search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varun"

    • இயக்குனர் வருண் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாட் தி ஃபிஷ்' .
    • இப்படத்தில் மனோஜ்குமார் மஞ்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான மனோஜ்குமார் மஞ்சு ஆறு வருடங்களுக்குப் பிறகு அதிரடி ஆக்ஷனோடு களம் இறங்குகிறார். சிக்ஸ் ஐ எக்ஸ் சினிமாஸ் (6ix Cinemas) தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வருண் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'வாட் தி ஃபிஷ்' (WHAT THE FISH).

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் இருக்கும் பல வகை சித்திரங்கள் நமக்குள் பெரும் ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு கனடா மற்றும் டொரோண்டோ நகரங்களில் 75 நாட்கள் நடக்கவுள்ளது.

    படத்தில் உலகளாவிய முன்னணி நடிகர்களும் கலைஞர்களும் பங்குகொள்ளவுள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படம் பல மொழிகளில் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    போகன், நெருப்புடா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருண், பப்பிக்காக சம்யுக்தா ஹெக்டேவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். #Varun #SamyukthaHegde
    போகன், நெருப்புடா, மற்றும் நைட் ஷோ ஆகிய படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த வருண், தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். 'காக்கா முட்டை' மணிகண்டனின் இணை இயக்குனர் நட்டு தேவ் இயக்கும் 'பப்பி' படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் வருண். இதில் கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகியான சம்யுக்தா ஹெக்டேவுடன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு நாய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    சம்யுக்தா ஹெக்டே அவரது கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தில் தனது துறுதுறு கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அந்த தருணத்திலிருந்தே அவரின் தமிழ் ரசிகர்கள், தமிழில் அவர் எப்போது அறிமுகமாவார் என்று காத்திருந்தனர். பல்வேறு கதைகளை கேட்ட சம்யுக்தா, இறுதியாக 'பப்பி' என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதிக்க இருக்கிறார். இயக்குனர் நட்டுதேவ் காக்கா முட்டை இணை இயக்குனர் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



    எனக்கு பிராணிகள் மீதான காதல் அதிகம், அதை வளர்க்கும் ஆர்வம் அதிகம். 'பப்பி' கதையை நான் கேட்டவுடனே தனிப்பட்ட முறையில் என்னை அந்த கதை ஈர்த்தது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் உள்ள உணர்ச்சி பிணைப்பை அந்த கதை பதிவு செய்வது. ஒரு ஹீரோவாக நான் அறிமுகமாக நிறைய அனுபவங்களை சேகரித்தேன். நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்த இந்த படம் அனைத்து தரப்பையும் சென்றடையும். எனக்காக படங்கள் ஓடுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதுவரை வெற்றிகரமான படங்களில் நான் பங்கு பெறுவதில் உறுதியாக இருக்கிறேன்" என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் வருண்.
    ×