என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி-சர்ட்"

    • திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் விதவிதமான டி-சர்ட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
    • ஆபரேசன் சிந்தூர் டிசைன்கள் அச்சிடப்பட்ட பனியன்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் விதவிதமான டி-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் விழாக்கள், விளையாட்டுகள், தேர்தல் பிரசாரம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் டி-சர்ட் பனியன்கள் ஆர்டரின் பேரில் லோகா மற்றும் டிசைன்கள் அச்சிட்டு தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

    வழக்கமான உள்ளாடைகளை தயாரிக்கும் திருப்பூர் தொழில்துறையினர், புதிய பாணி நவீன ஆடை ரகங்களை நேரத்திற்கு தகுந்தாற்போல் டிசைன் செய்து சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர்.

    தற்போது பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலையொட்டி இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ திட்டத்தை மையப்படுத்தி, விதவிதமான டி-சர்ட்டுகளை தயாரித்து சந்தைப்படுத்த தொடங்கியுள்ளனர். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இந்த வகை ஆடைகளை வாங்க ஆன்லைன் மற்றும் நேரடி தொடர்பு மூலம் நிறைய ஆர்டர்களை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை பாராட்டியும், அதை வரவேற்றும், அதை போற்றியும் புதிய வகை டிசைன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இளைஞர்களிடையே அமோக வரவேற்பால் ஆபரேசன் சிந்தூர் டிசைன்கள் அச்சிடப்பட்ட பனியன்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தை காட்டிலும் வடமாநிலங்கள், வெளிநாடுகளில் இந்த வகை டி-சர்ட்டுகளுக்கு ஏராளமான ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. ராணுவத்தை போற்றும் வகையில் பல்வேறு நினைவுகளில் இதுவும் ஒன்றுதான். காலத்திற்கேற்ற வகையில் திருப்பூர் பனியன் தொழில் மாறிக்கொண்டே இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக வாஷிங் மெஷின்' என்ற புதிய இயந்திரத்தை பவன் கெரா அறிமுகப்படுத்தினார்
    • புதிதாக ஒரு வாஷிங் பவுடர் தற்போது வந்திருக்கிறது. எல்லா கறையையும் அது நீக்கி விடுகிறது. அதற்குப் பெயர் 'மோடி வாஷிங் பவுடர்

    மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கெரா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் 'பாஜக வாஷிங் மெஷின்' என்ற புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார்.

    அதனுள், 'ஊழல்', 'பாலியல் வன்புணர்வாளர்', 'மோசடி பேர்வழி ' போன்ற வார்த்தைகள் எழுதப்பட்ட 'கறை படிந்த' டி-சர்ட்டை வைத்தார். வாஷிங் மெஷினில் இருந்து டி-சர்ட் வெளியே எடுத்தபோது, 'சுத்தமாக' இருந்தது. அந்த 'சுத்தமான' டி-ஷர்ட்டில் 'பாஜக மோடி வாஷ்' என்று எழுதப்பட்டிருந்தது.

    பின்னர் பேசிய பவன் கெரா, புதிதாக ஒரு வாஷிங் பவுடர் தற்போது வந்திருக்கிறது. எல்லா கறையையும் அது நீக்கி விடுகிறது. அதற்குப் பெயர் 'மோடி வாஷிங் பவுடர்'. அதை பயன்படுத்தும் வாஷிங் மெஷினின் விலை 8,552 கோடி ரூபாய் தான். இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற தொகையாகும்.

    நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாஜகவில் இணைந்தால் அடுத்த கணமே அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படுவார். தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் பாஜகவிடம் உள்ளது. அவரை பாஜக வாஷிங் மெஷினின் உள்ளே வையுங்கள். அவர் வெளியே வரும் போது ராஜ்யசபா எம்பியாக கூட வரலாம்.

    சுத்தப்படுத்துவது மட்டுமின்றி இந்த மெஷின், மோசடி பேர்வழியை தேசப்பற்றாளராகவும் மாற்றுகிறது. வழக்கு விசாரணை வேகத்தை குறைக்கவும் செய்கிறது என்று அவர் தெரிவித்தார். 

    • பொதுமக்களிடம் நிதி திரட்டும் நடவடிக்கைகள் பல இடங்களில் நடக்கிறது.
    • டி-ஷர்ட் அணிந்து நிதி திரட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நல்ல நோக்கத்திற்காக 'கிரவுட் பண்டிங்' முறையில் பொதுமக்களிடம் நிதி திரட்டும் நடவடிக்கைகள் பல இடங்களில் நடக்கிறது.

    இந்நிலையில் டெல்லியில் ஒரு வாலிபர் 'கியூ-ஆர்' குறியீடுடன் கூடிய டி-ஷர்ட் அணிந்து நிதி திரட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    டெல்லியை சேர்ந்த பூஜா சன்வால் என்ற பெண் கன்னோட் ப்ளேஸ் பகுதியில் ரோகித் சலூஜா என்ற வாலிபர் அணிந்திருந்த 'கியூ-ஆர்' டி-ஷர்ட்டை பார்த்தார்.

    அதில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சோனு என்ற முடிதிருத்தும் தொழிலாளியின் செல்போனை யாரோ திருடிவிட்டனர். இது அவரை மிகவும் வருத்தப்படுத்தியது. யாரிடமும் முரட்டுதனமாக பேசாத, அன்பான உள்ளம் கொண்ட அவரது முகத்தில் புன்னகையை வரவழைக்க புதிய போன் வாங்கி கொடுக்க நிதி திரட்டுகிறேன் என கூறப்பட்டிருந்தது.

    பூஜா சன்வாலின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகிய நிலையில், சுமார் 37 பேர் அவருக்கு நிதியுதவி செய்தனர். இந்த பதிவை பார்த்த ஒரு பயனர், முடிதிருத்தும் நபரை கவனித்து கொள்வதற்காக அவரை மதிக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். இதற்கிடையே ஒரு நிறுவனம் அந்த முடி திருத்தும் தொழிலாளிக்கு புதிய போனை வழங்கி உள்ளது.

    ×