என் மலர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பெண்களுக்கான திட்டங்களை அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று கரூரில் நடிகை கவுதமி பேட்டி அளித்தார்.
கரூர் ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்ற புற்று நோய் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொள்ள நடிகை கவுதமி வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புற்றுநோயை பொறுத்த வரை வராமல் தடுப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அல்லது வந்த பின் அதில் அதிக கவனம் செலுத்தி அதனை குணப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சமூகத்தில் பெண்கள் தைரியமாக மற்றும் சுய நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அந்த காலத்தில் இருந்தது போல நவீன காலத்திலும் தொடர்ந்து வருகிறது. தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்கள் மூலம் பெண்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆண்களும் அக்கறையோடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்.

கடந்த 2016ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின் போது முதல் அமைச்சராக பொறுப்பேற்ற மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்தார். அவர் கொண்டு வந்த பெண்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களிடம் போதிய அளவு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனது பங்குக்கு (கவுதமி) நானும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறேன். புற்றுநோய் குறித்து நகர்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் கிராமப்புறங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்தால் தான் அன்றாடம் நமது தேவை பூர்த்தியாகிறது. விவசாயிகளையும், கிராமங்களையும் காப்பாற்ற வேண்டும். விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. சமுதாயத்தில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது.
நகர்புறங்களில் இருப்பது போல கிராமபுறங்களிலும் அனைத்து வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் ரஜினி, விஜய் அரசியலில் இறங்க காய் நகர்த்துவதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கவுதமி, ரஜினி, விஜய் என யார் அரசியலுக்கு வந்தாலும் அதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
புற்றுநோயை பொறுத்த வரை வராமல் தடுப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அல்லது வந்த பின் அதில் அதிக கவனம் செலுத்தி அதனை குணப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சமூகத்தில் பெண்கள் தைரியமாக மற்றும் சுய நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அந்த காலத்தில் இருந்தது போல நவீன காலத்திலும் தொடர்ந்து வருகிறது. தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்கள் மூலம் பெண்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆண்களும் அக்கறையோடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்.

கடந்த 2016ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின் போது முதல் அமைச்சராக பொறுப்பேற்ற மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்தார். அவர் கொண்டு வந்த பெண்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களிடம் போதிய அளவு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனது பங்குக்கு (கவுதமி) நானும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறேன். புற்றுநோய் குறித்து நகர்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் கிராமப்புறங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்தால் தான் அன்றாடம் நமது தேவை பூர்த்தியாகிறது. விவசாயிகளையும், கிராமங்களையும் காப்பாற்ற வேண்டும். விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. சமுதாயத்தில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது.
நகர்புறங்களில் இருப்பது போல கிராமபுறங்களிலும் அனைத்து வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் ரஜினி, விஜய் அரசியலில் இறங்க காய் நகர்த்துவதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கவுதமி, ரஜினி, விஜய் என யார் அரசியலுக்கு வந்தாலும் அதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் மற்றுமொரு அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படமான `மெர்சல்' படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.
`மெர்சல்' படத்தின் முதல் போஸ்டரில், பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளைகளுக்கு நடுவே விஜய் முறுக்கு மீசையுடன் கையில் இருக்கும் மண்ணை தட்டிக்கொண்டு போஸ் கொடுத்திருந்தார். இரண்டாவது போஸ்டரில்ஒரு மேஜிக் கலைஞருக்கான உத்திகளுடன் கையில் இருக்கும் சீட்டுக்கட்டை சிதறவிடும்படியாக அந்த போஸ்டர் இருந்தது. விஜய் பிறந்தநாளுடன் இரண்டு போஸ்டர்கள் வெளியானதால், அவரது ரசிகர்களுக்கு செமயான விருந்தாக அது அமைந்தது.

`மெர்சல்' படம் தெலுங்கிலும் டப் செய்யப்படுவதால், விஜய் ரசிகர்களுக்கு இன்று ஒரு விருந்தும் காத்திருக்கிறது. அது என்னவென்றால் `மெர்சல்' படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் ஒரு மணியளவில் வெளியாக இருக்கிறது.
3 கதாபாத்திரத்தில் விஜய் நடித்துவரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
`மெர்சல்' படத்தின் முதல் போஸ்டரில், பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளைகளுக்கு நடுவே விஜய் முறுக்கு மீசையுடன் கையில் இருக்கும் மண்ணை தட்டிக்கொண்டு போஸ் கொடுத்திருந்தார். இரண்டாவது போஸ்டரில்ஒரு மேஜிக் கலைஞருக்கான உத்திகளுடன் கையில் இருக்கும் சீட்டுக்கட்டை சிதறவிடும்படியாக அந்த போஸ்டர் இருந்தது. விஜய் பிறந்தநாளுடன் இரண்டு போஸ்டர்கள் வெளியானதால், அவரது ரசிகர்களுக்கு செமயான விருந்தாக அது அமைந்தது.

`மெர்சல்' படம் தெலுங்கிலும் டப் செய்யப்படுவதால், விஜய் ரசிகர்களுக்கு இன்று ஒரு விருந்தும் காத்திருக்கிறது. அது என்னவென்றால் `மெர்சல்' படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் ஒரு மணியளவில் வெளியாக இருக்கிறது.
3 கதாபாத்திரத்தில் விஜய் நடித்துவரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஜெஸ்டின் திவாகர் இயக்கத்தில் தட்டிக் கேட்கும் கதையான ‘இவன் ஏடாகூடமானவன்’ படத்தின் முன்னோட்டம்.
ஆட்டோ குரூப்ஸ் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் எஸ். சைலேஷ் சிவராஜா தயாரித்துள்ள படம் ‘இவன் ஏடாகூட மானவன்’.
இதில் அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகனாக யோகி அறிமுகமாகிறார். காயத்திரி கதாநாயகியாகவும், அகல்யா இன்னொரு கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளனர். தயாரிப்பாளர் எஸ்.சைலேஷ் சிவராஜா வில்லனாக நடிக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன், மயில்சாமி, மதன்பாபு, மதுரை முத்து, பாவா லட்சுமணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - ஆதி.கருப்பையா, இசை - வித்யாஷரன், பாடல்கள் - முத்து விஜயன், எடிட்டிங் - யோக பாஸ்கர், நடனம் - ஜாய்மதி, சுரேஷ், ஸ்டண்ட் - ரமேஷ்பாபு, தயாரிப்பு - எஸ்.சைலேஷ் சிவராஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜெஸ்டின் திவாகர் படம் பற்றி கூறிய அவர்....
“அரசியல் பின்புலமுள்ள அதிகார வர்க்கத்தினர் சமூகத்தில் கவுரவமாக இருப்பவர்களின் சொத்துக் களை மிகக்குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கி தன் வசப்படுத்தி கொள்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் வெகுண்டெழுந்து எவ்வாறு அதை மீட்கிறான் என்பதே கதைகளம். காதல், நகைச்சுவை கலந்து விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறோம்.
யோகி சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக நடித்துள்ள தயாரிப்பாளர் எஸ்.சைலேஷ் சிவராஜா நடிப்பு ரகுவரனைப் போன்றும், வசன உச்சரிப்பு சத்யராஜ் போன்றும் இயல்பாக உள்ளது” என்றார்.
இதில் அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகனாக யோகி அறிமுகமாகிறார். காயத்திரி கதாநாயகியாகவும், அகல்யா இன்னொரு கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளனர். தயாரிப்பாளர் எஸ்.சைலேஷ் சிவராஜா வில்லனாக நடிக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன், மயில்சாமி, மதன்பாபு, மதுரை முத்து, பாவா லட்சுமணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - ஆதி.கருப்பையா, இசை - வித்யாஷரன், பாடல்கள் - முத்து விஜயன், எடிட்டிங் - யோக பாஸ்கர், நடனம் - ஜாய்மதி, சுரேஷ், ஸ்டண்ட் - ரமேஷ்பாபு, தயாரிப்பு - எஸ்.சைலேஷ் சிவராஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜெஸ்டின் திவாகர் படம் பற்றி கூறிய அவர்....
“அரசியல் பின்புலமுள்ள அதிகார வர்க்கத்தினர் சமூகத்தில் கவுரவமாக இருப்பவர்களின் சொத்துக் களை மிகக்குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கி தன் வசப்படுத்தி கொள்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் வெகுண்டெழுந்து எவ்வாறு அதை மீட்கிறான் என்பதே கதைகளம். காதல், நகைச்சுவை கலந்து விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறோம்.
யோகி சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக நடித்துள்ள தயாரிப்பாளர் எஸ்.சைலேஷ் சிவராஜா நடிப்பு ரகுவரனைப் போன்றும், வசன உச்சரிப்பு சத்யராஜ் போன்றும் இயல்பாக உள்ளது” என்றார்.
`சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் வகையில் படங்களை இயக்கும் இயக்குநர்களுள் வெங்கட் பிரபுவும் ஒருவர். அவரது இயக்கத்தில் கடைசியாக பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியான `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்' ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, வசூல் ரீதியாகவும் நல்லபடியாக அமைந்தது.
அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு தற்போது `களவு' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் `ஆர்.கே.நகர்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அடுத்த இன்னிங்ஸ், அதாவது வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில் முக்கிய கதாபாத்திரத்தில், சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு `பார்ட்டி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார்.
அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு தற்போது `களவு' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் `ஆர்.கே.நகர்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அடுத்த இன்னிங்ஸ், அதாவது வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில் முக்கிய கதாபாத்திரத்தில், சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு `பார்ட்டி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார்.
ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா. இவருக்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சவுந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் இனி சேர்ந்து வாழமுடியாது என்று முடிவு செய்து, விவாகரத்து பெற முடிவு செய்தனர்.
இதற்காக, அவர்கள் சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி மரியா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சவுந்தர்யா, அஸ்வின் கோர்ட்டில் ஆஜராகி, பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக கூறினர். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை ஜூலை 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சவுந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் இனி சேர்ந்து வாழமுடியாது என்று முடிவு செய்து, விவாகரத்து பெற முடிவு செய்தனர்.
இதற்காக, அவர்கள் சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி மரியா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சவுந்தர்யா, அஸ்வின் கோர்ட்டில் ஆஜராகி, பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக கூறினர். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை ஜூலை 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
கண்ணியமாக நடப்பவர்களை மதிப்பேன். கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.
நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி:- 15 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறீர்களே? எப்படி?
பதில்:- நல்ல கதைகள் அமைந்தன. திறமையான டைரக்டர்களும் கிடைத்தார்கள். இதனால் எனது படங்கள் அனைத்தும் நன்றாக ஓடி தொடர்ந்து சினிமாவில் நிலையான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதற்கு மேல் ரசிகர்களும் காரணம்.
கேள்வி:- கதை, கதாபாத்திரம், சம்பளம் இவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
பதில்:- கதைக்குத்தான் முதல் இடம் கொடுப்பேன். அதன் பிறகு கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறதா? என்று பார்ப்பேன். சம்பளம் பற்றி யோசிப்பது கடைசியில்தான்.
கேள்வி:- தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்:- தோல்விக்கான காரணம் என்ன என்பதை ஆராய்வேன். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுப்பேன்.

கேள்வி:- வாழ்க்கையில் பெருமைப்படும் விஷயம்?
பதில்:- சிறந்த நடிப்புக்காக விருதுகள் வாங்கும்போது பெருமையாக இருக்கும். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததற்காக நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். அவை என்னை பெருமைபடுத்திய விஷயங்கள்.
கேள்வி:- நீங்கள் எந்த மாதிரி ஆட்களை விரும்புகிறீர்கள்?
பதில்:- கவுரவமானவர்களையும், கண்ணியமானவர்களையும் பிடிக்கும். அவர்களை மதிப்பேன். கபட வேடம் போடுகிறவர்களையும், தேவையானபோது கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக்கொண்டு பிறகு தூக்கி வீசுபவர்களையும் பிடிக்காது.
கேள்வி:- ஒருதலை காதல் பற்றி?
பதில்:- ஒரு தலைக்காதல் பற்றி சொல்ல தெரியவில்லை. காரணம் நான் எப்போதும் ஒருதலையாக காதலித்தது இல்லை.
கேள்வி:- வயதில் மூத்த பெண்கள் குறைவான வயது ஆண்களை திருமணம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- இரண்டு மனங்கள் இணைந்து எல்லாம் சரியாக அமைந்தால் ஓ.கே.தான். நல்லாவே இருக்கும்.

கேள்வி:- சென்னையில் பிடித்த இடம்?
பதில்:- எனது வீட்டில் இருக்கும் ‘ஹோம் தியேட்டர்’.
கேள்வி:- பிடித்த உடற்பயிற்சிகள்?
பதில்:- ‘பாக்சிங்’, யோகா.
கேள்வி:- எதிர்கொள்ள முடியாத பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள்?
பதில்:- எனது அம்மாவின் உதவியை நாடுவேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.
கேள்வி:- 15 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறீர்களே? எப்படி?
பதில்:- நல்ல கதைகள் அமைந்தன. திறமையான டைரக்டர்களும் கிடைத்தார்கள். இதனால் எனது படங்கள் அனைத்தும் நன்றாக ஓடி தொடர்ந்து சினிமாவில் நிலையான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதற்கு மேல் ரசிகர்களும் காரணம்.
கேள்வி:- கதை, கதாபாத்திரம், சம்பளம் இவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
பதில்:- கதைக்குத்தான் முதல் இடம் கொடுப்பேன். அதன் பிறகு கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறதா? என்று பார்ப்பேன். சம்பளம் பற்றி யோசிப்பது கடைசியில்தான்.
கேள்வி:- தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்:- தோல்விக்கான காரணம் என்ன என்பதை ஆராய்வேன். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுப்பேன்.

கேள்வி:- வாழ்க்கையில் பெருமைப்படும் விஷயம்?
பதில்:- சிறந்த நடிப்புக்காக விருதுகள் வாங்கும்போது பெருமையாக இருக்கும். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததற்காக நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். அவை என்னை பெருமைபடுத்திய விஷயங்கள்.
கேள்வி:- நீங்கள் எந்த மாதிரி ஆட்களை விரும்புகிறீர்கள்?
பதில்:- கவுரவமானவர்களையும், கண்ணியமானவர்களையும் பிடிக்கும். அவர்களை மதிப்பேன். கபட வேடம் போடுகிறவர்களையும், தேவையானபோது கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக்கொண்டு பிறகு தூக்கி வீசுபவர்களையும் பிடிக்காது.
கேள்வி:- ஒருதலை காதல் பற்றி?
பதில்:- ஒரு தலைக்காதல் பற்றி சொல்ல தெரியவில்லை. காரணம் நான் எப்போதும் ஒருதலையாக காதலித்தது இல்லை.
கேள்வி:- வயதில் மூத்த பெண்கள் குறைவான வயது ஆண்களை திருமணம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- இரண்டு மனங்கள் இணைந்து எல்லாம் சரியாக அமைந்தால் ஓ.கே.தான். நல்லாவே இருக்கும்.

கேள்வி:- சென்னையில் பிடித்த இடம்?
பதில்:- எனது வீட்டில் இருக்கும் ‘ஹோம் தியேட்டர்’.
கேள்வி:- பிடித்த உடற்பயிற்சிகள்?
பதில்:- ‘பாக்சிங்’, யோகா.
கேள்வி:- எதிர்கொள்ள முடியாத பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள்?
பதில்:- எனது அம்மாவின் உதவியை நாடுவேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.
ஜெயம் ரவி-சாயிஷா நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘வனமகன்’ படத்தின் விமர்சனம்
சாயிஷா சிறுவயதில் இருக்கும்போது அவளுடைய பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, அதன்பிறகு சாயிஷாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரகாஷ் ராஜ் வசம் வருகிறது. அதன்பின்னர், பிரகாஷ் ராஜ் சாயிஷாவின் பெயரில் நிறைய தொழில்கள் தொடங்கி சாயிஷாவை பெரிய தொழிலபதிர் ஆக்குகிறார். சாயிஷா பெயரிலேயே எல்லா சொத்துக்களும் இருப்பதால், தன்னுடைய மகனான வருணுக்கு அவளை திருமணம் செய்துவைத்து சொத்துக்களை தன்வசமாக்க நினைக்கிறார் பிரகாஷ் ராஜ்.
இந்நிலையில், அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் போது, காட்டுவாசியான ஜெயம் ரவியின் மீது கார் ஏற்றிவிடுகிறார்கள். அடிபட்டு கிடக்கும் ஜெயம் ரவிக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்கிறார்கள். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் இந்தியா கொண்டு வந்துவிடுகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர் பழைய நினைவுகளை இழந்துவிடுகிறார்.

மேலும், காடுதான் எல்லாமே என்று வாழ்ந்துவந்த ஜெயம் ரவிக்கு நகர வாழ்க்கை புதுமையாக தெரிகிறது. அதேபோல், மற்றவர்கள் பேசும் மொழியும் இவருக்கு வியப்பை கொடுக்கவே, அவர்களிடமிருந்து தனித்தே வாழ்கிறார். இதற்கிடையில், சாயிஷா காட்டுவாசிகளிடம் எப்படி பழகவேண்டும் என்று தெரிந்துகொண்டு ஜெயம் ரவியுடன் நட்பு வளர்க்கிறாள். நாளடைவில் ஜெயம் ரவி சாயிஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்.
இந்நிலையில், காணாமல்போன ஜெயம் ரவியை தேடி அந்தமான் காட்டு இலாகா அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். ஜெயம் ரவியை பிடித்துக்கொண்டு அந்தமான் செல்கிறார்கள். ஜெயம் ரவியை மீட்பதாக சாயிஷாவும் அந்தமான் போகிறார். போலீஸ் நிலையத்திலிருந்து தப்பிக்கும் ஜெயம் ரவி, சாயிஷாவை கூட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்கிறார்.
அப்போதுதான் ஜெயம்ரவிக்கு அனைத்துமே ஞாபகத்துக்கு வருகிறது. காட்டில் அவர் பிறந்து வளர்ந்தது, அவருக்கென்று ஒரு கூட்டம் இருந்தது, கார்ப்பரேட் கம்பெனிக்காரர்கள் தங்களுடைய இருப்பிடத்தை அழிக்க நினைத்து தன்னுடைய ஆட்களை எல்லாம் காட்டை விட்டே துரத்தியது என அனைத்துமே அவருடைய நினைவில் வருகிறது.

சாயிஷாவை தன்வசம் வைத்துக்கொண்டு தன்னுடைய இனத்தை எப்படி கண்டறிந்தார்? கார்ப்பரேட் கம்பெனிக்காரர்களையும் எப்படி அங்கிருந்து விரட்டி அடித்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஜெயம் ரவி இப்படத்தில் ஒரு இடத்தில்கூட வசனமே பேசவில்லை. படம் முழுக்க தனது முகபாவனையிலேயே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதை மிகவும் நேர்த்தியாகவே செய்திருக்கிறார்கள். இப்படத்தில் இவர் கஷ்டப்பட்டு உழைத்திருப்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது.
சாயிஷா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். நடனமும் சுழன்று சுழன்று ஆடியிருக்கிறார். எல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. நடிப்பிலும் சபாஷ் சொல்ல வைக்கிறார். பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.

வருணுக்கும் படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தம்பி ராமையாவின் காமெடி சமீபகால படங்களில் கேட்டு புளித்துப்போனதாகவே இருப்பதால் பெரிதாக எடுபடவில்லை. அர்ஜுனன், வேல ராமமூர்த்தி, ரம்யா சுப்ரமணியன், சாம் பால் உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு எற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கிவரும் விஜய், இந்த படத்திலும் வித்தியாசமான கதையை கையிலெடுத்திருக்கிறார். கஷ்டப்பட்டு உழைக்கக்கூடிய நடிகர்களை வைத்து வேலை வாங்கிவிட்டு திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார். இவர் காமெடியாக எடுத்த காட்சிகளில் எல்லாம் சுத்தமாக சிரிக்கவே தோன்றவில்லை.

காட்டில் வாழ்பவர்கள்தான் மனிதர்களாக வாழ்கிறார்கள். நகரத்தில் வாழும் சிலபேரால் நாம் காட்டுவாசியாகவே தெரிகிறோம் என்ற ஆழமான கருத்தையும் சமூகத்திற்கு சொல்ல வந்திருக்கிறார். காட்டுவாசிகளின் போர்க்குணம், அவர்களின் குணாதிசயங்களை ஜெயம் ரவி மூலமாக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும், பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. திருவின் ஒளிப்பதிவு அந்தமான் காடுகளை வளைத்து வளைத்து படமாக்கியிருக்கிறது. காட்சிகளிலும் குளுமை இருக்கிறது.
மொத்தத்தில் ‘வனமகன்’ நம் வசமில்லை.
இந்நிலையில், அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் போது, காட்டுவாசியான ஜெயம் ரவியின் மீது கார் ஏற்றிவிடுகிறார்கள். அடிபட்டு கிடக்கும் ஜெயம் ரவிக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்கிறார்கள். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் இந்தியா கொண்டு வந்துவிடுகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர் பழைய நினைவுகளை இழந்துவிடுகிறார்.

மேலும், காடுதான் எல்லாமே என்று வாழ்ந்துவந்த ஜெயம் ரவிக்கு நகர வாழ்க்கை புதுமையாக தெரிகிறது. அதேபோல், மற்றவர்கள் பேசும் மொழியும் இவருக்கு வியப்பை கொடுக்கவே, அவர்களிடமிருந்து தனித்தே வாழ்கிறார். இதற்கிடையில், சாயிஷா காட்டுவாசிகளிடம் எப்படி பழகவேண்டும் என்று தெரிந்துகொண்டு ஜெயம் ரவியுடன் நட்பு வளர்க்கிறாள். நாளடைவில் ஜெயம் ரவி சாயிஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்.
இந்நிலையில், காணாமல்போன ஜெயம் ரவியை தேடி அந்தமான் காட்டு இலாகா அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். ஜெயம் ரவியை பிடித்துக்கொண்டு அந்தமான் செல்கிறார்கள். ஜெயம் ரவியை மீட்பதாக சாயிஷாவும் அந்தமான் போகிறார். போலீஸ் நிலையத்திலிருந்து தப்பிக்கும் ஜெயம் ரவி, சாயிஷாவை கூட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்கிறார்.
அப்போதுதான் ஜெயம்ரவிக்கு அனைத்துமே ஞாபகத்துக்கு வருகிறது. காட்டில் அவர் பிறந்து வளர்ந்தது, அவருக்கென்று ஒரு கூட்டம் இருந்தது, கார்ப்பரேட் கம்பெனிக்காரர்கள் தங்களுடைய இருப்பிடத்தை அழிக்க நினைத்து தன்னுடைய ஆட்களை எல்லாம் காட்டை விட்டே துரத்தியது என அனைத்துமே அவருடைய நினைவில் வருகிறது.

சாயிஷாவை தன்வசம் வைத்துக்கொண்டு தன்னுடைய இனத்தை எப்படி கண்டறிந்தார்? கார்ப்பரேட் கம்பெனிக்காரர்களையும் எப்படி அங்கிருந்து விரட்டி அடித்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஜெயம் ரவி இப்படத்தில் ஒரு இடத்தில்கூட வசனமே பேசவில்லை. படம் முழுக்க தனது முகபாவனையிலேயே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதை மிகவும் நேர்த்தியாகவே செய்திருக்கிறார்கள். இப்படத்தில் இவர் கஷ்டப்பட்டு உழைத்திருப்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது.
சாயிஷா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். நடனமும் சுழன்று சுழன்று ஆடியிருக்கிறார். எல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. நடிப்பிலும் சபாஷ் சொல்ல வைக்கிறார். பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.

வருணுக்கும் படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தம்பி ராமையாவின் காமெடி சமீபகால படங்களில் கேட்டு புளித்துப்போனதாகவே இருப்பதால் பெரிதாக எடுபடவில்லை. அர்ஜுனன், வேல ராமமூர்த்தி, ரம்யா சுப்ரமணியன், சாம் பால் உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு எற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கிவரும் விஜய், இந்த படத்திலும் வித்தியாசமான கதையை கையிலெடுத்திருக்கிறார். கஷ்டப்பட்டு உழைக்கக்கூடிய நடிகர்களை வைத்து வேலை வாங்கிவிட்டு திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார். இவர் காமெடியாக எடுத்த காட்சிகளில் எல்லாம் சுத்தமாக சிரிக்கவே தோன்றவில்லை.

காட்டில் வாழ்பவர்கள்தான் மனிதர்களாக வாழ்கிறார்கள். நகரத்தில் வாழும் சிலபேரால் நாம் காட்டுவாசியாகவே தெரிகிறோம் என்ற ஆழமான கருத்தையும் சமூகத்திற்கு சொல்ல வந்திருக்கிறார். காட்டுவாசிகளின் போர்க்குணம், அவர்களின் குணாதிசயங்களை ஜெயம் ரவி மூலமாக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும், பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. திருவின் ஒளிப்பதிவு அந்தமான் காடுகளை வளைத்து வளைத்து படமாக்கியிருக்கிறது. காட்சிகளிலும் குளுமை இருக்கிறது.
மொத்தத்தில் ‘வனமகன்’ நம் வசமில்லை.
சிம்பு-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளிவந்துள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் விமர்சனம்.
துபாயில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் கஸ்தூரி, துபாயில் பெரிய டானாக இருப்பவரை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். பெரிய டானுக்கு நெருக்கமானவர்களை சுற்றி வளைக்கிறது போலீஸ். அப்போது மஹத்தையும் கைது செய்து விசாரிக்கிறது. அப்போது அவர் ‘அஸ்வின் தாத்தா’ பற்றிய கதையை கூற ஆரம்பிக்கிறார்.
அதன்பின்னர் 70 காலகட்டத்தை நோக்கி பிளாஷ் பேக் விரிகிறது. மதுரையில் நண்பர்கள் விடிவி கணேஷ், மஹத் உடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு (மதுர மைக்கேல்). நண்பர்கள்தான் உலகமே என்று வாழ்ந்துவரும் சிம்பு, மதுரையில் இருக்கும் மிகப்பெரிய ஆளுக்கு கீழ் அடியாளாக பணியாற்றி வருகிறார். இதனால், ஊரிலேயே மிகவும் கெத்தான ஆளாக வலம்வருகிறார் சிம்பு.

இந்நிலையில், ஒருநாள் ஸ்ரேயாவை பார்க்கும் சிம்புவுக்கு அவள்மீது காதல் வருகிறது. முதலில் சிம்புவை கண்டுகொள்ளாத ஸ்ரேயா ஒருகட்டத்தில் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இரண்டு பேரும் சேர்ந்து ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுக்கையில், சிம்பு அடியாளாக பணியாற்றுபவரின் மகன் சிம்புவை போலீசில் மாட்டிவிடுகிறான்.
சிம்பு ஜெயிலுக்கு போன நேரத்தில் ஸ்ரேயாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நடத்த பார்க்கிறார்கள். அப்போது, சிம்புவின் நண்பர்கள் அவரை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைத்து, ஸ்ரேயாவிடம் சேர்த்து வைக்க நினைக்கிறார்கள். ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சிம்பு, ஸ்ரேயாவை மணமுடித்தால் அவளால் நம்முடன் நிம்மதியாக வாழமுடியாது என்று முடிவெடுத்து, ஊரை விட்டு ஓடி தலைமறைவாகிறார்.
பின்னர் நாட்கள் கடக்கிறது. சிம்புவுக்கும் வயதாகிவிடுகிறது. வயதானபிறகு ‘அஸ்வின் தாத்தா’ என்று அழைக்கப்படும் சிம்பு, தன்னுடைய நண்பர் விஜயகுமார் தன்னைவிட இளம் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதை பார்த்து, தானும் அதேபோல் இளம் வயது பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்காக, வயதானவரை திருமணம் செய்துள்ள பெண்கள் வேண்டும் என்று விளம்பரமும் கொடுக்கிறார்.

அந்த விளம்பரத்தை பார்த்து நிறைய பேர் வருகிறார்கள். அதில், தமன்னாவும் வருகிறார். தமன்னா மணப்பெண்ணாகத்தான் வந்திருக்கிறாள் என்று நினைக்கும் சிம்பு, அதன்பின்னர், அவள் கோவை சரளாவுக்கு மாப்பிள்ளை தேடித்தான் அங்கு வந்திருப்பதை அறிகிறார். இருப்பினும், தமன்னாவுடன் நட்பு வளர்த்து வருகிறார்.
இந்த நட்பு நாளடைவில் இருவருக்குள்ளும் காதலாக மாறியதா? இல்லையா? என்பதே முதல்பாகத்தின் மீதிக்கதை. கஸ்தூரி தேடும் டானுக்கும், இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? என்பதை இரண்டாம் பாகத்தில் சொல்லவிருக்கிறார்கள்.
இரண்டு பாகமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகத்தில் சிம்பு, மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா என்ற இரண்டு கெட்டப்புகளில் வருகிறார். மதுர மைக்கேல் கெட்டப்பில் இவர் அறிமுகம் காட்சி அவர் சொல்வதுபோலவே சிறப்பு. மதுர மைக்கேல் கெட்டப்புகளில் ரொம்பவும் மாஸாக காட்டியிருக்கிறார்கள். அதற்கேற்றார்போல், இவருடைய நடிப்பும் படத்திற்கு ரொம்பவும் மாஸாக இருக்கிறது. அறிமுக பாடலில் ரசிகர்களின் தோளின்மீதே நின்று இவர் ஆடும் ஆட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அஸ்வின் தாத்தா கெட்டப்பில் கொழுக் மொழுக்கென்று இருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கேற்றவாறு நடிப்பிலும், நகைச்சுவையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். இருப்பினும், இதுவெல்லாம் சிம்புவின் ரசிகர்களுக்கு திருப்திபடுத்தும்படி அமைந்திருக்கிறதா? என்றால் அது கேள்விக்குறியே. சிம்புவின் நண்பராக வரும் மஹத் தனக்கு என்ன வருமோ? அதை அப்படியே திரையில் பிரதிபலித்திருக்கிறார்.
விடிவி கணேஷ் வழக்கம்போல காமெடி, செண்டிமெண்ட் என ரசிக்க வைத்திருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் வழக்கம்போல் தன்னுடைய குரலாலேயே ரசிகர்கள் வயிறு குலுங்க வைத்திருக்கிறார். ஸ்ரேயா எளிமையாக வந்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அமைதியான முகம், மென்மையான கோபம் என தன்னுடைய நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
தமன்னா கிளாமர் உடையில் வந்து அனைவரையும் கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். வயதான தாத்தாவை காதலிக்கும் வெகுளியான பெண்ணாகவும், முதியோர் காப்பகத்தை ஏற்று நடத்தும் பொறுப்பான பெண்ணாகவும் எளிதாக நம்மை கவர்கிறார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை ரொம்பவும் நுணுக்கமாக அறிந்து வைத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். எந்தெந்த இடத்தில் ரசிகர்களை துள்ளி எழ வைக்கலாம் என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்றார்போல் காட்சிகளை அமைத்திருக்கிறார். அதேபோல், ஒரு கமர்ஷியல் படத்துக்குண்டான அத்தனை அம்சங்களும் இந்த படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், படத்தின் திரைக்கதையில் ரொம்பவும் கோட்டை விட்டுவிட்டார். அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசிக்கும்படியாக படம் இருந்திருக்கும்.
யுவனின் பின்னணி இசைதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. மதுர மைக்கேல் தீம் மியூசிக்தான் படத்தில் மிகப்பெரிய மாஸ். பாடல்களும் காட்சிகளுடன் பார்க்கும்போது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. கிருஷ்ணன் வசந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. 90-களில் நடக்கும் காலகட்டத்திற்கு ஏற்ற ஒளியமைப்பை வைத்து அந்த காலத்தோடு ஒன்ற வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ சிறப்பு இல்லை.
அதன்பின்னர் 70 காலகட்டத்தை நோக்கி பிளாஷ் பேக் விரிகிறது. மதுரையில் நண்பர்கள் விடிவி கணேஷ், மஹத் உடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு (மதுர மைக்கேல்). நண்பர்கள்தான் உலகமே என்று வாழ்ந்துவரும் சிம்பு, மதுரையில் இருக்கும் மிகப்பெரிய ஆளுக்கு கீழ் அடியாளாக பணியாற்றி வருகிறார். இதனால், ஊரிலேயே மிகவும் கெத்தான ஆளாக வலம்வருகிறார் சிம்பு.

இந்நிலையில், ஒருநாள் ஸ்ரேயாவை பார்க்கும் சிம்புவுக்கு அவள்மீது காதல் வருகிறது. முதலில் சிம்புவை கண்டுகொள்ளாத ஸ்ரேயா ஒருகட்டத்தில் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இரண்டு பேரும் சேர்ந்து ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுக்கையில், சிம்பு அடியாளாக பணியாற்றுபவரின் மகன் சிம்புவை போலீசில் மாட்டிவிடுகிறான்.
சிம்பு ஜெயிலுக்கு போன நேரத்தில் ஸ்ரேயாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நடத்த பார்க்கிறார்கள். அப்போது, சிம்புவின் நண்பர்கள் அவரை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைத்து, ஸ்ரேயாவிடம் சேர்த்து வைக்க நினைக்கிறார்கள். ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சிம்பு, ஸ்ரேயாவை மணமுடித்தால் அவளால் நம்முடன் நிம்மதியாக வாழமுடியாது என்று முடிவெடுத்து, ஊரை விட்டு ஓடி தலைமறைவாகிறார்.
பின்னர் நாட்கள் கடக்கிறது. சிம்புவுக்கும் வயதாகிவிடுகிறது. வயதானபிறகு ‘அஸ்வின் தாத்தா’ என்று அழைக்கப்படும் சிம்பு, தன்னுடைய நண்பர் விஜயகுமார் தன்னைவிட இளம் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதை பார்த்து, தானும் அதேபோல் இளம் வயது பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்காக, வயதானவரை திருமணம் செய்துள்ள பெண்கள் வேண்டும் என்று விளம்பரமும் கொடுக்கிறார்.

அந்த விளம்பரத்தை பார்த்து நிறைய பேர் வருகிறார்கள். அதில், தமன்னாவும் வருகிறார். தமன்னா மணப்பெண்ணாகத்தான் வந்திருக்கிறாள் என்று நினைக்கும் சிம்பு, அதன்பின்னர், அவள் கோவை சரளாவுக்கு மாப்பிள்ளை தேடித்தான் அங்கு வந்திருப்பதை அறிகிறார். இருப்பினும், தமன்னாவுடன் நட்பு வளர்த்து வருகிறார்.
இந்த நட்பு நாளடைவில் இருவருக்குள்ளும் காதலாக மாறியதா? இல்லையா? என்பதே முதல்பாகத்தின் மீதிக்கதை. கஸ்தூரி தேடும் டானுக்கும், இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? என்பதை இரண்டாம் பாகத்தில் சொல்லவிருக்கிறார்கள்.
இரண்டு பாகமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகத்தில் சிம்பு, மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா என்ற இரண்டு கெட்டப்புகளில் வருகிறார். மதுர மைக்கேல் கெட்டப்பில் இவர் அறிமுகம் காட்சி அவர் சொல்வதுபோலவே சிறப்பு. மதுர மைக்கேல் கெட்டப்புகளில் ரொம்பவும் மாஸாக காட்டியிருக்கிறார்கள். அதற்கேற்றார்போல், இவருடைய நடிப்பும் படத்திற்கு ரொம்பவும் மாஸாக இருக்கிறது. அறிமுக பாடலில் ரசிகர்களின் தோளின்மீதே நின்று இவர் ஆடும் ஆட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அஸ்வின் தாத்தா கெட்டப்பில் கொழுக் மொழுக்கென்று இருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கேற்றவாறு நடிப்பிலும், நகைச்சுவையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். இருப்பினும், இதுவெல்லாம் சிம்புவின் ரசிகர்களுக்கு திருப்திபடுத்தும்படி அமைந்திருக்கிறதா? என்றால் அது கேள்விக்குறியே. சிம்புவின் நண்பராக வரும் மஹத் தனக்கு என்ன வருமோ? அதை அப்படியே திரையில் பிரதிபலித்திருக்கிறார்.
விடிவி கணேஷ் வழக்கம்போல காமெடி, செண்டிமெண்ட் என ரசிக்க வைத்திருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் வழக்கம்போல் தன்னுடைய குரலாலேயே ரசிகர்கள் வயிறு குலுங்க வைத்திருக்கிறார். ஸ்ரேயா எளிமையாக வந்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அமைதியான முகம், மென்மையான கோபம் என தன்னுடைய நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
தமன்னா கிளாமர் உடையில் வந்து அனைவரையும் கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். வயதான தாத்தாவை காதலிக்கும் வெகுளியான பெண்ணாகவும், முதியோர் காப்பகத்தை ஏற்று நடத்தும் பொறுப்பான பெண்ணாகவும் எளிதாக நம்மை கவர்கிறார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை ரொம்பவும் நுணுக்கமாக அறிந்து வைத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். எந்தெந்த இடத்தில் ரசிகர்களை துள்ளி எழ வைக்கலாம் என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்றார்போல் காட்சிகளை அமைத்திருக்கிறார். அதேபோல், ஒரு கமர்ஷியல் படத்துக்குண்டான அத்தனை அம்சங்களும் இந்த படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், படத்தின் திரைக்கதையில் ரொம்பவும் கோட்டை விட்டுவிட்டார். அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசிக்கும்படியாக படம் இருந்திருக்கும்.
யுவனின் பின்னணி இசைதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. மதுர மைக்கேல் தீம் மியூசிக்தான் படத்தில் மிகப்பெரிய மாஸ். பாடல்களும் காட்சிகளுடன் பார்க்கும்போது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. கிருஷ்ணன் வசந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. 90-களில் நடக்கும் காலகட்டத்திற்கு ஏற்ற ஒளியமைப்பை வைத்து அந்த காலத்தோடு ஒன்ற வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ சிறப்பு இல்லை.
தனக்கு சினிமாவிலும், வெளியிலும் காதலிக்க நேரமில்லை என்று தன்ஷிகா கூறியுள்ளார்.
ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் சாய் தன்ஷிகா. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேடி நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘உரு’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்வு செய்துவரும் தன்ஷிகா கூறும்போது,
‘உரு’ கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு நடந்த இடம் கொடைக்கானல். டிசம்பர் மாதம் படப்பிடிப்பு அதனால் அங்கு குளிர் எங்களை பாடாய் படுத்தியது. மன உறுதியுடன் ஒட்டுமொத்த குழுவினரும் பணியாற்றினோம். சண்டைக்காட்சிகளில் இயக்குனர் விருப்பப்படி நானே நடித்தேன். இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்காக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போனது.
அடுத்து.. ‘காலக்கூத்து’ என்ற படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். நாகராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருக்கிறார். இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கும் ‘விழித்திரு’ படத்தில் வடசென்னை குடிசைப்பகுதியில் வாழும் பெண்ணாக காமெடி கலந்து நடித்திருக்கிறேன்.

ஆக்ஷன் ஹீரோயினியாக திட்டமிட்டு நடிக்கவில்லை. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கேரக்டரைத்தான் தேர்ந்தெடுக்கிறேன். ‘டேவிட்’ படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கும் ‘சோலோ’ படத்தில் ஒரு கண்பார்வையற்ற நடன கலைஞராக நடித்திருக்கிறேன். இதில் எனக்கு ஜோடி துல்கர் சல்மான். முழுமையாக ஆக்ஷன் படம் வந்தால் அதிலும் நடிக்க தயாராகவேயிருக்கிறேன்.
எனக்கு சினிமாவிலும், வெளியிலும் காதல் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதற்கெல்லாம் நேரமில்லை. தமிழ் தவிர, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கிறேன்” என்றார்.
தமிழைத் தவிர.. தெலுங்கில் ‘வாலுஜடா..’ என்ற படத்திலும், கன்னடத்தில் சுனில் குமார் தேசாய் என்பவரின் இயக்கத்தில் உருவாகும் ‘உத்கர்ஷா’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறேன். எந்த மொழியில் நடித்தாலும் கதை தான் முக்கியம். கதை நன்றாக இருந்தால் மொழி கடந்தும் நடிப்பேன்” என்றார்.
‘உரு’ கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு நடந்த இடம் கொடைக்கானல். டிசம்பர் மாதம் படப்பிடிப்பு அதனால் அங்கு குளிர் எங்களை பாடாய் படுத்தியது. மன உறுதியுடன் ஒட்டுமொத்த குழுவினரும் பணியாற்றினோம். சண்டைக்காட்சிகளில் இயக்குனர் விருப்பப்படி நானே நடித்தேன். இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்காக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போனது.
அடுத்து.. ‘காலக்கூத்து’ என்ற படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். நாகராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருக்கிறார். இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கும் ‘விழித்திரு’ படத்தில் வடசென்னை குடிசைப்பகுதியில் வாழும் பெண்ணாக காமெடி கலந்து நடித்திருக்கிறேன்.

ஆக்ஷன் ஹீரோயினியாக திட்டமிட்டு நடிக்கவில்லை. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கேரக்டரைத்தான் தேர்ந்தெடுக்கிறேன். ‘டேவிட்’ படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கும் ‘சோலோ’ படத்தில் ஒரு கண்பார்வையற்ற நடன கலைஞராக நடித்திருக்கிறேன். இதில் எனக்கு ஜோடி துல்கர் சல்மான். முழுமையாக ஆக்ஷன் படம் வந்தால் அதிலும் நடிக்க தயாராகவேயிருக்கிறேன்.
எனக்கு சினிமாவிலும், வெளியிலும் காதல் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதற்கெல்லாம் நேரமில்லை. தமிழ் தவிர, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கிறேன்” என்றார்.
தமிழைத் தவிர.. தெலுங்கில் ‘வாலுஜடா..’ என்ற படத்திலும், கன்னடத்தில் சுனில் குமார் தேசாய் என்பவரின் இயக்கத்தில் உருவாகும் ‘உத்கர்ஷா’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறேன். எந்த மொழியில் நடித்தாலும் கதை தான் முக்கியம். கதை நன்றாக இருந்தால் மொழி கடந்தும் நடிப்பேன்” என்றார்.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப, அவரது ரசிகர்களை சந்தித்த பின் ரஜினி அரசியலில் குதிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மரணம்... கருணாநிதியின் ஓய்வு. இந்த இரண்டும் தமிழக அரசியல் களத்துக்கு புது ரத்தத்தை பாய்ச்சுமா? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ரஜினி கொடுத்த ஒரே ஒரு வாய்ஸ் அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. அன்று ஜெயலலிதா அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார். ‘‘மீண்டும் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது’’ என்று கூறிய அவரது ஆவேச வார்த்தைகள் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதன் காரணமாகவே அந்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது என்று இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

அரசியலில் இல்லாமலேயே ரஜினி நிகழ்த்திக் காட்டிய இமாலய வெற்றியாகவே இது பார்க்கப்பட்டது. அன்று காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற மூப்பனார் தனிக்கட்சியை தொடங்கிய போது ரஜினியும் அவருடன் சேர்ந்து அரசியல் பயணத்தை தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு 20 ஆண்டுகளை கடந்தும் அப்படியே நீடித்துக் கொண்டே இருக்கிறது.
ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் மக்கள் செல்வாக்குமே இதற்கு காரணம் என்றால் அது மிகையாகாது.
இப்படி நீ...ண்....ட.... காலமாகவே ரஜினியின் அரசியல் பிரவேசம் கண்ணாமூச்சி ஆட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. இன்று வருவார்.... நாளை வருவார்.... என ரஜினியின் அரசியல் பயணம் பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் ரஜினியா? அரசியலுக்கு வர்றதாவது? என்கிற பேச்சுக்கள் எழத்தொடங்கி விட்டன. தனது படங்களின் விளம்பரத்துக்காகவே ரஜினி அரசியல் எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

அதே நேரத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்கு பிறகு ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும் பேசப்பட்டது. அது போன்ற ஒரு சூழல் இப்போது வந்து விட்டதாகவே ரஜினி உணர்ந்துள்ளார்.
இதன் காரணமாகவே ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு ரஜினி தனது அரசியல் பயணத்துக்கு அச்சாரம் போட்டுள்ளார். இதன்படியே ரசிகர்களுடனான அவரது சந்திப்பு என்கிற பேச்சும் பலமாகவே எழுந்துள்ளது.
கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வரும் ரஜினி முதல் கட்ட சந்திப்பை முடித்துள்ளார். 15 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி.... ‘‘ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று ‘பல்ஸ்’ பார்த்தார். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர்கள் அனைவருமே ‘‘தலைவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். தமிழகத்தை ஆள்வார்’’ என்றே நம்பிக்கை தெரிவித்தனர். அந்த நாளுக்காகவே காத்திருக்கிறோம் என்றும் ‘மகிழ்ச்சி’ தெரிவித்தனர்.

ரசிகர்களுடான சந்திப்பின் போது ‘‘ஒரு வேளை நான் அரசியலுக்கு வந்தால், அதனை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில் வைத்துக் கொள்ளமாட்டேன் என்று கூறிய ரஜினி, போர் வரும் போது (தேர்தல் நேரத்தில்) பார்த்துக் கொள்ளலாம். தயாராக இருங்கள் என்றும் ரசிகர்களுக்கு உத்தரவிட்டார்.
இதன் பின்னர் அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி அடக்கியே வாசித்தார். அது தொடர்பான கேள்விகளை கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் ‘காலா’ படப்பிடிப்புக்காக மும்பை சென்ற ரஜினி, விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் நண்பர்களுடன் அரசியலுக்கு வருவது குறித்து பேசி வருகிறேன். என்னை சந்தித்தவர்கள் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறுவதை மறுப்பதற்கில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ளார். வருகிற அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு முடிந்த பின்னர் ரஜினி அரசியல் பிரவேசத்தை ஜெட் வேகத்தில் தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ரஜினி கொடுத்த ஒரே ஒரு வாய்ஸ் அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. அன்று ஜெயலலிதா அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார். ‘‘மீண்டும் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது’’ என்று கூறிய அவரது ஆவேச வார்த்தைகள் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதன் காரணமாகவே அந்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது என்று இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

அரசியலில் இல்லாமலேயே ரஜினி நிகழ்த்திக் காட்டிய இமாலய வெற்றியாகவே இது பார்க்கப்பட்டது. அன்று காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற மூப்பனார் தனிக்கட்சியை தொடங்கிய போது ரஜினியும் அவருடன் சேர்ந்து அரசியல் பயணத்தை தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு 20 ஆண்டுகளை கடந்தும் அப்படியே நீடித்துக் கொண்டே இருக்கிறது.
ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் மக்கள் செல்வாக்குமே இதற்கு காரணம் என்றால் அது மிகையாகாது.
இப்படி நீ...ண்....ட.... காலமாகவே ரஜினியின் அரசியல் பிரவேசம் கண்ணாமூச்சி ஆட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. இன்று வருவார்.... நாளை வருவார்.... என ரஜினியின் அரசியல் பயணம் பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் ரஜினியா? அரசியலுக்கு வர்றதாவது? என்கிற பேச்சுக்கள் எழத்தொடங்கி விட்டன. தனது படங்களின் விளம்பரத்துக்காகவே ரஜினி அரசியல் எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

அதே நேரத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்கு பிறகு ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும் பேசப்பட்டது. அது போன்ற ஒரு சூழல் இப்போது வந்து விட்டதாகவே ரஜினி உணர்ந்துள்ளார்.
இதன் காரணமாகவே ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு ரஜினி தனது அரசியல் பயணத்துக்கு அச்சாரம் போட்டுள்ளார். இதன்படியே ரசிகர்களுடனான அவரது சந்திப்பு என்கிற பேச்சும் பலமாகவே எழுந்துள்ளது.
கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வரும் ரஜினி முதல் கட்ட சந்திப்பை முடித்துள்ளார். 15 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி.... ‘‘ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று ‘பல்ஸ்’ பார்த்தார். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர்கள் அனைவருமே ‘‘தலைவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். தமிழகத்தை ஆள்வார்’’ என்றே நம்பிக்கை தெரிவித்தனர். அந்த நாளுக்காகவே காத்திருக்கிறோம் என்றும் ‘மகிழ்ச்சி’ தெரிவித்தனர்.

ரசிகர்களுடான சந்திப்பின் போது ‘‘ஒரு வேளை நான் அரசியலுக்கு வந்தால், அதனை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில் வைத்துக் கொள்ளமாட்டேன் என்று கூறிய ரஜினி, போர் வரும் போது (தேர்தல் நேரத்தில்) பார்த்துக் கொள்ளலாம். தயாராக இருங்கள் என்றும் ரசிகர்களுக்கு உத்தரவிட்டார்.
இதன் பின்னர் அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி அடக்கியே வாசித்தார். அது தொடர்பான கேள்விகளை கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் ‘காலா’ படப்பிடிப்புக்காக மும்பை சென்ற ரஜினி, விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் நண்பர்களுடன் அரசியலுக்கு வருவது குறித்து பேசி வருகிறேன். என்னை சந்தித்தவர்கள் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறுவதை மறுப்பதற்கில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ளார். வருகிற அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு முடிந்த பின்னர் ரஜினி அரசியல் பிரவேசத்தை ஜெட் வேகத்தில் தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பை மாடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே கவர்ச்சி யோகா செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மும்பை மாடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டேயும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினார். மற்றவர்கள் யோகாவுக்கும் பூனம் செய்த யோகாவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.
காரணம் பூனம் தனது யோகாவை குட்டையான உடை அணிந்து அரை நிர்வாண, முக்கால் நிர்வாண கவர்ச்சி உடை அணிந்து செய்து இருக்கிறார். அதை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
தினமும் யோகா செய்து தான் ஆரோக்கியமாக இருக்கிறேன். உணவு கட்டுப்பாடும் சேர்த்து எனக்கு கை கொடுக்கின்றன என்று பூனம் பாண்டே கூறியுள்ளார்.
காரணம் பூனம் தனது யோகாவை குட்டையான உடை அணிந்து அரை நிர்வாண, முக்கால் நிர்வாண கவர்ச்சி உடை அணிந்து செய்து இருக்கிறார். அதை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
தினமும் யோகா செய்து தான் ஆரோக்கியமாக இருக்கிறேன். உணவு கட்டுப்பாடும் சேர்த்து எனக்கு கை கொடுக்கின்றன என்று பூனம் பாண்டே கூறியுள்ளார்.
நாயகன்-வில்லன் கதாபாத்திரங்கள் பற்றி கவலை இல்லை என்று கூறியுள்ள ஆதி, தமிழ் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆதி நடிப்பில் வெளியான ‘மரகத நாணயம்’ ரசிகர்கள் ஆதரவை பெற்றுள்ளது. இதுபற்றி கூறிய ஆதி....
‘மரகதநாணயம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கதையில் அனைவருக்கும் முக்கியத்துவம் இருந்தது. மரகதநாணயம் படத்தில் கதை தான் ஹீரோ.
முனிஸ்காந்த், டேனியல் ஆகியோர் முதுகெலும்பாக இருந்து படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள். அருண்ராஜா காமராஜ், நிக்கி கல்ராணி ஆகியோரின் கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. இயக்குனர் சொன்னது போலவே அனைவரும் கைதட்டி, சிரித்து ரசிக்கிறார்கள்.

அடுத்ததாக தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார். இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட படம். இதைதொடர்ந்து தெலுங்கில் நடிகர் ராம் சரணுடன் ‘ரங்கஸ்தளம் 1985’ என்ற படத்தில் நடிக்கிறேன்.
அடுத்ததாக நானியுடன் ‘நின்னு கோரி’ என்ற படத்தில் நடித்து வருகிறேன்.
வில்லன் பாத்திரத்திலோ அல்லது இரண்டு நாயகர்களுடனோ நடிப்பதில் எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. என்னுடைய கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என்பது தான் எனக்கு முக்கியம்.

தெலுங்கை விட தமிழ் படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகிறேன். இதை நான் தெலுங்கு பத்திரிகையாளர்களிடம் கூட கூறியுள்ளேன். ஏனென்றால் நான் தமிழ் நாட்டில் தான் படித்து வளர்ந்தேன். எனக்கு தமிழ் எளிதாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் உள்ளது. எல்லோரும் கல்யாணம் எப்போது என்று கேட்கிறார்கள். கல்யாணம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது, வீட்டில் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக பெற்றோர் பார்க்கும் பெண்ணைத் தான் மணப்பேன்” என்றார்.
‘மரகதநாணயம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கதையில் அனைவருக்கும் முக்கியத்துவம் இருந்தது. மரகதநாணயம் படத்தில் கதை தான் ஹீரோ.
முனிஸ்காந்த், டேனியல் ஆகியோர் முதுகெலும்பாக இருந்து படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள். அருண்ராஜா காமராஜ், நிக்கி கல்ராணி ஆகியோரின் கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. இயக்குனர் சொன்னது போலவே அனைவரும் கைதட்டி, சிரித்து ரசிக்கிறார்கள்.

அடுத்ததாக தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார். இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட படம். இதைதொடர்ந்து தெலுங்கில் நடிகர் ராம் சரணுடன் ‘ரங்கஸ்தளம் 1985’ என்ற படத்தில் நடிக்கிறேன்.
அடுத்ததாக நானியுடன் ‘நின்னு கோரி’ என்ற படத்தில் நடித்து வருகிறேன்.
வில்லன் பாத்திரத்திலோ அல்லது இரண்டு நாயகர்களுடனோ நடிப்பதில் எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. என்னுடைய கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என்பது தான் எனக்கு முக்கியம்.

தெலுங்கை விட தமிழ் படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகிறேன். இதை நான் தெலுங்கு பத்திரிகையாளர்களிடம் கூட கூறியுள்ளேன். ஏனென்றால் நான் தமிழ் நாட்டில் தான் படித்து வளர்ந்தேன். எனக்கு தமிழ் எளிதாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் உள்ளது. எல்லோரும் கல்யாணம் எப்போது என்று கேட்கிறார்கள். கல்யாணம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது, வீட்டில் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக பெற்றோர் பார்க்கும் பெண்ணைத் தான் மணப்பேன்” என்றார்.








