என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு சாம்சன், ஹெல்மெட்டை வீசிவிட்டு முழங்காலிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.
    • சஞ்சு சாம்சன் தனது ஹெல்மெட்டை 'எறிந்ததாக' கருதப்பட்டால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை மறுநாள் மோதுகிறது.

    முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அரையிறுதி சுற்றை தீர்மானிக்கும் போட்டியில் அதிரடியாக ரன்கள் குவித்து சஞ்சு சாம்சன் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், சஞ்சு சாம்சன் அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அந்த வகையில் இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு சாம்சன், ஹெல்மெட்டை வீசிவிட்டு முழங்காலிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.

    இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை விட, அவர் ஹெல்மெட்டைத் தரையில் வீசியதுதான் தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஐசிசி விதிகளின்படி, ஒரு வீரர் தனது கிரிக்கெட் உபகரணங்களை (பேட், ஹெல்மெட் போன்றவை) கோபத்திலோ அல்லது அதீத உற்சாகத்திலோ தரையில் வீசினால், அது "விளையாட்டு உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்" என்று கூறப்படுகிறது.

    சஞ்சு சாம்சன் தனது ஹெல்மெட்டை 'எறிந்ததாக' கருதப்பட்டால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது. பொதுவாக, கிரிக்கெட் உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்காக வீரர்களுக்குத் தடை விதிக்கப்படுவதில்லை. ஐசிசி நடத்தை விதிகளின்படி, இத்தகைய செயல்கள் பொதுவாக லெவல் 1 குற்றமாகவே கருதப்படுகின்றன. கோபம் அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்துவதை விட, உற்சாகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வீரர்களிடம் நடுவர்கள் பெரிய கண்டிப்பு காட்டுவதில்லை.

    எனவே, சஞ்சு சாம்சன் மீது இதுவரை அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. வழக்கமாக இது போன்ற கொண்டாட்டங்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்பதால், அவர் அரையிறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

    இந்த பிரிவின் கீழ் சமீபத்தில், பிப்ரவரி 18-ம் தேதி ஸ்காட்லாந்து வீரர் ஜார்ஜ் முன்சி, ஆட்டமிழந்த பிறகு ஹெல்மெட்டை வீசியதற்காக அவருக்கு ஒரு 'டிமெரிட்' (Demerit) புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ரசிகர்கள், பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தாய் கிழவி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியிலும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. தாய் கிழவி படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த வரிசையில், நடிகர் சிவகுமார் தாய் கிழவி படத்தை பார்த்துவிட்டு நடிகை ராதிகாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ராதிகா சரத்குமார் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "சிவகுமார் அண்ணா, நன்றி" என குறிப்பிட்டுள்ளார். இத்துடன் அவர் நடிகர் சிவகுமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் சிவகுமார் கைப்பட எழுதிக் கொடுத்த பாராட்டையும் புகைப்படமாக பதிவேற்றம் செய்துள்ளார்.

     

    அதன்படி சிவகுமார் எழுதி கொடுத்த பாராட்டில், "நடிக வேள் எம்.ஆர். ராதாவுக்கு ரத்தக் கண்ணீர், அவர் மகள் ராதிகாவுக்கு தாய் கிழவி. வாழ்த்துக்களுடன் சிவகுமார், சூர்யா, கார்த்தி, பிருந்தா குடும்பத்தினர்," என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    • டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • முருகனின் அறுபடை வீடுகள் இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றார். டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இதையடுத்து கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் திருப்பரங்குன்றத்தில் பாஜக போட்டியிடுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஏற்கனவே திருப்பரங்குன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ. தான் உள்ளார். ஆகவே இந்த மாதிரியான கோரிக்கைகளை நாங்கள் எழுப்பவில்லை என்றார்.

    இதையடுத்து முருகனின் அறுபடை வீடுகள் இருக்கும் தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கேட்டுள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அத்தகைய எந்த தொகுதிகளையும் நாங்கள் அதிமுகவிடம் கேட்கவில்லை" என்று தெரிவித்தார்.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்தார்.
    • இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்னும், ஹோல்டர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் கம்பீர், "என்னை பொறுத்தவரை ஷிவம் துபே அடித்த அந்த 2 பவுண்டரிகள்,சஞ்சு சாம்சன் அடித்த 97 ரன்களுக்கு இணையானது. துபே அதை அடிக்காமல் போயிருந்தால், சஞ்சுவின் 97 ரன்களைப் பற்றி பேசியிருக்க மாட்டார்கள். பெரிய பங்களிப்புகள் தலைப்புச் செய்தியாகலாம். ஆனால், இது போன்ற சிறிய பங்களிப்புகள்தான் அணி வெற்றிக்கு உதவுகிறது" என்று தெரிவித்தார்.

    சஞ்சு சாம்சனை பாராட்ட மனமில்லாமல் பேசிய கம்பீரை இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    • சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.
    • சந்திரன் சீக்கிரமே உதயமாகும் என்பதால் முழு கிரகணத்தையும் காண முடியும்.

    இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இன்று (மார்ச் 3) மாலை நிகழ உள்ளது.

    சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.

    அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது. இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர்.

    முழு கிரகண நிலை சுமார் 58 நிமிடங்கள் நீடிக்கும். இது இந்திய நேரப்படி மாலை வேளையில் நிகழ்கிறது.

    இந்தியாவில் சந்திரன் உதிக்கும் போதே கிரகணம் தொடங்கிவிடுவதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிரகணத்தின் இறுதி நிலையை மட்டுமே காண முடியும்.

    மாலை 4:58 மணிக்கு தொடங்கும் நிழல் கிரகணம் முழு கிரகணமாக மாறும். மாலை 5:32 க்கு முழு கிரகணம் முடிவுக்கு வரும். இரவு 7:53 மணிக்கு கிரகணம் முழுவதுமாக முடிவுக்கு வரும்.

    இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சந்திரன் உதிக்கும் போது இந்த நிகழ்வு கிழக்கு அடிவானத்தில் தாழ்வாக தெரியும்.

    வடகிழக்கு மாநிலங்கள், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் சந்திரன் சீக்கிரமே உதயமாகும் என்பதால் அங்கு முழு கிரகணத்தையும் காண முடியும்.

    இங்கு மாலை 5:10 முதல் 5:25 மணிக்குள் கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையைத் தெளிவாகக் காணலாம்.

    சென்னை, பெங்களூரு, மும்பை,டெல்லி போன்ற நகரங்களில் மாலை 6:20 முதல் 6:30 மணிக்குள் ஓரளவு கிரகணம் தெரியும்.

    சூரிய கிரகணத்தைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இதற்குச் சிறப்பு கண்ணாடிகள் தேவையில்லை. 

    • ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும்.
    • கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் பேரலுக்கு 200 டாலர் வரை உயரும்

    மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் மூத்த தளபதி பிரிகேடியர் ஜெனரல் இப்ராகிம் ஜப்பாரி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

    ஈரானிய ஊடகங்களில் பேசிய அவர், "ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும்.

    இங்கிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் குழாய்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம்.

    கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் பேரலுக்கு 200 டாலர் வரை உயரும்" என்று பாக்கிறிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே செல்கிறது.

    தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.

    சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் ஏற்றுமதிக்கு இந்தப் பாதையையே நம்பியுள்ளன.

    கத்தார் தனது இயற்கை எரிவாயு ஏற்றுமதியை முழுமையாக இதன் வழியாகவே செய்கிறது. எனவே இவை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும். கச்சா எண்ணெய் தட்டுபாடால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும். 

    ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பவனுதாயி என்கிற பெயரில் தாய் கிழவியாக ஊரில் வலம் வருபவர் ராதிகா. அங்குள்ளவர்களுக்கு வட்டிக்கு விட்டு மிரட்டி வட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறார்.

    ஒரு கட்டத்தில் கிழவி எப்போது இறக்கும் என ஊரே காத்திருக்கிறது. ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது.

    இன்னும் சில நாட்களில் ராதிகா இறந்து விடுவார் என்று ஊரே காத்திருக்கிறது. அப்போது, ராதிகா 160 சவரன் சேர்த்து வைத்துள்ளது மகன்களுக்கு தெரியவருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகை சொத்துக்காகவாவது தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என மெனக்கிடுகிறார்கள்.

    இறுதியில் தாய் கிழவி உயிர் பிழைத்தாரா? அந்த 160 சவரன் நகை என்னவாயிற்று? என்பது படத்தின் மீதிக்கதை.

    இப்படம் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    சுமார் பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'தாய் கிழவி' படம் வெளியான முதல் நாளே நாடு முழுவதும் ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் வசூலித்தது.

    இந்நிலையில் 'தாய் கிழவி' படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தை சிவகுமார் முருகேசன் இயக்க உள்ளார். இதன் அறிமுக டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • நான் எங்களுடைய சிறந்த நண்பர் இந்திய பிரதமர் மோடியுடன் பேசினேன்.
    • இஸ்ரேலுடன் அவர் காட்டிய நிலைப்பாட்டிற்கும், உண்மைக்காக நின்றதற்கும் நன்றி தெரிவித்தேன்.

    இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆங்கில செய்தி சேனல் என்.டி.டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். ஈரான் தாக்குதலால் சேதம் அடைந்த கட்டிட இடிபாடுகளில் பலத்த பாதுகாப்பு காவலர்களுக்கு மத்தியில் நடந்தவாறு நெதன்யாகு கூறியதாவது:-

    நான் எங்களுடைய சிறந்த நண்பர் இந்திய பிரதமர் மோடியுடன் பேசினேன். நேற்று நீண்ட நேரம் அவரிடம் பேசினேன். ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் அவர் காட்டிய நிலைப்பாட்டிற்கும், உண்மைக்காக நின்றதற்கும், இந்திய மக்களின் மகத்தான நட்புக்கும் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

    அவர்கள் இஸ்ரேலில் மிகவும் போற்றப்படுகிறார்கள், நேசிக்கப்படுகிறார்கள். உரையாடலின் விவரங்களுக்குள் நான் செல்லமாட்டேன். ஆனால் நான் அவருடன் பேசியுள்ளேன், மேலும் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள பல தலைவர்களுடன் பேசியுள்ளேன்.

    இவ்வாறு நெதன்யாகு தெரிவித்தார்.

    • ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதிலும் சீனா உறுதுணையாக இருக்கும்
    • ஈரானின் கச்சா எண்ணெய்யை வாங்கும் மிகப்பெரிய வாடிக்கையாளராகச் சீனா தொடர்ந்து நீடிக்கிறது.

    மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களுக்கு எதிராக ஈரானுக்கு ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

    "சீனா மற்றும் ஈரான் இடையிலான பாரம்பரிய நட்புறவை சீனா பெரிதும் மதிக்கிறது; ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய கண்ணியத்தைப் பாதுகாப்பதில் அந்நாட்டிற்கு சீனா ஆதரவளிக்கிறது. மேலும், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதிலும் சீனா உறுதுணையாக இருக்கும்" என சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

    மேலும் அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாகத் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும், பதற்றங்கள் மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் இந்த மோதல் முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கும் பரவாமல் தடுக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் ஈரானுக்கு ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக வெளியான செய்திகளைச் சீனா மறுத்துள்ளது. 

    • ஐசரி கணேஷ் படத்தை தயாரித்துள்ளார்.
    • ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'தேரே இஷ்க் மே'. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

    கர எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் ஏப்.30ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.  


    • ஐபிஎல் 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
    • சிஎஸ்கே பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது.

    ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    பேட்டிங்கிற்கு தயாராகும் எம்.எஸ். தோனியின் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

    கடந்த முறை ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தை பிடித்தது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், பிரேவிஸ், ஷிவம் துபே போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் சிஎஸ்கே மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஓ. பன்னீர் செல்வம் திமுக-வில் இணைந்தது துரதிருஷ்டவசமானது.
    • செங்கோட்டையன் எதிரிகிட்டயும் போகவில்லை. துரோகிகள்கிட்டயும் போகவில்லை.

    அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக-வின் பொதுச் செயலாளராக உள்ளார். டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலா தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

    ஆனால் ஓ. பன்னீர் செல்வம் திமுக-வில் இணைந்துள்ளார். அவர் திமுக-வில் இணைந்தது துரதிருஷ்டவசமானது. அழிவுக்காலம் நெருங்கிவிட்டது என்று சசிகலா கடுமையாக விமர்சித்திருந்தார்.

    அதிமுக-வின் சீனியர் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். 2-ம் கட்ட தலைவர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.-க்களும் திமுக-வில் இணைந்துள்ளனர்.

    இந்த நிலையில் செங்கோட்டையன் குறித்து சசிகலா கூறுகையில் "செங்கோட்டையன் எதிரிகிட்டயும் போகவில்லை. துரோகிகள்கிட்டயும் போகவில்லை. புதிதான ஒரு இடத்துக்கு போயிருக்கிறார். அதுவரைக்கும் அவரின் முடிவு நல்லது என்பதுதான் என் கருத்து" என்றார்.

    ×