search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jhanvi kapoor"

    பிரபல பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூரின் புகைப் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.

    ஜான்வி கபூர் தற்போது தனது தங்கை குஷியுடன் விடுமுறையைக் கழித்து வருகிறார். அங்கு அவருடைய சுற்றுப் பயணத்தின் சில புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். குஷி சில கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு, “99 பிரச்சினைகள், ஆனால், பீச் அதில் ஒன்றல்ல” என குறிப்பிட்டுள்ளார். 

    ஜான்வி கபூர்

    ஆனால், ஜான்வி 'லுங்கி டான்ஸ்' என்று மட்டும் குறிப்பிட்டு பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
    நடிகை ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் கடந்த ஆண்டு சினிமாவில் அறிமுகமான நிலையில், இரண்டாவது மகள் குஷி கபூர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக ஜான்வி தெரிவித்துள்ளார். #KhushiKapoor
    நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வியை ‘தடக்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். ஆனால் படம் திரைக்கு வரும் முன்பே துபாயில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி அவர் இறந்து போனார்.

    தடக் படத்தில் ஜான்வி நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. மேலும் புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.

    இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி விரைவில் இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக தயாராகி வருகிறார்.



    இதுகுறித்து ஜான்வி கபூர் கூறியதாவது:-

    “குஷி நடிக்க வருவதில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக நியூயார்க்கில் நடிப்பு பயிற்சி எடுத்து வந்துள்ளார். குஷியை சினிமாவில் அறிமுகப்படுத்துவதில் எனது தந்தை போனிகபூரும் ஆர்வமாக இருக்கிறார். பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோகர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக வேண்டும் என்று குஷி ஆர்வமாக இருக்கிறார்.

    சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களின் வாரிசுகளான அலியாபட், சித்தார்த் மல்கோத்ரா, வருன் தவான் உள்ளிட்ட பலரை கரண் ஜோகர் தான் அறிமுகப்படுத்தினார். அவர் மூலம் சினிமாவுக்கு வந்த எல்லோருமே பெரிய இடத்துக்கு போய் இருக்கிறார்கள்.எனவே தான் குஷியும் கரண்ஜோகர் படத்தில் நடிக்க காத்திருக்கிறார்.”

    இவ்வாறு ஜான்வி கூறினார். #KhushiKapoor #JhanviKapoor

    போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் நிலையில், கீர்த்தியும், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். #KeerthySuresh #JhanviKapoor
    தமிழ் பட உலகில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மறைந்த புகழ் பெற்ற நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி பெயர்களில் வெளியான படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்தும் பாராட்டு பெற்றார்.

    அடுத்து இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தை அமித் ஷர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இதில் அவருக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.



    இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இவர் தற்போது தமிழில் அஜித்குமார் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார். 

    இந்த நிலையில் கீர்த்தி சுரேஸ், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் சந்தித்து நெருங்கிய தோழிகளாகி விட்டனர். அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #KeerthySuresh #JhanviKapoor

    ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவர் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஐலவ்யூ கூட சொல்லியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். #JhanviKapoor
    ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் படம் மூலம் நடிகையானார். மகளின் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோது இருந்த ஸ்ரீதேவி படத்தை பார்க்க உயிருடன் இல்லை.

    அம்மா இல்லாதது என்றுமே என் மனதில் பாரமாக இருக்கும் என்று ஜான்வி அடிக்கடி கூறி வருகிறார். காதல் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-



    நான் செம்மயாக கடலை போடுவேன். எனக்கு பிறரை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம். அதனால் பேசத் துவங்குவேன். பசங்க தவறாக புரிந்து கொண்டு ப்ரொபோஸ் செய்தால் சாரி பாஸ், வேறு ஆளை பாருங்க என்று கூறிவிட்டு கிளம்பிவிடுவேன். எனக்கு பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்ஸ்டாகிராமில் அவரிடம் ஐ லவ் யூ என்று தெரிவித்துள்ளேன். அதை பார்த்துவிட்டு அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை’ என்று ஜான்வி கூறியுள்ளார்.
    பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அவரை வரவேற்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். #KeerthySuresh #Jhanvi
    தமிழ்த் திரையுலகில் இருந்து பல கதாநாயகிகள் இந்தி சினிமாவுக்கு சென்று முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்துள்ளனர். தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சென்றுள்ள நிலையில் அவரை வரவேற்று ஜான்வி கபூர் பதிவிட்டுள்ளார். 

    ஜான்வி கபூரின் தாயாரும் மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவியும் தமிழ்த் திரையுலகில் இருந்து பாலிவுட் சென்று தடம் பதித்தவர். அந்த வரிசையில் கீர்த்தி சுரேசும் இணைந்து இருக்கிறார். இந்திய கால்பந்தாட்ட வீரரும் பயிற்சியாளருமான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் அஜய் தேவ்கன் சையத் கதாபாத்திரத்தில் நடிக்க அவரது மனைவி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். அமீத் ‌ஷர்மா இயக்கும் இந்தப் படத்தை ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தயாரிக்கிறார்.



    இந்நிலையில் கீர்த்தி படக்குழுவில் இணைந்தது குறித்து ஜான்வி, “மகாநடி திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து உங்கள் மீது அளவு கடந்த ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் அப்பாவின் அடுத்த படத்தில் நீங்கள் இணைந்திருப்பது மிகுந்த உற்சாகமளிக்கிறது. நல்வரவு” என தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    எச்.வினோத் இயக்கத்தில் தல 59 படத்துக்காக ஐதராபாத் சென்றுள்ள அஜித், படத்திற்காக 20 நாட்களை கால்ஷீட்டாக கொடுத்துள்ளார். #Thala59 #AjithKumar #ThalaAjith
    எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்தான் இது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

    சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகளில் அஜித் இன்னும் கலந்துகொள்ளவில்லை.



    இந்தப் படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகள் மட்டும் இதுவரை படம் பிடிக்கப்பட்டு வந்தன. அஜித் இல்லாமலேயே மூன்று நடிகைகளை வைத்தே படத்தின் 25 சதவீத படப்பிடிப்பு பணிகளை வினோத் முடித்துவிட்டார். நாளை முதல் 2-வது கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

    அஜித்தும் படப்பிடிப்பில் சேர இருக்கிறார். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கும் அஜித் இதற்காக தாடி வளர்த்து வருகிறார். மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்து மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith #ShraddhaSrinath #VidyBalan

    மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் வைத்து ஸ்ரீதேவிக்கு இன்று திதி அளிக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித், ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #SriDevi #AjithKumar #Shalini
    கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் போனி கபூர், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீதேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.



    இந்த நிகழ்வில் நடிகர் அஜித் முதலிலேயே வந்து கலந்து கொள்ள, ஷாலினி அவரது சகோதரர் ரிச்சர்டு ரிஷியுடன் ஸ்ரீதேவி திதி நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.



    அஜித்தின் அடுத்த படமான தல 59, தல 60 ஆகிய படங்களை போனி கபூர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #SriDevi #AjithKumar #Shalini



    துருவ் நடிப்பில் ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. #Varma #DhruvVikram
    தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.

    வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வர்மா படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தெரிவித்திருந்தது.

    இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் பாலா இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் “படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகுவது நான் மட்டுமே எடுத்த முடிவு” என்று கூறினார்.



    அர்ஜுன் ரெட்டியின் ஒரிஜினல் கதையில் பாலா சில மாற்றங்கள் செய்ததாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்காமல் முழு படத்தையும் கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. புதிய வர்மா படத்தை இயக்கும்படி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.



    ஏற்கனவே வர்மா படத்தில் மேகா சவுத்திரி கதாநாயகியாக நடித்து இருந்தார். அவரை மாற்ற படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை கதாநாயகியாக நடிக்க வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. #Varma #DhruvVikram #JhanviKapoor #GauthamMenon

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தின் மூலம் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி தமிழில் அறிமுகமாகவிருப்பதாக கூறப்படுகிறது. #Thala59 #JhanviKapoor
    இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோது அஜித்தை வைத்து படம் தயாரிக்கவும், அந்த படத்தில் தங்கள் மகள் ஜான்வியை நடிக்க வைக்கவும் விருப்பப்பட்டுள்ளார்.

    அவர் ஆசையை நிறைவேற்றும் வகையில் முதன்முறையாக போனி கபூர் தயாரிப்பில் ரீமேக் படத்தில் அஜித் நடிக்கிறார். இந்தி பிங்க் படத்தின் கதையில் அஜித்துக்காக சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார். வித்யா பாலனுக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், இதில் இன்னொரு மாற்றமாக அஜித்துக்கு ஒரு மகள் இருப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த மகள் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கிறார் என்றும் செய்தி வருகிறது. 



    தடக் என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமான ஜான்விக்கு தமிழில் இது முதல் படமாக அமைய இருக்கிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith #JhanviKapoor

    ‘தடக்’ என்ற இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தமிழ் மற்றும் தெலுங்கி சினிமாவில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #JhanviKapoor
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்தப்படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. ஜான்வி நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. பல இயக்குனர்கள் ஜான்வியை அணுகி கதை சொல்லி வருகிறார்கள்.

    அடுத்ததாக கரன் ஜோகர் இயக்கும் புதிய இந்திப் படத்தில் நடிக்க ஜான்வி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படமொன்றில், அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஜான்வியிடம் பேசி வருகிறார்கள். 



    தமிழ்ப் படத்தில் நடிக்கவும் ஜான்விக்கு வாய்ப்பு வந்துள்ளது. இரண்டு இயக்குனர்கள் அவரை அணுகி கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்வி தரப்பில் கூறும்போது ‘‘தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் ஜான்விக்கு கதை சொல்லி உள்ளனர். தென்னிந்திய மொழிகளில் நடிக்கவும் ஜான்விக்கு விருப்பம் உள்ளது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வரும்’’ என்றனர். #JhanviKapoor

    ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இந்தி படம் `தடக்' படத்தின் மொத்த வசூல் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. #Dhadak #JhanviKapoor
    ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இந்தி படம் ‘தடக். இஷான், ஜான்வி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை சஷாங் கைட்டான் இயக்கி உள்ளார். படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கரன் ஜோகர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “தடக் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

    அறிமுக நடிகர்களின் படம் வசூல் சாதனை படைப்பது அரிது. ஜான்வி, இஷான் உங்களை நினைக்கும்போது பெருமையாக உள்ளது” என பதிவிட்டுள்ளார். மராத்தியில் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான ‘சாய்ரத்’ படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவானது.

    ஆணவக் கொலையை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த இந்த படம் மராத்தியில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி அங்கும் வசூல் சாதனை புரிந்தது. சாதிய ஆணவக் கொலை இந்தியா முழுக்க உள்ள பிரச்சினை என்பதால் இந்தியிலும் ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. #Dhadak #JhanviKapoor #IshaanKhattar

    தடக் படம் மூலம் இந்திப் படத்தில் அறிமுகமாகும் ஜான்வி, தனது அம்மா ஸ்ரீதேவியின் வழியை பின்பற்ற வில்லை என்று கூறியிருக்கிறார். #Jhanvi
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இந்தியில் தடக் படம் மூலம் அறிமுகம் ஆகிறார். இவர் மராத்தியில் வரவேற்பை பெற்ற ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக்காக ‘தடக்’ உருவாகி இருக்கிறது. சஷாங்க் கைதான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாயகனாக இஷான் கட்டார் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

    ஜான்வி அவரது தாய் ஸ்ரீதேவி போலவே இந்திய அளவில் பெரிய நடிகையாக விரும்புவதாக செய்திகள் வந்தன. இதற்கு பதில் அளித்துள்ள ஜான்வி, ‘நான் என் வழியில் செல்ல விரும்புகிறேன். அம்மா நடித்த காலகட்டம் வேறு. 



    என்னை பொறுத்தவரை ஒரு மொழியில் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் அந்த மொழியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். அம்மா போல ஆகவேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை’ என்று கூறி இருக்கிறார்.
    ×