என் மலர்
திருப்பூர்
- திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு 49 சதவீதமாகும்.
- அடுத்த ஆண்டுகளில் இந்த மேல்நோக்கிய வளர்ச்சியை தக்க வைப்போம்.
திருப்பூர்:
இந்தியாவின் ஆயத்த ஆடை வர்த்தகம் தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் முந்தைய ஆண்டை விட வர்த்தகம் உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2024-25-ம் நிதியாண்டு ஏற்றுமதியில் 10 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த நிதியாண்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் கோடியாகும். இதில் திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு 49 சதவீதமாகும்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த சாதனை, பின்னலாடை துறையின் நீடித்த வேகத்தையும், இந்திய நிட்வேர் மற்றும் ஆடைகளுக்கான வலுவான உலகளாவிய தேவையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:-
இந்திய ஆயத்த ஆடையின் சீரான, நிலையான வளர்ச்சி மாதந்தோறும் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தின் மீதான நம்பிக்கை பிரதிபலிப்பதாக இருந்தது. குறிப்பாக ஆயத்த ஆடை வர்த்தகத்தில் இந்த ஆண்டு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 15 முதல் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டும் என்று கடந்த ஜனவரி மாதம் நான் தெரிவித்தேன்.
அதபோல் கடந்த ஆண்டை விட திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. நாம் எதிர்பார்த்தது போல் ரூ.40 ஆயிரம் கோடி என்ற இலக்கை அடைந்து சாதனை படைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. பின்னலாடை ஏற்றுமதியின் வளர்ச்சி என்பது திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும். ஏற்றுமதியாளர்களின் உலகளாவிய போட்டித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அடுத்த ஆண்டுகளில் இந்த மேல்நோக்கிய வளர்ச்சியை தக்க வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-
முந்தைய ஆண்டைவிட, கடந்த நிதியாண்டின் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தபட்சம் 15 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. ரூ.40 ஆயிரம் கோடியை எட்டுவோம் என்று நம்பினோம். அதை நோக்கியே எங்களின் பயணம் இருந்தது. அதன்படி கடந்த நிதியாண்டு வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைத்து தொண்டர்களின் ஒரே நோக்கம் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது தான்.
- உண்மையான செய்திகளை முழுமையாக கொண்டு சென்றால் பிரச்சனை இல்லை.
திருப்பூர்:
அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணி தொடர்பாக திருப்பூரில் 2 கட்சி நிர்வாகிகள் பேசிய பேச்சுகள் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் திருப்பூரில் இன்று அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பா.ஜ.க. திருப்பூர் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் ஒன்றாக இணைந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது சீனிவாசன் கூறுகையில்,
முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசிய வீடியோ முழுமையாக வெளியிடப்படவில்லை என்பதால் தான் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பிடிக்காதவர்களால் திட்டமிட்டு வீடியோ பரப்பப்பட்டுள்ளது. அனைத்து தொண்டர்களின் ஒரே நோக்கம் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது தான்.
இரண்டும் சேர்ந்தால் தி.மு.க., காணாமல் போய்விடும் என்பதால் தான் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டாம் என்று தான் குணசேகரன் தெரிவித்துள்ளார். ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஏராளமான பயன்களை பெற்றவர்கள் இஸ்லாமியர்கள். பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்கள் நாங்கள் அல்ல.
இந்த முறை எங்கள் கூட்டணிக்கு அதிகபட்ச இஸ்லாமியர்கள் வாக்கு கிடைக்கும். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்தி சாதாரண தொண்டரின் உணர்வு போல தான் பேசியுள்ளார். அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இருக்காது. அவர் அ.தி.மு.க., குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசுகையில்,
சமூகவலைதளங்கள் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. உண்மையான செய்திகளை முழுமையாக கொண்டு சென்றால் பிரச்சனை இல்லை. அதனை வெட்டி ஒட்டி போடும் போது தான் சிக்கல் எழுகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்ற கருத்தை தான் நான் ஏற்பேன். கட்சி ஒற்றுமையாக உள்ள இடத்தில் தான் நான் இருப்பேன். எல்லோரையும் தாய் போல் காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.
இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க., பின்னர் பழியை தூக்கி மற்றவர்கள் மேல் போட்டு விடுகின்றனர். எதிரியை வீழ்த்த அமைக்கப்பட்டதே தேர்தல் கூட்டணி. தேசியத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றும் கட்சியை வீழ்த்தவே இந்த கூட்டணி. அடிச்சு ஆடுவோம். இந்த கூட்டணி தமிழகத்தில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்களுக்கான கூட்டணி இது தான்.தி.மு.க., கூட்டணி குடும்பத்திற்கான கூட்டணி. அ.தி.மு.க.-பா.ஜ.க., கூட்டணி ஆட்சியின் போது தான் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது.
- இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும்.
தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் கூறியதாவது:
* பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது.
* இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று அவர் கூறினார்.
கூட்டத்தில் பேசிய திருப்பூர் மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் கூறுகையில், நிர்பந்தம் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும் என்று அவர் நாதழுதழுக்க பேசினார்.
- பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
- வாழை மரங்கள் கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
அவினாசி:
திருப்பூா் மாவட்டம் அவினாசி, சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் செம்பியநல்லூா் ஊராட்சி கந்தம்பா ளையத்தில் கணேஷ், ராஜாமணி, சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் குலை தள்ளிய நிலையில் இருந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தன.
இதேபோல் சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றால் முறியாண்டம்பாளையம், மங்கரசுவலையபாளையம், சாலையப்பாளையம், கானூா், புலிப்பாா் உள்ளி ட்ட பகுதிகளில் அறு வடைக்கு தயாராக இருந்த நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாலி ஆகிய வகைகளை சோ்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
கடந்த 2 நாட்களில் அவிநாசி, சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரி வித்துள்ளனா்.இதையடுத்து சேதமடைந்த வாழை மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
- திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பனியன் நிறுவனங்களில் பணியாற்ற வெளிமாவட்டம் மற்றும் வடமாநில தொழிலாளிகள் ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்புத்தாண்டு கொண்டாட திருப்பூரில் தங்கி வேலை செய்யும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும் இருசக்கர வாகனம், தலைக்கவசம் இல்லாமல் வருபவர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்தனர்.
- விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி உயிரிழந்தனர்.
- 19 வயதுள்ள ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
முருகன் என்பவரை மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி உயிரிழந்தனர்.
ஆம்புலன்ஸை ஓட்டிய கவியரசனுக்கு 2 கால்களும் முறிந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
19 வயதுள்ள ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோடையிலும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க சுவாமி கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பஞ்சலிங்க அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடையிலும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து, அருவியில் குளித்து வருகின்றனர்.
- பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர்.
- மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், கொங்கு மண்டலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்களில் ஒன்றுமாகிய பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுடன் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர், ஈரோடு, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, இங்கு வந்து பக்தி பரவ சத்துடன் குண்டம் இறங்கினர்.

ஓம் சக்தி, ஓம் காளி கோஷம் விண்ணதிர பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர். முன்னதாக நேற்று இரவே லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாநல்லூர் வந்து குவிந்தனர்.
பிற்பகல் 11 மணிக்கு குண்டம் மூடப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளல், மண்டபக்கட்டளை, மிராசுதாரர்களுக்கு மரியாதை செலுத்துதல், தேங்காய் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர்.
நாளை 9-ந்தேதி முதல் காலை , இரவு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் வீதி உலா, மண்டபக்கட்டளை நடக்கிறது. 12-ந்தேதி காலை 11 மணிக்கு மகாதரிசனம் , அம்மன் புறப்பாடு, கொடி இறக்கம், மண்டபக்கட்டளை யுடன் விழா நிறைவடைகிறது.
- கடுமையான சூறைக்காற்று வீசியது.
- கல் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழப்பு.
பல்லடம்:
திருப்பூர் மாநகர் மற்றும் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக செய்த மழையின் போது மங்களம் சாலை, இடுவாய், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான சூறைக்காற்று வீசியது.
இதில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது. மின் கம்பங்களும் சாய்ந்த தால் சின்ன ஆண்டி பாளையம், குளத்துபுதூர், இடுவாய் பல்லடத்தில் பல்வேறு பகுதிகளிலும் மின்சார வினியோகம் தடைப்பட்டது.
இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தவித்தனர். இதனை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றும் பணியிலும் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை காரணமாக 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருப்பூர் அம்மா பாளையம் பாறைக்குழி பகுதியில் உள்ள தகர கொட்டகையில் திருவண்ணாமலையை சேர்ந்த ராஜ் என்பவர் தங்கி இருந்தார்.
மழையின் போது மேற்கூரை தகரம் மற்றும் கல் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. பல்லடம் மங்கலம் ரோடு சிதம்பரனார் வீதியில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பல்லடம் நகரில் மின்தடை ஏற்பட்டது.
பல்லடம் மகாலட்சுமி நகர் அருகே பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.இதே போல காமநாய க்கன்பாளையம் போலீஸ் நிலையம் அருகே தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அங்குள்ள மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
பல்லடம் அருகே பச்சாங்காட்டுபாளையம் பகுதியில் உள்ள சாயத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த மதுரையை சேர்ந்த செல்லையா என்பவரது மகன் வினோத் (40), ரோட்டில் நடந்து செல்லும் போது கீழே கிடந்த மின்சார வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு ள்ளனர்.
- ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
- குண்டம் திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் பெருமாந ல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து க்காளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா, கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (8-ந்தேதி) செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கு கின்றனர். மேலும் நாளை மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது.
குண்டம் இறங்கவும், தேரோட்டத்தில் பங்கேற்கவும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி கூடுதல் எஸ்.பி.,க்கள் 2 பேர் தலைமையில், 3 டி.எஸ்.பி.,க்கள், 11 இன்ஸ்பெக்டர்கள், 32 சப்-இன்ஸ்பெக்டர்கள், 158 போலீசார், 80 ஆயுதப்படை போலீசார், 200 ஊர் காவல் படையினர், 50 டிராபிக் வார்டன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் கோவில் வளாக த்தில் புறக்காவல் நிலையம் மற்றும் 2 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டு உள்ளது.பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
60 இடங்களில் மொபைல் டாய்லெட், 9 இடங்களில் குடிநீர் வசதி, பக்தர்கள் குண்டம் இறங்கு வதை பார்க்க 2 இடங்களில் எல்.இ.டி., திரை, குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு, குண்டம் இறங்கும் பக்தர்கள் குளிக்க 20 ஷவர் கொண்ட அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வாகன போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பெருமால்லூரில் இன்று மதியம் 1 மணி முதல் நாளை இரவு 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கோபியில் இருந்து திருப்பூர் செல்லும் வாகனங்கள் குன்னத்தூர் பாலம் சர்வீஸ் ரோடு வழியாக ஸ்தூபி வரை வந்து, அங்கிருந்து கணக்கம்பாளையம் வாவிபாளையம், பூலுவப்பட்டி வழியாக திருப்பூருக்கு செல்ல வேண்டும்.
சேலம், ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்தூபி பிரிவு அருகே வந்து பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் வலசுபாளையம் பிரிவு சர்வீஸ் ரோடு சென்று தேசிய நெடுஞ்சாலை அடைந்து கோவை செல்ல வேண்டும்.
திருப்பூரில் இருந்து கோபி, ஈரோடு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பூலுவப்பட்டி சிக்னல் வழியாக நெருப்பெரிச்சல், வாவிபாளையம் வழியாக சென்று கணக்கபாளையம் பிரிவு ஸ்தூபி அருகே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு வலசு பாளையம் வழியாக சர்வீஸ் ரோடு சென்று தேசிய நெடுஞ்சாலை அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும் வேண்டும்.
கோவையில் இருந்து ஈரோடு செல்லும் வாகனங்கள் குன்னத்தூர் பாலம் அருகே வந்து பாலத்தின் கீழ் பயணிகளை இறக்கி விட்டு தேசிய நெடுஞ்சாலை அடைந்து செல்ல வேண்டும். மேலும் பயணிகள் வசதிக்காக குண்டம் திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
குண்டம் திருவிழா முடிந்து ஸ்தூபியில் இருந்து திருப்பூர், கோபி, ஈரோடு செல்லும் பக்தர்கள் ஸ்தூபியில் இருந்து பஸ்களில் ஏறி செல்லலாம். இதற்காக ஸ்தூபி பகுதியில் சிறப்பு பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.
இதேபோல் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பக்தர்களின் வசதிக்கேற்பதாகவும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
கோபி, ஈேராடு பகுதியில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை ஸ்தூபி அருகே கணக்கம்பாளையம் ரோடு பகுதியில் நிறுத்த தனியார் இடத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை பெருமாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரிலும், காளியம்மன் கோவில் அருகிலும், காதி கிராப்ட் வளாகத்திலும் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களது குழந்தைகள் அணிந்து வரும் விலையுயர்ந்த ஆபரணங்கள், பொருட்கள் ஆகியவற்றை பெற்றோர் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக அவசர உதவி எண் 100 தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
+2
- பனியன் நிறுவனத்தில் பேப்ரிக், பேக்கிங், ஸ்டிச்சிங் என பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த அய்யம்பாளையத்தில், சுரேஷ், ஸ்ரீதர் ஆகியோருக்கு சொந்தமான பனியன் நிறுவனமானது 35,000 சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பேப்ரிக், பேக்கிங், ஸ்டிச்சிங் என பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று இரவு பணி முடிந்து நிறுவனத்தை மூடி விட்டு சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை பனியன் நிறுவனத்தில் இருந்து புகை வருவதை பார்த்து பனியன் நிறுவன காவலாளி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பனியன் நிறுவனத்தில் பின்னலாடை எந்திரங்கள் மற்றும் துணிகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
திருப்பூர் மாநகர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் கஞ்சம்பாளையம் பிரிவு பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பணி முடிந்து குடோனை பூட்டி விட்டு அண்ணாதுரை மற்றும் ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அதிகாலையில் குடோனுக்குள் இருந்து புகை வெளியேறி உள்ளது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
குடோன் முழுவதும் பனியன் கழிவு துணிகள் இருந்ததால், அனைத்து துணிகளும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிலர் சாலையில் தங்களது விளை பொருட்களை வைத்து விற்பனை செய்தனர்.
- உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர், காட்டூர், காட்டூர் புதூர், உகாயனூர், வடக்கு அவிநாசிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கக்கூடிய விவசாய விளை பொருட்களான தக்காளி, கத்திரிக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பூசணிக்காய், காலி பிளவர் உள்ளிட்டவற்றை விவசாயிகள் தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தை பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
இந்தநிலையில் திருப்பூரில் விடிய விடிய பெய்த கனமழையால் தென்னம்பாளையம் தெற்கு உழவர்சந்தையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களை விற்க முடியாமல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் அதனை எடுத்துச்செல்ல முடியாமல் பூசணிக்காய் ,தக்காளி, கீரைகளை சாலையில் வீசிச்சென்றனர். சிலர் சாலையில் தங்களது விளை பொருட்களை வைத்து விற்பனை செய்தனர்.
தெற்கு உழவர் சந்தையில் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் வழங்கியும் சரியான நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு தேங்கக்கூடிய மழை நீரை வெளியேற்றக்கூடிய வடிகால் வசதியை ஏற்படுத்தாததால் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் மாறி விடுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் தேங்கி கிடந்த மழைநீரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள், விவசாயிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை கப்பல் விடும் போராட்டத்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர்.






