search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை-ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாடு
    X

    ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பொதுமக்களுக்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.

    ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை-ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாடு

    • புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
    • இதற்கான ஏற்பாடுகளை அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி மாவட்ட செயலாளரும், பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமையில் அந்த கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே. சந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன்தாஸ், பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் பொன்.முருகன், நாகரத்தினம், முத்துக்குமார், பாலா, என்.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கிரிவலப் பாதையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×