என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராம் சரண்"

    • இத்தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து 2023-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
    • பலரும் ராம் சரண்- உபாசனாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து 2023-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அப்பெண் குழந்தைக்கு கிளின் காரா என பெயர் சூட்டி இருந்தனர்.

    இதனை தொடர்ந்து, உபாசனா மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில் மொத்த குடும்பமும் புது உறுப்பினரின் வருகைக்காக காத்திருந்தனர்.

    இந்த நிலையில், ராம் சரண்- உபாசனா தம்பத்திக்கு நேற்று இரட்டை குழந்தைகள் பிறந்து இருப்பதாக ராம்சரணின் தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "மிகுந்த மகிழ்ச்சியுடனும், நிறைந்த இதயத்துடனும் ராம்சரண் மற்றும் உபாசனாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை. குழந்தைகளும், தாயும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் உள்ளனர். இந்த குழந்தைகளை எங்கள் குடும்பத்தில் வரவேற்பது தாத்தா பாட்டிகளாகிய எங்களுக்கு மகிழ்ச்சி. அனைவரின் பிரார்த்தனைகள், அன்பு, ஆசீர்வாதங்கள் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றி கூறுகிறோம் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பலரும் ராம் சரண்- உபாசனாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 



    பெத்தி படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    ராம் சரண்- இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

    இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது என்ற அறிவிப்பை படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

    இப்பாடலுக்கான ப்ரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், சிகிரி பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகியுள்ளது.

    • புச்சி பாபு இயக்கத்தில் பெத்தி படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.
    • இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    ராம் சரண் - இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய அவரவேற்பை பெறவில்லை.

    இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் பெத்தி படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது . இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இந்நிலையில், 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூரின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ஆச்சியம்மா என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

    • தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
    • படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.

    ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

    படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    படத்தில் ராம் சரணின் அம்மா கதாப்பாத்திரத்திற்கு லப்பர் பந்து புகழ் ஸ்வாசிகாவை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் சுவாசிகா அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாது என மறுத்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது ராம் சரணின் தாய் கதாப்பாத்திரத்தில் அதற்குள் நடிக்க என்ன அவசரம். எனக்கு அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தோணவில்லை." என கூறியுள்ளார்.

    • தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
    • சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.

    ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

    படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார் நடிகர் ராம் சரண். அவர் ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் மோட் ஆன் என தலைப்பில் படத்தை அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர்.

    • தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் ஜான்வி கபூர்.
    • ராம் சரண் நடிக்கும் பெத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் ஜான்வி கபூர். இவரது நடிப்பு மற்றும் தோற்றம் அனைவராலும் பாராட்டை பெற்றது. இந்நிலையில் இவர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் பெத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இப்படத்தை இயக்குகிறார்.

    ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    ஜான்வி கபூர் இப்படத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது. தேவரா படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற ஜான்வி தற்பொழுது அவரது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். ஏனெனில் தெலுங்கு சினிமா மார்கெட்டில் ஜான்வியின் புகழ் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்தடுத்து பெரிய நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கிறார்.

    கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

    படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
    • கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.

    தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.

    ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

    படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளனர். படத்தில் கவுர்நாயுடு என்ற கதாப்பாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறார்.

    • ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'.
    • ராம் சரணிற்கு நல்ல ஒரு வெற்றி திரைப்படம் கொடுக்க முடியவில்லை என மனம் வருந்தி தில் ராஜு பேசியுள்ளார்.

    ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் படும் தோல்வியை சந்தித்தது.

    நேற்று நித்தின் நடித்துள்ள தம்முடு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அப்படத்தையும் தில் ராஜு தயாரித்துள்ளார். பல நேர்காணலில் ராம் சரணிற்கு நல்ல ஒரு வெற்றி திரைப்படம் கொடுக்க முடியவில்லை என மனம் வருந்தி தில் ராஜு பேசியுள்ளார்.

    நேற்று நடந்த விழாவில் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு விஷயத்தை தில் ராஜு கூறினார் அப்போது அவர் " கேம் சேஞ்சர் திரைப்படம் நாங்கள் நினைத்தது போல ஓடவில்லை, ராம் சரணை வைத்து சூப்பர் ஹிட் திரைப்படம் தயாரிக்கமுடியவில்லை என வருத்தம் இருக்கிறது. அதனால் அடுத்து ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை ராம் சரணை வைத்து தயாரிக்கிறேன் அதற்கான பணிகள் நடந்துக் கொண்டு இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்" என கூறினார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    • இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'.
    • படத்தின் படத்தொகுப்பை மலையாள படத்தொகுப்பாளரான ஷமீர் முகமத் மேற்கொண்டார்.

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    ராம் சரண் இப்படத்தில் 2 கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். படத்தின் இசையை எஸ்.தமன் மேற்கொண்டுள்ளார். படத்தின் படத்தொகுப்பை மலையாள படத்தொகுப்பாளரான ஷமீர் முகமத் மேற்கொண்டார். சமீபத்தில் நடந்த நேர்காணலில் கேம் சேஞ்சர் படத்தில் வேலைப்பார்த்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர் " கேம் சேஞ்சர் படத்தின் மொத்த நேரளவு முதலில் 7.5 மணி நேரமாக இருந்தது. அதை கொடுத்து ஷங்கர் சார் ஒரு திரைப்படத்திற்கான அளவிற்கு கட் செய்து தர சொன்னார். நான் அதை 3 மணி நேரத்திற்கு கட் செய்தேன். ஆனால் என்னால் தொடர்ந்து அதில் வேலை செய்ய முடியவில்ல அதனால் அப்படத்தில் இருந்து விலகினேன். இதனால் அவருடன் வேலைப்பார்த்த அனுபவம் மிகவும் மோசம்" என கூறியுள்ளார்.

    • இந்தியாவிலிருந்து தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகர்களின் உருவச் சிலைகளும் மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.
    • மெழுகு சிலைக்கு போஸ் கொடுக்கும் ஹீரோக்கள் எல்லாம் தனியாகவே தான் போஸ் கொடுப்பார்கள்.

    பிரபலங்களின் உருவத்தை சிலையாக வடிவமைத்து லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்தில் வைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் இந்தியாவிலிருந்து தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகர்களின் உருவச் சிலைகளும் மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக தெலுங்கு நடிகர் ராம்சரணின் மெழுகு சிலையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு லண்டனில் இதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

    மெழுகு சிலைக்கு போஸ் கொடுக்கும் ஹீரோக்கள் எல்லாம் தனியாகவே தான் போஸ் கொடுப்பார்கள். ஆனால் நடிகர் ராம்சரண் தான் செல்லமாக வளர்க்கும் ரைம் என்கிற நாய்க்குட்டியை மடியில் அமர்த்தியபடி போஸ் கொடுத்திருந்தார். அவரது நாய்க்குட்டியுடன் அவரது மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் சரண் சோபாவில் நாய்க்குட்டியுடன் அமர்ந்திருக்கும் தனது மெழுகு சிலையுடன் அதே போன்ற போஸில் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த நாய்க்குட்டியையும் அமர வைத்தபடி போஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    • இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
    • கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.

    தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.

    ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

    படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

    • இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
    • கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இபபடம் உருவாகி வருகிறது.

    தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.

    ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இபபடம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

    இப்படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில் இன்று படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×