search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "troll"

    • கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
    • இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.

    பிரபல நடிகை சாய் தன்ஷிகா தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார்.

    இந்நிலையில் கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    'ஆக்ஷன்' படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்குகிறார். ரித்விகா, அசோக் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.

    இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.இந்த படத்தின் முதல் பார்வை கடந்த மாதம் வெளியானது. அதைதொடர்ந்து படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. படத்தின் பணியாற்றிய அனைவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். யூகி சேது, இயக்குனர் மிஷ்கின், சினேகன், ரோபோ சங்கர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

    அதில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கோயிலுக்கு போகாதீங்க தியேட்டருக்கு போங்க என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது பேசும் பொருளாகி வருகிறது. கோயிலுக்கு போனாலாவது மன் நிம்மதி கிடைக்கும், சமீபத்தில் வெளிவந்த தமிழ் படங்களை தியேட்டருக்கு சென்று பார்த்தால் பிபி தன் ஏறுகிறது என ட்ரோல் செய்து வருகின்றனர்.

    வீட்ல வெங்காயம் வெட்டிக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா, புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா? புது டிரெஸ் போட்டு பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு படத்தை அப்படி பார்க்க வேண்டும் என மிஷ்கின் சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என பேசியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ஏடாகூடமாக எதையாவது சொல்லி நெட்டிசன்கள் வாய்க்கு அவல் போடும் திரிபுரா முதல்வர் இம்முறை தண்ணீரில் ஆக்சிஜன் கூடுவதற்கான காரணத்தை கூறி வைரல் ஆகியுள்ளார். #Biplab #BiplabKumarDeb
    புதுடெல்லி:

    திரிபுரா முதல்வராக சில மாதங்களுக்கு முன்னர் பதவியேற்றவர் பிப்லப் குமார் தேப், பாஜகவை சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர், “மஹாபாரதம் காலத்திலேயே இணையதளம் இருந்தது” என கூறியிருந்தார். இந்த கருத்து கிண்டலுக்கு உள்ளாகவே, “குறுகிய மனம் கொண்டவர்களால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என சமாளித்தார்.

    இதனால், பிப்லப் தேசிய அளவில் கிண்டலுக்கு உள்ளாகவே, பா.ஜ.க எம்.எல்.ஏ, எம்.பி.க்களிடம் நரேந்திரமோடி ஆப் மூலம் பேசிய பிரதமர் மோடி, மீடியாக்களுக்கு மசாலா தரும் விதமாக யாரும் கருத்து கூற வேண்டாம் என தெரிவித்தார். கட்சியின் செய்திதொடர்பாளர்கள் தவிர மற்றவர்கள் எந்த விஷயத்திலும் கருத்து சொல்ல வேண்டாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

    மோடி பேசிய சில நாட்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிப்லப் குமார் தேப், ஐஸ்வர்யா ராய் இந்திய அழகை பிரதிபலிக்கிறார். டயானா ஹைடன் இல்லை என பேச சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து சில நாட்களிலேயே ‘சிவில் எஞ்சினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுந்த தகுதி வாய்ந்தவர்கள், மெக்கானிக்கல் எஞ்சினியர்கள் அல்ல’ என பிப்லப் பேசினார்.

    ‘சிவில் எஞ்சினியர்கள் கட்டிடத்தை எப்படி கட்டுவது என்பதை அறிந்தவர்கள். அரசு திட்டங்களை அவர்களால் முறையாக கட்டமைக்க முடியும். மெக்கானிக்கல் எஞ்சினியர்களுக்கு எப்படி தெரியும்?’ எனவும் அவர் கூறியிருந்தார். பிப்லப்பின் இந்த கருத்தை முன்வைத்தும் பலர் அவரை கிண்டல் செய்தனர்.

    இந்நிலையில், மீண்டும் பிப்லப் வைரலாகியுள்ளார். இம்முறை தண்ணீரில் ஆக்சிஜன் அளவு கூடுவதற்கான காரணத்தை அவர் விளக்கியுள்ளார். 

    ருத்ராசாகர் பகுதியில் நடந்த படகுப்போட்டியை தொடக்கி வைத்த அவர் பேசுகையில், “ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகளை அரசு வழங்கும். வாத்துகள் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். இதனால், அங்குள்ள மீன்கள் அதிக ஆக்சிஜனை பெற முடியும். வேகமாக மீன்கள் வளரும். இது முழுக்க முழுக்க இயற்கை வழியிலேயே நடக்கின்றது” என பிப்லப் கூறினார்.

    எந்த விதமான அறிவியியல் தரவுகளும் இல்லாமல் முதல்வர் இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது என அம்மாநில கட்சிகள் இதனை விமர்சனம் செய்துள்ளன. #Biplab #BiplabKumarDeb
    சமீபத்தில் சிங்கப்பூரில் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நிருபர்கள் கேட்ட கேள்வி வேறு, அந்த கேள்விக்கு மோடி சொன்ன பதில் வேறு என ராகுல் காந்தி ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
    சிங்கப்பூரில் நான்யங் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவரிடம் சிங்கப்பூர் பத்திரிக்கையாளர்கள் ஏராளமான கேள்விகள் கேட்டனர். அதற்கு பிரதமர் மோடி தன்னிச்சையாக இந்தியில் பதில் அளித்தார்.

    அவரது பதிலை அருகில் இருந்த ஒருவர் மொழி பெயர்த்து நிருபர்களுக்கு விளக்கி கூறினார். ஆனால், இந்த கேள்வி, பதில் உண்மையானதாக நடக்கவில்லை என்றும், பிரதமர் மோடி சில பதில்களை முன்கூட்டியே எழுதி வைத்து அதை நிருபர்களுக்கு தெரிவித்ததாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக, ராகுல் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

    பிரதமர் மோடி சிங்கப்பூரில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை சொல்லவில்லை. அவர் பதில் அளித்ததை அருகில் இருந்த மொழி பெயர்ப்பாளர் அப்படியே சொல்லவில்லை.

    அதற்கு பதில் மொழி பெயர்ப்பாளர் தன்னிடம் இருந்த தாளில் ஏற்கனவே எழுதி வைத்திருந்த பதிலை படித்தார். நிருபர்கள் கேட்ட கேள்வி வேறு, மோடி சொன்ன பதில் வேறு.

    அந்த பேட்டியில் பிரதமர் மோடி உண்மையான பதிலை சொல்லாதது ஒரு வகையில் நல்லதுதான். அவர் உண்மையான பதிலை சொல்லியிருந்தால் நமக்கெல்லாம் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகி இருக்கும்.

    இவ்வாறு ராகுல் கிண்டல் செய்துள்ளார்.

    அந்த ட்விட்டர் பதிவுடன் பிரதமர் மோடி பேட்டி அளிக்கும் காட்சியையும், அவரது உதவியாளர் ஏற்கனவே பதில் எழுதி வைத்து வாசிக்கும் காட்சியையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

    ராகுலின் இந்த கிண்டலுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு இரங்கல் தெரிவித்து கூட கருத்து எழுத தெரியாது. செல்போனை பார்த்து எழுதியவர். அவர் பிரதமரை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

    ராகுல்காந்தி இன்று அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்ப உள்ளார். அப்போது இதற்கு அவர் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×