என் மலர்
திருப்பூர்
- சம்பவம் தொடர்பாக 9-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- பல்லடம் போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வந்த சுபின் பிரபு என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு என்பவர் ஒரு கும்பலால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக 9-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வந்த சுபின் பிரபு என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று அவரை போலீசார் கைது செய்தனர்.
- மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது.
- கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:-
திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக உள்ள விசைத்தறி ஜவுளித் தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித்துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்க வில்லை. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது .ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை.
மேலும் மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் அவர்களுடன் போட்டியிட முடியாத சூழ்நிலை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தனி பேரிப்பு அமைத்து மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
மேலும் சிறு, குறு, நிறுவனங்களுக்கான தொழில் ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்ததால் வியாபாரிகள் ஜவுளி வாங்கு வதை நிறுத்திவிட்டனர். எனவே சிறுகுறு தொழில் ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை குறைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இன்று முதல் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பிரதமர் மோடி ஆசீர்வாதத்துடன் மந்திரி பதவி வகித்து வருகின்றனர்.
- தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கு தமிழ்நாட்டில் நிற்கக்கூட தகுதி இல்லை.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் மூலம் தமிழகத்தில் இருந்து பா.ஜனதா கட்சியை ஓட ஓட விரட்ட வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் எல்.முருகன் ஆகியோர் மத்திய மந்திரிகளாக உள்ளனர். இந்த 3 பேரும் எப்படி எம்.பி. பதவிக்கு வந்தார்கள். மக்களை சந்தித்து வாக்குகள் பெற்று வெற்றி பெறவில்லை.

பிரதமர் மோடி ஆசீர்வாதத்துடன் மந்திரி பதவி வகித்து வருகின்றனர்.இவர்களில் ஒருவராவது பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு ஜெயிக்க வாய்ப்பு உள்ளதா? ஏனென்றால் அவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்தலை சந்திக்க தைரியம் கிடையாது. தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கு தமிழ்நாட்டில் நிற்கக்கூட தகுதி இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தான் தி.மு.க.வினர் குறியாக உள்ளனர்.
- எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை மக்கள் உணர்ந்து அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி கள்ளிமேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொது க்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி பேசியதாவது:-
மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதை விட்டு, விட்டு , அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தான் தி.மு.க.வினர் குறியாக உள்ளனர். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஜெயலலிதா செய்த நல்ல பல திட்டங்களும், எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை மக்கள் உணர்ந்து அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது.
- பாராளுமன்றத் தேர்தல் வெகு விரைவில் வரப்போகிறது.
திருப்பூர்:
போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூரில் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. ஏற்கனவே 2 ஜி ஊழல் வழக்கில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தினர். இப்போது போதை பொருள் விற்பனையால் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து தி.மு.க.வின் அயலக அணி இணைச்செயலாளர் ஒருவர் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து தமிழக இளைஞர்களுக்கு சப்ளை செய்துள்ளார். 3 ஆண்டு காலத்தில் பல ஆயிரம் கோடி போதை பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்துள்ளார்கள்.
இதேபோல் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. இதனை தடுக்க முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தவறிவிட்டார். இன்று திருப்பூர் மாநகராட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. 50 சதவீத கமிஷன் கேட்பதால் எந்த ஒரு பணி செய்வதற்கும் ஒப்பந்ததாரர்கள் முன் வரவில்லை.
தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருவதோடு மக்களின் பிரச்சினைகளை சட்டசபையில் எடுத்து பேசி வருகிறார். ஆனால் அதற்கு தி.மு.க. உரிய பதில் அளிக்க முடியாமல் திணறி வருகிறது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக எடப்பாடி பழனிச்சாமி உருவெடுத்து வருகிறார். பாராளுமன்றத் தேர்தல் வெகு விரைவில் வரப்போகிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலம் முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களை எம்ஜிஆர்- ஜெயலலிதா ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என நினைத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவர் அவர் பேசினார்.
- தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
- ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் விலை சரிவு விவசாயிகளின் வாழ்க்கையை அதல பாதாளத்துக்கு தள்ளி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளி உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. வரத்து மற்றும் தேவையை பொறுத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது. தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.150 வரையே விற்பனையாகிறது. இதனால் போக்குவரத்து, சுங்கம், கூலி என செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து நஷ்டத்துடன் திரும்புவதை விட சாலை ஓரத்தில் வீசி எறிவதே சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து விடுகின்றனர்.
பல விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில், டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஏற்படும் இந்த நிலையால் தக்காளி செடிகள் மட்டும் அழிக்கப்படுவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் சேர்ந்தே அழிந்து போகிறது. இந்தநிலை ஏற்படாமல் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயம் மட்டுமல்லாமல் விவசாயியும் சேர்ந்தே அழியும் நிலை உருவாகி விடும்.
எல்லா பொருட்களின் விலைவாசியும் 10 ஆண்டுகளுக்குள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் ஒரு கட்டு கீரை ரூ.10 லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டால் அது அநியாய விலையாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால் ரூ.5-க்கும் ரூ.10-க்கும் அள்ளி கொடுத்து விட்டு விவசாயி மூலையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை கொட்டி உள்ளனர்.
எனவே விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் தக்காளி சந்தை உருவாக்கி, இருப்பு வைக்கவும், உரிய விலை கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்புக் கூட்டுப்பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
- மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, பழனி உள்பட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பஸ் நிலையத்தின் வடக்கு புறம் திருச்சி, கரூர், பழனி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தின் பின்புறத்தில் பேக்கரி மற்றும் செல்போன் கடைகள் உள்ளது. நேற்றிரவு வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு சென்றனர். இன்று அதிகாலை பேக்கரி கடை நடத்துபவர்கள் தங்களது கடைகளை திறக்க வந்தனர்.
அப்போது கடைகளின் ஷட்டரில் இருந்து கரும்புகை வந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் உடனே தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் ஒரு பேக்கரி கடை , 3 செல்போன் கடை ஆகியவற்றில் தீ மளமளவென பற்றி எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனிடையே தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீரும் காலியானது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணனை தொடர்பு கொண்டு தெரிவிக்கவே, அவர் நகராட்சி தண்ணீர் லாரிகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து அதன் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும் பேக்கரி கடையில் இருந்த பிரிட்ஜ், பேன், டி.வி., இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் செல்போன் கடைகளில் இருந்த விலையுயர்ந்த செல்போன்கள் தீயில் எரிந்து சேதமானது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மேம்பாட்டு பணிக்காக இடிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட 4 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தற்காலிக கடை ஒதுக்கப்பட்டு கடைகள் இடிக்கப்பட இருந்தது. இந்தநிலையில் தீ விபத்து ஏற்பட்டு 4 கடைகளும் சேதமாகி உள்ளன. சேதமான கடைகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபர் மற்றும் அவருடன் தங்கியிருந்த 5பேரை பிடித்து விசாரித்தனர்.
- கைதான 10 பேரையும் போலீசார் தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சத்திரம், சின்னபுத்தூர், கோவிந்தாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் மின்சாரம் தயாரிப்பதற்கான தனியார் காற்றாலைகள் ஏராளமான அளவில் உள்ளன. சில இடங்களில் பாதுகாப்பு இல்லாத நிலையில் காற்றாலைகளில் இருந்து கேபிள் வயர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களை அவ்வப்போது மர்மநபர்கள் திருடி சென்று வந்தனர். பல மாதமாக தொடர் திருட்டு நடந்து வரும் நிலையில் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் உள்ள தோட்ட ங்கள் மற்றும் வீடுகளில் மின்வயர்கள், இரும்பு பொருட்கள் திருடப்பட்டு வந்தது.
இதனைத்தொடர்ந்து கிராமமக்கள் தங்களுக்குள் கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து காற்றாலை மற்றும் தோட்டம், வீடுகளில் கேபிள் வயர்கள், இரும்பு பொருட்களை திருடும் மர்மநபர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் சத்திரம் கிராமத்தில் வாலிபர் ஒருவர் தான் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் முன் கேபிள் வயர்களை போட்டு தீயிட்டு கொளுத்தி அதில் இருந்து செம்பு கம்பிகளை சுருட்டி வைத்து கொண்டிருந்தார்.
சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபர் மற்றும் அவருடன் தங்கியிருந்த 5பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 6 பேரையும் அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து உண்மையை தெரிந்து கொள்ள தர்ம அடி கொடுத்தனர்.
அப்போது அவர்கள்தான் தாராபுரம் பகுதியில் உள்ள காற்றாலைகள் மற்றும் தோட்டங்களில் மின்வயர்களை திருடியது தெரியவந்தது. மேலும் அவர்களுடன் தங்கியிருந்த மேலும் 4 பேர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பியோடினர். அவர்களையும் பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் 10 பேருக்கும் உடலில் காயம் ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 10 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் ஆயங்குளத்தை சேர்ந்த கண்ணன் (வயது 36) மற்றும் திசையன்விளையை சேர்ந்த பாலாஜி (20), சுதாகர் (22), சக்திமுருகன் (25), கதிரேசன் (25), கோபிகிருஷ்ணன் (27), சக்திவேல் (26), செல்வன் (28), ராகுல் (26), முத்துசெல்வன் (26) என்பது தெரியவந்தது. கைதான 10 பேரையும் போலீசார் தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதான ஆயங்குளத்தை சேர்ந்த கண்ணன் தாராபுரம் சத்திரம் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். அவருடன் மற்ற 9 பேரும் வேலை செய்து வந்துள்ளனர். பழைய இரும்பு பொருட்களை பணம் கொடுத்து வாங்கி வந்த அவர்கள், லோடு ஆட்டோவில் தாராபுரம் பகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து பழைய இரும்பு பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.
அப்போது ஆளில்லாத காற்றாலைகள், தோட்டங்கள், வீடுகள் ஆகியவற்றை நோட்டமிடுவதுடன் இரவு நேரங்களில் லோடு ஆட்டோவில் சென்று அங்குள்ள இரும்பு பொருட்களை திருடி சென்றுள்ளனர். பின்னர் அதில் கிடைக்கும் காப்பர் கம்பிகளை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வியாபாரிக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதற்காக அவர்கள் தாராபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் வளர்க்கும் ஆட்டுக்குட்டிகளை திருடி கறிக்கடைகளுக்கு விற்பனை செய்தும் வந்துள்ளனர். கடந்த வாரம் ஆடுகளின் வாயில் துணியை வைத்து அடைத்து 50க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
- பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
- சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் வாகன மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் இருந்து உடுமலை வழியாக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மூணாருக்கு சென்றது.
பின்னர் அங்கு பயணிகளை இறக்கி விட்டு விட்டு இரவு மூணாறில் இருந்து அந்த பஸ் புறப்பட்டு உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. தலையார் அருகே வந்த போது உடுமலை-மூணார் சாலையில் ஆக்ரோசத்துடன் சுற்றித்திரிந்த ஒற்றை யானை அந்த பஸ்சை வழிமறித்து தாக்கியது. இதில் பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
இதை சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார். இதன் காரணமாக அச்சமடைந்த பயணிகள் அலறினர். காட்டு யானையின் அடாவடி செயலால் உடுமலை- மூணார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை பஸ்சை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக உடுமலை- மூணார் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. மேலும் சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.யானைகளை துன்புறுத்தும் வகையில் ஒலி எழுப்புவதோ, கற்களை வீசுவதோ கூடாது. யானைகள் சாலையை கடக்கும் நிகழ்வு நேர்ந்தால் தூரத்தில் வாகனங்களை நிறுத்தி அவை சாலையை கடந்த பின்பு இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.
- குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
- பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சபரிநகரில் கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் திடீரென அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு இன்று காலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆறுமுத்தாம்பாளையம் - திருப்பூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார், பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
- கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்ததால் அணை நிரம்பி அதன் முழு கொள்ளளவில் நீடித்து வந்தது.
- பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர் இருப்பும் சரிந்து வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி அணையை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாசனம் மற்றும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமராவதி ஆறு மூலமாக 29 ஆயிரத்து 387 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் பிரதான கால்வாய் மூலமாக 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, பாம்பாறு, தேனாறு உள்ளிட்ட ஆறுகள் ஓடைகள் மூலம் நீர்வரத்து ஏற்படுகிறது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்ததால் அணை நிரம்பி அதன் முழு கொள்ளளவில் நீடித்து வந்தது. இதனால் கடந்த மாதம் 25-ந்தேதி ஆறு மற்றும் கால்வாய் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வனப்பகுதியில் கோடை காலத்திற்கு முன்னதாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து விட்டதால் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நீர் முற்றிலும் நின்று போனது. இதன் காரணமாக ஓடைகள், ஆறுகளில் படிப்படியாக நீர்வரத்து சரிந்து வருகிறது. இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் குறைந்து விட்டது.
அத்துடன் பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர் இருப்பும் சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் -பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 69.49 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 14 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 490 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர்
- எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது என்று மோடி பேசியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா நடைபெற்று வருகிறது. அக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
அதில், "இன்று தமிழகம் வந்துள்ள நான் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர். அதனால்தான் அவர் இன்னமும் மக்களால் நினைத்து பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது" என்று மோடி பேசியுள்ளார்.
மேலும், "எம்.ஜி.ஆரை போலவே ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளார். ஜெயலலிதாவுடன் நட்புறவுடன் பழகியவன் என்ற முறையில் நான் கூறுகிறேன். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும். தமிழகத்தில் கடைசி நல்லாட்சியை கொடுத்தவர் ஜெயலலிதாதான். அவருக்கு இந்த இடத்தில் நான் அஞ்சலி செலுத்துகிறேன்" என்று அவர் பேசியுள்ளார்.






