என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • பொதுத் தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்.
    • அன்பு மாணவர்களே பதற்றம் இல்லாமல் சந்தோஷமா Exam Hall-க்கு வாங்க.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.

    இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று பொதுத் தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்.

    அன்பு மாணவர்களே பதற்றம் இல்லாமல் சந்தோஷமா Exam Hall-க்கு வாங்க. மகிழ்ச்சியாக நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார்.
    • மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

    மேலும், அந்த நாடுகளின் முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், ஈரானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று வளைகுடா நாடுகள் பரபரப்பு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், "பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி, ஈரான் தாக்கி வருகிறது. எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சஞ்சு சாம்சன் கர்த்தருக்கு நன்றி கூறும் வகையில் சிலுவை பிரார்த்தனை செய்து கொண்டாடினார்.
    • சஞ்சு சாம்சனின் இந்த கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்தார். ஹோலட்ர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இந்த போட்டியில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன் கர்த்தருக்கு நன்றி கூறும் வகையில் சிலுவை பிரார்த்தனை செய்து கொண்டாடினார். அதே போல வெற்றிக்கான கடைசி ரன்னை அடித்தவுடன் தரையில் அமர்ந்து இறைவனிடம் வேண்டி சிலுவை பிரார்த்தனை செய்து கொண்டாடினார். சஞ்சு சாம்சனின் இந்த கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின்பு பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், "நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன், இதை நான் தனியாகச் செய்திருக்க முடியாது. அவர் என்னைவழி நடத்தினார்" என்று தெரிவித்தார். இதனையடுத்து இணையத்தில் ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.
    • மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

    இதனிடையே,பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் ஸயத் அல்நஹ்யானிடம் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினாா்.

    அப்போது யுஇஏ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

    இந்நிலையில், பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். போர் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்தவேண்டும் என்று பிரதமர் மோடி அவரிடம் வலியுறுத்தினார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த இந்தியாவின் கவலைகளைத் தெரிவித்ததோடு, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்குமாறு வலியுறுத்தினேன். போர் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    • சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.
    • சஞ்சு சாசனின் இந்த வாழ்நாள் ஆட்டத்தை மலையாள முன்னணி நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்னும், ஹோல்டர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    கேரளாவில் இருந்து தற்போது இந்திய அணிக்காக விளையாடும் ஒரே கிரிக்கெட் வீரரான சஞ்சு சாசனின் இந்த வாழ்நாள் ஆட்டத்தை மலையாள முன்னணி நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    மோகன்லால், மம்முட்டி, பசில் ஜோசப் ஆகியோர் சஞ்சு சாம்சனை பாராட்டி பதிவிட்டுள்ளனர். அதே போல், சச்சின், யுவராஜ் சிங் ஆகியோரும் சாம்சனை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

    • ஈரானின் நவீன Jamaran-class போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவிப்பு
    • ஈரானின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதி பலி

    இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் 48 ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    "நாங்கள் அடைந்து வரும் வெற்றியை யாராலும் நம்ப முடியவில்லை. ஒரே அடியில் (ஒரே நேரத்தில்) 48 தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர். மேலும் இது மிக வேகமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது." என அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு ட்ரம்ப் பேட்டியளித்துள்ளார்.

    அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. இதனிடையே ஈரானின் நவீன Jamaran-class போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் இருநாடுகளின் தாக்குதலில் ஈரானின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. 

    • இது பாண்டிய நாடு, வீரம் விளைந்த பூமி, புண்ணிய பூமி.
    • திருப்பரங்குன்றம் முருகனிடம் அவர்களுக்காக பிரார்த்தித்தேன்.

    என்டிஏ பொதுக்கூட்டத்தில் அனைவருக்கும் வணக்கம் எனத் தமிழில் பிரதமர் மோடி பேசினார்.

    பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், கட்டபொம்மன், அழகுமுத்துகோன், மருது சகோதரர்கள் பெயர்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    நீதிக்கும் கண்ணியத்திற்கும் போராடிய இமானுவேல் சேகரனாரை நினைவு கூர்கிறேன்.

    இது பாண்டிய நாடு, வீரம் விளைந்த பூமி, புண்ணிய பூமி.

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞருக்கு அஞ்சலி.

    திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்காக உயிர் தியாகம் செய்த பூரணச்சந்திரனை நினைவு கூர்கிறேன். இளைஞர் பூரண சந்திரன் செய்த உயிர் தியாகத்தை எண்ணி மனம் கனக்கிறது. அவரது குடும்பத்தினருகு்கு இரங்கல்.

    பூரணச்சந்திரன் மனைவி, குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினேன். திருப்பரங்குன்றம் முருகனிடம் அவர்களுக்காக பிரார்த்தித்தேன்.

    திமுக என்ன சதி செய்தாலும் இறுதியில் திருப்பரங்குன்றம் முருகனை வணங்கும் எம் மக்களே வெல்வார்கள்.

    திமுக என்ன செய்தாலும் இறுதியில் வாய்மையே வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் அரையிறுதி போட்டி மார்ச் 4-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
    • 2-வது அரையிறுதி 5-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

    இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியுடன் நிறைவடைகிறது. அதன்பின் அரையிறுதி போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

    அரையிறுதி போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மற்றும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் அரையிறுதி மார்ச் 4-ந்தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.

    2-வது அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 5-ந்தேதி இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.

    குரூப் 8 சுற்றில் 8 அணிகள் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டன. குரூப் 1-ல் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்திருந்தது. இதில் தென்ஆப்பிரிக்கா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஈடன்கார்டனில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி 2-வது இடத்தை பிடிக்கும்.

    குரூப் 2-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பிடித்திருந்தன. இங்கிலாந்து 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து ஒரு வெற்றி, ஒரு முடிவு இல்லை மூலம் 3 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி 2-வது இடம் பிடித்துள்ளது.

    குரூப் 1-ல் முதல் இடம் பிடித்த அணியும், குரூப் 2-ல் 2-வது இடம் பிடித்த அணியும் முதல் அரையிறுதியில் மோதும்.

    குரூப் 2-ல் முதல் இடம் பிடித்த அணியும், குரூப் 1-ல் 2-வது இடம் பிடித்த அணியும் 2-வது அரையிறுதியில் மோதும்.

    அதன்படி மார்ச் 4-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதியில் குரூப் 1-ல் முதல் இடம் பிடிததுள்ள தென்ஆப்பிரிக்காவும், குரூப் 2-ல் 2-வது இடம் பிடித்துள்ள நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மார்ச் 5-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் குரூப் 2-ல் முதலிடம் பிடித்த இங்கிலாந்தும், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று குரூப் 1-ல் 2-வது இடம் பிடிக்கும் இந்தியா அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தும்.

    மார்ச் 8-ந்தேதி அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.

    • இரவு 9.30க்கு டெல்லியில் தரையிரங்குகிறார்.
    • பிரதமர் மோடி பிப்ரவரி 25-26 தேதிகளில் இஸ்ரேலில் இருந்தார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்து ஆலோசிக்க, பிரதமர் மோடி இன்று இரவு டெல்லி திரும்பியதும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இன்று இரவு 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கக்கூடும். மேலும், இந்த போர்பதற்றத்தால் அங்கு வாழும் மில்லியன்கணக்கான இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த CCS கூட்டம் இந்த அம்சங்களையும், வளர்ந்து வரும் இராணுவ சூழ்நிலையையும் முழுமையாக விவாதித்து, எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க இந்தியாவின் தயார்நிலையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    ராம் சரண்- இயக்குநர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

    இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் "சிகிரி" பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 'பெத்தி' திரைப்படம் வருகிற ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

    இந்த நிலையில், பெத்தி படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் ராம் சரம் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

    • இந்த படத்தை வரும் கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு இருந்தார்.

    ஜமா புகழ் பாரி இளவழகன் - NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள படம் 'அன்பே டயானா'. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். இந்த படத்தை வரும் கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 'குட் நைட்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு இருந்தார்.

    இதனை தொடர்ந்து 'அன்பே டயானா' படத்தின் டைட்டில் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். டீசரில் பெரம்பூரில் வசிக்கும் கதாநாயகனின் குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனுக்கு பெற்றோராக சேத்தன் மற்றும் ரோஜா நடித்துள்ளனர். மேலும் கோபி அரவிந்த், நிகிலா சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோடை விடுமுறைக்கு பொழுதுபோக்கு குடும்ப படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    • கமேனியின் மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை கொல்லப்பட்டனர்.
    • கமேனியை வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவர் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

    ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA, கடந்த 35 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த அயதுல்லா அலி காமேனி (86 வயது) இயற்கை எய்தியதாக அறிவித்துள்ளது.

    முன்னதாக, நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் ஈரான் பிரதிநிதிகள் அதை மறுத்தனர்.

    கமேனியை வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவர் என்று குறிப்பிட்ட டிரம்ப் அவரது மரணம் ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பு தடையின்றி தொடரும் என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.

    இந்நிலையில் ஈரான் அரசு ஊடகத்தில் அவர் உயிரிழந்த செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    காமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாவதும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    ஈரானிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காமேனியின் தியாகம், கொடுங்கோலர்களுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய மக்கள் எழுச்சியின் தொடக்கமாக அமையும்" என்று எச்சரித்துள்ளது.

    மேலும், நேற்றைய தாக்குதல்களில் கமேனியின் மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை கொல்லப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.

    தெஹ்ரானில் காமேனியின் இல்லம், அலுவலகம் அமைந்துள்ள வளாகம் முற்றிலும் அளிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

    காமேனியின் உடலை புகைப்படம் எடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஆகியோரிடம் காண்பிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    காமேனியுடன் சேர்த்து ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜிஸ் நசிர்சாதே, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் தரைப்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர்.   

    ×