என் மலர்tooltip icon

    கேரளா

    • அனைத்து கட்சிகளுடன் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு கேரளம் என அரசியலமைப்பில் மாற்ற பினராயி விஜயன் வேண்டுகோள்.

    தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் "கேரளா" என்று அழைக்கப்பட்டு வருகிறது. இனிமேல் கேரளா மாநிலம் "கேரளம்" என்று அழைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். அத்துடன் அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல பெஞ்ச்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஒருமனதாக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது தொழில்நுட்ப காரணத்திற்கான தடைப்பட்டது. அதனால் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டது.

    "மொழி அடிப்படையில் கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி மாநிலங்கள் உருவாகின. அதனடிப்படையில் கேரளா மாநிலம் பிறந்த தினம் நவம்பர் 1-ந்தேதியாகும். தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகங்களுக்கு ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது. ஆனால் அரசியல் சட்டத்தின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது.

    இதனால் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3-ன் கீழ் மாநிலத்தின் பெயரை கேரளம் எனத் திருத்த செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் அனைத்து மொழிகளிலும் கேரளம் என மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • நவீன மலையாள இலக்கியத்தின் முன்னோடிகள் பலரின் வதிவிடமாக கோழிக்கொடு இருந்து வந்தது.
    • உத்தரப் பிரதேசதில் உள்ள குவாலியர், இசைகளின் நகரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு நகரம் இந்தியாவிலேயே முதல் முறையாக இலக்கியங்களின் நகரம் என்ற UNESCO அந்தஸ்த்தைப் பெற்று அசத்தியுள்ளது. கடந்த வருடமே இதற்க்கான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது கோழிக்கோட்டை இலக்கியங்களின் நகரமாக யுனெஸ்கோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தெற்கு மலபார் பகுதியில் உள்ள கோழிக்கோடு நகரம் வெளிநாட்டவர் இந்தியாவுக்குள் வருவதற்கான நுழைவாயிலாக இருந்து வந்தது. ஐரோப்பியர்கள், பாரசீகர்கள், சீனர்கள், அரேபியர்கள் ஆகோயோருக்கு நூற்றாண்டு காலங்களுக்கு முன்பிருந்து கோழிக்கோடு இந்தியாவுக்குகான நுழைவாயிலாக திகழ்கிறது.

     

     

    இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து வந்த காலம் தொட்டு கோழிக்கோடு மலையாள இலக்கியகர்த்தாக்கள் புழங்கும் நகரமாக இருந்து வருகிறது. பல்வேறு புத்தக திருவிழாக்கள் அன்றுதொட்டு இன்றுவரை தொடர்ச்சியாக கோழிக்கோட்டில் நடத்தப்பட்டு வருகிறது. நவீன மலையாள இலக்கியத்தின் முன்னோடிகளான வைக்கம் முகமது பஷீர், எஸ்.கே. பொட்டேகாட் உள்ளிட்ட பலரின் வதிவிடமாக கோழிக்கொடு இருந்து வந்தது.

     

     

    சுமார் 500 நூலகங்களைக் கோழிக்கோடு தன்னகத்தே கொண்டுள்ளது. எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர் கோழிக்கோட்டில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து நடத்தினார். பல தசாப்தங்களாக கோழிகோட்டில் நடந்து வரும் புத்தக திருவிழாக்கள் அந்நகரை இலக்கிய வளம் நிறைந்ததாக மாற்றியுள்ளது என்றே கூற வேண்டும். இந்த நிலையில்தான் கோழிக்கோடு இலக்கியங்களின் நகரமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

     

    இதைத்தொடர்ந்து கோழிக்கோட்டில் ஜூன் 23 இலக்கிய நகரத்தின் நாள் வருடந்தோறும் கொண்டாடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதவிர்த்து நாட்டுப்புற கலைகள், அலங்காரம், சினிமா, ஊடக கலை, இசை உள்ளிட்ட பிரிவுகளில் உலகம் முழுவதும் உள்ள 350 நகரங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசதில் உள்ள குவாலியர், இசைகளின் நகரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வருடமே இந்த 350 நகரங்களின் பட்டியல் வெளியான நிலையில் தற்போது அந்நகரங்களின் பிரதிநிதிகள் வரும் ஜூலை 1-5 வரை  யுனெஸ்கோ சார்பில் போர்ச்சுகளில்  நடக்க உள்ள கருதத்தரங்களில் கலந்து கொள்ள உள்ளனர். UNESCO என்பது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஆகும். 

    • கனமழை வருகிற 26-ந்தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. சில மாவட்டங்களில் மட்டும் பலத்த மழை பெய்தது.

    இந்நிலையில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவாக புயல் வலுப்பெற்றதன் காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

    இந்த கனமழை வருகிற 26-ந்தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கட்டிருக்கிறது.

    கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்கக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 204 மில்லிமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் கேரளாவுக்கு வந்துள்ளது. அந்த குழுக்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தயார் நிலையில் இருக்கிறது.

    அது மட்டுமின்றி கடலில் அதிக அலைகள் எழ வாய்ப்பு இருப்பதால் கடலோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கு மாறும், மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டதில் பீட்டா இந்தியா இந்தியா அமைப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது.
    • உயிருள்ள யானைகளை சொந்தமாகவோ வாடகைக்கோ எடுத்து கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது.

    விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்ற அடிப்படையில் பீட்டா இந்தியா அமைப்பு இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டதில் பீட்டா இந்தியா இந்தியா அமைப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது.

    இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமிகா கோவிலுக்கு பெரிய அளவிலான மெக்கானிக்கல் யானை ஒன்றை பீட்டா இந்தியா அமைப்பு பரிசாக அளித்துள்ளது.

    இந்த மெக்கானிக்கல் யானைக்கு பாலதாசன் என்று பீட்டா இந்தியா அமைப்பு பெயர் வைத்துள்ளது. கோவில் திருவிழாக்களில் யானைக்கு பதில் இந்த மெக்கானிக்கல் யானையை பயன்படுத்தலாம் என்பதற்காக தான் இந்த பீட்டா இந்தியா அமைப்பு இதை பரிசாக அளித்துள்ளது.

    உயிருள்ள யானைகளை சொந்தமாகவோ வாடகைக்கோ எடுத்து கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக இந்த முயற்சியில் பீட்டா இந்திய அமைப்பு இறங்கியுள்ளது.

    இது கேரளாவில் அறிமுகப்படுத்தப்படும் மூன்றாவது மெக்கானிக்கல் யானையாகும். இந்த யானை 3 மீட்டர் உயரமும் 800 கிலோ எடையும் கொண்டது.

    திருச்சூரில் உள்ள இரிஞ்சாடப்பிள்ளை ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் மற்றும் கொச்சியில் உள்ள திருக்கயில் மகாதேவா கோயிலிலும் ஏற்கனவே மெக்கானிக்கல் யானைகளை பீட்டா இந்தியா அமைப்பு பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நாளை(23-ந்தேதி) மக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் கேரளாவுக்கு வந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த கனமழை வருகிற 25-ந்தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நாளை(23-ந்தேதி) மக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அந்த 3 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அந்த மாவட்டங்களில் 204 மில்லிமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் கேரளாவுக்கு வந்துள்ளது. அந்த குழுக்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளபாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க முகாம்களை தயார்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அது மட்டுமின்றி அனைத்து துறை அதிகாரிகளும், மீட்பு படை குழுவினரும் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    • புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பு.
    • இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒருசில மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

    இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதில் குறிப்பாக மாநிலத்தில் இன்றும் நாளையும் கனமழையும், 23-ந்தேதி மிக கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது. வானிலை மையம் தெரிவித்தபடியே கடந்த சில நாட்களாக கேளாவில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

    மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது. மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களுடன் மொத்தம் 9 குழுக்கள் கேரளா வந்திருக்கின்றன.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் 4-வது பட்டாலியன் கமாண்டன்ட் தெரிவித்திருக்கிறார்.

    மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்வ

    தற்காக தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் கேரளாவில் அவசர கால செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டி ருக்கிறது. அந்த அறை அரக்கோணத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.
    • வெற்றி படங்களின் தயாரிப்பு செலவுகளை ஆய்வு செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை.

    திருவனந்தபுரம்:

    சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மலையாள திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் விழுந்த வாலிபரை நண்பர்கள் சேர்ந்து காப்பாற்றும் கதையை கொண்ட அந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    கேரள மாநிலம் மட்டு மின்றி தமிழகத்திலும் பல திரையரங்குகளில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதன் காரணமாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.220 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இந்நிலையில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது. அதனடிப்படையில் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாகி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    மேலும் பண மோசடிக்காக டிக்கெட் வசூல் எண்ணிக்கையை உயர்த்தியிருப்பதாகவும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்பட குழுவினர் மீது புகார் எழுந்திருக்கிறது. இதேபோன்று மேலும் சில திரைப்படங்களை எடுத்தவர்களும் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அமலாக்கத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆகவே கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவில் எடுக்கப்பட்ட அனைத்து வெற்றி படங்களின் தயாரிப்பு செலவுகளை ஆய்வு செய்ய அமலாக்கத் துறை தயாராகி வருகிறது. 2024-ம் ஆண்டில் கடந்த 5 மாதங்களில் மலையாள திரையுலகம் ரூ720 கோடி வசூல் செய்திருக்கிறது. அதிலும் 'மஞ்சுமெல் பாய்ஸ்', 'ஆடுஜீவிதம்', 'ஆவேசம்', 'பிரேமலு' ஆகிய 4 மலையாள திரைப்படங்களின் வசூல் ரூ100 கோடியை தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மோசடி புகார் கூறப்பட்டுள்ள 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளை முடக்க அமலாக்கத் துறை இயக்குனரகம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    • மீனவர்கள் தங்களின் மீன்பிடி படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒருசில மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

    இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் வருகிற 23-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

    மேலும் கனமழை பெய்யும் மாவட்டங்களின் விவரத்தையும் தெரிவித்து ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது. வானிலை மையம் தெரிவித்தபடியே கடந்த 2 தினங்களாக கேரளாவில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கு மேலும் சில மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் வருகிற 23-ந்தேதி கேரளாவில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் இன்று முதல் நாளை மறுநாள்(22-ந்தேதி) வரை கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடல்சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதையும், கடலில் இறங்குவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் மீனவர்கள் தங்களின் மீன்பிடி படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் உஷார் நிலையில் உள்ளனர்.

    • பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
    • பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார். இதனால் இரண்டில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடக்கில் காங்கிரசை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தால் வயநாடு தொகுதியை தனது தங்கை பிரியங்கா காந்திக்கு விட்டுக்கொடுக்க முடிவெடுத்துள்ளார் ராகுல்.

    நேற்று அவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த 6 மாதத்துக்குள் வயநாட்டில் மறு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் முதல் முறையாக பிரியங்கா காந்தி வேட்பாளராக களம் இறங்க உள்ளார். இதுநாள்வரை உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த பிரியங்கா காந்தி பொதுக்கூட்டங்களில் நாட்டின் பிரச்சனைகள் குறித்து தனது துணிகரமான பேச்சுகளால் பாஜகவின் செய்லகளை சரமாரியாக கேள்வி எழுப்புபவராக அறியப்படுகிறார்.

    மக்களவைத் தேர்தலில் அவரின் சூறாவளிப் பிரச்சாரம் உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவானந்தபுர எம்.பியுமான சசி தரூர் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரவேசம் குறித்து மனம் திறந்துள்ளார்.

     

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராகுல் காந்தி ரேபரேலியை தேர்வுசெய்தது காங்கிரசுக்கு அவசியமான நகர்வு. அவர் அதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றே நான் ஆரம்பத்தில் இருந்து விரும்பினேன். அதேசமயம் பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அங்கு நின்ற காங்கிரஸ் வேட்பாளரை விட மோடி குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறார்.

    தற்போது பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாராளுமன்றத்தில் ஒரு சக்தி வாய்ந்த குரலாக பிரியங்கா காந்தி இருப்பார். அவர் தேர்தல் பிரச்சரத்தின்போது எப்படி செயல்பட்டார் என்று நாம் அனைவரும் பார்த்திருப்போம். பிரியங்கா ஒரு சிறந்த பேச்சாளர். பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், இது குடும்ப அரசியல் என்று கூறி வரும் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள 15 எம்.பிக்கள் அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்த்தவர்கள் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

    • பதவிக்காலம் வருகிற ஜூலை 1-ந்தேதியுடன் முடிவடைகிறது.
    • தமிழ்நாட்டை சேர்ந்த பத்தராஜனும் மனு சமர்ப்பித்திருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 3 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை 1-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்த பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டியிருந்தது. அது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. மேலும் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அந்த பதவிகளுக்கு கேரள காங்கிரஸ்(எம்) கட்சி ஜோஸ் கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சுனீர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஹரிஸ் பீரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த பத்தராஜனும் மனு சமர்ப்பித்திருந்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் ஜோஸ் கே.மணி, சுனீர், ஹரிஸ் பீரன் ஆகிய 3 பேரும் ராஜ்யசபா உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வானார்கள்.

    • 22-ந்தேதி காசர்கோடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    • கேரள கடற்கரைகளில் கள்ளக்கடல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்தமாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் சுழற்சியின் காரணமாக கேரளாவில் வருகிற 22-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அங்கு 21 மற்றும் 22-ந்தேதிகளில் கேரள மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நேற்று எர்ணாகுளம், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திருவனந்தபுரம், கொல்லம் ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

    நாளை(20-ந்தேதி) கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள்(21-ந்தேதி) இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும், 22-ந்தேதி காசர்கோடு மாவட்டத்துக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 22-ந்தேதி ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கேரள கடற்கரைகளில் கள்ளக்கடல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • உயிரிழந்த இளம்பெண் பினாயுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்தபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.
    • பெண்ணை கடுமையாக டிரோல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக தெரிகிறது.

    கேரளாவில் தனது காதல் பிரேக் அப்பை நெட்டிசன்கள் கிண்டல் செய்ததால் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மைனர் பெண் இன்ஸ்டாகிராம் இன்புலுயென்சர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வந்த ஆதித்யா நாயர் என்ற அந்த இளம்பெண் கடந்த வாரம் ஜூன் 10 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக  ஆதித்யாவை காதலித்து ஏமாற்றிய 21 வயதாகும் பினாய் என்ற மற்றொரு இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டர் போக்சோ சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டார். உயிரிழந்த  ஆதித்யா, பினாயுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்துபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.

     

    ரீல்ஸ் செய்வதில் அதிக கவனம் செலுத்தியதால் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதித்யா 2 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். இதற்கிடையில் திடீரென இவர்களின் காதல் பிரேக் அப்பில் முடித்த நிலையில் பினாயின் இன்ஸ்ட்டாகிராம் ஃபாலோவர்கள் இணையத்தில் ஆதித்யாவை கடுமையாக டிரோல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக தெரிகிறது.

     

    இந்நிலையில் மைனரான தனது பெண்ணை பினாய் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி மயக்கி ஏமாற்றியதாகபெண்ணின் தாய் தெரிவித்துள்ளார். மேலும் பினாய் மற்றும் உயிரிழந்த ஆதித்யாவின் மொபைல் போன்களை ஆராய்ந்ததன் மூலம் பினாய்க்கு எதிரான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

    ×