search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்திய துணை கண்டத்திற்கு ஈபிஎஸ் பிரதமராவார்
    X

    இந்திய துணை கண்டத்திற்கு ஈபிஎஸ் பிரதமராவார்

    • நாளை மக்களவை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் இப்படி பதவி ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
    • டிடிவி தேவையில்லா வம்பு செய்கிறார்.

    மதுரை:

    மதுரையில் அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கே: நேற்று இதே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பாஜக கூட்டணியில் இருக்கும் எல்லா தலைவர்களும் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை எல்லாம் போட்டியிடுகிறார்கள். சேலத்து சிங்கம் என்று அழைக்கப்படும் எடப்பாடியாரோ, தங்கமணியோ ஏன் போட்டியிட பயப்படுகிறார்கள். வேறு ஒருவரை களத்தில் இறக்கிவிட்டு பலிகடா ஆக்குகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

    பதில்: எதிர்க்கட்சி தலைவராக, சட்டசபை உறுப்பினராக எங்களுடைய அருமையான அண்ணன் எடப்பாடி இருக்கிறார். அவர் மிகச்சிறந்த அரசியல்வாதி. அவரை பொறுத்தவரை அவர்கள் செய்த தவறை நியாயப்படுத்த பார்க்கிறார்கள்.

    ஒரு சட்டசபை உறுப்பினர் 2 தொகுதியில் ஒரு எம்.எல்.ஏ.க்கள் நிற்க கூடாது என்பது இப்போது மக்கள் மத்தியில் பாலிசியாக இருக்கிறது. 2 பேர் பணம், அரசாங்க பணம் வீணாவது, ஒரே தொகுதியில் 2 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் நிற்பது தவறு என்பது மரபு என்பது போல் கொண்டுவந்து கொண்டிருக்கிறோம்.

    ஒரு காலத்தில எம்.பி. நின்றார்கள், எம்.எல்.ஏ. நின்றார்கள். அந்த மரபு இருந்தது.

    ஆனால் தற்போது தங்கமணி சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். எடப்பாடி சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். வேலுமணி, நான் சட்டசபை உறுப்பினராக இருக்கிறேன்.

    இன்னொரு பதவி பொறுப்புக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு என்ன அவசியம் உள்ளது. நீங்கள் இத்தனை சட்டசபை உறுப்பினர்களை வீணாக்குகிறீர்கள். நீங்கள் ஜெயிப்பதற்கான வாய்ப்பே இல்லை.

    மத்திய அமைச்சர் நேற்று பதவி ஏற்கிறார். நாளை மக்களவை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் இப்படி பதவி ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு தோல்வியை சந்திப்போம் என்று முன்பே தெரியும்.

    ஓபிஎஸ்-க்கு நன்கு தெரியும் நாம் ஜெயிக்க முடியாது, இருக்கும் எம்.எல்.ஏ.வை கொஞ்ச நாள் வைத்திருப்போம் என்று.

    அவர் கட்சி மாறி இருக்கிறார். சட்டசபை உறுப்பினர் பதவியை இழக்க நேரிடப்போகிறது.

    அருமை அண்ணன் நாவலர், மிகப்பெரிய திறமையாளர், பேச்சாளர், கட்சி பொதுச்செயலாளராக இருந்தவரே தென்னை மர சின்னத்தில் நின்றுபடாதபாடு பட்டார்.

    இனிமேல் அவரை ஓபிஎஸ் என்று சொல்லாமல் பலாப்பழம் என்று தான் மக்கள் அழைக்கப்போகிறார்கள்.

    தேவையில்லாத வேலையில் இறங்கி தன்னைத்தானே இழிவு படுத்திக்கொண்டார்.

    சட்டசபை உறுப்பினர்களாக இருப்பவர்கள் வீணாக அரசு பணத்தை வீணடிக்க முயற்சிக்கிறார்கள். தோல்வியை சந்திப்போம் என்று தெரிந்தே நிற்கிறார்கள். இதுதான் உண்மையான நிலைமையே தவிர, இதில் டிடிவி எங்களை ஏன் குறை சொல்ல வேண்டும்.

    எடப்பாடியார் ஏன் எம்.பி.யாக நிற்க வேண்டும் அவசியமே இல்லை.

    அதிமுக 40 தொகுதிகளிலும் வென்று, சிறு கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தால் இந்திய துணை கண்டத்திற்கு பிரதமராக வர வேண்டும் என்றால் அன்று பிரதமராக வந்து ராஜ்ய சபா எம்.பி.யாக வந்து விட்டு போகிறார். டிடிவி தேவையில்லா வம்பு செய்கிறார்.

    அனைத்து மாநில கட்சிகளும் சேர்ந்து எடப்பாடியார் ராஜதந்திரம் மிக்கவர், திறமையானவர் என்று உணர்ந்து தேவே கவுடா, சந்திரசேகர் எப்படி பிரதமர் ஆனாரோ அதுபோல் எடப்பாடியார் பிரதமர் ஆக வேண்டும் என்று நினைக்கும்போது, பிரதமர் ஆக்க நினைக்கும்போது ராஜ்யசபா எம்.பி. ஆகி விட்டு போகிறார்.

    அண்ணா முதலமைச்சராகும்போது ராஜ்ய சபை எம்.பி.யாக தான் வந்தார்.

    நீங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் மண்ணை வாரிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    கே: எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கள்ள கூட்டணி வைத்துள்ளார் என்று டிடிவி கூறுவது?

    பதில்: மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவங்க சொன்னது ஒரு புறம். டிடிவி சொன்னது ஒரு புறம். டிடிவிக்கு நல்லா தெரியும். திமுகவுடன் கள்ள கூட்டணி வைக்க வேண்டிய அவசியமே இல்லை. தேவையில்லாத வார்த்தைகளை பேசி வருகிறார்.

    இப்போது அதிமுக ஜெயிக்கப்போகிறது, வெற்றி பெறப்போகிறது என்று தெரிந்து விட்டது. அதனால் அவர்கள் குறைகளை சொல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

    நிச்சயமாக அந்த வாய்ப்புகள் இல்லை. அதிமுக தனித்து நிற்கிறது. தனி தலைவராக அண்ணன் எடப்பாடியார். இப்போது ஒப்பற்ற தலைமையோடு மிச்சிறந்த தலைமையோடு இன்று மக்கள் மத்தியில் எங்கே பார்த்தாலும் எடப்பாடியார் தான் பேச்சு.

    இன்றைய அரசியலில் மக்கள் மத்தியில் எடப்பாடியார் தான் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அவருடைய ஈர்ப்பு சக்தியால், பேச்சாற்றலால், பணியாற்றலால், மிகச்சிறந்த உண்மையான உணர்வுகளோடு பேசுகிற காரணத்தால் இன்று மக்கள் பேசுகிறார்கள். அவர் உள்ளத்தில் இருந்து பேசுகிறார். அதனால் நடக்கிறது. வெற்றியோடு நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

    Next Story
    ×