என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ளது.
    • தெய்வத் திருமகள் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்குகிறார். இப்படம் அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ளது.

    இப்படத்தில் இவருடன் சஞ்சய் தத், அக்ஷயே கண்ணா, அர்ஜுன் ரம்பல், மாதவன் மற்றும் தெய்வத் திருமகள் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

    படத்திற்கு சச்தேவ் இசையமைத்துள்ளார். மேலும் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா மற்றும் லோகேஷ் தர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

    • சுரங்கத்தில் பாலம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்..
    • சுரங்க விபத்தை பார்வையிடுவதற்காக அமைச்சர் பயணித்த விமானம் தீப்பற்றி எரிந்தது.

    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் லுவாலாபா மாகாணத்தில் உள்ள கலண்டோ சுரங்கத் தளத்தில் நவம்பர் 15-ம் தேதி பாலம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அங்கே பாதுகாப்பிற்கு இருந்த ராணுவத்தினர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு பீதியடைந்த தொழிலாளர்கள், சுரங்கத்தில் பாலம் வழியாக தப்பி செல்ல முயன்ற போது திடீர் அழுத்ததால் பாலம் சரிந்துள்ளது.

    இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட காங்கோ சுரங்கத்துறை மந்திரி லூயிஸ் வாடும் கபாம்பா மற்றும் அவரது குழுவை சேர்ந்த 19 பேர் தலைநகர் கின்ஷாசாவிலிருந்து விமானம் மூலம் லுவாலாபா மாகாணத்தின் கோல்வேசி விமான நிலையம் சென்றனர்.

    கோல்வேசி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது ரன்வேயில் இருந்து விலகிச்சென்று தீப்பற்றி எரிய தொடங்கியது.

    அங்கிருந்த அவசர கால மீட்புக்குழுவினர் விரைந்து செயல்பட்டு உள்ளே இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். தீயையும் அணைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.

    மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

    அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நடிகையின் குற்றச்சாட்டை ஷ்ரேயாஸ் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது. +91 75987 56841 இந்த நம்பர் என்னுடைய நம்பர் கிடையாது. என்னுடைய படத்துடன் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்கியது
    • அதற்கு பதிலாக ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு சிஎஸ்கே கொடுத்தது.

    ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் வழங்கி விட்டன.

    அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்கியது.

    அதன்படி சென்னை அணியில் விளையாடிய ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணியில் எடுப்பதற்காக இத்தனை வருடங்கள் விளையாடிய ஜடேஜவை சிஎஸ்கே அணி விட்டுக்கொடுப்பதா என ரசிகர்கள் கொந்தளித்து வந்தனர். மேலும் கடைசியாக ஜடேஜா ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சோக பாடல் பாடி வந்தனர்.

    இதனால் ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு சென்றது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் விளக்கமளித்தது. அதில் இரு நிர்வாகம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியே இந்த டிரேட் முறை நடந்ததாக கூறப்பட்டது.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் தன்னை ராஜஸ்தான் அணியில் எடுத்துக்கொள்ளுமாறு ஜடேஜா கேட்டுக் கொண்டதாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது சென்னை ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    எதனால் இந்த முடிவு இருக்கலாம் என்பது குறித்து ரசிகர்கள் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தோனி இந்த சீசனுடம் வெளியேறுவதால் இந்த முடிவை எடுத்திருக்காலம் என ஒரு சிலரும், என்னதான் சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தாலும் நமக்கான மதிப்பு இங்கு கிடைக்கவில்லை அதனால் தான் சென்றிருக்கலாம் என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • கட்சி தொடங்கியது முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிக-வின் முழக்கம்.
    • காலம் கனியும்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்போம்.

    விழுப்புரத்தில் நூலக கட்டிடத்தை வி.சி.க. பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான ரவிக்குமார் திறந்து வைத்தார். அப்போது 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. ஆட்சியில் பங்கு கேட்குமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு ரவிக்குமார் பதில் அளித்ததாவது:-

    * கட்சி தொடங்கியது முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிக-வின் முழக்கம்

    * காலம் கனியும்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்போம்.

    * 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு என்பதற்கான வாய்ப்பு இல்லை.

    * தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்

    * கடந்த தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றோம்.

    * 2026 தேர்தலில் இரட்டை இலக்கத்தில் விசிக-வுக்கு திமுக இடங்கள் வழங்கும்.

    இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.

    • குடியரசு கட்சி எம்.பி.க்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள்.
    • ஜனாபதிபதி டிரம்பும் அவருடைய குழுவும் ரஷியாவுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு போரிடுகிறார்கள்.

    அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்வைத்து பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். மேலும் உலக நாடுகளிடையே நிலவி வரும் மோதல்களை நிறுத்துவதாக கூறி வர்த்தக தடை, வரிவிதிப்பு என மிரட்டி வருகிறார்.

    2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்த நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைவிதித்தன. குறிப்பாக, ரஷியாவின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ள கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கு ஒருபடி மேல் ஏறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குதி செய்யும் நாடுகள் மீது அதிகப்பட்ச வரிவிதித்தார்.

    ஏற்கனவே இந்தியா மீது 25 சதவீதம் வரிவிதித்தநிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீதம் என உச்சபட்சமாக 50 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் சிறு-குறு-நடுத்தர தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர், "குடியரசு கட்சி எம்.பி.க்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும்.

    இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்க சொல்லியுள்ளேன்" என்றார். குடியரசு கட்சி செனட் சபை எம்.பி. லின்ட்லே கிராகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷிய எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் இறக்குமதி வரிவிதிக்கும் வகையில் புதிய மசோதாவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு செனட் சபையில் 85 எம்.பி.க்கள் ஆதரவளித்திருந்தனர். மீண்டும் இதற்கான வாக்களிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லின்ட்லே கூறுகையில், "ஜனாபதிபதி டிரம்பும் அவருடைய குழுவும் ரஷியாவுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு போரிடுகிறார்கள். இதன்மூலம் ரத்த ஆறு ஓடுவது நிறுத்தப்படும். புதினின் போர் எந்திரத்திற்கு கச்சா எண்ணெய் வாங்கி நிதியளிக்கும் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது விரைவில் சம்மட்டி அடி கொடுக்கப்படும்" என்றார்.

    • கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
    • தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந்தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

    அதன்படி, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து, அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப்பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) தொடருவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பேட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
    • வடமாநிலங்களில் ஆதாரில் ‘இனிசியல்’ போட மாட்டார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 4-ந்தேதி முதல் வீடு, வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 94 சதவீத வீடுகளுக்கு கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையிலும் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    ஆனால் அதில் விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். அதாவது ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் இருப்பவர்கள் மட்டுமே அதில் 'லாகின்' செய்ய முடிகிறது. செல்போன் எண் இல்லாதவர்கள், புதிதாக மனு செய்ய வேண்டி இருக்கிறது. பின்னர் படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்கு பதிலை பூர்த்தி செய்தவுடன் சமர்ப்பிப்பதற்கு ஆதார் எண் 'ஓ.டி.பி.' அங்கீகாரம் கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் அதில் பெரும்பாலானோருக்கு உங்களது பெயர் சரியாக இல்லை என்றே வருகிறது.

    இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பொதுவாக தமிழகத்தில் ஆதார் அட்டையில் ஒருவரது பெயருடன் 'இனிசியல்' அல்லது தந்தை பெயரும் முழுமையாக சேர்க்கப்பட்டு இருக்கும். ஆனால் வாக்காளர் அட்டையில் முதல் பெயர் மட்டுமே இருக்கும். அவருடைய 'இனிசியல்' சேர்க்கப்பட்டு இருக்காது. தந்தை பெயர் அதற்கு கீழ் தனியாக இருக்கும். இந்த பிரச்சனை தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் உள்ளது.

    வடமாநிலங்களில் ஆதாரில் 'இனிசியல்' போட மாட்டார்கள். தந்தை மற்றும் சாதி பெயரை சேர்த்து மொத்தமாக இருக்கும். அல்லது தங்கள் பெயர் மட்டுமே இருக்கும். அதேபோலதான் வாக்காளர் அடையாள அட்டையிலும் தங்களது பெயர் மட்டுமே இருக்கும்.

    எனவே இந்த பிரச்சனையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 15 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், ஊழியர் மற்ற வேலைகளில் பிஸியாக இருப்பதாக கருதப்படுகிறார்.
    • பதவி உயர்வு மற்றும் போனஸ் போன்ற விஷயங்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

    ஐடி நிறுவனமான COGNIZANT தனது ஊழியர்கள் பணி செய்கிறார்களா என்பதை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது.

    இதற்காக, 'ProHance' போன்ற பணியாளர் மேலாண்மை கருவிகளை பயன்படுத்த தொடங்கி உள்ளது.

    ProHance போன்ற ஒரு கருவி ஒரு ஊழியர் செயலற்ற நிலையில் இருக்கும் நேரத்தைக் கண்காணிக்கிறது.

    ஊழியர் பணியாற்றும் ஆபீஸ் கணினிகளில், மவுஸ் அல்லது கீ போர்டை 5 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், ஊழியர் செயலற்று உள்ளதாக கருதப்படுகிறார். 15 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், ஊழியர் மற்ற வேலைகளில் பிஸியாக இருப்பதாக கருதப்படுகிறார்.

    இந்த கண்காணிப்பு அமைப்பு ஒவ்வொரு டீமுக்கும் வித்தியாசமாக இருக்கும். இந்த செயல்முறை விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    அதாவது, இந்த கண்காணிப்பு தரவு, ஊழியர் செயல்திறனை மதிப்பிடவும், பதவி உயர்வு மற்றும் போனஸ் போன்ற விஷயங்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.  

    • சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான படம்.
    • இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

    2001-ம் ஆண்டு நடிகர்கள் விஜய்- சூர்யா இணைந்து நடித்து வெளியான படம் 'ஃப்ரண்ட்ஸ்'. இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, ஸ்ரீமன், விஜயலட்சுமி, மதன் பாப், சரிதா உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர்.

    மலையாள திரைப்படமான 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை தழுவியே இப்படம் வெளிவந்தது. சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும், கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் மீண்டும் 4-கே டிஜிட்டல் முறையில் வரும் 21-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ப்ரண்ட்ஸ் படத்தின் புதிய மேம்பட்ட டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

    • 2014-ல் பாஜக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 1035 ஆக இருந்தது.
    • தற்போது பீகார் தேர்தலுக்குப் பிறகு 1654 ஆக அதிகரித்துள்ளது.

    பீகார் சட்டசபையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடத்தில் வெற்றி பெற்றது. பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    இதன்மூலம் இந்தியா முழுவதும் உள்ள மாநில சட்டசபைகளில் பாஜக-வுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாஜக-வின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.

    பீகார் தேர்தலுடன் மொத்த எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 1654 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு வருடங்களில் இந்த எண்ணிக்கை 1,800 ஆக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

    2014-ல் இந்த எண்ணிக்கை 1035 ஆக இருந்தது என பாஜக ஐ.டி. தலைவர் தெரிவித்துள்ளார்.

    ×