search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sattai Duraimurugan"

    • யூடியூபில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்க தொடங்கினால்,
    • தேர்தலுக்கு முன்னதாக எத்தனை பேர் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?

    தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்த நிலையில், சாட்டை துரைமுருகன் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபாய் எஸ் ஒஹா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின்போது நீதிபதிகள் "யூடியூபில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்க தொடங்கினால், தேர்தலுக்கு முன்னதாக எத்தனை பேர் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?. அவருக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை அவர் தவறாக பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

    அவதூறாக பேசமாட்டேன் என அவருக்கு நிபந்தனை விதிக்க முடியாது. ஒரு அறிக்கை அவதூறா? அல்லது அவதூறு இல்லையா? என்பது எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது? என நீதிபதிகள் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழங்கறிஞர் முகுல் ரோஹத்கி நோக்கி கேள்வி எழுப்பினர்.

    • நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
    • எந்தவித ஆதாரமும் இல்லாத தவறான கருத்துக்களை முன்வைத்து கமல்ஹாசனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

    கோவை:

    நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், நடிகர் கமல்ஹாசன் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்புவதாக கூறி கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு நகர செயலாளர் தாஜூதீன் தலைமையில் அந்த கட்சியினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவர் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் பற்றியும், நடிகர் கமல்ஹாசன் பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவலை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    அதில் கமல்ஹாசன் கன்னடர். கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற ஊர் தான் அவரின் பூர்வீகம் என்று பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாத தவறான கருத்துக்களை முன்வைத்து கமல்ஹாசனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். எனவே யூடியூப் சேனலில் இருந்து அதனை அகற்றி சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • பிரபல யுடியூப்பரான சாட்டை துரைமுருகன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது யுடியூப்பில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
    • வீடியோவில் குறிஞ்சாகுளத்தில் நிலவும் மோதலில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாகுளம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு கோவிலில் சிலை வைத்தது மற்றும் இடப்பிரச்சினை தொடர்பாக இரு சமுதாயத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் பிரபல யுடியூப்பரான சாட்டை துரைமுருகன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது யுடியூப்பில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் குறிஞ்சாகுளத்தில் நிலவும் மோதலில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

    இது தொடர்பாக திருவேங்கடம் கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்டதாக திருவேங்கடம் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×