search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case file"

    • காசி மீது 3 கொலை, கொள்ளை, வழிப்பறி கட்டப்பஞ்சாயத்து என 14 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து காசியை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் வேலூர் சிறையில் அடைத்தனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா போலீசார் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் நேற்று ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது ஆலங்குப்பம் பகுதியில் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது. காரை நிறுத்தும்படி போலீசார் கையசைத்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சினிமா பாணியில் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

    காரில் சோதனை செய்தபோது அதில் வீச்சருவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. காரில் இருந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் நாமக்கல் பகுதியில் சேர்ந்த காசி (வயது 33) என தெரிய வந்தது. இவர் மீது நாமக்கல் டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களில் 3 கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என 14 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    காசியை கைது செய்த போலீசார் இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் காசியை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆம்பூர் அடுத்த பெரிய குப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மூலம் ராஜா என்பவரின் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். வெங்கடேசன் சகோதரி உணவு சமைத்து கொடுத்து வந்துள்ளார்.

    அடிக்கடி நாமக்கல் செல்லும் காசி அங்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு பெரியாங்குப்பத்தில் தங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காசியை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் வேலூர் சிறையில் அடைத்தனர்.

    பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படை தலைவன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • மோதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்தவர் பிரபாகர்(39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே என்.ஜி.ஓ. காலனியில் உள்ள விளையாட்டு திடலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதனை காண பிரபாகர் சென்று இருந்தார். அப்போது ஏற்கனவே முன்விரோதத்தில் இருந்த கும்பல் திடீரென பிரபாகரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர் கும்பல் பிரபாகரனை சுற்றி வளைத்து கை, முகம், கழுத்து, தொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பிரபாகரன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இதனை கண்டு பொங்கல் விழாவை காண வந்திருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அதேபகுதியை சேர்ந்த 4 பேரை தேடிவருகிறார்கள்.

    அருப்புக்கோட்டையில் விசைத்தறி கூடம் அமைக்க அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் நகராட்சி அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை என்ஜினீயராக பணியாற்றியவர் அல்போன்ஸ். இவர் நகராட்சி கமிஷனராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இதே காலக்கட்டத்தில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றியவர் வேல் முருகன்.

    அருப்புக்கோட்டையை சேர்ந்த சங்கரன் என்பவர் தனது விசைத்தறி கூடத்தை விஸ்தரிப்பு செய்வதற்காக நகராட்சி கமிஷனர் பொறுப்பு வகித்த அல்போன்சை அணுகினார். சங்கரனின் சகோதரர் மணிவண்ணன் என்பவரும் சங்கரனுடன் சென்று இருந்தார். இவர்கள் விசைத்தறி கூட விஸ்தரிப்புக்கான விண்ணப்பம் தராத நிலையிலும், அல்போன்சும், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகனும் விதிமுறைகளை மீறி முறைகேடாக சங்கரனுக்கும், மணிவண்ணனுக்கும் விசைத்தறி கூடத்துக்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முறைகேடாக அனுமதி வழங்கியது தெரியவந்தது. அதன் பேரில் இது குறித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினர். உயர் அதிகாரிகள் அனுமதி அளித்ததன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அல்போன்ஸ், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் சங்கரன், மணிவண்ணன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். 
    ×