என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது;
    • நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்!

    அவற்றைக் காப்பது நம் கடமை!

    உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன்.

    தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன்.

    அந்த உறுதியோடுதான், #DravidianModel-இல் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.

    உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன்.

    கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும்!

    தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது!

    நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!

    சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன்.

    இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி!

    தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், #தமிழ்நாடு_போராடும்_#தமிழ்நாடு_வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து #வெல்வோம்_ஒன்றாக! என்று கூறியுள்ளார். 



    • அஜித் பவாரின் மகனும் இந்த சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.
    • போதுமான தூரம் இல்லை என்றாலும், தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.

    அஜித் பவார் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை எதிர்த்து சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதாலும், பாஜக உள்ளாட்சிகளில் ஊழல் செய்வதாக கடுமையாக விமர்சித்ததாலும் அவரின் மரணத்தில் எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பின.

    மேலும் பெரிய சேதங்களை தாங்கும் விமானத்தின் கருப்பு பெட்டி இந்த விபத்தில் சேதமடைந்ததாக கூறப்பட்டதால் சந்தேகம் மேலும் வலுத்தது. அஜித் பவாரின் மகனும் இந்த சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.

    இந்த சூழலில் இந்த விபத்து குறித்து விமான விபத்து விசாரணை வாரியம் (AAIB) தற்போது தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அறிக்கைபடி, விபத்து நடந்த சமயத்தில் பாராமதி பகுதியில் மோசமான வானிலை காரணமாக பார்வை தூரம் மிகக் குறைவாக இருந்துள்ளது. விமானங்கள் தரையிறங்குவதற்கு குறைந்தபட்சம் 5,000 மீட்டர் கண்பார்வை தூரம் தேவை. ஆனால், விபத்தின் போது இது மிகவும் குறைவாக இருந்துள்ளது.

    விமானம் தரையிறங்கும் முன் விமானிகள் பார்வை தூரம் குறித்துக் கேட்டபோது, கட்டுப்பாட்டு அறையிலிருந்து 3,000 மீட்டர் இருப்பதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது தரையிறங்குவதற்குப் போதுமான தூரம் இல்லை என்றாலும், தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    விபத்து நடந்த அன்று கட்டுப்பாட்டு அறையை ஒரு பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த தரைவழி பயிற்றுவிப்பாளர் இயக்கியுள்ளார். அவரே விமானிகளுடன் தொடர்புகொண்டு தரையிறங்க அனுமதி அளித்துள்ளார்.

    பாராமதி விமான நிலைய ஓடுதளம் கடைசியாக 2016-ல் தான் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓடுதளத்தில் உள்ள அடையாளக் குறிகள் மங்கிப் போயிருந்தன. மேலும், ஓடுதளத்தில் ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடந்ததையும் விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.

    இந்த விபத்தில் காக்பிட் குரல் பதிவுக்கருவி சேதமடைந்துள்ளது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் உதவியுடன், அதில் உள்ள தரவுகளைப் பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்ய AAIB திட்டமிட்டுள்ளது.

    கட்டுப்பாடற்ற விமான நிலையங்களில் பாதுகாப்புத் தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என AAIB பரிந்துரைத்துள்ளது.

    விபத்துக்கான மூலக் காரணம் மற்றும் உண்மைகளை வெளிக்கொண்டு வர முழு அளவிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக AAIB தெரிவித்துள்ளது. 

    • ஜம்மு-காஷ்மீர் அணியின் அகிப் நபி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • போட்டியை அத்துடன் முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் முடிவு செய்தனர்.

    ரஞ்சி கோப்பை பைனல் கர்நாடகா- ஜம்மு-காஷ்மீர் இடையே ஹூப்ளியில் நேற்று நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஷுபம் பண்டிர் (121), யாவெர் ஹசன் (88), பராஸ் டோக்ரா (70), அப்துல் சமாத் (61), கணையா வதாமேன் (70), சஹில் லோத்ரா (72) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் ஜம்மு-காஷ்மீர் 584 ரன்கள் குவித்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடகாவை 293 ரன்னில் சுருட்டியது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 160 ரன்கள் சேர்த்தார். ஜம்மு-காஷ்மீர் அணியின் அகிப் நபி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    291 ரன்கள் முன்னிலையுடன் ஜம்மு-காஷ்மீர் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் தொடக்க வீரர் இக்பால் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் அடிக்க, ஜம்மு-காஷ்மீர் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது.

    477 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இன்று கடைசி ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்தது. இக்பால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.

    மற்றொரு முனையில் சஹில் லோத்ராவும் சதம் விளாசினார். 4 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இக்பால் 160 ரன்களுடனும், லோத்ரா 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மொத்தமாக 633 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், 634 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த ஸ்கோரை கர்நாடகா அணியால் எட்டுவது மிகவும் கடினம். எனவே, போட்டியை அத்துடன் முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் முடிவு செய்தனர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

    முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரஞ்சி டிராபி வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ள ஜம்மு காஷ்மீர் அணிக்கு ரூ.2 கோடி ரொக்கப்பரிசு வழங்குவதாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

    முன்னதாக, நேற்று காலை அவர் நடைபெற்ற மைதானத்துக்கு சென்று வீரர்களை உமர் அப்துல்லா உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  

    இதற்கிடையே பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள வாழ்த்து பதிவில், ரஞ்சி கோப்பையை முதன்முறையாக வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு வாழ்த்துக்கள்! இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி அணியின் குறிப்பிடத்தக்க மன உறுதி, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

    இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஒரு பெருமையான தருணம், மேலும் இது அங்கு வளர்ந்து வரும் விளையாட்டு ஆர்வத்தையும் திறமையையும் எடுத்துக்காட்டுகிறது.

    இந்த சாதனை பல இளம் விளையாட்டு வீரர்களை பெரிய கனவுகள் காணவும் மேலும் விளையாடவும் ஊக்குவிக்கட்டும்." என்று தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது.
    • பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.

    பல்லேகலெ:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை சார்பில் மதுஷனகா 3 விக்கெட்டும், தசுன் ஷனகா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இலங்கை அணியை 142 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் பாகிஸ்தான் அரையிறுதி செல்ல முடியும் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 145 ரன்களைக் கடந்ததால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.

    • ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு படை தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.

    அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இன்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

    தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 57 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

    வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் புரட்சிகர பாதுகாப்புப் படையின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தெஹ்ரானில் ஈரான் உச்சந்தலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை குறிவைத்தும் தாக்குதல் நடந்துள்ளது. அவர் ஏற்கனவே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    இந்நிலையில் கமேனியின் நிலை குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் பேசியுள்ளார்.

    NBC நியூஸுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அளித்த பேட்டியில் "எனக்குத் தெரிந்தவரை கமேனி இன்னும் உயிருடன் இருக்கிறார்" கூறினார். அப்பாஸ் அரக்சியின் நிச்சயமற்ற பதிலால் கமேனியின் நிலை குறித்த சந்தேகங்கள் வலுத்துள்ளன.  

    அதேநேரம், தனது சமூக வலைதள பக்கத்தில், "தெற்கு ஈரானில் உள்ள பள்ளி பட்டப்பகலில் தாக்கப்பட்டது. அப்பாவி குழந்தைகள் இறந்தனர். இதற்கு பதில் கிடைக்காமல் போகாது" என்று சேதமடைந்த பள்ளியின் படத்தை பகிர்ந்து அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படம், தெஹ்ரானில் உள்ள கமேனியின் அலுவலகம், இல்லம் அமைந்துள்ள வளாகத்திற்கு சேதம் ஏற்பட்டதைக் காட்டுகிறது. 

    • மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

    அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இன்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

    தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 51 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

    தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து இப்பகுதிக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியாவின் சில பகுதிகள், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இப்பகுதிக்கான அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ அறிவித்துள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளுக்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியாவும் அறிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

    மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதால், விமான நிறுவனங்கள் தேவையான இடங்களில் விமானங்களைத் திருப்பிவிடவும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    பயணிகள் அறிக்கையை சரிபார்த்து விமான நிலையத்தை அடைய வேண்டும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    • விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது.

    விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் நடந்தது. காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா முறைப்படியும் நடந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் வெளியிட்டதிருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது.

    இந்நிலையில், ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் திருமண புகைப்படங்கள் குறித்த பதிவு ஆசியாவிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைப் பெற்ற பதிவாக மாறியுள்ளது.

    விராட் கோலியின் டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்த பதிவை விட ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு அதிக லைக்குகள் பெற்று இந்த சாதனையை படைத்துள்ளது.

    கோலி பகிர்ந்த புகைப்படம் 22.9 மில்லியன் லைக்குகளை கடந்து நிலையில், ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா பகிர்ந்த திருமண புகைப்படம் 24.4 மில்லியன் லைக்குகளை கடந்து ஆசியாவிலேயே அதிக லைக் வாங்கிய புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

    வருகிற மார்ச் 4-ந்தேதி விஜய் தேவரகொண்டாவுக்கும்-ராஷ்மிகாவுக்கும் திருமண வரவேற்பு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட முறையில் நடைபெற இருக்கிறது. விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் இந்திய திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்த இருக்கின்றனர்.

    • முட்டை விலை கடந்த வாரம் 40 காசுகள் சரிந்த நிலையில் 500 காசுகளாக நீடித்தது.
    • 6 மாதங்களாக 500 காசுகளுக்கு மேல் இருந்த முட்டை விலை நேற்று 480 காசுகளாக குறைந்து நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல் மண்டலத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தினசரி 7 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் தமிழகத்தின் சத்துணவு திட்டம், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்ற. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக குளிர் காலங்களில் முட்டையின் நுகர்வு அதிகரிப்பதும், கோடை காலங்களில் அதன் நுகர்வு குறைவதும் வாடிக்கை.

    அதன்படி தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் முட்டையை பொது மக்கள் சாப்பிடுவது குறைந்துள்ளதால் முட்டையின் நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. மேலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் குறைந்துள்ளது. இதனால் மற்ற மண்டலங்களில் முட்டை விலை சரிந்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் விலை படிப்படியாக சரிந்து வருகிறது.

    540 காசுகளாக இருந்த முட்டை விலை கடந்த வாரம் 40 காசுகள் சரிந்த நிலையில் 500 காசுகளாக நீடித்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் உற்பத்தி மற்றும் தேவை குறித்தும் பண்ணைகளில் தேங்கி உள்ள 15 கோடிக்கும் அதிகமான முட்டைகள் குறித்தும் விரிவாக ஆலோ சிக்கப்பட்டது.

    அப்போது ரம்ஜான் பண்டிகை மற்றும் கோடை காலம் தொடங்கி உள்ளதையொட்டி முட்டைகள் நுகர்வு குறைந்துள்ளதை அடுத்து கோழிப்பண்ணைகளில் முட்டைகள் தேங்குவதை தடுக்க முட்டை விலையை மேலும் 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக கடந்த 6 மாதங்களாக 500 காசுகளுக்கு மேல் இருந்த முட்டை விலை நேற்று 480 காசுகளாக குறைந்து நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் இனி வரும் நாட்களில் பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனாலும் சில்லரை விற்பனை கடைகளில் முட்டை விலை 600 காசுகளுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே முட்டை விலை 500 காசுகளுக்கும் கீழ் குறைந்துள்ளதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • மற்றவர்களுக்கு பதில் சொல்லக்கூடிய வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு கிடையாது.
    • யார் தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்டாலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைதான் மக்கள் நம்புவார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்னும் 10 நாட்களில் முழுமை பெற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்படும்.

    காங்கிரஸ் கட்சி இன்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்திருக்கிறோம். நிச்சயமாக விரைவில் இறுதி செய்யப்படும். திராவிடக் கருத்துக்களை முன்னெடுத்து செல்லும் ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின் என்ற நம்பிக்கையாலும் தி.மு.க.வின் மீது உள்ள நம்பிக்கையாலும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டு உள்ளார். இதன் மூலம் யார் உண்மையான திராவிட இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார், திராவிட மாடல் ஆட்சியை தரக்கூடியவர்கள் யார் என தெளிவாக மக்களுக்கு தெரிந்து விட்டது.

    மற்றவர்களுக்கு பதில் சொல்லக்கூடிய வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு கிடையாது. யார் தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்டாலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைதான் மக்கள் நம்புவார்கள். மக்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை தேர்தல் அறிக்கையாக தி.மு.க. வெளியிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனுஷின் ‘கர’ படம் ஏப்ரல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வரலாறு மற்றும் அரசியல் சார்ந்த இப்படம் தனது சினிமா பயணத்தில் மிகப்பெரிய படமாக அமையும் என அவர் கூறியுள்ளார்.

    நடிகர் தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் 'கர'. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 56-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

    இந்த நிலையில், தனுஷின் 56-வது படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் என இயக்குனர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். வரலாறு மற்றும் அரசியல் சார்ந்த இப்படம் தனது சினிமா பயணத்தில் மிகப்பெரிய படமாக அமையும் என அவர் கூறியுள்ளார். 

    • மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • பிரதமர் மோடி செல்லும் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள். இதற்காக 120 ஏக்கர் இடத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி மற்றும் பிரதமர் மோடி செல்லும் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். மதுரை விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி விமான நிலையத்திலும், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்ட எல்லைக்குள் நாளை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான் 3 வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரவீன்குமார் எச்சரித்துள்ளார்.

    • இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் இமாலய வெற்றி பெற வேண்டும்.
    • பாகிஸ்தான் முதலில் பேட் செய்தால் குறைந்தது 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்

    20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை அணி சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தது. இதில் இங்கிலாந்துக்கு எதிராக 147 ரன் இலக்கை கூட நெருங்க முடியாமல் 95 ரன்னில் சுருண்டு போனது. முக்கியமான தருணங்களில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் சறுக்கலை சந்தித்து இருக்கிறது. இனி உள்ளூர் ரசிகர்கள் முன் ஆறுதல் வெற்றியோடு நிறைவு செய்ய முனைப்பு காட்டுவார்கள்.

    முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி ஒரு முடிவில்லை. ஒரு தோல்வி (இங்கிலாந்துக்கு எதிராக) என ஒரு புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் பணிந்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு அரைஇறுதிக்கான கதவு திறந்துள்ளது.

    இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் இமாலய வெற்றி கண்டு, ரன்ரேட்டிலும் நியூசிலாந்தை முந்தினால் அரைஇறுதி வாய்ப்பை பெற்று விடும். அதாவது முதலில் பேட் செய்தால் குறைந்தது 64 ரன் வித்தியாசத்திலோ அல்லது 2-வது பேட்டிங் செய்தால் 13.1 ஓவருக்குள் இலக்கை விரட்டிப் பிடித்தாலோ அரைஇறுதி அதிர்ஷ்டம் அடிக்கும்.

    எனவே சுழற்பந்து வீச்சில் வலுவாக உள்ள பாகிஸ்தான் பேட்டிங்கிலும் அசத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

    ×