என் மலர்tooltip icon

    இந்தியா

    • பயங்கரவாதிகளை தேடும்போது திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயம்.
    • இந்த இடத்தில் இரண்டு முறை எனகவுண்டர் நடைபெற்றுள்ளது.

    பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வந்த இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் மாயமான நிலையில், அவர்கள் தேடும் பணியில் சக வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னதாக கோகேர்நாக்கில் உளள் அஹ்லான் கடோல் என்ற பகுதியில் தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது இரண்டு வீரர்கள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானார்கள். இருவரையும் தேடும் பணியில் ஹெலிகாப்டர் உட்படுத்தப்பட்டுள்ளது.

    காஷ்மீரில் அஹ்லான் கடோல், பயங்கரவாதத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது. இந்த இடத்தில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஆகஸ்ட் 2024 ஆகிய இரண்டு முறை பெரிய அளவில் என்கவுண்டர் நடைபெற்றுள்ளது.

    கடந்த வரும் நடைபெற்ற சண்டையில் இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு உள்ளூர் நபர் கொல்லப்பட்டனர். அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்ரவாதிகளை தேடும்போது இரண்டு அதிகாரிகள் உள்பட நான்கு வீரர்கள், ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.

    • பஞ்சாப் மாநிலத்தின் 92 சதவீத மக்கள் இலவசமாக மின்சாரம் பெறுகிறார்கள்.
    • பாசனத்திற்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது

    ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆட்சி செய்து வருகிறது. பகவத் மான் முதலமைச்சராக இருந்து வருகிறார். அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மின்மாற்றிகள் மற்றும் வினியோக யூனிட் அமைப்பதற்கான கட்டுமான தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

    அப்போது, அடுத்த வருடத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் மின்தடை இருக்காது என கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார்.

    இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:-

    பஞ்சாப் மாநிலத்தின் 92 சதவீத மக்கள் இலவசமாக மின்சாரம் பெறுகிறார்கள். பாசனத்திற்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது நாள் முழுவதும் வழங்கப்படும் வகையில் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

    24 மணி நேரம் மின்சாரம் வழங்குவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 25 ஆயிரம் கி.மீ. புதிய பவர் கேபிள் பதிப்பதற்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. 8,000 புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள், 77 புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த வேலைகள் மிகப்பெரிய அளவில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த சிஸ்டமும் நவீனமாக்கப்படும். அடுத்த கோடைக்காலத்தில், பஞ்சாபில் மின்தடை என்பதே இருக்காது.

    இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    • ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறையும் வாய்ப்பு
    • கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையே சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இதில் இந்தியர்களுக்கான விசா பிரச்சனைகள் தீர்வு, கார்கள் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறைப்பு ஆகியவை அடங்கும்.

    இந்நிலையில், வர்த்தக பேச்சுவார்தைகளுக்காக இங்கிலாந்து பிரதமர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் இன்று இந்தியா வந்தடைந்தார்.

    கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த ஒப்பந்தம் ஆண்டுதோறும் ஸ்காட்லாந்து பொருளாதாரத்திற்கு 190 மில்லியன் யூரோ பங்களிக்கும் என்றும் அதாவது இந்தியாவிற்கு ஆண்டுக்கு £1 பில்லியன் யூரோ அளவுக்கு ஸ்காட்ச் விஸ்கி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் குறித்து பேசிய ஸ்காட்லாந்திற்கான இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டக்ளஸ் அலெக்சாண்டர், "இங்கிலாந்து - இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) மூலம் ஸ்காட்ச் விஸ்கி தொழில் வளர்ச்சியடையும். இந்த ஆண்டு இந்தியாவுடன் இங்கிலாந்து அரசாங்கம் செய்து கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் ஸ்காட்லாந்திற்கும், குறிப்பாக நமது விஸ்கி தொழிலுக்கும் ஒரு சிறந்த செய்தியாகும். ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சில சவால்கள் உள்ளது.

    இந்தியாவுடனான இங்கிலாந்து அரசாங்கத்தின் ஒப்பந்தத்தில் ஸ்காட்ச் விஸ்கி ஒரு பெரிய வெற்றியாளராக உள்ளது. இது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரத்துடன் இதுவரை எந்த நாடும் ஒப்புக் கொள்ளாத சிறந்த ஒப்பந்தமாகும்.

    • 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது புகார்.
    • வெளிநாட்டு செல்ல அனுமதி பேட்டு மும்பை நீதிமன்றத்தில் மனுதாக்கல்.

    பாலிவுட் நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளர்களில் ஒருவருமான ஷில்பா ஷெட்டி தனது கணவனர் ராஜ் குந்த்ரா உடன் இணைந்து 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தீபக் கோதாரி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக பணத்தை பெற்றுக்கொண்டு தனிப்பட்ட செலுவுக்காக பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இதனால் ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    அவர் வருகிற 25ஆம் தேதி முதல் அக்டோபர் 29ஆம் தேதி யூடியூப் நிகழ்ச்சியாக கொழும்பு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் மும்பை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு விசாரணையின்போது, லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனுமதி வழங்க முடியாது. முதலில் மோசடி வழக்கு தொடர்பாக 60 கோடி ரூபாயை செலுத்துங்கள். பின்னர், வெளிநாட்டிற்கு செல்ல பேக் செய்வது குறித்து பரிசீலனை செய்யுங்கள் என நீதிமன்றம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது.

    அத்துடன் வழக்கை வருகிற 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
    • நிதிஷ் குமார்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜக மேலிடம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது.

    பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார்தான், தொகுதி பங்கீடு விரைவில் முடிவடையும் என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிராஜ் சிங் கூறியதாவது:-

    நிதிஷ் குமார்தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) முதல்வர் வேட்பாளர். என்.டி.ஏ. கூட்டணியில் எல்லாம் நன்றாக உள்ளது. தொகுதி பங்கீடு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இறுதி வடிவம் விரைவில் முடிவாகும்.

    மகாபத்பந்தன் என அழைக்கப்படும் இந்தியா கூட்டணி பிளவுப்பட்ட வீடு. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் இருப்பார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. காங்கிரஸ் அறிவிப்பால் ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் கவலையும், பயமும் அடைந்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கை, தலைமை மற்றும் நோக்கம் அனைத்தும் உறுதியாக உள்ளன என்றும், எந்த வெறுப்பும் இல்லை என்றும் என்றால் உறுதியா சொல்ல முடியும்.

    இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

    பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் நிதி்ஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பிரதான கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளுடன் சிராக் பஸ்வான் கட்சியும் முக்கியமான 3ஆவது பெரிய கட்சியாக உள்ளது. சிராக் பஸ்வான் கட்சிக்கு என்டிஏ 25 இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், சிராக் 40 இடங்கள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நவி மும்பை விமான நிலைய திறப்பு விழாவில் தொழிலதிபர் கௌதம் அதானி கலந்து கொண்டார்.
    • ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பீட்டில் முதல்கட்ட பணி நிறைவு பெற்றது.

    நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    நவி மும்பை விமான நிலைய திறப்பு விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாக உருவெடுக்கும் இந்த சர்வதேச விமான நிலையத்தில் 4 கட்டங்களாக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பீட்டில் முதல்கட்ட பணி நிறைவு பெற்றது.

    நவி மும்பை விமான நிலையம், மும்பையின் தற்போதைய சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் கடுமையான போக்குவரத்துச் சுமையைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

    • நடிகர் மோகன் பாபுவுக்கு திருப்பதியில் சொந்தமாக பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது.
    • நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான பல்கலைகழகத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என இவருக்கு பல முகங்கள் உண்டு.

    இவர் ஆந்திராவில் தொகுதி ஒன்றில் போட்டியிட்டு எம்பி ஆனார். இவர் கிட்டத்தட்ட 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளையும் வென்றுள்ளார்.

    நடிகர் மோகன் பாபுவுக்கு திருப்பதியில் சொந்தமாக பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில், திருப்பதியில் உள்ள நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான பல்கலைகழகத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமத்தை ரத்து செய்யவும் அரசுக்கு மாநில உயர்கல்வி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்களிடமிருந்து ரூ.26 கோடி கூடுதலாக கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • தொழில் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.
    • இந்தியாவில் முதலீடு செய்ய, புதுமைப்படுத்த மற்றும் தயாரிக்க இதுவே சிறந்த நேரம்.

    புதுடெல்லி:

    டெல்லியில் 9-வது மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசியதாவது:-

    நான் 'மேக் இன் இந்தியா' பற்றி பேசியபோது, பலர் அதை கேலி செய்தனர். அவர்களின் காலத்தில் புதிய தொழில்நுட்பம் இந்தியாவை அடைய கணிசமான நேரம் பிடித்தது. ஒரு காலத்தில் 2 ஜி உடன் போராடிய நாடு தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் இணைப்பை அடைந்துள்ளது.

    இந்தியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 ஜி ஸ்டேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பெரிய உள்நாட்டு சாதனையாகும். இதன் மூலம், உலகில் இந்த திறனைக் கொண்ட 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. இன்று இந்தியாவில் ஒரு ஜி.பி. வயர்லெஸ் டேட்டாவின் விலை ஒரு கப் டீயின் விலையை விடக் குறைவு.

    டிஜிட்டல் இணைப்பு இனி ஒரு சலுகையோ அல்லது ஆடம்பரமோ அல்ல. அது தற்போது ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

    தொழில் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய, புதுமைப்படுத்த மற்றும் தயாரிக்க இதுவே சிறந்த நேரம். நாங்கள் சீர்திருத்தங்களின் வேகத்தை அதிகரித்து வருகிறோம்.

    இந்தியா மொபைல்கள், செமிகண்டக்டர்ஸ் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • தலைமை நீதிபதி மீதான தாக்குதல் தனி நபர் மீதானது அல்ல, அரசியலமைப்பின் மீதான தாக்குதல்
    • வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நேற்று முன் தினம் மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.

    வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.

    அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார். இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி மீதான தாக்குதல் தனி நபர் மீதானது அல்ல, அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று பி.ஆர்.கவாயின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பேசிய கவாயின் தங்கை, "இது ஒரு நபரின் தனிப்பட்ட தாக்குதல் அல்ல, மாறாக ஒரு நச்சு சித்தாந்தத்தால் அரசியலமைப்பின் மீதான தாக்குதல். இந்த வகையான அரசியலமைப்புக்கு எதிரான தாக்குதலை நாம் நிறுத்த வேண்டும். அரசியலமைப்பிற்கு எதிராக யாராவது செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது நச்சு சித்தாந்தத்தின் கொடூர முகம் ஆகும்" என்று தெரிவித்தார்.

    • பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதை போல் இரு தரப்பும் எந்த ஒரு பரஸ்பர குற்றச்சாட்டையே அவதூறையோ பரப்பக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • சீமான், அவரது ஏஜெண்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் எனது குடும்ப பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.

    தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    இந்த நிலையில், நடிகை குறித்து அவதூறு பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

    நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. தனது சொல், செயல்களால் நடிகைக்கு ஏற்பட்ட வலி, காயத்திற்கு நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாக சீமான் தரப்பு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    நடிகைக்கு எதிராக தான் கூறிய அனைத்து அறிக்கைகள், குற்றச்சாட்டுகளையும் திரும்பப்பெறுவதாகவும் நடிகை குறித்து எந்த ஊடகத்திலும் எந்த கருத்தையும் இனி தெரிவிக்க மாட்டேன் என்றும் சீமான் பிரமான பத்திரத்தில் உறுதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக நடிகை கூறியதை தொடர்ந்து வழக்கு ரத்து செய்யப்பட்டது. மேலும், பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதை போல் இரு தரப்பும் எந்த ஒரு பரஸ்பர குற்றச்சாட்டையே அவதூறையோ பரப்பக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனிடையே, சீமான், அவரது ஏஜெண்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் எனது குடும்ப பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. நான் சீமானால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வாழ்வாதாரத்துக்கான உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நடிகை பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 

    • மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
    • வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்தும் விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.

    இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது. வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • 93-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
    • உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 93-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

    ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார். 

    ×