என் மலர்tooltip icon

    கேரளா

    • ‘கூகுள் மேப்’ என்பது புவியியல் தகவல் தொழில்நுட்ப மென்பொருள்.
    • கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    'கூகுள் மேப்' என்பது புவியியல் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஆகும். ஒரு இடத்தில் இருந்து வெறோரு இடத்திற்கு வாகனங்களில் பயணிப்பவர்கள், சரியான இடத்திற்கு செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை.

    செல்லவேண்டிய இடத்திற்கு செல்லும் சாலை உள்ளிட்ட அனைத்தையும் 'கூகுள் மேப்' காண்பித்துவிடுவதால், தெரியாத இடத்திற்கு கூட எளிதாக சென்று விட முடிகிறது.

    இருந்தபோதிலும் சில நேரங்களில் 'கூகுள் மேப்' தவறான வழியை காண்பித்து விடுவதால் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ரஷீத்(வயது35), தஷ்ரீப்(36).

    சம்பவத்தன்று இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் உப்பினங்கியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்றனர். அவர்கள் 'கூகுள் மேப்' உதவியுடன், அது காட்டிய வழியை பின்பற்றி காரில் சென்றனர்.

    குட்டிகோல் பல்லாஞ்சி ஆற்றின் பாலம் வழியாக அவர்கள் சென்றனர். அப்போது அவர்களது கார் ஆற்றுள்குள் பாய்ந்தது.

    'கூகுள் மேப்' புதிதாக கட்டப்பட்டிருந்த பாலத்தை காட்டாமல், பழைய பாலத்தை காட்டியிருக்கிறது. அதனை பின்பற்றி அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகியோர் காரில் சென்றனர்.

    அவர்கள் சென்ற பழைய பாலத்தில் தடுப்புகள் இல்லாதது இருட்டில் தெரியவில்லை. இதனால் அவர்களது கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. அவர்களுடைய கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    சிறிது தூரத்தில் ஆற்றுக்குள் இருந்த செடிகளில் அவர்களது கார் சிக்கி நின்றது. இதையடுத்து அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகி இருவரும் காரின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக வெளியே வந்தனர்.

    தங்களது கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது குறித்து தங்களின் உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ளத்தில் சிக்கியிருந்த அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகிய இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

    மேலும் அவர்களது காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார், ஆற்றின் நடுவே இருந்த செடியில் சிக்கி நின்றதால் அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
    • கேரள பேருந்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் கேரளாவுக்கு வரும் தமிழக பேருந்துகளை சிறைபிடிப்போம்.

    தமிழகத்தில் கடந்த 14-ந்தேதி முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை இயங்க போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.

    இந்நிலையில் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகளுக்கான வரியை உயர்த்தியதற்காக தமிழகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நேற்று கேரள சட்டசபையில் பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கான மானியங்கள் மற்றும் வாகனங்கள் வரி மீதான விவாதத்தை நிறைவு செய்த அமைச்சர், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்து கூட பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், கேரள பேருந்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் கேரளாவுக்கு வரும் தமிழக பேருந்துகளை சிறைபிடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
    • கடலும் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி ஆர்ப்பரித்தன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, திருச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

    கோழிக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்றும் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கடலும் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி ஆர்ப்பரித்தன.

    கடல்நீரால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு கப்பாடு, கொயிலாண்டி கடல் எல்லை சாலைகள் தகர்ந்தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. துவப்பரா பகுதியிலும் சாலை கடல்நீரில் அடித்துச் செல்லப்பட்டது. கோட்டயம் நகரின் மேற்கு பகுதியில் பாமரச்சால், திருவார்ப்பு, குமரகம் பகுதிகளில் பல இடங்களிலும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

    இடுக்கி பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை.
    • மலையோர பகுதிகளில் இரவுநேர பயணத்துக்கு தடை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    இதனால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக தினமும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்களும் தயாராக வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தநிலையில் கேரள மாநிலம் முழுவதும் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மட்டு மின்றி பல இடங்களில் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை காரணமாக பல மாவட்டங்ளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

    கோழிக்கோடு மாவட் டத்தில் பல இடங்களல் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆலப்புழா மற்றும் கண்ணூரில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையோர பகுதிகளில் இரவுநேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கோட்டயம் மாவட்டத்தில் சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மாநிலம் முழுவதும் கனமழை நீடித்து வரும் நிலையில் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கேட்டயம், எர்ணா குளம்ஆகிய மாவட்டங்களிலும், கண்ணூர் மாவட்டத்தில் இரிட்டி தாலுகாவிலும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மலைபபகுதிகளில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மேலும் நடப்பு தென்மேற்கு பருவமழை சீசனில் கேரளாவில் அதிகபட்ச மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள் ளது. 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் சராசரியாக 69.6 மில்லிமீட்டரும், அதிகபட்சமாக கோட்ட யத்தில் 103 மில்லிமீட்டரும் மழை பெய்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    • கியர் மற்றும் கியர் இல்லாத இரு சக்கர வாகன பயிற்சி வகுப்புகளுக்கும் ஒரே விகிதத்தில் கட்டணம்.
    • தனியார் பயிற்சி பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் வரை தள்ளுபடி.

    தனியார் பயிற்சி பள்ளிகளை காட்டிலும் நியாயமான கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) மாநில அளவிலான திட்டமான ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் கேபி கணேஷ்குமார், கஜக்கூட்டம் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கேஎஸ்ஆர்டிசியின் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சிகளை வழங்குகிறது. இலகுரக மோட்டார் வாகனம் (எல்எம்வி) மற்றும் கனரக மோட்டார் வாகனம் (எச்எம்வி) உரிமம் பெற ஆர்வமுள்ளவர்கள் தலா ரூ.9,000க்கும், இருசக்கர வாகனப் பயிற்சி ரூ.3,500க்கும் பயிற்சி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கியர் மற்றும் கியர் இல்லாத இரு சக்கர வாகன பயிற்சி வகுப்புகளுக்கும் ஒரே விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கார் மற்றும் இருசக்கர வாகனப் பயிற்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய காம்போ கட்டணமாக ரூ.11,000க்கு பயிற்சி பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முயற்சி தனியார் பயிற்சி பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.

    கனரக மோட்டார் வாகனம் பயிற்சிக்கு பொதுவாக ரூ. 15,000, இலகுரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கு ரூ. 12,000 முதல் ரூ. 14,000 வரை, தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் இருசக்கர வாகனப் பயிற்சிக்கு ரூ.6,000 செலவாகும்.

    இதற்கிடையில், டிரைவிங் ஸ்கூல் துறையில் கே.எஸ்.ஆர்.டி.சி.யின் நுழைவு ஓட்டுநர் தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து ஓட்டுநர் பள்ளி உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது.

    மாநிலம் முழுவதும் ஓட்டுநர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் இந்தப் பள்ளிகள் மூலம் தரப்படுத்தப்பட்ட பயிற்சி நடைமுறைகளை உறுதி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்தது.
    • இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே அமைச்சரை கேரளா காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    எர்ணாகுளம் - நிஸாமுதீன் விரைவு ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில், படுக்கை விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்த கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

    ஆனால் நடு படுக்கை உடைந்து விழவில்லை, மற்றொரு பயணி சரியாக சங்கிலி மாட்டாமல் சென்றதால், நடுப் படுக்கை வேகமாக மோதியதில் கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்துள்ளார் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,

    ரெயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மோடி அரசின் கீழ் இப்படி தான் உள்ளது.

    • போதுமான ரெயில்கள் அல்லது இருக்கைகள் இல்லை.
    • நீங்கள் பாதுகாப்பாக ரெயிலில் ஏற முடியாது.
    • நீங்கள் ரெயிலில் ஏற முடிந்தால், இருக்கை இருக்காது.
    • உங்களுக்கு ரெயிலில் இருக்கை கிடைத்தாலும், ரெயில் விபத்து, 'இருக்கை விழுந்து விபத்து' போன்றவற்றில் நீங்கள் கொல்லப்படலாம்"

    என்று பதிவிட்டுள்ளது.

    • மண்சரிவு ஏற்பட்டபோது மாலாவின் கணவர் குமார், குழந்தைகள் ஸ்ரீநிதி, ஸ்ரீஹரி, ஸ்ரீராம் ஆகியோர் வீட்டில் இல்லை.
    • 20 குடும்பங்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்தமாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதிலிருந்தே மாநிலத்தின் அனைத்து மாவடட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கனமழை கொட்டியது.

    இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக கடந்த வாரத்தில் இருந்து பல மாவட்டங்களில் பலத்த மழைபெய்து வருகிறது. கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது.

    இன்று வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நாளை(27-ந்தேதி) வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்டு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்நிலையில் மூணாறில் மண் சரிவு ஏற்பட்டதில் மாலா(வயது42) என்ற பெண் பலியானார். மாலா தனது வீட்டின் சமையலறையில் நேற்று மாலை சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது 20 அடி உயரத்தில் இருந்து அவரது வீட்டின் மீது மண் சரிந்து விழுந்தது. இதனால் மாலா மண்ணுக்குள் சிக்கிக் கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த மூணாறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மண்ணுக்குள் புதைந்து கிடந்த மாலாவை மீட்டனர். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மண்சரிவு ஏற்பட்டபோது மாலாவின் கணவர் குமார், குழந்தைகள் ஸ்ரீநிதி, ஸ்ரீஹரி, ஸ்ரீராம் ஆகியோர் வீட்டில் இல்லை. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 3 குழந்தைகளும் மாலாவின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்த படியே இருந்தது.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த 20 குடும்பங்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன. எர்ணாகுளத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

    கனமழை காரணமாக கோட்டயத்தில் உள்ள பள்ளிகள், தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டார். இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் தேவிகுளம் தாலுகாவில் உள்ள பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டன. மேலும் இடுக்கி மாவட்டத்தில் இரவு நேர பயணத்துக்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்தார்.

    • பள்ளி மாணவியான தக்சினாவுக்கு திடீரென தலைவலி மற்றும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டது.
    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நாட்களுக்கு முன்பு தக்சினா பரிதாபமாக இறந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் தோட்டா பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் பாபு. இவரது மனைவி தன்யா. இவர்களது மகள் தக்சினா (வயது 13).

    பள்ளி மாணவியான இவருக்கு, திடீரென தலைவலி மற்றும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நாட்களுக்கு முன்பு தக்சினா பரிதாபமாக இறந்தார்.

    அவரது மரணத்துக்கு காரணம் என்ன என்று டாக்டர்கள் தீவிரமாக ஆய்வு செய்ததில், தக்சினாவுக்கு அரிய வகை அமீபிக் நோய் தாக்குதல் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அவரது முதுகுத்தண்டு திரவத்தை பரிசோதித்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சிறுமி தக்சினா, மூணாறுக்கு பள்ளி பயணம் சென்றபோது குளத்தில் குளித்தபோது இந்த நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    • சுற்றுலாத் துறையை முடக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • கடகம்பள்ளி சுரேந்திரன் சட்டசபையில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்திற்கு சுற்றுலாத்துறை மூலம் அதிக அளவு வருமானம் வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தினமும் கேரளாவுக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்துச் செல்கின்றனர்.

    இந்தநிலையில் சுற்றுலாத் துறையை முடக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை முன்னாள் சுற்றுலாத்துறை மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான கடகம்பள்ளி சுரேந்திரன் சட்டசபையில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    முதல்-மந்திரி பினராய் விஜயனின் அறிவுறுத்தலை கூட சுற்றுலாத்துறை அதிகாரிகள் புறக்கணிப்பதாக கூறிய அவர், காயல் புனரமைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும், அதனை தனியாரிடம் ஒப்படைத்து திட்டத்தை முடக்க முயற்சிகள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ், துறை சார்ந்த அறிக்கையின் படி திட்டம் செயல்படுத்தப்படும் என்று மட்டும் கூறினார்.

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • நீர்நிலைகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    கோழிக்கோடு, நாதாபுரம், குட்டியாடி போன்ற மலைப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. தாமரச்சேரி பகுதியில் மண் சரிவும் ஏற்பட்டது. மணிக்கு 40 கி.மீ. வேகத்திற்கும் மேலாக காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்தன. கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் பகுதியில் அரசு பஸ் மீது மரம் விழுந்தது. இதனை தொடர்ந்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதில் சிக்கி நின்ற ஒரு காரின் மீது மற்றொரு மரம் முறிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேரத்திற்கு பிறகே மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு காரில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

    ஆனால் அதற்குள் காரில் பயணித்த இடுக்கி ராஜகுமாரி பகுதியைச் சேர்ந்த ஜோசப் (வயது 63) பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் இருந்த அவரது கர்ப்பிணி மகள் அஞ்சுமோள், அவரது கணவர், ஜோபி ஜான், ஜோசப்பின் மனைவி அன்னக்குட்டி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அடிமாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வயநாடு மாவட்டத்திற்கு நாளை (26-ந் தேதி) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு போன்ற மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் வட பகுதிகளில் கடந்த 22-ந்தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவலர் குடியிருப்பில் சிவில் போலீஸ் அதிகாரி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
    • கடந்த 5 மாதங்களாக பூந்துறை பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக போலீஸ் துறையில் பணியில் இருக்கும் பலர் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர். இந்த தகவல் போலீசாரிடமும் மாநில அரசிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அவர்கள் தற்கொலை முடிவை எடுப்பதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

    இந்த நிலையில் காவலர் குடியிருப்பில் சிவில் போலீஸ் அதிகாரி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    திருவனந்தபுரம் மாநகர போக்குவரத்து அமலாக்க (வடக்கு) பிரிவில் சிவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மதனகுமார். பரஸ்சலா பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 5 மாதங்களாக பூந்துறை பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். அங்கு தான் மதனகுமார், தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் 2 நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

    கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளில் 81 போலீசார் தற்கொலை செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினரிடம் அதிகரித்து வரும் தற்கொலை போக்குகள் மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்சனையில் போலீஸ் அதிகாரிகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

    • சிறுவன் தனது தந்தையின் குரலில் பேச தொடங்கினான்.
    • சம்பவத்திற்கு பின் குற்ற புலனாய்வு சம்பவங்கள் மந்திரவாதத்தின் மூலம் நடத்தப்படுவது முடிவுக்கு வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அலெக்சாண்டர் ஜேக்கப். இவர் கேரள போலீஸ் துறையில் பணியில் இருந்த போது நடந்த ருசிகர சம்பவங்களை சமூக வலைத்தளம் மூலமாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் 1988-ம் ஆண்டு காலகட்டத்தில் கண்ணூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது நடந்த சம்பவம் குறித்து கூறியிருப்பதாவது:-

    கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பில் மளிகை கடை நடத்தி வந்த வியாபாரி ஒருவர் இரவு 9 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவரை வழியில் மர்ம ஆசாமிகள் வெட்டி கொன்று விட்டு அவரிடம் இருந்த ரூ.9,500 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். அன்றைய கால கட்டத்தில் கண்காணிப்பு கேமரா, செல்போன் போன்ற எந்தவித நவீன வசதியும் இல்லாததால் கொலை நடந்து 10 தினங்கள் ஆகியும் கொலையாளிகள் பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் போலீசாருக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வந்தது.

    அப்போது என்னுடன் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய கோபிநாத மேனன் என்னிடம் வந்து, 'முண்டக்காயத்தில் இறந்தவரின் ஆவியை வரவழைத்து கொலையாளிகள் பற்றிய விவரங்களை கூறும் முஸ்லிம் மந்திரவாதிகள் 3 பேர் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இறந்த நபரை வரவழைத்து கேட்டால் உண்மை தெரிந்து விடும்' என்றார்.


    இதையடுத்து நாங்கள் அந்த மந்திரவாதிகளை சந்தித்து அவர்கள் கூறியபடி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தோம். அதன்படி, ஒரு நாள் நள்ளிரவில் இறந்தவரை அடக்கம் செய்த இடத்திற்கு அவரது மகனை அழைத்து சென்று கல்லறையை சுற்றி 3 முறை வலம் வர வைத்தோம். பின்னர் சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்து அவனது தந்தை வழக்கமாக படுக்கும் கட்டிலில் படுக்க வைத்தோம். தொடர்ந்து பூஜைகள் தொடங்கியது.

    ஒரு கட்டத்தில் திடீரென்று அந்த சிறுவன் மீது தந்தையின் ஆவி இறங்கியது. அந்த சிறுவன் தனது தந்தையின் குரலில் பேச தொடங்கினான். அருகில் இருந்த சிறுவனின் தாய், 'அய்யோ இது எனது கணவனின் குரல்' என கதறி அழ தொடங்கினார்.

    அந்த சிறுவன் பேசிய போது, 'சம்பவத்தன்று இரவு நான் வீட்டுக்கு புறப்பட்ட போது 2 பேர் என்னை கொலை செய்து விட்டு என்னிடம் இருந்த ரூ.9,500 பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களில் ஒருவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் மற்றொரு நபர் இவர் தான்' என அடையாளத்தை கூறினார். தொடர்ந்து, அந்த ஆவி, 'பாதாளத்தில் இருந்து என்னை வரவழைத்து துன்பப்படுத்துகிறீர்களே' என கூறி அதிக சத்தத்துடன் கத்தியது. உடனே மந்திரவாத பூஜை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சிறுவனிடம் இருந்து ஆவி வெளியேறியது. சிறுவன் வழக்கம் போல் சகஜமாக தனது தாயாருடன் பேச தொடங்கினான்.

    இறந்தவரின் ஆவி கூறியபடி அன்று அதிகாலை 3 மணியளவில் கொலையாளிகளில் அடையாளம் கூறப்பட்ட ஒருவரை கைது செய்தோம். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உடந்தையாக இருந்த மற்ற ஒருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுத்தோம்.

    ஆவியை வரவழைத்து கொலையாளிகளை கண்டுபிடித்த விவரத்தை வழக்கு விசாரணை அறிக்கையில் எழுத முடியாது. ஆதலால் வழக்கு விசாரணையை வேறு விதமாக பதிவு செய்து விசாரணை நிறைவு செய்யப்பட்டது. வேறு யாராவது இது குறித்து கூறியிருந்தால், உண்மையாகவே நான் நம்பி இருக்க மாட்டேன். நேரடி அனுபவம் என்பதால் என்னால் அதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

    பின்னாளில் இந்த விவகாரம் முஸ்லிம் ஜமாத்துக்கு தெரிய வர 3 முஸ்லிம் மந்திரவாதிகளும் ஜமாத் அமைப்பால் எச்சரிக்கப்பட்டனர். அந்த சம்பவத்திற்கு பின் குற்ற புலனாய்வு சம்பவங்கள் மந்திரவாதத்தின் மூலம் நடத்தப்படுவது முடிவுக்கு வந்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×