என் மலர்
ஆசிரியர் தேர்வு
- "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
- விருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.
அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அசாம் பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த இஸ்லாமிய வெறுப்பு வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.
"Point Blank Shot" என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், முதல்வர் பிஸ்வா கையில் ரைபிள் துப்பாக்கியை எடுத்து குறிபார்க்கிறார், அடுத்த காட்சியில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குல்லாய், தாடி உள்ளிட்ட இஸ்லாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது பொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
வீடியோவின் பின்னணியில் "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.
முதல்வர் பிஸ்வா அசாம் இஸ்லாமிய சமூகம் குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துக்களை கூறியும், நடவடிக்கை எடுத்தும் வரும் சூழலில் இந்த வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அசாம் பாஜக அந்தப் பதிவை நீக்கியது.
அசாம் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய், ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் குடும்பத்தினர் அசாம் முழுவதும் சுமார் சுமார் 4,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்த நில மோசடி புகாரிலிருந்து திசைதிருப்பவே பிஸ்வா இத்தகைய வகுப்புவாதக் கருத்துகளைப் பரப்புவதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் பொதுநிகழ்வு ஒன்றில் பேசிய பிஸ்வா, பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களான மியாக்களை தொந்தரவு செய்வதன் மூலமே அசாமிலிருந்து அவர்களை வெளியேற்ற முடியும்.
ஒரு ரிக்ஷா ஓட்டுநர் 'மியா' முஸ்லிமாக இருந்தால், ரூ.5 கட்டணத்திற்கு ரூ.4 மட்டும் கொடுங்கள். அவர்களுக்குத் தொல்லை கொடுத்தால் மட்டுமே அவர்கள் அசாமிலிருந்து வெளியேறுவார்கள்" என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.
மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.
- சட்ட சிக்கல்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன.
- இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் - நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "துருவநட்சத்திரம்". ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்தப் படம் இருக்கிறது.
சட்டரீதியிலான சிக்கல்கள் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போனது. இந்த நிலையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் "துருவநட்சத்திரம்" பட பிரச்சினை குறித்து புதிய தகவல் கொடுத்துள்ளார். அதன்படி இந்தப் படத்திற்கு இருந்த சட்டரீதியிலான பிரச்சினைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசும் போது, "2018ஆம் ஆண்டு இந்தப் படத்தை யூனிவர்ஸ் போன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனினும், படத்தின் பிரச்சினைகளை தீர்க்கவே அதிக காலம் கடந்துவிட்டது. எங்களுக்கு பணத்தேவை இருந்ததால், இந்தப் படத்திற்கு லியோ திரைப்படம் மிகவும் உதவிகரமாக இருந்தது."
"படத்தின் ரிலீசை ஒட்டி நாங்கள் சில சட்டரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொண்டோம். அவற்றை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம். தற்போதைக்கு ஒரேயொரு பிரச்சினை தான் மீதமுள்ளது. வரும் வாரத்தில் அதுவும் முடிக்கப்பட்டு விடும்," என்றார்.
முன்னதாக திரைத்துறையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் இசைக் கச்சேரியில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கவுதம் மேனன், படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறியிருந்தார். தற்போது படத்தின் பிரச்சினைகள் முடிந்துள்ளதாக கூறியிருப்பதை அடுத்து விரைவில், "துருவநட்சத்திரம்" படத்தின் புதிய ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம்.
- ஐந்து திட்டங்களுக்கு ரெயில்வே துறையால் நிலத் திட்ட அட்டவணை (LPS) இன்னும் வழங்கப்படவில்லை.
- நில எடுப்புப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கு நில உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்குவது மிக முக்கியம்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கிடவும், முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக புதிய ரெயில்வே திட்டங்களை அனுமதித்திடவும் ரெயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில்,
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்டு வரும் ரெயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவித்து, நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு, குறிப்பாக, நிலம் கையகப்படுத்துதலுக்கான நிதியை முறையாக விடுவித்தல் மற்றும் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் தொடங்குதல் போன்றவற்றில் இந்தியப் பிரதமர் அவர்கள் தலையிட்டு உரிய நேரத்தில் தீர்வு காணவேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதோடு, ஊடகங்களில் இதுதொடர்பாக பரவி வரும் உண்மைக்குப் புறம்பான சில செய்திகளுக்காகவும் இக்கடிதத்தினை எழுதுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில், ஒன்றிய அரசின் பல்வேறு ரெயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 2500.61.06 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதில் 931.52.96 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களுக்கு ரெயில்வே துறை நிதியை ஒதுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், ரெயில்வே துறையிடமிருந்து சமீபத்தில் திருத்தப்பட்ட நிலத் திட்ட அட்டவணை (LPS) பெறப்பட்ட இரண்டு திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நிர்வாக அனுமதி செயல்பாட்டில் உள்ளது என்றும், அது விரைவில் வழங்கப்படும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 19 முக்கிய ரெயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1273.05.15 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களில், 1198.02.34 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்கள், அதாவது 94 விழுக்காடு நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, அவை ரெயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், ஐந்து திட்டங்களுக்கு ரெயில்வே துறையால் நிலத் திட்ட அட்டவணை (LPS) இன்னும் வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டங்களான திண்டிவனம்-நகரி அகல ரெயில் பாதை, மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை, மணியாச்சி-நாகர்கோவில் அகல ரெயில் பாதை, கன்னியாகுமரி-நாகர்கோவில் அகல ரெயில் பாதை இரட்டிப்பாக்குதல், நாகர்கோவில்-இரணியல் அகல ரெயில் பாதை இரட்டிப்பாக்குதல், தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல ரெயில் பாதை (கட்டம்-I), சின்னசேலம்-கள்ளக்குறிச்சி புதிய அகல ரெயில் பாதை, மயிலாடுதுறை-திருவாரூர் அகல ரெயில் பாதை, பட்டுக்கோட்டை நான்கு முனை சந்திப்பு, புதிய அகல ரெயில் பாதை (சேலம்-கரூர் வழித்தடம் உருவாக்குதல்), மன்னார்குடி-நீடாமங்கலம் அகல ரெயில் பாதை, சென்னை கடற்கரை-கொருக்குப்பேட்டை மூன்றாவது, நான்காவது வழித்தடம் மற்றும் விழுப்புரம்-திண்டுக்கல் அகல ரெயில் பாதை ஆகிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும், மேலும், மீதமுள்ள திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நில எடுப்புப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கு நில உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்குவது மிக முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், துரதிர்ஷ்டவசமாக, ரெயில்வே அமைச்சகத்தால் நிதியை விடுவிப்பதில் ஏற்படும் தாமதங்கள், தனிப்பட்ட திட்டங்களுக்குப் பெரும்பாலும் நிதியினை முழுமையாக வழங்காமல் பிரித்து வழங்குவது என்பது, தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள முன்னேற்றத்தினைத் தடுத்து, தாமதங்களுக்கு வழிவகுத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நீடித்த நிச்சயமற்றதொரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.
'திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையேயான அகல ரெயில் பாதை இரட்டிப்பு' திட்டத்திற்கான 16.86.51 ஹெக்டேர் நில எடுப்புப் பணி முடிக்கப்படாமல் இருப்பது இதற்கு ஒரு பொருத்தமான உதாரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், இத்திட்டத்திற்கான நில எடுப்பிற்கு உரிய இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான 289.78 ரூபாய் கோடி நிதியினை ரெயில்வே துறை இன்னும் ஒதுக்கவில்லை என்றும், இது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு பெரிய திட்டம் என்றும், இது ஒன்றிய அரசின் திட்டக் கண்காணிப்புக் குழுவின் (PMG) வலைதளத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதலுக்கான நிதியை பகுதி, பகுதியாக வழங்குவதற்குப் பதிலாக, மொத்தமாக, சரியான நேரத்தில் ஒதுக்குவதன் மூலம், இந்த முக்கியமான திட்டங்களைத் தடையின்றி விரைவாக முடிக்க முடியும்.
தமிழ்நாடு அரசு, ரெயில்வே திட்டங்களுக்கு உயரிய முன்னுரிமை அளித்து, வலுவானதொரு கண்காணிப்பு வழிமுறையினை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை விரைவுபடுத்தவும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும், போக்குவரத்துத் துறை செயலாளரும் ரெயில்வே அதிகாரிகளுடன் தொடர்ந்து மாதாந்திர ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தருணத்தில், சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு புதிய ரெயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பது குறித்து தாம் கவலையோடு குறிப்பிட விரும்புவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான முக்கிய மையமாகவும் விளங்கும் தமிழ்நாடு, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குத் தொடர்ந்து கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது என்றும், மேம்பட்ட ரெயில் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மூலம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் மகத்தான ஆற்றலை தமிழ்நாடு கொண்டுள்ளது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு,
• நில எடுப்பு மற்றும் இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்திட ஏதுவாக, அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்குத் தேவையான நிதியை தாமதமின்றி, முழுமையாக, முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்கவும்;
• ரெயில்வே துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முக்கியமான திட்டங்களான தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழியாக) புதிய அகலப்பாதை மற்றும் திண்டிவனம்-திருவண்ணாமலை அகலப்பாதை (ஏற்கெனவே 931.52.96 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன) திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், இதற்குத் தேவையான நிதியினை வழங்கிடவும்;
• தமிழ்நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப, கூடுதலாக புதிய ரெயில் திட்டங்களை அனுமதிப்பது குறித்து பரிசீலித்திடவும்;
இந்தியப் பிரதமர் அவர்கள் தலையிட்டு, ஒன்றிய ரெயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் அவர்களின் தலையீடு, கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவதோடு, ஒன்றிய மற்றும் மாநில அரசின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்க உதவிடும்.
இந்நிலையில், ரெயில்வே திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தமிழ்நாடு அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் அவர்களிடமிருந்து விரைவில் சாதகமான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
- 2023-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
நெல்சன் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின் கிங்ஸ்லி . இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார். இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்.
நடிகர் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் இவரது நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது. அதன்பின்னர் விஜயுடன் 'பீஸ்ட்' மற்றும் ரஜினியுடன் 'ஜெயிலர்' படத்தில் நடித்து இருந்தார்.
இதனிடையே கடந்த 2023-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், விசிக தலைவர்திருமாவளவனை ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதி சந்தித்துள்ளனர். அப்போது ரெடின் கிங்ஸ்லி குழந்தையை திருமாவளவன் தூக்கி கொஞ்சினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இந்தியா-அமெரிக்கா வர்த்தக கட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக இந்திய வரைபடத்தை வெளியிட்டது.
- அதில், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவின் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.
வாஷிங்டன்:
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் வாஷிங்டனுக்கு பலமுறை பயணம் செய்து அமெரிக்காவின் ஆதரவைப்பெற முயற்சி செய்தனர். சர்வதேச அளவில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப பாகிஸ்தான் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீர் ஒற்றுமை தின உரையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இதுகுறித்து சர்ச்சையான கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக கட்டமைப்பு இன்று அதிகாரப்பூர்வ விளக்கப்படத்தில், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா காட்டியுள்ளது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட இந்த வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய எல்லைக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொருத்தமட்டில் அமெரிக்காவின் முதன்மையான மற்றும் மாற்ற முடியாத உலகளாவிய கூட்டாளி என்பதை அமெரிக்க அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இதேபோல், சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள அக்சய் சின் பகுதியும் இந்திய நிலப்பரப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள இந்திய வரைபடம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
- ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
புதுடெல்லி:
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் அபாரமாக செயல்பட்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றாா்.
ஜப்பானின் நோபடோ மிஸாகி, இந்தியாவின் மேக்னா சஜ்நாா் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா்.
- பா.ஜ.க. தேசிய தலைவரான நிதின் நபின் இருநாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.
- மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் நிதின் நபின் கலந்துகொண்டார்.
திருவனந்தபுரம்:
பா.ஜ.க. தேசிய தலைவரான நிதின் நபின் இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட நிதின் நபின் பேசியதாவது:
இந்த ஆண்டு நடைபெற உள்ள கேரள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். மாநில மக்களின் நம்பிக்கையை பாஜக பெற்றுள்ளது.
கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு நிறைய செய்துள்ளது. மாநிலத்திற்கு வழங்கப்பட்ட கடன்களில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாநிலத்திற்கு வழங்கப்படும் மானிய உதவிகளை இரட்டிப்பாக்குதல் ஆகியவை அடங்கும்.
மத்திய அரசு ஒருபோதும் மாநிலத்தின் மீது கஞ்சத்தனமான அணுகுமுறையைக் காட்டவில்லை. இந்தப் புள்ளிவிவரங்கள் அதைக் குறிக்கின்றன என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.
மும்பை:
10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. மும்பையில் இன்று நடந்த 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. முதலில் இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த அவர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 84 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 10 பவுண்டரியும் அடங்கும்.
அமெரிக்காவின் வான் ஷால்க்விக் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சஞ்சய்கிருஷ்ணமூர்த்தி 37 ரன்னும், மிலிந்த் குமார் 34 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஷுபம் ரஞ்சனே 37 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்
- அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்
நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.
ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.
அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்
இதை தொடர்ந்து, அஜித்தை அபுதாபி யாஸ் மரினா சர்க்யூட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
- இதில் உள்ள சமமின்மை வெளிப்படையாகத் தெரிகிறது.
- அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான சுங்க வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.
இந்தியா - அமெரிக்கா இடையேயே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியா மற்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இது ஒரு இடைக்கால ஒப்பந்தம் கூட கிடையாது. இது ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான Framework மட்டுமே.
அறிக்கையின் 2-வது பத்தி மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த வரைவு ஒப்பந்தத்தை மிகவும் தெளிவற்றதாக ஆக்கியுள்ளன.
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்த வரைவு ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமாகச் சாய்ந்துள்ளது மற்றும் இதில் உள்ள சமமின்மை வெளிப்படையாகத் தெரிகிறது.
உதாரணமாக, அனைத்து அமெரிக்கத் தொழில் துறைப் பொருட்கள் மற்றும் பரந்த அளவிலான உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான சுங்க வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.
ஆனால், இந்தியாவிலிருந்து வரும் பொருட்கள் மீது அமெரிக்கா 18 சதவீத சுங்க வரியை விதிக்கும். இந்தப் பொருட்களில் ஜவுளி, தோல் பொருட்கள், கரிம வேதிப்பொருட்கள் போன்றவை அடங்கும். இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே அமெரிக்கா இந்தச் சுங்க வரியை நீக்கும்.
குறிப்பிட்ட சில விமானங்கள் மற்றும் விமானப் பாகங்களைத் தவிர, எஃகு , தாமிரம் மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் மீதான அமெரிக்கச் சுங்க வரிகள் தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிகிறது.
நிலைமை இப்படி இருக்க, இந்த இடைக்கால ஒப்பந்தத்திற்கான Framework எப்படிக் கொண்டாட்டத்திற்குரிய விஷயமாக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
- இப்போது மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியைத் திணிக்கும் ஆபத்து உள்ளது
- திமுகதான் 7வது முறையும் ஆட்சி அமைக்கபோகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் தென் மண்டலக் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசியமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது 40க்கு 40' என்று விருதுநகர் மாநாட்டில் தான் நான் சொன்னேன். அதை நடத்திக் காட்டினோம். இப்போது 2026. இந்தத் தேர்தலில் புதிய சாதனை படைக்க நீங்கள் தயாரா? வெல்வோம் 200! இந்த வெற்றிக்கு உழைக்க நீங்கள் தயாரா? நான் ரெடி... நீங்க ரெடியா?
தி.மு.க. என்றால் பிரம்மாண்டம்; இளைஞரணி என்றால் பிரம்மாண்டம். உதயநிதி என்றால் அதைவிடப் பிரம்மாண்டம் என்றுதான் மற்றவர்கள் பார்வைக்கு இந்தக் கூட்டம் தெரியும்.
நமது தாய்மொழியான தமிழுக்கு பல்வேறு காலகட்டங்களில் ஆபத்து வந்தபோதெல்லாம், கடுமையாகப் போராடித் தடுத்த இயக்கம் தி.மு.க.
இப்போது மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியைத் திணிக்கும் ஆபத்து, இன்றைக்கும் நமது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகத்தான் இருக்கிறது.
பெண்களின் உழைப்பிற்கு மகளிர் உரிமைத்தொகை, அவர்கள் சுதந்திரமாகப் பயணம் செய்யக் கட்டணமில்லா விடியல் பயணம், பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்குத் தோழி விடுதி, பெண்கள் படிக்கப் புதுமைப்பெண் திட்டம் என நீங்கள் கெத்தாகச் சொல்வதற்கு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை இந்தத் திராவிட மாடல் அரசு செய்துள்ளது.
தேர்தலை மனதில் வைத்தாவது ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்குத் திட்டங்கள் ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், வழக்கம்போல் ஈரத்துண்டுதான் கிடைத்துள்ளது. பட்ஜெட்ல ஒன்றிய அரசு நமக்கு கொடுத்தது 0. நாமும் தேர்தல்ல அதையேதான திருப்பிக் தரணும்?
திமுகதான் 7வது முறையும் ஆட்சி அமைக்கபோகிறது. நம் எதிரிகள் யாருக்கும் இந்த சந்தேகம் கிடையாத. மாநிலங்களை முனிசிபாலிட்டி ஆக்கவும், மாநிலக் கட்சிகளை ஒழிக்கவும் பாஜக முயற்சிக்கிறது. ஆனால், அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு" என்று தெரிவித்தார்.
- கடந்த 100 ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையிலும் IQ அளவு அதிகரித்து வந்தது. ஆனால், இப்போது முதன்முறையாக இந்த வளர்ச்சி நின்றுள்ளது.
- பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் திறன் ஆகியவற்றை மழுங்கடிக்கிறது.
80, 90களில் பிறந்த மில்லினியல்கள் விட 1997-2012 காலகட்டத்தில் பிறந்த ஜென் Z தலைமுறையினரின் அறிவாற்றல் மற்றும் IQ குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
பிரபல நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய ஆய்வில், முந்தைய தலைமுறையை விட புதிய தலைமுறையின் IQ அதிகமாக இருக்கும் என்ற பிளைன் விளைவு கோட்பாடு தலைகீழாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது, கடந்த 100 ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையிலும் IQ அளவு அதிகரித்து வந்தது. ஆனால், இப்போது முதன்முறையாக இந்த வளர்ச்சி நின்று, IQ அளவுகள் குறையத் தொடங்கியுள்ளது.
புத்தகங்கள் வாசிப்பதை ஜென் Z தலைமுறையினர் பெருமளவு தவிர்த்துவிட்டு, அதிக நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர்.
நீண்ட கட்டுரைகளையோ அல்லது புத்தகங்களையோ வாசிக்காமல் சுருக்கமான தகவல்களையும் வீடியோக்களையும் பார்ப்பது ஆழமாகச் சிந்திக்கும் திறனை பாதிக்கிறது. இதனால் ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாமல்போகிறது.
அதிகப்படியான சமூக ஊடக பயன்பாடு, கவனச்சிதறலை அதிகரித்து, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் திறன் ஆகியவற்றை மழுங்கடிக்கிறது.
தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்திருந்தாலும், அது அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவாமல், அனைத்தையும் மேலோட்டமாகப் பார்க்கும் தன்மையை உருவாக்கியுள்ளது. இதுவே இந்தத் தலைமுறையின் அறிவுத்திறன் பாதிப்பிற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
அறிவுத்திறன் மட்டுமின்றி ஜென் Z தலைமுறையினர் பழக்க வழக்கங்களிலும் மில்லினியல்களை விட மாறுபட்டுள்ளது.
அதேநேரம், முந்தைய தலைமுறையில் 72 சதவீதமாக இருந்த மதுப்பழக்கத்தின் மீதான ஆர்வம் ஜென் Z இடையே 62 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.






