல்வி அடைவதை இங்குள்ள மக்கள் உறுதிசெய்ய வேண்டும்.

    லாலு பிரசாத் மற்றும் ரப்ரி தேவியின் காட்டாட்சியை மக்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து உள்ளனர்.

    பீகார் மக்கள் தேர்தல் முடிவு வெளியாகும் நவம்பர் 14-ம் தேதிதான் உண்மையான தீபாவளியை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

    ராஷ்டிரீய ஜனதா தளமும், அதன் கூட்டணி கட்சிகளும் அவமானகரமான தோல்வியைச் சந்திக்கும்.

    ஊடுருவல்காரர்கள் இங்கேதான் இருக்கவேண்டும் என்கிறார் ராகுல் காந்தி.

    ஆனால் ஊடுருவல்காரர் ஒருவர் கூட பீகாரில் அனுமதிக்கப்பட மாட்டார் என தெரிவித்தார்.

    • ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தரும்படி சம்பா பகத் கேட்டார்.
    • மகளின் கனவை நிறைவேற்ற அவர் தினமும் சில நாணயங்களை சேர்த்து வந்தார்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பஜ்ரங் ராம். இவரது மகள் சம்பா பகத். விவசாயியான தனது தந்தையிடம் ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கும்படி சம்பா பகத் கேட்டார்.

    தனது மகளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த அவர், தினமும் சில நாணயங்கள் மற்றும் ரூபாயை ஒரு சேர்த்து வந்தார். சில மாதங்கள் கழிந்த நிலையில் குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தது.

    இந்நிலையில், நாணயங்கள் அடங்கிய ஒரு பையை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு பஜ்ரங் ராம் தனது மகளுடன் சென்றார்.

    ஷோரூம் மேலாளர் விவசாயி பஜ்ரங் ராம் கதையைக் கேட்டு நெகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து, நாணயங்களை வேண்டாம் என சொல்லாமல் அவற்றை வாங்கி ஊழியர்களிடம் எண்ணும்படி கூறினார்.

    நாணயங்களை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் ரூ.40 ஆயிரம் இருந்தது. மீதி பணத்திற்கு கடன் கொடுக்கும்படி பஜ்ரங் ராம் தெரிவித்தார்.

    அதன்படி, அவரிடம் புதிய ஸ்கூட்டர் சாவி கொடுக்கப்பட்டது. அந்த சாவியை தனது மகளிடம் வழங்கி மகிழ்ந்தார். தந்தையும், மகளும் ஸ்கூட்டரை வாங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.

    • SIR-க்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன.
    • ஏனென்றால், அவர்கள் ஊடுருவல்காரர்கள் வாக்குகள் அடிப்படையில் அரசு அமைக்க விரும்பினார்கள்.

    பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பீகார் மாநில வைஷாலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பீகார் நடத்தப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன. ஏனென்றால், அவர்கள் ஊடுருவல்காரர்கள் வாக்குகள் அடிப்படையில் அரசு அமைக்க விரும்பினார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அது நடக்க அனுமதிக்காது. அவர்களின் நிலை முற்றிலும் வெளிப்பட்டுள்ளது. அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு, அவர்களிடம் ஆதாரம் இல்லை.

    பணம் பறித்தல், காட்டு ராஜ்ஜியம், மிரட்டல்தான் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிலைப்பாடு. கடந்த 20 ஆண்டுகளில் நிதிஷ் குமார் காட்டு ராஜ்ஜியம் இல்லாத பீகாரை உருவாக்கியுள்ளார்.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    • வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை பாஜக-விடம் இல்லை.
    • அவர்களுக்கு 28 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே இருந்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. 4 இடங்களுக்கான தேர்தலில் உமர் அப்துல்லாவின் ஆளுங்கட்சியான தேசிய மாநாடு கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது.

    பாஜகவுக்கு வெற்றி பெற 4 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தேவைப்பட்டது. அந்த 4 பேரும் எங்களுக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்திருந்தனர். பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதால், 4 பேரும் பாஜக-வுக்கு வாக்களித்துவிட்டனர் என தோல்வியடைந்த தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் இம்ரான் நபி தார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இம்ரான் நபி தார் கூறுகையில் "வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை பாஜக-விடம் இல்லை. அவர்களுக்கு 28 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே இருந்தனர். அப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் 32 வாக்குளை பெற்றனர்?. இதன்மூலம் குதிரை பேரம் நடந்துள்ளது தெளிவாகிறது" என்றனர்.

    வெற்றி பெற்ற மற்ற வேட்பாளர் "காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட முடிவு நிராகரிக்கப்பட்டுள்ளது" என்பதை காட்டுகிறது" என்றார்.

    ×