என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்ட்டர்.
- போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் திருச்சி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
துரைசாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளது.
துரைசாமி, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த ரவுடியை பிடிக்கச் சென்றபோது சம்பவம் நடந்துள்ளது.
ஏற்கனவே ஒரு முறை ரவுடி துரையை போலீசார் துப்பாக்கியில் சுட்டுப்பிடித்துள்ளனர்.
ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் ஆய்வு செய்துள்ளார்.
- பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாக திகழ்கிறது.
- மனிதனின் உருவ அமைப்புக்கும், பொன்னம்பல நடராஜர் சன்னிதிக்கும் ஒற்றுமை இருக்கிறது.
சிதம்பரம்:
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவையே பஞ்ச பூதங்கள் என அழைக்கப்படுகிறது. உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு பஞ்சபூதங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை இறைவனால் படைக்கப்பட்டது என புராணங்கள் உரைக்கின்றன. இதனாலேயே பஞ்ச பூதங்களை வணங்கும் முறையை நம் முன்னோர் வகுத்தனர்.
திருவாரூர் தியாகராஜர் நிலத்தின் அதிபதியாகவும், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் நீருக்கு அதிபதியாகவும், திருக்காளத்தி காளஹஸ்தீஸ்வரர் காற்றின் அதிபதியாகவும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் நெருப்பின் அதிபதியாகவும், ஆகாயத்தின் அதிபதியாக சிதம்பரம் நடராஜ பெருமானும் உள்ளனர்.
எனவே, பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாக திகழ்கிறது. ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவம் வரை சிவபெருமான் 108 தாண்டவம் ஆடியதாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக இருப்பவை ஐந்து. இவை பஞ்ச தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
பஞ்ச தாண்டவங்கள் ஆடிய திருத்தலங்கள் பஞ்ச சபைகள் என அழைக்கப்படுகிறது. திருவாலங்காடு, மதுரை, திருநெல்வேலி, திருக்குற்றாலம் மற்றும் சிதம்பரம் ஆகியவை அந்த பஞ்ச சபைகளாக திகழ்கின்றன.
நடராஜர் சன்னிதியும், மனித உடலின் அமைப்பும்
மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னிதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.
பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21,600 தங்க ஓடுகள் என்பது மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது.
பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72,000 ஆணிகள் என்பது மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது.
கோவிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களை நினைவுபடுத்துகிறது.
ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆய கலைகள் 64-ன் அடிப்படையில் சாத்துமரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்கள் மற்றும் நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் இங்குள்ள தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு மோசமான செயலாகும்.
- ஒதுக்கீட்டை ரத்துசெய்து விடியா திமுக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறும்படி வலியுறுத்துகிறேன்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு, அரசுப் பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான ஒருசில பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்துள்ளது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு மோசமான செயலாகும்.
மருத்துவர்கள் தங்கள் நேரத்தை மற்றும் உழைப்பை பொதுமக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக அரசு அவர்களது கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இப்படி ஒரு முடிவை எடுப்பதன் மூலம், அரசு மருத்துவர்களின் எதிர்கால கனவுகளைத் தகர்த்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
விடியா திமுக அரசு, மத்திய அரசின் வேலை வாய்ப்பு ஒழிப்பு கொள்கைகளை எதிர்ப்பதாக கூறி மக்களிடம் கபட நாடகம் ஆடுவது இந்த உத்தரவின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்த சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதோ அல்லது மாற்றம் செய்வது ஏற்கத்தக்கதல்ல. இது முழுமையான இரட்டை வேடத்தை காட்டுகிறது.
இது மருத்துவப் பட்டமேற்படிப்புகளை படிக்க விரும்பும் அரசுப் பணியிலுள்ள மருத்துவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே உடனடியாக அரசு பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பிற்கான ஒதுக்கீட்டை ரத்துசெய்து விடியா திமுக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறும்படி வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு.
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் தங்கி இருந்த நிலையில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசையும் தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் சாட்டை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் எதற்காக மாற்றி பேசினார்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் பற்றி பேச நான் தயாராக உள்ளேன்.
- நீங்கள் லண்டனில் முதலீடு செய்த பணம் பற்றிய விஷயத்தை எல்லாம் நான் வெளியே கொண்டு வருகிறேன்.
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகைக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு என்பது நிலவி வருகிறது. இந்நிலையில் அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தினார். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு பற்றி அனைவருக்கும் தெரியும். அதில் குண்டர் சட்டத்தின் கீழ் செல்வப் பெருந்தகையை காவல்துறையினர் கைது செய்ய சென்றபோது அவர் காலை உடைத்துக் கொண்டார். நீங்கள் லண்டனில் முதலீடு செய்த பணம் பற்றிய விஷயத்தை எல்லாம் நான் வெளியே கொண்டு வருகிறேன்.
இதுதான் தமிழகத்தின் தலைவிதி என்றால் அதை கையில் எடுக்க நான் தயாராக இருக்கிறேன். ஒவ்வொருவரிடமும் சண்டை போட்டால் தான் தமிழகத்தில் அரசியல் திருந்தும் என்றால் நான் என்னை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன். ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்தவர் செல்வப் பெருந்தகை. அவர் லண்டனில் என்னவெல்லாம் வாங்கியுள்ளார். அவர் மனைவி மீது என்ன இருக்கிறது. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் எதற்காக மாற்றி பேசினார்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் பற்றி பேச நான் தயாராக உள்ளதாகவும். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறார் என்பது மக்களுக்கு தெரிந்தால் தான் அதை வைத்து அவர்கள் ஓட்டு போடுவார்கள். இது போன்ற நபர்களை நான் படம்பிடித்து காட்டாமல் விடமாட்டேன். மேலும் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுவரை குண்டர் சட்டத்தில் கைதான ஒருவர் மாநில தலைவராக இருந்ததில்லை என்று கூறினார்.
இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை ரவுடி என கூறியதை கண்டித்து செல்வபெருந்தகையின் ஆதரவாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
- கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார்?
- கொலையின் பின்னணியில் யார் இருப்பது?
பெரம்பூரைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5ம் தேதி இரவு ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இதுவரை 11 நபர்களை செம்பியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்தாண்டு ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் யார் யார் பின்னணியில் உள்ளனர்? என்பது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக கொலையாளிகளை காணொலி மூலம் போலீசார் ஆஜர் படுத்தினர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராவ் வழக்கு: 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில் 5 நாள் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கொலை சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர்களை அழைத்து கொலையாளிகளை நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தவும், கொலையாளிகளுக்கு நிதி உதவி, சட்ட உதவி அளித்தது, கொலையின் பின்னணியில் யார் இருப்பது? என்பது குறித்து விசாக்க திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொன்னை பாலுவுக்கும், கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார் என்பது தொடர்பாகவும் விசாரிக்க முடிவு எடுத்துள்ளனர்.
- ஜூலை 12 காலை 10 மணி முதல் ஜூலை 13 மாலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
- கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் பைப்லைனில் பாதிப்பு.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக, 5, 6, 8, 9, மற்றும் 10 ஆகிய மண்டலங்களில் 2024 ஜூலை 12 காலை 10 மணி முதல் ஜூலை 13 மாலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டலம் 5ல் உள்ள புரசைவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ லைன் அமைப்பதற்கான இணைப்பு பணிகளால், கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் பைப்லைனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால், திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல், புரசைவாக்கம், பெரியமேட், சவுகார்பேட்டை, ஜார்ஜ் டவுன், முத்தியால்பேட்டை, வால்டாக்ஸ் சாலை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சேப்பாக்கம், கொண்டித்தோப்பு, ஓட்டேரி ஆகிய இடங்களில் சப்ளை நிறுத்தப்படும்.
மண்டலம் 6ல் அயனாவரம், செம்பியம், பெரம்பூர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், மண்டலம் 8ல் கெல்லிஸ், மண்டலம் 9ல் திருவல்லிக்கேணி, மண்டலம் 10ல் உள்ள தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், பொதுமக்கள் போதிய குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும், அவசர தேவைகளுக்கு நீர் விநியோகம் செய்ய https://cmwssb.tn.gov.in என்ற மெட்ரோ வாட்டர் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு முகவரியை பதிவு செய்து கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு வழக்கம் போல் குடிநீர் தடையின்றி தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழா நடைபெற்றது.
- பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.7.2024) தருமபுரி, பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மகளிர் விடியல் பயணத் திட்டப் பயன்பாட்டிற்காக 20 புதிய நகரப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- “அரூர் பேரூராட்சி”, “நகராட்சியாக” தரம் உயர்த்தப்படும்.
- பஞ்சப்பள்ளி, ராஜ பாளையம் அணைக்கட்டுகள் புனரமைக்கப்படும்.
சென்னை:
தருமபுரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 15 புதிய அறிவிப்புகள்.
1. 51 கோடி ரூபாய் செலவில் அரூர் அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
2. தருமபுரி வெண்ணம் பட்டி சாலையில், புதிய ரெயில் மேம்பாலம் 38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
3. "அரூர் பேரூராட்சி", "நகராட்சியாக" தரம் உயர்த்தப்படும்.
4. பஞ்சப்பள்ளி, ராஜ பாளையம் அணைக்கட்டுகள் புனரமைக்கப்படும்.
5. சிட்லிங், அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, சாமை, வரகு ஆகியவற்றை மதிப்புக் கூட்டுப் பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுச் செயலாக்க மையம் அமைக்கப்படும்.
6. தீர்த்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும்.
7. பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பழுதடைந்த 4 வகுப்பறைகள், புதுப்பிக்கப்படும்.
8. பெரியபட்டி வெள்ளாளப்பட்டி ஊராட்சிகளில், 2.54 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அரூர் ஒன்றியத்தில் சிட்லிங் கிராமம், அம்மாப்பேட்டை, மருதிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 3.82 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.
9. மொரப்பூர் மற்றும் அரூர் பகுதிகளில் 7 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
10. இருமத்தூர் தென் பெண்ணை ஆறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு அருகில் புதியதாக திறந்த வெளி கிணறு அமைத்து, நீரேற்று குழாய் அமைக்கப்படும். மேலும் பேருந்து நிலையம் அருகில், கூடுதலாக 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி, 4.1 கி.மீ நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய் அமைத்து, 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இக்குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படும்.
11. அரூர் ஊராட்சி ஒன்றியம், பறையப்பட்டி புதூர் முதல் பறையப்பட்டி காலனி வரை, கணபதிப்பட்டி தார்சாலை மற்றும் வீரப்பநாயக்கன் பட்டி தார்ச் சாலைப் பணிகள் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், போளையம்பள்ளி முதல் கோபிநாதம்பட்டி செல்லும் தார்ச் சாலை ஆகியவை 60 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் புதுப்பிக்கப்படும்.
12. கெளாப்பறை ஆதிதிராவிடர் காலனி மயானம் செல்லும் சாலையில், வரட்டாறு ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்படும்.
13. சிட்லிங் ஊராட்சி, நாட்டான்வளவு முதல் கம்பாளை சாலைக்கு இடையே, காட்டாற்று ஓடையின் குறுக்கே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படும்.
14. பறையப் பட்டி புதூர் ஊராட்சி ஜி.கே.ரோடு கிராமத்தில் ஒரு புதிய 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், இருமத்தூர் ஊராட்சி, போளையம்பள்ளி ஊராட்சி, மொரப்பூர் ஊராட்சிகளில் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் கட்டப்படும்.
15. பாளையம்புதூர் ஊராட்சியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோம்பை, மூலக்கோம்பை, ராஜீவ்காந்தி நகர் மற்றும் நாயக்கனேரி பகுதிகளில் இணைப்புச் சாலைகளைப் புதுப்பிக்கவும், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேர்ச்சாலை மற்றும் மூலக்கம்பை கிராமச் சாலைகளை சிமெண்ட் சாலைகளாக மாற்றவும்; தொம்பரகாம்பட்டி மேற்கு வன்னியர்தெருவில்
10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளைக்கிணறு மற்றும் மின்மோட்டார் ஆகியவை அமைக்கவும் ஆக மொத்தம் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்குறிப்பிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
- மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
- மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம்.
தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் ஊராட்சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை நான் நேரடியாக சந்தித்தேன். அந்த நிகழ்ச்சிக்கு 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்று பெயர் வைத்தோம். கொளத்தூர் மட்டுமல்ல, அதாவது என்னுடைய தொகுதி கொளத்தூர் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள் தான் என்ற எண்ணத்துடன் அந்த பயணத்தை தொடங்கினேன். மேடையில் எனக்கு அருகில் ஒரு பெரிய பெட்டி வைத்து, அதில், பொதுமக்கள் தங்களுடைய தொகுதிக்கான தேவைகளை, கோரிக்கைகளை எழுதி போட வைத்தோம்.
ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் அதில் சாத்தியமாக இருக்கக்கூடிய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி காட்டுவேன் என்று சொன்னேன்.
ஆட்சிக்கு வந்ததும், உங்களுடைய மனுக்களை கவனிப்பதற்காகவே புதியதாக ஒரு துறையை உருவாக்கினேன். அந்த துறையின் பெயர் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்னிடம் கொடுக்கப்பட்ட மனுக்களை துறைவாரியாக பிரித்தோம். அதிலிருந்து, நடைமுறை சாத்தியம் உள்ள 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டோம். மக்கள் வைத்த கோரிக்கைகளில் சாத்தியம் உள்ள அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தலுக்கு முன்னால் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டவுடன், எங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று நாங்கள் நினைக்கவில்லை. இனிமேல்தான், கடமை தொடங்குகிறது என்று நினைத்து, உழைப்பைக் கொடுத்தோம். அதனால்தான், தொடர்ந்து மனுக்களை பெற்றோம். அதை முறைப்படுத்தினோம். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, "முதல்வரின் முகவரி" என்று புதியதாக ஒரு துறையை உருவாக்கினோம்.
மக்களால் தரப்படும் எல்லா மனுக்களையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்தோம். அனைத்து மக்களின் கோரிக்கைகளும் தலைமைச் செயலகத்திற்கு வந்துவிடுகிறது.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், முதல்வரின் முகவரி துறையின்கீழ் தற்போது வரைக்கும் பெறப்பட்ட, 68 லட்சத்து 30 ஆயிரத்து 281 மனுக்களில் 66 லட்சத்து 25 ஆயிரத்து 304 மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு கண்டிருக்கிறோம். அதிலும், இந்த தருமபுரி மாவட்டத்தில் மட்டும், 72 ஆயிரத்து 438 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் உருவானதுதான் இந்த மக்களுடன் முதல்வர் திட்டம்.
முதற்கட்டமாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியிருக்கும் கிராம ஊராட்சிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள் வாயிலாகப் பெறப்பட்ட சுமார் 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்களுக்கு இதுவரைக்கும் தீர்வு கண்டிருக்கிறோம். இந்த தருமபுரி மாவட்டத்தில் நகரப் பகுதிகளில், 3 ஆயிரத்து 107 மனுக்கள் பெறப்பட்டு, 30 நாட்களில் 1,868 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
எடுத்துக்காட்டாக, உங்களிடம் ஒன்றிரண்டு கடிதத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூரணி என்பவர், தன்னுடைய வீட்டு வாசல் முன்பு கழிவுநீர் தேங்குவது தொடர்பாக எழுதியிருந்த மனுவுக்கு, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் தீர்வு கண்டோம். அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதத்தில், என்ன சொல்லியிருந்தார்கள் என்றால், இதய நோயாளியான அவர்களுக்கு தேவையான மருந்துகள், அரசு மருத்துவமனையிலேயே கிடைத்து விடுவதாகவும், ஆனால், ஒரே ஒரு மாத்திரையை மட்டும் வெளியே வாங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் சொல்லியிருந்தார். அந்த மாத்திரையின் விலை, ஒரு அட்டை 215 ரூபாய். ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரை என்று, ஒரு மாதத்திற்கு 60 மாத்திரை சாப்பிடவேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் இதற்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும், கடந்த எட்டு மாதமாக, இந்தத் தொகையில்தான் மருந்து வாங்குவதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் சொல்லியிருந்தார்.
அடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீனி வேதமுத்து என்பவர் எழுதிய கடிதத்தில், கடந்த இருபது ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் இருந்த கைலாசபுரம் செட்டியூரனி சாலையை சீரமைத்து கொடுத்ததற்கு நன்றி சொல்லியிருந்தார்.
பொதுமக்களின் தனிப்பட்ட கோரிக்கைகளையும் கேட்டு, செயல்படுத்தி கொடுப்பது மூலமாக, எல்லோரும் மனநிறைவு அடையும் ஆட்சியாக நம்முடைய கழக அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும், ஏதாவது ஒரு பயன்கிடைக்க அதில் அவர்கள் பயனடைந்து கொண்டு வருகிறார்கள். அதேபோன்று 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூலமாக 'யாருக்கும் எந்தக் குறையும் இல்லை' என்ற நிலையை உருவாக்க நாங்கள் இப்போது பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
இப்படி மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், அவதூறுகள் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள். வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம். ஆனால், இதே பெருந்தன்மையை மற்றவர்களிடம் பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரெயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை. நல்ல குணமில்லை. பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை. தங்களின் பத்து வருட காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை.
ஒன்றிய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
தி.மு.க.வைப் பொருத்தவரைக்கும் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம். இதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ரகசியம். மக்களுக்கு உண்மையாக இருந்து, உண்மையான வளர்ச்சியை உருவாக்குவோம். இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை உன்னதமான சிறந்த மாநிலமாக உருவாக்கிக் காட்டுவோம்,
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- கடையில் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், அதன் மூலப்பொருட்கள் என கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் உள்ளன.
- தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களில் பரவியது.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையம் அருகே சத்தி ரோட்டில் பரணி பைப்ஸ் அண்ட் ட்யூப்ஸ் மொத்த விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமையாளர் ராவணன். கடையின் பின்பகுதியில் பெரிய அளவில் குடோன்கள் செயல்பட்டு வருகிறது. கடையில் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், அதன் மூலப்பொருட்கள் என கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் உள்ளன.
இன்று காலை வழக்கம் போல் கடையில் ஊழியர்கள், வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். காலை 11 மணியளவில் கடையின் ஒரு இடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப ட்டது. இதை அணைக்கும் முயற்சியில் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். அதற்குள் தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களில் பரவியது.
இதனால் கரும்புகை விண்ணை தொடும் அளவில் வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் அடுத்தடுத்த இடங்களுக்கு பரவியதால் கூடுதலாக ஈரோடு, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி என 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இந்த தீ அடுத்தடுத்த கடைகளுக்கும், குடோன்களுக்கும் பரவி வருவதால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கரும்புகை தொடர்ந்து வெளியேறி வருவதால் அக்கம்பக்கத்தில் உள்ள கடைகள் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி நின்று கொண்டனர்.
அதேபோல் அருகில் தனியார் பெண்கள் மருத்துவமனை மற்றும் குழந்தைகள் கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது. அங்கும் கரும்புகை பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அருகில் கடையில் உள்ளவர்கள் அவசர அவசரமாக தங்களது பொருட்களை வெளியேற்றி வருகின்றனர். மேலும் கரும்புகை 2 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு பரவியதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டது அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் கடையில் இருந்த 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த விபரம் உடனடியாக தெரியவில்லை.
தொடர்ந்து தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். ஆனால் காற்றின் வேகம் காரணமாக கரும்புகை அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கும் பரவியது. 6 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. எனினும் தண்ணீர் தேவையான அளவு இல்லை. இதை தொடர்ந்து மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீயணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதால் ஈரோடு-சத்தி ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அதனை சீர்படுத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
- நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
- சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார்.
சென்னை:
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேவர், நாடார், கோனார், தேவேந்திரர் மீது வருணுக்கு பிறப்பு வெறுப்பு. அதனால் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறார்.
* ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது.
* சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார் என்று அவர் கூறினார்.






