search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் விளையாட்டு விழாவில் வாலிபர் மீது தாக்குதல்- 4 பேர் தப்பி ஓட்டம்
    X

    பொங்கல் விளையாட்டு விழாவில் வாலிபர் மீது தாக்குதல்- 4 பேர் தப்பி ஓட்டம்

    • உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • மோதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்தவர் பிரபாகர்(39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே என்.ஜி.ஓ. காலனியில் உள்ள விளையாட்டு திடலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதனை காண பிரபாகர் சென்று இருந்தார். அப்போது ஏற்கனவே முன்விரோதத்தில் இருந்த கும்பல் திடீரென பிரபாகரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர் கும்பல் பிரபாகரனை சுற்றி வளைத்து கை, முகம், கழுத்து, தொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பிரபாகரன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இதனை கண்டு பொங்கல் விழாவை காண வந்திருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அதேபகுதியை சேர்ந்த 4 பேரை தேடிவருகிறார்கள்.

    Next Story
    ×