search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajan chellappa"

    • நாளை மக்களவை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் இப்படி பதவி ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
    • டிடிவி தேவையில்லா வம்பு செய்கிறார்.

    மதுரை:

    மதுரையில் அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கே: நேற்று இதே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பாஜக கூட்டணியில் இருக்கும் எல்லா தலைவர்களும் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை எல்லாம் போட்டியிடுகிறார்கள். சேலத்து சிங்கம் என்று அழைக்கப்படும் எடப்பாடியாரோ, தங்கமணியோ ஏன் போட்டியிட பயப்படுகிறார்கள். வேறு ஒருவரை களத்தில் இறக்கிவிட்டு பலிகடா ஆக்குகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

    பதில்: எதிர்க்கட்சி தலைவராக, சட்டசபை உறுப்பினராக எங்களுடைய அருமையான அண்ணன் எடப்பாடி இருக்கிறார். அவர் மிகச்சிறந்த அரசியல்வாதி. அவரை பொறுத்தவரை அவர்கள் செய்த தவறை நியாயப்படுத்த பார்க்கிறார்கள்.

    ஒரு சட்டசபை உறுப்பினர் 2 தொகுதியில் ஒரு எம்.எல்.ஏ.க்கள் நிற்க கூடாது என்பது இப்போது மக்கள் மத்தியில் பாலிசியாக இருக்கிறது. 2 பேர் பணம், அரசாங்க பணம் வீணாவது, ஒரே தொகுதியில் 2 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் நிற்பது தவறு என்பது மரபு என்பது போல் கொண்டுவந்து கொண்டிருக்கிறோம்.

    ஒரு காலத்தில எம்.பி. நின்றார்கள், எம்.எல்.ஏ. நின்றார்கள். அந்த மரபு இருந்தது.

    ஆனால் தற்போது தங்கமணி சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். எடப்பாடி சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். வேலுமணி, நான் சட்டசபை உறுப்பினராக இருக்கிறேன்.

    இன்னொரு பதவி பொறுப்புக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு என்ன அவசியம் உள்ளது. நீங்கள் இத்தனை சட்டசபை உறுப்பினர்களை வீணாக்குகிறீர்கள். நீங்கள் ஜெயிப்பதற்கான வாய்ப்பே இல்லை.

    மத்திய அமைச்சர் நேற்று பதவி ஏற்கிறார். நாளை மக்களவை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் இப்படி பதவி ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு தோல்வியை சந்திப்போம் என்று முன்பே தெரியும்.

    ஓபிஎஸ்-க்கு நன்கு தெரியும் நாம் ஜெயிக்க முடியாது, இருக்கும் எம்.எல்.ஏ.வை கொஞ்ச நாள் வைத்திருப்போம் என்று.

    அவர் கட்சி மாறி இருக்கிறார். சட்டசபை உறுப்பினர் பதவியை இழக்க நேரிடப்போகிறது.

    அருமை அண்ணன் நாவலர், மிகப்பெரிய திறமையாளர், பேச்சாளர், கட்சி பொதுச்செயலாளராக இருந்தவரே தென்னை மர சின்னத்தில் நின்றுபடாதபாடு பட்டார்.

    இனிமேல் அவரை ஓபிஎஸ் என்று சொல்லாமல் பலாப்பழம் என்று தான் மக்கள் அழைக்கப்போகிறார்கள்.

    தேவையில்லாத வேலையில் இறங்கி தன்னைத்தானே இழிவு படுத்திக்கொண்டார்.

    சட்டசபை உறுப்பினர்களாக இருப்பவர்கள் வீணாக அரசு பணத்தை வீணடிக்க முயற்சிக்கிறார்கள். தோல்வியை சந்திப்போம் என்று தெரிந்தே நிற்கிறார்கள். இதுதான் உண்மையான நிலைமையே தவிர, இதில் டிடிவி எங்களை ஏன் குறை சொல்ல வேண்டும்.

    எடப்பாடியார் ஏன் எம்.பி.யாக நிற்க வேண்டும் அவசியமே இல்லை.

    அதிமுக 40 தொகுதிகளிலும் வென்று, சிறு கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தால் இந்திய துணை கண்டத்திற்கு பிரதமராக வர வேண்டும் என்றால் அன்று பிரதமராக வந்து ராஜ்ய சபா எம்.பி.யாக வந்து விட்டு போகிறார். டிடிவி தேவையில்லா வம்பு செய்கிறார்.

    அனைத்து மாநில கட்சிகளும் சேர்ந்து எடப்பாடியார் ராஜதந்திரம் மிக்கவர், திறமையானவர் என்று உணர்ந்து தேவே கவுடா, சந்திரசேகர் எப்படி பிரதமர் ஆனாரோ அதுபோல் எடப்பாடியார் பிரதமர் ஆக வேண்டும் என்று நினைக்கும்போது, பிரதமர் ஆக்க நினைக்கும்போது ராஜ்யசபா எம்.பி. ஆகி விட்டு போகிறார்.

    அண்ணா முதலமைச்சராகும்போது ராஜ்ய சபை எம்.பி.யாக தான் வந்தார்.

    நீங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் மண்ணை வாரிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    கே: எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கள்ள கூட்டணி வைத்துள்ளார் என்று டிடிவி கூறுவது?

    பதில்: மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவங்க சொன்னது ஒரு புறம். டிடிவி சொன்னது ஒரு புறம். டிடிவிக்கு நல்லா தெரியும். திமுகவுடன் கள்ள கூட்டணி வைக்க வேண்டிய அவசியமே இல்லை. தேவையில்லாத வார்த்தைகளை பேசி வருகிறார்.

    இப்போது அதிமுக ஜெயிக்கப்போகிறது, வெற்றி பெறப்போகிறது என்று தெரிந்து விட்டது. அதனால் அவர்கள் குறைகளை சொல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

    நிச்சயமாக அந்த வாய்ப்புகள் இல்லை. அதிமுக தனித்து நிற்கிறது. தனி தலைவராக அண்ணன் எடப்பாடியார். இப்போது ஒப்பற்ற தலைமையோடு மிச்சிறந்த தலைமையோடு இன்று மக்கள் மத்தியில் எங்கே பார்த்தாலும் எடப்பாடியார் தான் பேச்சு.

    இன்றைய அரசியலில் மக்கள் மத்தியில் எடப்பாடியார் தான் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அவருடைய ஈர்ப்பு சக்தியால், பேச்சாற்றலால், பணியாற்றலால், மிகச்சிறந்த உண்மையான உணர்வுகளோடு பேசுகிற காரணத்தால் இன்று மக்கள் பேசுகிறார்கள். அவர் உள்ளத்தில் இருந்து பேசுகிறார். அதனால் நடக்கிறது. வெற்றியோடு நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

    • தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தமிழகத்தில், மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார்.
    • ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

    மதுரை

    மதுரையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

    மாநாட்டின் இறுதியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நன்றி உரையாற்றினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதி இன்றி தவித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் விலையேற்றம், வரி சுமை ஆகியவற்றின் காரண மாக தி.மு.க. அரசு மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த ஆட்சியின் கொடூர பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள கழகத்தின் பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமியை தான் மக்கள் சாமியாக நினைக்கிறார்கள். அதற்கு சாட்சியாக தான் இந்த மாநாட்டில் அலை கடலென மக்கள் வெள்ளம் திரண்டு வந்துள்ளது.

    எனவே தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் நெருங்கி விட்டது. தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி நமது எடப்பாடி யாரை தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஆக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.

    எனவே இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனை வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • உதயநிதி இப்போது எய்ம்ஸ் பற்றி வாய் திறக்காதது ஏன்? என ஆர்ப்பாடடத்தில் ராஜன் செல்லப்பா பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

    இதில் அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல.ஏ பேசியதாவது:-

    தி.மு.க. அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம், மாதம் ஒரு முறை மின் கட்டண வசூல் உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைத்தது.தற்போது மின்கட்டணத்தை 53 சதவீதமும், வீட்டு வரியை 100 சதவீதமும் உயர்த்தி விட்டார்கள். பால் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

    தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செய்யும் என மக்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் தற்போதைய விலைவாசி ஏற்றம் அவர்களை பெரிய ஏமாற்றத்தில் தள்ளிவிட்டது. கொரோனாவுக்கு பிறகு பொதுமக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு மாறி வருகின்றனர். அதற்குள் இந்த விலைவாசி ஏற்றம் அவர்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும்.

    தற்போது புயல், மழை காரணமாக மக்கள் பல்வேறு பாதிப்பு அடைந்திருக்கும் நிலையில் முதல்வர் தனது மகனுக்கு அமைச்சர் பதவியேற்பு விழா நடத்துகிறார். தேர்தலின் போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று கூறி செங்கல்லை தூக்கி வாக்கு சேகரித்த உதயநிதி தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து வாய் திறக்கவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. குடி மராமத்து பணி மூலம் தமிழகமெங்கும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு தற்போது விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகின்றனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அ.தி.மு.க.வின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள். பொது மக்களுக்கான திட்டங்கள் எதையும் செய்யவில்லை. இதனால் தி.மு.க. மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

    வருகிற நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் பாண்டிச்சேரி என 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஆர்ப்பாட்டத்தில்

    இவ்வாறு அவர் பேசினார்.

    பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ் சத்யன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா?
    • உதயநிதி அமைச்சர் பதவி பெற போகிறார், இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?.

    திருப்பரங்குன்றம்:

    தி.மு.க. அரசை கண்டித்து மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியுள்ளதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பால் விலை, மின்சார கட்டணம் 53 சதவீதமும், வீட்டு வரி 100 சதவீதம் ஏற்றி விட்டார்கள்.

    இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள். மேலும் அவர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பதவி பெற போகிறார். இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடைந்திருக்கும் போது முதலமைச்சர் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன்?.

    செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா, ஜெயலலிதா கொண்டு வந்த மினி கிளினிக்கை கொண்டு வருவாரா, பெண்களுக்கான மிக்சி, கிரைண்டர் கொடுக்கப் போகிறாரா?.  பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஆளுநர் பதவியை வாங்கிக் கொண்டு போய் விட்டால் அண்ணா தி.மு.க.வுக்கு தொல்லை நீங்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். 

    • புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
    • இதற்கான ஏற்பாடுகளை அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி மாவட்ட செயலாளரும், பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமையில் அந்த கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே. சந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன்தாஸ், பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் பொன்.முருகன், நாகரத்தினம், முத்துக்குமார், பாலா, என்.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கிரிவலப் பாதையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • துணை ெபாதுச் செயலாளர் பதவி ராஜன்செல்லப்பாவுக்கு கிடைக்குமா? என்று தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • இவர் ஆரம்பம் முதல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும், அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனும் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. துணைப்பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வுக்கு இந்த பதவி வழங்கப்படும் என தொண்டர்கள் எதிர்பார்கின்றனர்.

    இவர் ஆரம்பம் முதல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    மேலும் 2019-ம் ஆண்டு அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமையே வேண்டுமென முதலில் குரல் கொடுத்தவர் ராஜன் செல்லப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் அ.தி.மு.க.வில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாவட்ட செயலாளராகவும் மதுரை மாநகர மேயராகவும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்த நிலையில் தற்போது அந்தப் பதவி இவருக்கு கிடைக்கும் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    வருகிற தேர்தலில் அ.தி. மு.க. கூட்டணி அமைத்து தான் போட்டியிட வேண்டுமென்று அவசிய மில்லை. குறிப்பாக தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வுக்கு அவசியமில்லை என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #rajanchellappa

    மதுரை:

    மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சம் செலவில் செல்லூர் பகுதியில் 3 பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைக்கு செல்லூர் பகுதியில் 3 பேவர் பிளாக் சாலை ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.

    தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் செய்து தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கமாகும். இந்த இயக்கத்தில் தொண்டராக இருப்பது பெருமை.

    அ.தி.மு.க.வின் எம்.ஜி. ஆர்., இரட்டை இலையை மறந்து வேறு கட்சிக்கு எந்த தொண்டனும் செல்ல மாட்டார்கள். ஆனால் எங்களிடம் பிரிந்து சென்ற சிலர் தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல் வந்துள்ளது. அதற்கு காரணம் அவர்கள் ஏற்றுள்ள தலைமையின் சுய நலமும் தான்.

    மதுரையை பொறுத்த வரை அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் பணி செய்து வருகிறார்கள்.

    கஜா புயல் பாதிப்புக்கான நிவாரண தொகை மத்திய அரசு உடனே அறிவிக்க வலியுறுத்தி நாடாளு மன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

    தமிழ்நாடு என்றாலே மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது. மத்தியில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் இதே நிலைதான்.

    எனவே தான் நாங்கள் அம்மா பிரதமராக வர வேண்டும் என பாடுபட்டோம். அந்த முயற்சி நடக்காமலே போய்விட்டது. விரைவில் எம்.பி.க்கள் தேர்தல் வர உள்ளது.

    வருகிற தேர்தலில் அ.தி. மு.க. கூட்டணி அமைத்து தான் போட்டியிட வேண்டுமென்று அவசிய மில்லை. குறிப்பாக தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வுக்கு அவசியமில்லை.

    1 1/2 கோடி தொண்டர்கள் உள்ள மிகப்பெரிய இயக்கம் அ.தி.மு.க. மக்கள் செல்வாக்கு உள்ளது. எனவே தனித்து நின்று எந்த தேர்தலையும் சந்திப்போம்.

    தெலுங்கானாவில் கூட சந்திரசேகரராவ் தனித்து நின்று வெற்றி பெற்று உள்ளார். அ.தி.மு.க.வும் தனித்து நின்று போட்டியிடும். தேவைப்படும் பட்சத்தில் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து அ.தி.மு.க. மேலிடம் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பேவர் பிளாக்சாலை திறப்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், ஜெயவேல், ஒச்சாத்தேவர், ஆறுமுகம், சோலைராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். #rajanchellappa

    ‘சர்கார்’ சினிமாவில் சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்யப்படுவதை வரவேற்கிறோம் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். #Sarkar #ADMK #RajanChellappa
    மதுரை:

    மதுரையில் ‘சர்கார்’ சினிமா திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க. வினர் நேற்று மதியம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மீதான ‘சர்கார்’ காட்சிகள் அனைத்தையும் நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அந்தக்காட்சிகள் நீக்கம் செய்த பின்னர் சினிமாவில் திரையிட வேண்டும் என்றும் தியேட்டர் மானேஜரை சந்தித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வற்புறுத்தினார். இதையடுத்து நேற்று மதிய காட்சியும் ரத்து செய்யப்பட்டது.

    ‘சர்கார்’ படத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

    இன்று மதியம் முதல் திரையிடப்படும் ‘சர்கார்’ படத்தில் சர்ச்சை காட்சிகள் இருக்காது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

    இது குறித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    மறைந்த தலைவர் குறித்தும், அரசின் நலத் திட்டங்கள் குறித்தும் சினிமாவில் விமர்சனங்கள் செய்வது கண்டனத்துக்குரியது.

    தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அ.தி.மு.க. அரசு செய்துள்ள சாதனை திட்டங்களை வேண்டுமென்றே உள் நோக்கத்தில் கொச்சைப்படுத்த சர்கார் திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை தான் அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்தோம். இப்போது சர்கார் படக்குழு சர்ச்சை காட்சிகளை நீக்க முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

    இது போன்று இனி மேலும் நடக்காதவாறு திரையுலகினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மதுரை அண்ணாநகர் பகுதியில் ரூ.22 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அண்ணாநகர் முருகன், ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Sarkar #ADMK #RajanChellappa
    மதுரையில் நாளை அண்ணாவின் 110-வது பிறந்தநாளை யொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அமைச்சர் செல்லூர்ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார். #ADMK #Sellurraju
    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (15-ந்தேதி) காலை 9 மணிக்கு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    நிகழ்ச்சியில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இதில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள், முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பிக்கும்படி வேண்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ADMK #Sellurraju
    திருப்பரங்குன்றத்தில் நாளை அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடக்கிறது என்று ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அம்மாவின் நல்லாசியுடன், துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள 95, 96 ஆகிய வார்டு களின் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் உள்ள மரகதம் மகாலில் எனது தலைமையில் நடைபெறுகிறது

    மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பகுதி செயலாளர்கள் பன்னீர்செல்வம், முனி யாண்டி, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் நிலை யூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட் டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ ஆகியோர் ஆலோசனை வழங்குகின்றனர்.

    நிகழச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, பெரியபுள்ளான் (எ) செல்வம், மாணிக்கம், சரவணன், நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் செயல்வீரர்களும், செயல்வீரங்கனைகளும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வந்தது ஒரு வெற்றி வரலாறு என்று ராஜன் செல்லப்பா எம். எல்.ஏ. கூறினார்.

    திருப்பரங்குன்றம்:

    காவிரி நதிநீர் பிரச் சினையில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதையொட்டி திருப்பரங்குன்றத்தில் நடந்த காவிரி வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது:-

    காவிரி பிரச்சனை என்பது பல ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் பிரச்சினை ஆகும். 1974ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் அப்போதிருந்த கருணாநிதி தன் மீது உள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கமறுத்து விட்டதோடு காவிரி வழக்கில் தமிழக அரசின் சார்பில் போடப்பட்ட வழக்கையும் வாபஸ் பெற்றார்.

    காவிரி பிரச்சனையில் புரட்சித்தலைவர் முதன் முதலாக உச்சநீதிமன்றம் சென்றார். அதனை யொட்டி புரட்சித்தலைவி அம்மா பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

    அதில் சென்னை கடற்கரையில் 80 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்து காவிரிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தார்.

    மேலும் 2013ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பைமத்திய அரசிதழில் அம்மா வெளியிடச் செய்து தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தையும் அமைக்க உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

    அம்மாவின் மறைவிற்குப் பின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழு ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசுஅமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றது மட்டுமல்லாது காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசிதழில் வெளியிடச்செய்துகாவிரி நீர் பிரச்சினையில் ஒரு நிரந்தரதீர்வை பெற்று மாபெரும் வரலாற்றை அம்மாவின் அரசு படைத்துள்ளது

    டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்று அம்மா கடுமையாக போராடினார் தொடர்ந்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அம்மாவின் இந்த கனவை நனவாக்கும் வண்ணம் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மத்திய அரசிடம் கடுமையாக போராடி எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வந்து மாபெரும் ஒரு வெற்றி வரலாற்றை படைத்துள்ளனர்.

    இந்த எய்ம்ஸ் மருத்துவ மனை மூலம் தென் மாவட்டத்திலுள்ள 19 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவது மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளா மாநிலத்து மக்களும் பயன் பெறுவார்கள்.

    எய்ம்ஸ் மருத்துவ மனைரூ.1500 கோடியில் உருவாகிறது. இதில் மிகச் சிறப்பு என்றால் இந்த மருத்துவமனை மதுரை புறநகர் பகுதியைச் சேர்ந்த தோப்பூரில் அமைய உள்ளது.

    மதுரை புறநகர் பகுதிக்கு இதை உருவாக்கிகொடுத்த முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

    ×