என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
- ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
- இப்படம் வருகிற மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, தற்போது சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி பத்து மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தை கவர்ந்து வருகிறது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இப்படம் வருகிற மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
We can't get enough of #NammaSatham from #PathuThala ?
— Studio Green (@StudioGreen2) March 27, 2023
Time to celebrate 10M+ views for this banger! ?
?: https://t.co/GOea7JKl10
An @arrahman Musical
✍️ @Lyricist_Vivek
? @iamSandy_Off
? @nameis_krishna pic.twitter.com/FGIMZp6WNa
- அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக எஸ்எஸ்எம்பி28 திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படம் ஜனவரி 13, 2024 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக எஸ்எஸ்எம்பி28 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் சார்பில் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) தயாரிக்கிறார். இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
குடும்ப அம்சங்களுடன் கூடிய ஆக்ஷன் கலந்த என்டர்டெய்னர் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜனவரி 13, 2024 ஆண்டு வெளியாகவுள்ளதாக மகேஷ் பாபுவின் கதாப்பாத்திர லுக்குடன் கூடிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் திரைப்படம் ஆர்.சி.15.
- இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரன் நடிப்பில் ஆர்.சி.15 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஆர்சி15 படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆர்சி15 படத்தின் டைட்டில் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு கேம் சேஞ்ஜர் என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து பிரலமடைந்த மலையாள நடிகர் இன்னொசென்ட் காலமானார்.
- இவருடைய மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட், தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிப்புக்காக கேரள அரசு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் மலையாள நடிகர் சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இன்னொசென்டுக்கு தற்போது 75 வயது ஆகிறது. இவருக்கு ஏற்கனவே தொண்டை புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சைக்கு பிண் குணம் அடைந்தார். சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் மீண்டும் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து, எக்மோ கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் இன்னொசென்ட் நேற்று இரவு காலமானார். மருத்துவமனையின் அறிக்கையின்படி, அவர் கொரோனா தொற்று, சுவாச நோய்கள், பல உறுப்புகள் செயல்படாதது மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் இன்னொசென்ட்டின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய வீடியோவை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்துள்ளது. டிரைலர் வெளியாக இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
The charismatic #Vanthiyathevan is marching towards his battle for justice and love!#PS2Trailer from 29th March! Just 3 days to go!
— Madras Talkies (@MadrasTalkies_) March 26, 2023
#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial @IMAX @primevideoIN @Karthi_Offl pic.twitter.com/5e9h4ZKL1R
- ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘1947- ஆகஸ்ட் 16'.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளதாகவும் இதில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணையவுள்ள படம் குறித்து அறிவிப்பு அப்பொழுது வெளியாகும் என கூறப்படுகிறது.
- பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே வாரணாசியில் உள்ள ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்த கொண்டுள்ளார்.
- இவர் 17 வயதில் மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தில் அறிமுகமானார்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (வயது 25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆகான்க்சா, முதன்முறையாக மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தில் தனது 17 வயதில் நடித்து அறிமுகமானார். அதன்பின், போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி 2 மற்றும் பிற படங்களிலும் அவர் நடித்து உள்ளார். போஜ்புரியில் பிரபல நடிகர்களான கேசரி லால் யாதவ், பவன் சிங் மற்றும் பிரதீப் பாண்டே ஆகியோருடனும் ஒன்றாக நடித்து உள்ளார். நேற்றிரவு பாடல் ஒன்றுக்கு செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், தூக்கு போட்ட நிலையில் அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து உள்ளது. நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்த ஆகான்க்சா, அதுபற்றி சமீபத்தில், காதலர் தினத்தில் சமூக வலைத்தளத்தின் வாயிலாக காதலை அவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் டிரைலர் வருகிற 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தின் டிரைலரும் அதே நாளில் வெளியாகவுள்ளது. இதற்காக ஏற்பாடுகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சி வருகிற 29ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏ.ஆர்.ரகுமானின் இசை குறித்த கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் அறிவிப்புகளால் படக்குழு ரசிகர்களை திணறடித்து வருவதாக ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி எப்படி அந்த கதாப்பாத்திரமாக மாறினார் என்பது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் பொன்னியின் செல்வனாக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் டிரைலர் வருகிற 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தின் டிரைலரும் அதே நாளில் வெளியாகவுள்ளது. இதற்காக ஏற்பாடுகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி எப்படி உருமாறினார் என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பலரையும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
The man. The myth. The legend.
— Lyca Productions (@LycaProductions) March 26, 2023
Prince #ArunmozhiVarman himself! Watch how @actor_jayamravi transformed into #PonniyinSelvan?
#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @PrimeVideoIN pic.twitter.com/xyZnl3rot0
- அகில் சந்தோஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரேசர்".
- இப்படத்தின் கதாநாயகியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் லாவண்யா நடிக்கிறார்.
ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்திருக்கும் படம் "ரேசர்". இப்படத்தில் நிஜ பைக் ரேஸ் வீரர்களுடன் அகில் சந்தோஷ் நடிக்கிறார். இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் லாவண்யா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆறுபாலா, '"திரௌபதி" சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனை சதீஷ் (எ) சாட்ஸ் ரெக்ஸ் இயக்குகிறார். சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி (ரெடால் மீடியா ஒர்க்ஸ்) இணை தயாரிப்பு செய்திருக்கிறார். பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பரத் இசை அமைத்திருக்கிறார்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் பெரிய பைக் ரேசர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் கதாநாயகனை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்துக்காக பாண்டிச்சேரியில் பெரும் பொருட் செலவில் பைக் ரேஸ் நடக்கும் பந்தய மைதானம் அமைக்கப்பட்டது. இந்த போட்டியின் முக்கிய காட்சிகள் ஏற்காட்டில் படமாக்கப்பட்டது. மேலும் சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது. "ரேசர்" திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- "செங்களம்" இணையத் தொடர் கடந்த மார்ச் 24ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
- இந்த இணையத் தொடர் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இணையத் தொடர் செங்களம். இதில் கலையரசன், வாணி போஜன், வேல ராமமூர்த்தி, பகவதி பெருமாள், பிரேம், டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை அபி மற்றும் அபி என்டர்டெயின்மென்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரித்துள்ளார்.
இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் சூர்யகலாவாக வாணி போஜனும், ராயராக கலையரசனும், கணேஷமூர்த்தி எம்எல்ஏ-வாக வேல ராமமூர்த்தியும், ராஜமாணிக்கமாக பிரேமும், வீராவாக டேனியலும் நடித்துள்ளனர்.
"செங்களம்" இணையத் தொடர் கடந்த மார்ச் 24ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இந்த செங்களம் தொடர் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இணையத்தொடரை பார்த்த பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
- விக்ரம் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்கலான் படத்தில் நடித்து வரும் நடிகர் டேனியல் கால்டகிரோன் படப்பிடிப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பது, உண்மையில் ஒரு தகுதியான இடைவெளி! இந்த அற்புதமான நாட்டை, இங்குள்ள அனைத்து அழகான முகங்களையும், எனது அற்புதமான சக ஊழியர்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக தலைசிறந்த இயக்குனரையும் விட்டு விடைபெற போகிறேன். ஒரு மாதத்தில் சந்திப்போம் என்று பதிவிட்டிருக்கிறார்.
இவரின் இந்த பதிவிற்கு இயக்குனர் பா.இரஞ்சித் பதிவிட்டிருப்பது, இந்த படத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை முற்றிலும் மதிக்கிறேன், விரைவில் சந்திப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.
Absolutely respect your dedication and hard work towards this flim,see you soon!?@DanCaltagirone https://t.co/7AU6cLCOx6
— pa.ranjith (@beemji) March 25, 2023
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்