search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Gauthami"

    • எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை கவுதமி இணைத்துக் கொண்டார்.
    • ஜெயலலிதாவிற்கு பிறகு, ஈபிஎஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.

    நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை கவுதமி இணைத்துக் கொண்டார்.

    இதைதொடர்ந்து, நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் சேவை செய்ய அதிமுகவில் இணைந்துள்ளேன். மக்கள் சேவை செய்ய சரியான கட்சி அதிமுக.

    அதிமுகவில் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் களத்தில் இறங்கி வேலை செய்ய சரியான இடம் கிடைத்துள்ளது.

    பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணங்களை விளக்கமாக கூற உரிய நேரம் வரும்.

    ஜெயலலிதாவிற்கு பிறகு, ஈபிஎஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமியை நடிகை கவுதமி சந்தித்தார்.
    • நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

    நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை கவுதமி இணைத்துக் கொண்டார்.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நடிகை கவுதமி சந்தித்தார்.

    ஏற்கனவே, பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனக்கு சொந்தமான நிலத்தை அதிக விலைக்கு விற்று தருவதாக மோசடி.
    • தலைமறைவாக இருந்த பலராமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி தான் சம்பாதித்த பணத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருந்தார்.

    நடிகை கவுதமி, தனக்கு சொந்தமான நிலத்தை அதிக விலைக்கு விற்று தருவதாக மோசடி செய்ததாக போலீசார் புகார் செய்திருந்தார்.

    அதாவது, திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் சுமார் 8.53 ஏக்கர் நிலத்தை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்துவிடடு தனக்கு வெறும் ரூ.4.10 கோடி கொடுத்து ஏமாற்றியதாக கவுதமி புகார் அளித்திருந்தார்.

    இந்நிலையில், புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த பலராமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜகவில் இருந்து இன்று நடிகை கவுதமி விலகினார்.
    • அழகப்பன் உட்பட 6 பேரும் தலைமறைவாக இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல்.

    நடிகை கவுதமியின் சொத்து அபகரிக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தனது 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக கவுதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் புகார் அளித்தார்.

    இந்நிலையில், கவுதமி அளித்த இரு புகார்களிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதில், அழகப்பன் அவரது மனைவி உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், அழகப்பன் உட்பட 6 பேரும் தலைமறைவாக இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கோட்டையூரில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாகவும் கவுதமி புகார் அளித்துள்ளார்.

    கவுதமி சொத்துக்கள் வைத்திருக்கும் சில மாவட்டங்களிலும் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், அழகப்பன் உள்பட சிலர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோசடி செய்த அழகப்பனுக்கு மூத்த பாஜக தலைவர்கள் சிலர் உதவுவதாக கூறி பாஜகவில் இருந்து இன்று கவுதமி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×