என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி ஊழியர்"

    • கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்குவதற்காக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
    • அனுமதி வழங்க மாநகராட்சி உதவியாளர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சொந்தமாக திருப்பூர் மங்கலம் ரோடு ஜான்ஜோதி கார்டன் பகுதியில் 5½ சென்ட் நிலம் உள்ளது.

    அதில் வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்குவதற்காக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட மாநகராட்சி தொழில்நுட்ப உதவியாளர் நாகலிங்கம் (வயது 35) அனுமதி வழங்க ரூ.6ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    லஞ்சம் கொடுக்க மறுத்த கிருஷ்ணமூர்த்தி இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலைய த்தில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கிருஷ்ண மூர்த்தியிடம் கொடுத்து அனுப்பினர்.

    அவர் திருப்பூர் ராயர்புரம் வாட்டர்டேங்க் கீழ் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த நாகலிங்கத்திடம் பணத்தை கொடுத்தார்.

    அதனை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகலிங்கத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான அவர் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருவது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • திருமலை தனது மனைவி மற்றும் மகனை சரமாரியாக கட்டையால் தாக்கினார்.
    • மனைவி மணலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருவொற்றியூர்:

    மணலியை சேர்ந்தவர் திருமலை (45). சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமலையின் மனைவி அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திருமலை தனது மனைவியிடம் அவரது டெய்லர் கடைக்கு அடிக்கடி வரும் இளம்பெண்களை தனது உல்லாசத்திற்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் இதே போல் கேட்டு திருமலை மனைவியிடம் ரகளைசெய்து அடித்து துன்புறுத்தினார்.

    இதனை வீட்டில் இருந்த அவரது மூத்த மகன் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருமலை தனது மனைவி மற்றும் மகனை சரமாரியாக கட்டையால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.

    இது குறித்து திருமலையின் மனைவி மணலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலையை கைது செய்தனர்.

    • கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து சாலையில் சரிந்து விழுந்தது.
    • கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் திருப்பாதிரிப்புலியூரில் மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மாடி கட்டிடம் சேதமடைந்த காரணத்தினால் பாழடைந்து பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தாமல் பூட்டிய நிலையில் இருந்து வந்தது . இந்நிலையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக இன்று அதிகாலை பாந்து இருந்த கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து சாலையில் சரிந்து விழுந்தது.

    அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் விபத்து, உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இடிந்த சுவரை சுற்றி இரும்பு தடுப்பு கட்டை அமைக்கப்பட்டது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு வந்து இடிந்து விழுந்த கட்டிடஇடிபாடுகளை அங்கிருந்து அகற்றினர். மேலும் கோவில் செயல் அலுவலர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார் . கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×