search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SR Prabhakaran"

    • இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் தந்தை உயிரிழப்பு.
    • இவரது உடல் அவரின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் தந்தை சூலி ராமு( 23:12:2023) இன்று நற்பகல் 2 மணியளவில் மதுரையில் காலமானார் இவருக்கு வயது 74. மதுரை அருகே உள்ள அவரது பூர்வீகமான ஒத்தவீடு கிராமத்தில் நாளை (24:12:2023) பகல் 2 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் மற்றும் கொம்பு வெச்ச சிங்கம்டா போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.ஆர். பிரபாகாரன். இவர் கடைசியாக இயக்கி ஒ.டி.டி. தளத்தில் வெளியான "செங்கலம்" இணைய தொடர் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • "செங்களம்" இணையத் தொடர் கடந்த மார்ச் 24ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
    • இந்த இணையத் தொடர் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இணையத் தொடர் செங்களம். இதில் கலையரசன், வாணி போஜன், வேல ராமமூர்த்தி, பகவதி பெருமாள், பிரேம், டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை அபி மற்றும் அபி என்டர்டெயின்மென்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரித்துள்ளார்.


    செங்களம்

    செங்களம்

    இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் சூர்யகலாவாக வாணி போஜனும், ராயராக கலையரசனும், கணேஷமூர்த்தி எம்எல்ஏ-வாக வேல ராமமூர்த்தியும், ராஜமாணிக்கமாக பிரேமும், வீராவாக டேனியலும் நடித்துள்ளனர்.


    செங்களம்

    செங்களம்

    "செங்களம்" இணையத் தொடர் கடந்த மார்ச் 24ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இந்த செங்களம் தொடர் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இணையத்தொடரை பார்த்த பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

    கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை இயக்கி வரும் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. #SRPrabhakaran
    ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். 2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. 

    இப்படத்தை தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் - மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 



    இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
    எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாக இருக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை சமுத்திரகனி கிளாப் அடித்து துவக்கி வைத்துள்ளார். #Kombuvatchasingamda
    ‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ரெதான் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.  ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சசிகுமாரை வைத்து படம் இயக்குகிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். 

    1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் பெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமானுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். 

    இன்று நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பை நடிகர், இயக்குனர் சமுத்திரகனி கிளாப் அடித்து துவக்கிவைத்தார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் நடந்து குற்றாலத்தில் நிறைவடைகின்றது. 

    ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசையில், டான் பாஸ்கோ படத்தொகுப்பில் இப்படம் உருவாக இருக்கிறது. 
    சுந்தரபாண்டியன் படத்தில் விஜய்சேதுபதியை வில்லனாக நடித்த வைத்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், அவருடைய அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் என்று கூறியிருக்கிறார். #VijaySethupathi
    ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

    2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இதில் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. தற்போது விஜய் சேதுபதி முன்னணி நடிகராக இருக்கிறார். விஜய் சேதுபதி குறித்து இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் மாலைமலருக்கு அளித்த பேட்டியில், ‘விஜய் சேதுபதி என்னுடைய நண்பர். அவரது ஆரம்ப காலத்தில் இருந்து அவருடன் பழகி வருகிறேன். அவருடைய வளர்ச்சியை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

    திரையுலகில் எந்த பின்புலமும் இல்லாமல் முன்னேறி வருகிறார். அவருடைய வளர்ச்சி அவரையே சார்ந்தது. சினிமாவில் நிறைய அரசியல் இருக்கிறது. அதையெல்லாம் கடந்து ஹீரோவாக இருக்கிறார். நிறைய ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். திறமையானவர். ரசிகர்களை தக்கவைத்து வருகிறார். 

    விஜய் சேதுபதியும் நானும் இணைந்து படம் உருவாக்க திட்டமிட்டோம். வரிசையாக அவர் வேறு படங்களில் நடித்து வந்ததால் நான் தொந்தரவு செய்யவில்லை. நல்ல உயரத்திற்கு விஜய் சேதுபதி சென்று கொண்டிருக்கிறார். அவருடைய அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன்’ என்றார்.

    எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது சசிகுமாரை வைத்து ‘கொம்பு வச்ச சிங்கடா’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதன் மோஷன் போஸ்டரை நடிகர் சூர்யா இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×